tag:blogger.com,1999:blog-25525016955915859942024-03-18T15:54:32.544+05:30Warriorஇவன் ஜெயிக்கப் பிறந்தவன்....dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger679125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36758228092882367242018-06-15T21:31:00.000+05:302018-06-15T21:31:10.946+05:30தேடல் - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">காரணமின்றி
காரியமில்லை<o:p></o:p></span></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு
நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த
வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது?<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள்
துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான்
பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து
அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது.
அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான்.
ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று
உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை
பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும்
உருமாறிக் கொண்டிருந்த நேரம். பிரதோஷ தரிசனம் முடித்து அவர் ஸ்கூட்டியில் போய்விட்டார்.
அவ்வளவுதான் பாலகுமாரனுக்கும் எனக்குமான ஸ்தூல தொடர்பு. பட்டினத்தார் கோயில், வாலிஸ்வரர்
கோயில், முண்டக்கன்னி அம்மன் கோயில், காரைக்கால் அம்மையாரை<span style="mso-spacerun: yes;"> </span>பார்க்க திருவாலங்காடு, ஒற்றீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை,
கும்பகோணம் பக்கத்தில் பாடகச்சேரி, பார்த்தசாரதி கோயில், சுசீந்தரம் தாணுமலயன் கோயில்,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரம்மந்திரர் என்று சுற்றி விட்டு கோடி
முறை போன தஞ்சை பெரியகோயிலுக்குள் உடையார் படித்து விட்டு நுழைந்த போது சோழப் பேரரசு……..சோழம்…சோழம்…சோழம்….என்று
யாரோ காதுக்குள் கத்த வாளால் கேடயத்தை அடித்து சப்தமெழுப்புவாக எல்லாம் தோன்றியது.
<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">உடையார் அவ்வளவு ஆழம். எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வாழ்க்கை
தெரியும். வாழ்க்கையின் முன்னும் பின்னும் என்னவாயிருக்கும் என்று தேடத் தெரியும்.
பாலகுமாரனின் எழுத்து ஆன்மீகத்தை எழுதத் தொடங்கிய போது அவரைக் காதலிக்கத் தொடங்கியவன்
நான். இங்கே அனேகருக்கு வேறுவிதம். இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு இப்படி.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">கோயிலின் நடை சாத்திவிட கோயில் முழுதும் சுற்றி வந்தேன். நாங்கொடுத்தனவும்,
அக்கன் கொடுத்தனவும் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், உடையார் ராஜராஜத் தேவர் என்ற எழுத்துக்களை
எல்லாம் படிக்க முடிந்தது. கல்வெட்டு வாசிப்பில் பாண்டித்திய இல்லை, பாமரத்தனம்தான்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">தஞ்சை மாறிவிட்டது. கோயில் மட்டும் பத்தாம் நூற்றாண்டின் பழமையோடு
ஊருக்கு நடுவே, மனிதர் வந்தனர், வணங்கினர், சுற்றினர் சென்றனர் என்று சொல்லிக் கொண்டே
இருக்கிறது. இது ஒன்று போததா வாழ்க்கையை சொல்ல. யாரோ கட்ட எவர் எவரோ வந்து செல்ல, ஏதேதோ
பேச, வாழ்க்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரியாய் அல்ல, வெவ்வேறாய். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">கோயிலுக்கு பின் மண்டபத்தில் தலைக்கு பையை வைத்து கோபுரத்தை
பார்த்தபடி தூங்கி விட்டேன். தோளைத் தொட்டு ஒருவர் எழுப்ப திடுக்கிட்டு விழித்தேன்…தாடியும்
மீசையுமாய் ஒரு பெரியவர், அழுக்கு சட்டையோடு நின்று கொண்டிருந்தார்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">கோயில்ல தூங்கலாமா? என்று அதட்டல் வேறு...<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">எழுந்து அமர்ந்தேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">பக்கத்தில் அமர்ந்தார். <o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">சொன்னேன்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">சிவன பிடிக்குமா?<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">ஆமாம்.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">அப்போ எல்லாம் முடிஞ்சுது, நீ கெளம்பு.<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">பேசத் தொடங்கினார்...<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">-எழுதுவேன்...<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">தேவா சுப்பையா<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="line-height: 115%;"><span style="font-family: inherit;">15.06.2018<o:p></o:p></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div style="height: 0px;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<span style="font-family: inherit;"><div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">x</span></div>
</span><br />
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22745380037104334372018-04-14T20:58:00.000+05:302018-04-14T20:58:33.802+05:30ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-kKNL9-8QrSc/WtIdmjpRiMI/AAAAAAAALbg/DK_xynCD__gkfHazFtcyNkCvCgWv_2qVQCLcBGAs/s1600/orithaz%2Bpoo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="608" height="400" src="https://3.bp.blogspot.com/-kKNL9-8QrSc/WtIdmjpRiMI/AAAAAAAALbg/DK_xynCD__gkfHazFtcyNkCvCgWv_2qVQCLcBGAs/s400/orithaz%2Bpoo.jpg" width="251" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பல கதாபாத்திரங்களை
உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது.
திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை
அனாசயமாக<span style="mso-spacerun: yes;"> </span>அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது.
அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை
சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது
என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை
சுவாரஸ்யமாக்கும் யுத்தி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இந்த குறு நாவலை
எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும்
வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த
நாவல் எனப்படும் ஒரு <span style="mso-spacerun: yes;"> </span>எப்படி கட்டியமைக்கப்பட்டது
என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை.
மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால்
ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலையிலேயே பயணிக்க வேண்டியிருக்கிறது.
எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி நாவலை இப்படித்தான் வாசித்தேன், தஞ்சை பிரகாஷின் மீனின்
சிறகுகளை வாசிக்கும் போதும் இந்த சவால் இருந்தது. கதை சொல்லுவது ஒரு யுத்தி.<span style="mso-spacerun: yes;"> </span>அந்த யுத்தியைப் பிடிக்க பிராயத்தனப்படும் புத்திதான்
என் பிரச்சினை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">நாவலுக்கு கதையோட்டம்
தேவையில்லை கதைப்பின்னல்தான் தேவை. பலவிதமான வாழ்க்கைகள் பல்கிப் பெருகி வாசகன் முன்பு
வைக்கப்படவேண்டும் என்பார் ஜெயமோகன். ஓரிதழ்ப்பூ ஒரு ஜோரன பின்னல். என்ன ஒன்று கதைப்பின்னல்
மிஸ்டிக்கலாகவே நடக்கிறது. ஓரிதழ்ப்பூவில் யசோதாவும், ரமாவும் மட்டுமே எதார்த்தமான
கதாபாத்திரங்கள் அதுவும் இவ்வளவு நவலில் நடப்பதால் ரமா கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.
இல்லெயெனில் அதுவும் பதினாறடி பாய்கிற ஒரு பாத்திரம்தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இவர்கள் இருவரையும்
தவிர்த்து மிச்சமிருக்கும் அத்தனை பேரும் <b>காட்டமான கஞ்சா</b>.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அசாதராணமான பாத்திரப்படைப்பாக
இருக்கிறார்களே? இவர்கள் எல்லோருமே புனைவின் உச்சமா என்று கேட்டால் சத்தியமாய் கிடையாது.
அங்கயற்கன்னியும், மலர்ச்செல்வியும், ரவியும், சாமியும், சங்கமேஸ்வரனும், துர்காவும்,
அகத்திய முனியும் (அய்யனாரும்) சூப்பர் நிஜங்கள். எல்லோரையும் நான் கடந்து வந்திருக்கிறேன்
அல்லது அவர்களில் சிலர் நான் தான். பல அமுதா அக்காக்களோடு வளர்ந்துமிருக்கிறேன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சமவெளிமான் என்று
அய்யனாரின் ப்ளாக்கில் தனியாய் எழுதிய ஒரு சிறுபகுதியை இந்த நாவலில் அவர் சொருகியிருக்கும்
விதம் அலாதியானது. கூடலை இவ்வளவு ரசனையாய் எழுதமுடியுமென்பதே பெரிய விசயம். அதுவும்
சங்கமேஸ்வரனும் அங்கயற்கன்னியும் கூடுமிடத்தை வாசிக்கும் போது இதிகாசக்காட்சி போல அந்தச்
சூழல் என் மனக்கண் முன் விரிந்தது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உடைகளில்லாத இரண்டு
உடல்கள், ஆள் அரவமற்ற வனம், அடித்துப் பெய்யும் மழை, செம்மண் கரைந்தோடி உடல்களை ஊடுருவி
நீராய் கடக்க, சிறு சிறு முட்களும் கற்களும் உருண்டு அவர்களுக்கிடையே ஓட யுகாந்திர
இச்சை தீரும்படியான ஒரு கூடல்….ப்ப்ப்ப்பா<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">காமமென்றால் வெறுமனே
அது காமமா என்ன? உடல் பிழிந்து உயிர்பிழிந்து இனிமேல் ஒன்றுமில்லை அவ்வளவுதான் அப்போதே
சாகலாம் என்று எண்ணம் ஏற்படுத்தும் ஒரு கூடல். துர்க்காவும் மாமுனியும் கூட இப்படி
கூடுகிறார்கள் ஆனால் இந்த குறுநாவலில் வரும் எல்லா காமம் சம்பந்தப்பட்ட இடங்களையும்
ஒப்பிட்டால் அங்கயற்கண்ணி சங்கமேஸ்வரன் சேருமிடம்தான் க்ளாஸிக்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">இதுவெல்லாம் சாத்தியமா
என்ற ஒரு கேள்வி விளிம்பு நிலை வாசகனுக்கு வரத்தான் செய்யும். ஏன் சாத்தியமானதை மட்டும்தான்
எழுதவேண்டுமா? என்ற கேள்வியோடு ஏன் சாத்தியமாயிருக்கக் கூடாது என்று இரண்டு கேள்விகளை
எடுத்து முன் போட்டால் முதல் கேள்வியைக் கேட்ட மனம் மண்டியிட்டு அமைதியடையும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒரு படைப்பை வாசகனாய்
மட்டும் வாசித்தறியும் மனோபாவம் கடக்க நிறைய தூரங்களை கடக்கவேண்டியிருக்கிறது. கடந்து
வரும் போதுதான் சமூகம்,சூழல், சட்டதிட்டங்கள், ஒழுக்கம் இப்படியான எல்லா கேள்விகளையும்
உடைத்து எது சரி என்று நாம் ஒப்பிடும் மனோநிலை மாறி கதைக்கு அது சரி என்று உணரும் நிலையை
அடையமுடியும். நீதி நெறிக்கதைகளை மட்டும் எழுதிச் செல்வதல்ல எழுத்தாளனின் வேலை. இந்த
உலகம் எப்படியிருக்கிறதோ அதை அப்படியே அவன் படைக்கிறான்.. பிடிக்கிறது பிடிக்கவில்லை
இரண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. இதை ஒன்றாய் பார்க்கும் போது புதிதாய் ஏற்படும் ஒரு
பரவசத்தை இந்த குறுநாவல் கொடுக்கிறதா என்றால்….ஆம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">யாரோடு நான் கூடவேண்டும்
என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்கிறாள் துர்கா. ஆணாதிக்க சமூகத்திற்கு பார்ப்பதற்கு
அது கொஞ்சம் அல்ல நிறையவே அசூயையாக இருக்கும். இங்கே ஆணாதிக்கச் சமூகமென்பது பெண்களையும்
உள்ளடக்கியதுதான். ஒரு கட்டத்தில் ஆணே ஒத்துக் கொண்டாலும் பெண்கள் மல்லுக்கு நிற்பார்கள்.
கட்டடற்ற சுதந்திரத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பாத்திரம்தான் துர்கா. எனக்கு நிறைய
துர்க்காக்கள் பரிச்சயம் அமுதா அக்காவைப் போல…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஒரு மாமுனியை பூக்கட்டுவதெல்லாம்
சரிதான் ஆனால் அவரை மனோநிலை சரியில்லாதவராய் சித்தரித்து ஆட்டோவில் ஏன் ஏற்றி வைக்க
வேண்டும். இந்த இடத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் எனக்குத் தெரிந்தது. ஏன் அவர் அகத்திய
மாமுனியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே அதனாலென்ன? அவரை அப்படியே அகத்தீஸ்வரத்துக்கு
அனுப்பி வைத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அதே போல ரமாவும்
ரவியும் பேசிக்கொண்டிருக்கும் சில இடங்களில் லேசான தொய்வு ஏற்பட்டதைப் போல உணர்ந்தேன்.
மற்றபடி லட்சுமி கேரக்டர் எல்லாம் மனதில் ஒட்டவில்லை என்றாலும் கதைப்பின்னலுக்கு அவை
எல்லாம் அவசியம்தாம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">காதாபாத்திரங்கள்
எல்லாம் காற்றில் அலைவது போல அலைகிறார்கள். யாரையும் யாரும் கண்ட்ரோல் பண்ணவே முடியாது
இந்த அய்யனார் எப்படி எல்லோரையும் போட்டு ஒரு பட்டியில் அடைக்கப் போகிறார் என்று யோசித்துக்
கொண்டே வாசித்தேன் ஏனென்றால் எதுவுமே அடங்கிப் போகும் சராசரிகள் அல்ல. அதன் அதன் வாழ்வை
வாழ கட்டுப்பாடில்லாமல் இயங்கும் கதாபாத்திரங்கள் என்றாலும் தான் ஒரு சிறந்த நாவலாசிரியன்
என்பதை அய்யனார் எல்லோரையும் கட்டுப்படுத்தி ஒரு புள்ளியில் இணைத்து இந்த குறுநாவலை
சம்பிராயதமாய் முடிக்கிறார் ஆனாலும் கதை முடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">வாசிக்க வேண்டிய
நாவல் என்பதோடு அய்யனார் என்னும் எழுத்தாளர் இன்னும் நிறைய, நிறைய எழுத வேண்டியவர்
என்பது என்னுடைய கருத்து. இந்த கார்ப்பரேட் உலகத்தில் மூர்க்கமாய் டார்கெட் நோக்கி
நகர்ந்து நகர்ந்து எப்படி எதிராளியை அடிப்பது என்பதில் மூழ்கி ஒரு இயந்திரமாய் இருந்த
என்னை இந்த நாவல் விடுவித்திருக்கிறது. உண்மையில் சொன்னால் கஞ்சாவை புகைத்து தள்ளிவிட்டு
நானும் சாமியோடு திருவண்ணாமலையில் ஏதோ ஒரு மூலையில் விழுந்து கிடப்பது போன்ற ஒரு பிரம்மை
ஏற்பட்டது நாவலை முடிக்கையில்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">சமவெளி, அங்கயற்கன்னியின்
கனவில் வரும் புள்ளிமான் அதற்கு மனித முகம், இன்னமும் நாவல் முழுதும் வரும் நிறைய பூக்கள்,
திருவண்ணாமலை நிலப்பரப்பை கதைக்குள் கொண்டு வந்திருக்கும் பாங்கு என்று நிறைய இருக்கிறது
இந்த கதைக்குள் சுவாரஸ்யங்கள். சமுத்திர ஏரிக்கரைக்கு (அப்படி ஒன்று நிஜமாய் இருக்கிறதுதானே?)
கூட்டிச் சென்று அங்கயற்கன்னியும் சங்கமேஸ்வரனும் கூடிய இடத்தை நீங்களே என்னிடம் ஒரு
தடவை காட்டுங்கள் அய்யனார்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பேரன்புகளுடன்</span><o:p></o:p></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">தேவா</span>
<span style="font-family: "Latha","sans-serif";">சுப்பையா</span>…<o:p></o:p></div>
<div class="MsoNoSpacing" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏப்ரல்</span>’
14, 2018<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2940624489514638462017-12-30T09:41:00.001+05:302017-12-30T10:03:19.788+05:30ஈஸ்வரா...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-Vgjq8C9SSY4/WkcRxrmdgqI/AAAAAAAALag/MS6Q3hECww0-UppaztOfhW4m5NKbWxWtQCLcBGAs/s1600/WhatsApp%2BImage%2B2017-12-30%2Bat%2B8.06.54%2BAM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1059" data-original-width="1080" height="391" src="https://4.bp.blogspot.com/-Vgjq8C9SSY4/WkcRxrmdgqI/AAAAAAAALag/MS6Q3hECww0-UppaztOfhW4m5NKbWxWtQCLcBGAs/s400/WhatsApp%2BImage%2B2017-12-30%2Bat%2B8.06.54%2BAM.jpeg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை
பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை
ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள்
என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும்,
யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு
தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை.
கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு.
பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே
முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம்
சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம்.
அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம்.
கபாலி, கபாலி என்று ஊரே நடுங்கி பிட்சை இடுமாம்.
சவமறிந்தவன் பின் சிவமறிந்தவன் ஆனான். யுகங்களுக்குப் பிறகும் மயானம்தான் மனித மனங்களை
சில மணி நேரங்களாவது சாம்பலாக்க வல்லதாய் இன்னமும் இருக்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அந்த மின் மையானத்திற்குள் ஒரு புல் மேடைக்கு நடுவே தியான மண்டபம்
வைத்திருக்கிறார்கள். சாவுக்கு வந்தவன் எவன் தியானமென்று தனியே செய்யப்போகிறான் என்று
யோசித்துக் கொண்டிருந்தவனை ஏந்தம்பி எப்டி செத்தாப்ள...<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இன்னும் மூன்று வெற்றிலைகளை ஒன்றாய் சுருட்டி உள்ளே புகையிலை
வைத்து சுண்ணாம்பு தடவியபடி கேட்டவள் கையில்
ஒட்டியிருந்த சுண்ணாம்பை கண்டாங்கியில் துடைத்துக் கொண்டாள். எங்கூட்டுக்காரரும் நாலும்
வருசம் முன்னாடி செத்துப் போய்ட்டாப்ள, சொல்லச் சொல்லக் கேட்டாதானே கண்டாரஒலி மயங்க
தெருவுக்கு நாலு கட தொறந்து வச்சிருக்காய்ங்க, பொழுது விடிஞ்சா அடைஞ்சா அதேன் கதி...<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ப்ரீஷருக்குள் இருந்து எடுத்த கோழியை தண்ணீரில் முக்கி வைத்தால்
கொஞ்சம் கொஞ்சமாய் இளகுவது போல ஐஸ் பாக்ஸின் விறைப்பு கொஞ்சம்கொஞ்சமாய் விலக விறைத்து
நெஞ்சில் மடக்கி வைத்திருந்த கை விலகி கீழே விழ, ஏதோ உயிர் வந்துவிட்டதைப் போலத் தோன்ற
திடுக்கிட்டு பொன்னம்மாக்கா.... என்று கத்தினேன். கிளம்புங்கப்பு, பயந்துகிட்டு எல்லாம்
இங்கன ஒக்காரப்புடாது அதுகதேன் எங்களுக்கு சாமிக, கிளம்புங்க கிளம்புங்க....அதட்டினாள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இல்ல கையி....<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">எங்கூட்டுக்காரரு கண்ட்ரோலுல சுத்திப்பட்டியில இருக்க பன்னென்டு
சுடுகாடு வருமப்பே தனியா நின்னு ஒரு நாளைக்கு பத்து பதினஞ்சு உருப்படி கூட செய்வாப்ள,
நெஞ்சுரமான ஆளு, தண்ணியத் தண்ணியக் குடிச்சு
கிறுக்கோண்டு போயிருச்சு, நிதம் அடி நிதம் மிதி, எதித்து நின்னு பொடணில நாலு போடு போட்டேன்
ஒரு நா, முடியாமப் படுத்துக்கிடுச்சு அதோட எந்திருக்கல...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மணி மூணு ஆச்சு நீங்க போங்க, கொள்ள வேல கிடக்கு, காலையில வாங்க என்று அவள் சொன்ன போது இரண்டு பையன்கள் வந்தார்கள். ஏஞ்சின்னமா கூப்டு விடல வந்துருப்போம்ல ஏன் தனியா நின்னுகிட்டு இருக்க...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அடப்போங்கடா நான் பாத்துகிறேன், அவர்களை விரட்டிவிட்டவள்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">சில நேரம் நைட்டு பத்துக்கு வரும், பதினொன்னுக்கு வரும் இவங்க
வருவாய்ங்க சின்னம்மா நாங்க நிக்கிறோம்னு சொல்லுவாய்ங்க, எங்க வீட்டுக்காரரு அண்ணன்
மயங்கே...சின்னப்பயலுக பாவம் பயக்கக் கூடாதுன்னு வெரட்டி விட்ருவேன். நான் எங்க வீட்டுக்காரர
கல்யாணம் செஞ்சு நாலாம் நாலு சுடுகாட்டுக்கு வந்தவ கூட மாட ஒத்தாச செஞ்சு செஞ்சு பழகிக்கிட்டேன்.
எல்லாப்பயலுகளும் மாமன்பாங்கே, மச்சாம்பாங்கே, அண்ணன் தம்பின்னு, அக்கா, தங்கச்சின்னு
கதறுவாய்ங்கே, கொள்ளிய வச்சுக் கொளுத்திப்புட்டு
திரும்பிப்பாக்காம போயிருவாங்கே... அம்ம்புட்டுப் பேரும் போனப்புறம் இதுகளப் பாக்குறப்ப
ப பச்சப்புள்ளைக மாறி தெரியுமப்பு...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">எஞ்சாமிகளா நல்ல படியா போய்ச் சேருங்கன்னு வேண்டிக்கிட்டே எரிச்சு
முடிப்போம். எனக்கு அழுகை வந்தது. சிறுவயதிலிருந்து சோடி போட்டு சுத்தின மாப்ள பேச்சு
மூச்சு இல்லாம யாரோவாக கிடந்தது அடி வயிற்றைப் பிசைந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கதை ரொம்ப நல்லா கேக்குற ராசா....? ஏன் நீ இங்க உக்காந்து இருக்க
ஒங்க மாமா மயன் எந்திருச்சு வருவான்னுட்டா.....கெக்கேக்கெக்கே என்று சிரித்தவள் விதி
முடிஞ்சா போய்ச் சேரவேண்டியதுதேன்…..<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">செத்தா அப்புறம் அங்கிட்டு ஒண்ணுமில்லை. பேயி, பிசாசுன்னு, சாமி
பூதம்னு பொழுது போக நாம பேசிக்கிற வேண்டியதுதான். எனக்கு என்னவோ அந்த மயானம் வேறு கிரகத்தில்
இருப்பது போலத் தோன்றியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இல்லங்கம்மா, என்ன பண்றீங்கன்னு பாக்கத்தான் ஒக்காந்து இருந்தேன்,
இனிமே அவர பாக்க முடியாதுல்ல, உலகமெல்லாம் சுத்துன ஆளு கடைசியா அந்தகெடங்குக்குள்ள
போறத பாக்கணும்...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நான் சொன்னதை கவனிக்கவில்லை....அவள்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அவள் வெறித்துக் கொண்டிருந்த திசையில் காட்டுப்பனைகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.
படக்குனு செத்துப் போயிட்டாரு எங்காளு, பேசிக்கிட்டே இருந்துச்சு, வாந்தி எடுத்துச்சு
பொசுக்குன்னு தலை சாஞ்சுருச்சு, கூடி அழுது அம்புட்டுப் போரும் தூக்கி எடுத்து போகயில
முச்சந்தியோட என்னைய வீட்டுக்குப் போகச் சொன்னாக...<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">போங்கடா பொச கெட்டவைங்களா எம்புருசன நானே எரிச்சுக்குறேன்னு
சொல்லவும் அதெல்லாம் கூடாதுன்னு அங்கனகுள்ள இருந்த ஆளுக மல்லுக்கு நின்னாய்ங்க போங்கடா நீங்களும் ஒங்க இதுவும்னு சொல்லிட்டு சுடுகாட்டுக்கு
போய்ட்டேனப்பா... எட்டு மணிக்கு எல்லாரும் சொல்லி சொல்லிப் பாத்துட்டு போயிட்டாக, ஆத்தா
தண்ணி சாப்டுக்க ஆத்தா நாங்க இங்கனக்குள்ளதான் இருக்கம், என்னமாச்சும்னா கூப்டுனு இவரோட
அண்ணனும் அண்ணன் மயங்களும் சொல்லிட்டுப் போனப்புறம், அந்த மனுசன மேல விழுந்து அழுதேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஏங்கமா கஷ்டமா இல்லையா?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அவ்ளோ நாளு பொணம் எரிச்சப்ப தெரியலைய்யா, அன்னிக்கு நானும் செத்தரணும்னு
தோணிச்சு எங்களுக்கு புள்ளக்குட்டிகள் கிடையாது, ஆனா சாகபயமாவும் இருந்துச்சு, சாவப்பாத்து
அன்னிக்கு பயந்தேன், அந்தாளு கூட சாப்டது படுத்தது எந்திரிச்சது எல்லாம் சேந்து ஈரக்கொலைய
அக்க....</span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><o:p></o:p></span><span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">வேண்டாமுன்னு நினைச்சிருந்த தண்ணிம்பாட்டில எடுத்து குடிச்சேன்.
போயிட்டு வாயா மகராசா, என்னைய தனியா விட்டுப் போயிட்டில்லன்னு குமட்டில குத்தி குத்தி
அழுதே. படக்குன்னு வாரிச் சுருட்டிக்கிட்டு அய்யய்யோ நல்ல கதிக்கு போகணுமே இந்தாளுன்னு
ராத்திரி முச்சூடும் பாத்து பாத்து எரிச்சேனய்யா...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">விடியக்காலையில என்ன மறந்து அங்கனுக்குள்ளயே தூங்கிட்டுப் போயிட்டேன்
கொழுந்தனும் அவரு மயங்களும் வந்து கூட்டிடுப் போனாக....<o:p></o:p></span><br />
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">திக்பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தேன். என்னா மனுஷிடா இவ?
உடம்பிலும் சொல்லிலும், செயலிலும் பொன்னம்மாவின் உடம்பு மட்டும் அல்ல மனசும் ரொம்பவே
தடித்திருந்தது எதனால் என்று புரிந்தது...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ரயில்தண்டவாளம் மாதிரி இருந்த ட்ரேயில் பாடியை வைத்தாள், பாத்துக்கப்பு
உங்க மாமா மயன, காலையில எடுத்து வைக்கிறேன் வந்து கலயத்த வாங்கிட்டு காடாத்துங்க...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இருண்ட குகை மாதிரி இருந்த எரியூட்டும் பகுதியைப் பார்க்கவே
படுபயங்கரமாய் இருந்தது. ட்ரேயை கை வைத்து தள்ளியவள் கொஞ்சம் தள்ளிவிடுப்பா என்றாள்,
தம் கட்டி தள்ளினேன் சர்ர்ர்ர்ர்ர் என்று உள்ளே போக ஒரு இரும்பு தடுப்பு வந்து விழுந்தது....<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நீ கிளம்பு தம்பி....என்று எரிமேடைக்கு கீழே படியில் இறங்கி
இருட்டிற்குள் போனவள்..<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஈஸ்வராஆஆஆ......என்றபடி அடுப்பை ஆன் செய்திருக்க வேண்டும்.....புஸ்ஸ்ஸ்ஸ்
என்று சத்தம் கேட்டது.....<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மயானத்தை விட்டு வெளியே வந்தேன்...ஊர் வழக்கம் போல ஓடிக் கொண்டிருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஈஸ்வரா......<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">-தேவா சுப்பையா...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<br /></div>
<br />
<div class="MsoNormal">
<span style="font-size: 10.0pt; line-height: 115%;">.<o:p></o:p></span></div>
</div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91556284360702942872017-10-21T11:16:00.000+05:302017-10-21T11:16:15.462+05:30மெர்சல்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-WK7EUuYVPsU/WerepTGlSsI/AAAAAAAALYo/paLPmDZb1VUiiWjzCP_g2cZV0BQjXfO5QCLcBGAs/s1600/vijay-in-a-still-from-mersal_4db2e9be-a046-11e7-9c3b-8e901839ece0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="960" height="225" src="https://3.bp.blogspot.com/-WK7EUuYVPsU/WerepTGlSsI/AAAAAAAALYo/paLPmDZb1VUiiWjzCP_g2cZV0BQjXfO5QCLcBGAs/s400/vijay-in-a-still-from-mersal_4db2e9be-a046-11e7-9c3b-8e901839ece0.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ராஜ் டிவியில்
எனக்குள் ஒருவன் என்றொரு சிவாஜி படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்த சிவாஜி வீட்டிற்குள்
அந்த சிவாஜியும் அந்த சிவாஜி வீட்டில் இந்த சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
வீடு மாறி டபுள் ஆக்சன்கள் நடிப்பது போல எவ்வளவோ படங்கள் வந்துவிட்டது என்றாலும் அவற்றை
எல்லாம் திரைக்கதைகள் மறக்கடித்து விடுகின்றன. எத்தனையோ படங்களை இப்படி நாம் கொண்டாடி
இருக்கிறோம். அதே வரிசையில் கொண்டாடவேண்டிய படம்தான் மெர்சல். எ ப்ளாக் பஸ்டர் கமர்ஷியல்
மூவி ஃபார் காமன் ஆடியன்ஸ் & சூப்பர் டூப்பர் மெகா ஷோ ஃபார் அண்ணா ஃபேன்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">பர்ஸுல காசு எல்லாம்
இருக்காதுங்க வீ ஆர் ஃப்ரம் டிஜிட்டல் இந்தியா, கேஷ் லெஷ் ட்ரான்ஸாக்சன் என்று வடிவேலு
பர்ஸை பிரித்துக் காட்டும் இடத்தில் சூப்பர்
ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் படம் இடைவேளை வரும் வரை அதகளமாய் நகர்கிறது. நீ பற்ற வைத்த
நெருப்பொன்று…என்று கரகரகுரலில் ஆரம்பித்து ஏத்தனையோ மாடுலேஷன்களைப் பேசி அசத்தியிருக்கிறார்
இளைய தளபதி….சாரி சாரி தளபதி. டாக்டர் மாறன் பேசியிருக்கும் அத்தனை அரசியல் வசனங்களுக்கும்
விசில் பறக்க தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வெஃரி போல்ட் டிசிஸன் பை விஜய் அண்ட்
அட்லி. அரசியல் நிர்ப்பந்தங்களால் சில வசனங்களை தயாரிப்பாளர் தரப்பு நீக்கியிருந்தாலும்
அத்தனை வசனங்களும் இன்று பொதுவெளியில் விவாதிக்கப்படுகிறது/விமர்சிக்கப்படுகிறது. ஒரு ப்ளட் டெஸ்ட் செய்து பார்த்து விட்டு அதன் பிறகு
நோயாளியாகவே நிறைய பேர்கள் எப்படி ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்? மருத்துவத்
துறையில் இருக்கும் அவலங்கள் அது வியாபாரமாய் போயிருக்கும் அவலம் என்று எதையும் விடவில்லை,
விலாசித் தள்ளியிருக்கிறார்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கலை அரசியலில்
இருந்து வேறுபட்டதல்ல. கலைதான் அரசியலை எல்லா காலங்களிலும் கோலேச்சியிருக்கிறது. இன்னும்
சொல்லப் போனால் கலை வேறு அரசியல் வேறு கிடையாது. பேச்சும், எழுத்தும், நடிப்பும் மட்டுமல்ல
கலை என்பது, புதுப் புது சிந்தனைகள் யாவுமே கலையின் வெளிப்பாடுகள்தான். சினிமா மாதிரி
வெகுஜன ஊடகங்கள் ஏதோ ஒரு அரசியலைப் பேசிக்கொண்டேயிருக்கின்றன. கதாநாயகர்கள் அந்த அரசியலைப்
பேசும் மிக முக்கியமானாவர்களாக திரையில் உலாவுகிறார்கள். தீமைக்கு எதிராய் போராடும்
எல்லா திரைப்படங்களுமே அரசியல் திரைப்படங்கள்தாம். அரசியல் என்றால் தேர்தல் அரசியல்
மட்டும்தான் நம் மக்களுக்குத் தெரியும். தேர்தல் அரசியலையும் கடந்த பல சமூக அரசியல்களை
பல்வேறு கோணங்களில் தளங்களில் அலசும் வேலையை எல்லாக் காலங்களிலும் சினிமா செய்து கொண்டேயிருக்கிறது.
அதனால்தான் நடிகர்கள் அரசியல் பேசும் போது அதன் வசீகரம் ஒரு பத்திரிக்கையாளரை விட அரசு
அலுவலரை விட வியாபாரியை விட கூடுதலாய் நமக்குத் தெரிகிறது. காட்சி ஊடகத்தின் வலிமை
அப்படி, சினிமா வெறுமனே கூத்தாடிகள் ஆடிச்செல்லும் இடமென்று நினைத்து ஒதுக்கி சென்று
விடக்கூடிய இடமல்ல. கதாநாயகர்கள் தங்களின் திரை அரசியலை பொதுவெளி அரசியலாக மாற்ற முயலும்
போது வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ அவர்களை
நோக்கிய ஒரு கவனம் கண்டிப்பாய் பொதுவெளியில் ஏற்படத்தான் செய்கிறது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">விஜய் போன்ற உச்ச
நட்சத்திரங்கள் பயம் இல்லாமல் இப்படி ஆளும் அரசுகளைச் சாடுவதும், சமூக அவலங்களைப் பேசுவதும்
அவர்களுக்கு அரசியலாகவே இருந்தாலும் பொதுவெளியில் பரவலாய் ஒரு கருத்து சேர இவர்கள்
காரணமாய் இருப்பதாலேயே மெர்சல் போன்ற திரைப்படங்கள் வரவேற்கத் தகுந்தவையே.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">கதையின் கரு காப்பி
பேஸ்ட்டாய் இருக்கலாம் அதை கூறியிருக்கும் விதம் மற்ற நடிகர்களை பயபடுத்தியிருக்கும்
லாவகம் எல்லாம் அட்லிக்கு சபாஷ் போடவைத்திருக்கிறது. வடிவேலு, கோவை சரளா, சத்யராஜ்,
எஸ்.ஜே. சூர்யா என்று எல்லா பத்திரங்களையும் அடக்கி வாசிக்க வைத்து தளபதியை அடித்து
ஆடவைத்திருக்கிறார். இன்டர்வெலுக்குப் பிறகான ப்ளாஷ் பேக்கில் மதுரை ஸ்லாங்கோடு ஐஸு
ஐஸு….என்று காதல் செய்வதாக இருக்கட்டும், மீசையை முறுக்கியபடி சீறிப்பாய்வதாய் இருக்கட்டும்,
பிள்ளையை சுமந்தபடி அடிவாங்கி உறுமியபடி செத்துப் போகுமிடமாய் இருக்கட்டும்…. பின்னி
இருக்கிறார் மனுஷன். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ப்ளாஷ் பேக் இஸ்
ரியல் ப்ளாஷ்….<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">ஏ.ஆர் ரகுமான்
இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே சூப்பர் ஹிட்தான் என்றாலும் திரையில் பார்க்கும்
போதும் சலிப்பு ஏற்படவில்லை. நீதானே நீதானே…பாடல் இன்னும் கொஞ்ச மாதங்கள் எல்லோருக்குள்ளும்
கேட்டுக் கொண்டே இருக்கும், காலர் ட்யூனாய் மாறும்….அத்தனை இனிமை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">விஜய் ரசிகாஸ்….யூ
கேன் செலிபிரேட் திஸ் ஃப்லிம். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">அபூர்வ சகோதரர்கள்
காப்பி, மூன்று முகம் காப்பி…ப்ளா….ப்ளா…ப்ளா என்று பேஸ்புக்கில் சகோதரர்கள் விஜயை
ஓட்டுகிறேன் பேர்வழி என்று எழுதித் தள்ளலாம், அரசியல்வாதிகள் விமர்சிக்கலாம், சில வசனங்களை
நீக்கிவிட்டார் கோழை என்று எழுதி 150 லைக்குகள் தேத்தலாம்…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">என்றாலும்….மெர்சல்
சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.<o:p></o:p></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">-தேவா சுப்பையா…<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6263917270569041682017-04-04T10:20:00.003+05:302024-03-18T15:54:00.133+05:30வீட்டுப் பூனை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="5re9c-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="5re9c-0-0"><span data-text="true">வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்... </span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="3mam2-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="3mam2-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="27ivi-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="27ivi-0-0"><span data-text="true">யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுதானே சொல்லுவோம்). ரொம்ப நேரம் அந்தப் பூனைக்குட்டியைத் தடவிக் கொடுத்தபடியே அவர் அதோடு பேசுவது போலத் தெரியவும் சரிந்து அம்ர்ந்திருந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்து கவனித்தேன். அந்த ஆளின் முகத்தில் சலனமில்லை, பூனையோடு பேசியபடி வந்த மனிதர் என் கார் பானட்டில் பூனையை வைத்து தடவிக்கொடுத்தார். இருட்டில் காருக்குள் நான் இருந்ததை அவர் கவனிக்கவிலை. பூனை அவரின் கையை நக்கியது, முகத்தை வைத்து தேய்த்தது.</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="9o05j-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="9o05j-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="1p5i2-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="1p5i2-0-0"><span data-text="true"> ம்யாவ் .. .ம்யாவ்....ம்யாவ்...</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="cdt96-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="cdt96-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="9hf47-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="9hf47-0-0"><span data-text="true">பூனையை தூக்கி முகத்தில் வைத்து முத்தம் கொடுத்தார். பார்கிங்க் சைடிலிருந்து பூனையைத் தூக்கியபடி நடைபாதையில் ஏறி ஈச்சை மரங்கள் அடர்ந்திருந்த மங்கலாய் வெளிச்சமிருந்த பக்கம் போன போது உற்றுக் கவனித்தேன் பூனையின் கழுத்தில் பச்சைகலரில் பாசிமணி போல கட்டியிருந்தார்கள். ஒரு நிமிடத்துக்குள் திரும்பி வந்தவரின் கையில் பூனையில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவர் நடைபாதைக்கு வருவதற்குள்ளாக ம்யாவ்...ம்யாவ்..ம்யாவ்....பூனை அவரிடம் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து கால்களை நக்கியபடி சுற்றிக் கொண்டது. அவர் முகத்தில் அப்போது ஒரு தர்மசங்கடத்தைப் பார்த்தேன். மறுபடி பூனையிடம் ஏதோ பேசியபடி அதே இடத்திற்கு சென்று திரும்ப வருவதற்குள்....</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="27cm5-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="27cm5-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="3qqgl-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="3qqgl-0-0"><span data-text="true">ம்யாவ்...ம்யாவ்..ம்யாவ்.....</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="905it-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="905it-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="8tklv-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="8tklv-0-0"><span data-text="true">இம்முறை பூனையை தூக்கி முகத்தோடு கொஞ்ச நேரம் வைத்திருந்தவர் விடுவிடுவென்று போய் அதே இருளில் பூனையை விட்டு விட்டு வேகமாய் வந்து காருக்குள் அதே வேகத்தில் ஏறியவர் உள்ளே காருக்குள் செல்வதற்கு முன்பு மீண்டுமொரு பார்வை பூனையிருந்த திசையில் பார்த்தார் பின்....சர்ர்ர்ர்ர்ரென்று வண்டியைக் கிளப்பி போய்விட்டார்.</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="ehl0f-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="ehl0f-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="d4ofh-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="d4ofh-0-0"><span data-text="true">ம்யாவ்...ம்யாவ்...ம்யாவ்...</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="695m4-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="695m4-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="cmdpm-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="cmdpm-0-0"><span data-text="true">அந்தப்பூனை ஓடி வந்த வேகத்தில் அங்கே அவர் இல்லாததால் என் காரை ஒட்டி இருந்த நடைபாதையில் அமர்ந்தபடி வலதும் இடமும் பார்த்தபடி கத்திக் கொண்டிருந்தது. எனக்கு பதட்டம் அதிகமானது. ஒரு பிலிப்பினோ ஜோடி வேகமாய் நடந்து கொண்டிருக்க அவர்களின் பின்னால் மேற்கு நோக்கி ஓடியது பூனை, அவர்கள் சிரித்துக் கொண்டே பூனையைப் பற்றி ஏதோ பேசியபடி சென்றார்கள். அவர்கள் போய்விட்டார்கள் மறுபடி பூனை அந்த மனிதர் கார் நிறுத்திய இடத்திற்கே ஓடிவந்து கத்தியபடி அமர்ந்திருந்தது. இந்த முறை ஒரு மலையாளி கிழக்குப்பக்கம் போனான்...அவன் கால்களைச் சுற்றிக் கொண்டு அதுவும் ஓடியது, மறுபடி ஒரு அரபியின் கால்கள் பின்னால், பாகிஸ்தானியின் பின்னால்....ஓடி ஓடி பார்த்து விட்டு களைத்துப் போய் மீண்டும் என் கார் அருகே வந்து கொஞ்சம் நேரம் கத்திக் கொண்டிருந்தது.</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="806oj-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="806oj-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="7m1tq-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="7m1tq-0-0"><span data-text="true">பிறகு சப்தம் ஏதுமில்லை. மெளனமாய் அமர்ந்திருந்தது. அது வந்திறங்கிய கார் நின்ற இடத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. </span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="6j9tj-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="6j9tj-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="fihj3-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="fihj3-0-0"><span data-text="true">என்ன செய்யும் அது இனி என்று எனக்குப் புரியவே இல்லை. </span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="eim02-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="eim02-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="1tk1d-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="1tk1d-0-0"><span data-text="true">கழுத்திலிருந்த மணியை அவிழ்த்து விட்டு வெறும் பூனையாக அதை விட்டுச் சென்றிருக்கலாமோ அவன். வீட்டுப்பூனையாய் இருந்து விட்டு அது எப்படி சடாரென்று தெரு பூனையாய் மாறும் ஒரே நாளில் ? </span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="cptum-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="cptum-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="73klu-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="73klu-0-0"><span data-text="true">பூனையை தூக்கி வீட்டுக்குக் கொண்டு வந்துவிடலாமா என்று யோசித்தேன் ஆனாலும் வேண்டாம் என்று நினைத்து உடனே வண்டியைக் கிளப்பி அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்....</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="bijeo-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="bijeo-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="6pcb3-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="6pcb3-0-0"><span data-text="true">ஆமாம்...</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="1e4ac-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="1e4ac-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="7hp07-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="7hp07-0-0"><span data-text="true">என்னால் இன்னொரு நாள் அந்தப் பூனையை வேறு எங்காவது கொண்டு போய் இப்படி விடமுடியவே முடியாது.</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="fnok4-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="fnok4-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="8uovb-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="8uovb-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="a751g-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="a751g-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="1crs9-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="1crs9-0-0"><br data-text="true" /></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="3cuqa-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="3cuqa-0-0"><span data-text="true">-தேவா சுப்பையா...</span></span></div>
<div class="_1mf _1mj" data-block="true" data-editor="b45t1" data-offset-key="1l4db-0-0" style="text-align: justify;">
<span data-offset-key="1l4db-0-0"></span><b></b><i></i><u></u><sub></sub><sup></sup><strike></strike><br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77069043596714449402016-07-22T16:46:00.000+05:302016-07-22T17:33:50.136+05:30கபாலி... மாற்று சினிமாவின் குரல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-xh5V4wNPyRg/V5IARSRk3EI/AAAAAAAALLY/ChJdcwb7eYMJRsnz9C6V2chqLVMEXjRoACLcB/s1600/kabali-stills-photos-pictures-152.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://1.bp.blogspot.com/-xh5V4wNPyRg/V5IARSRk3EI/AAAAAAAALLY/ChJdcwb7eYMJRsnz9C6V2chqLVMEXjRoACLcB/s640/kabali-stills-photos-pictures-152.jpg" width="465" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் சார்ந்த தமிழர்களுக்கு கொஞ்சம் இந்தப் படத்தோடு ஒட்டிக் கொள்ள கால அவகாசம் தேவைப்படத்தான் செய்கிறது. படத்தோடு ஒன்ற நம்மிடம் இருப்பது ரஜினி என்னும் மந்திரம் மட்டுமே, அந்த மந்திரமும் அந்த வேலையை பொறுமையாய் திரையில் செய்து விடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஜினியின் மாஸ் ஸ்டைலைத் தொட்டுக் கொண்டு ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான காமம் கடந்த ஒரு 50+ காதலை வைத்து நெய்து, மனித ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேச நினைத்த தன்னுடைய வேட்கைக்கு ஒரு களமாய் ஒட்டு மொத்த திரையையும் பயன்படுத்தி கொண்ட இயக்குனர் ப. ரஞ்சித் வெகு நிச்சயமாய் பாராட்டுக்குரியவர். கபாலி படம் வெளியாவதற்கு கொஞ்ச நாள் முன்புதான் நான் இயக்குனர் ரஞ்சித்தின் பேட்டிகளை பார்த்தேன். வெகு நேர்த்தியான புரிதலும், மிகவும் விசாலமான பார்வையும் கொண்டதாக அவை இருந்தன. அடிப்படையில் அவருக்குள் இருந்த அந்த சமூக ஏற்றத் தாழ்வுகளின் மீதிருந்த கோபம் அவரை நிறைய புத்தகங்களை வாசிக்க வைத்திருக்கிறது. அழுத்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து மேலெழும்பி அதற்கு முன்பு வலுவான பொருளாதார மற்றும் மனோபலத்துடன் இருக்கும் ஒரு சமூகத்துடன் மோத எவ்வளவு வலு வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கவே முடியவில்லை. பொருளாதார பலத்தை அரசின் திட்டங்களும் அதனால் கிடைக்கும் சூழல்களும் மாற்றினாலும் காலங்கள் கடந்து அவர்களுக்குள் அடங்கிக் கிடக்கும் அடக்கப்பட்ட உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அகல வேண்டுமெனில் நிறைய சவாலான சூழல்களை அவர்கள் எதிர்கொள்ளவும் வேண்டும். இப்படியான ஒரு சமூகச் சூழலில் திரைத்துறையில் மேலெழும்பி வந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இன்னும் வலுவாய் கால் பதிக்க காத்திருக்கும் கனவுகள் நிறம்பிய ஒரு இளைஞர்தான் இயக்குனர் ப. ரஞ்சித்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள எப்போதும் கலைகளைதான் முதல் ஆயுதமாக பாவிக்கும். கலைகளினால் ஏற்படும் மீட்சி சமூகத்தில் பெருந்தாக்கங்களை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்துகிறது. புரட்சி சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறது. தெருவில் இறங்கிப் போராடுவது ஒரு வழிமுறை என்றால் திரையில் இறங்கிப் போராடுவது வேறுவகை போரட்ட வழிமுறை என்பதனை அறிக; ப. ரஞ்சித் என்னும் கலைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னும் பிரம்மாண்ட கலைஞனிடம் கபாலியின் கதையினை கூறிய பின்பு அதை ரஜினி கேட்டு கொஞ்ச நஞ்சமல்ல முழுக்க முழுக்க தன்னை தன் மிகப்பெரிய சூப்பர் மாஸ் ஹீரோ இமேஜை தியாகம் செய்து விட்டு இது போன்ற படங்களில் நடிக்க காரணம்.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்தில் மாற்றம் வந்து விடாதா என்று எண்ணிய ஒரு இளைஞனின் புரட்சி எண்ணம் வீழ்ந்து விடக்கூடாது என்பதுதான். திரைப்படம் பிற்பாடு வணிக நோக்கத்தோடு அதிகமாய் விளம்பரபடுத்தப்பட்டது என்றாலும், இதில் அதிக வருமானம் பார்க்க எல்லா யுத்திகளையும் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செய்தார் என்ற போதிலும்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலநேரங்களில் தவறான தயாரிப்புகள் விளம்பரங்களால் முக்கியத்துவம் பெற்று சீரழிந்து போவது போல கபாலியால் ஒரு அபத்தம் நிகழாது என்ற விசயம் நமக்கெல்லாம் ஆறுதல்தான் ஏனென்றால் இங்கே விதைக்கப்பட்டிருப்பது நற்வித்து. ரஜினி அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலிருந்தே எந்த ஒரு மிகைப்படுத்துதலும் இல்லாமல் மிக மெதுவாகவே ஆனால் கூர்மையாகவே கதை நகர்கிறது. ரஜினியை முழுதாய் அபகரித்துக் கொள்ளாமல் அவர்களது ரசிகர்களுக்கும் தீனி போடவேண்டும் என்பதற்காக அட்டகாசமான காட்சிகள் இந்தப்படத்தில் நிறையவே உண்டு என்றாலும் இது பாட்சா போன்று ஹீரோயிசத்துக்கான படமல்ல. இது ஹீரோவை மையமாய் வைத்து சொல்லும் கருத்தை ஹீரோயிசமாய் கொண்ட கதைக் களம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
64 வயதில் என்ன ஒரு பாடி லாங்வேஜ், என்ன ஒரு சுறுசுறுப்பு எல்லாவற்றுக்கும் மேலாய் என்ன ஒரு ஸ்டைல்? நீலாம்பரியின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ஆமாம் வயதானாலும் அவரது கம்பீரமும், ஸ்டைலும்.....ஹும்கூம்....கொஞ்சம் கூட குறையவே இல்லை அவரிடம். மிகக் கவனமாய் எந்த ஒரு மிகைப்படுத்துதலும் சூப்பர் மேஜிக்கும் இல்லாமல் இயல்பாய் ரஜினி தனது பாத்திரத்தை கையாண்டிருக்கும் விதமும் அவரது நடிப்பும் சூப்பர் ஸ்டார் என்றால் என்ன? யார் என்ற கேள்விக்கு தெளிவாய் விடை சொல்லி இருக்கின்றன. மனைவியைப் பிரிந்த சோகத்தையும் மீண்டும் வெகு நாள் கழித்து தன் மனைவியை பார்க்கும் போது ஏற்படும் உணர்வையும் வெகு இயல்பாய் வெளிப்படுத்தி பின்னி பெடலெடுத்திருக்கிறார் மனிதர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....பிடிக்கலேன்னா சாவுங்கடா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீ ஆண்ட பரம்பரை டா.........நான் ஆளப்பொறந்த பரம்பரைடா........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று உணர்ச்சி பீறிட சூப்பர் ஸ்டார் பேசும் டயலாக்தானே ரஞ்சித் பரம்பரை பரம்பரையாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தின் ஆதாரக்குரல், இதை திரையில் நிகழ்த்திக் காட்டுவதுதானே அதுவும் ஒரு உச்ச நட்சத்திரத்தை பேச வைப்பதுதானே உனது கனவு.....? என்று கேட்டு பாரட்டத்தான் தோன்றுகிறது நமக்கு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலியில் நடித்ததோடு சூப்பர் ஸ்டார் நின்று விடக்கூடாது. இதே போன்று ரஜினி என்றால் யார்? அவரது நடிப்பின் முழுப்பரிமாணம் என்ன என்று எடுத்து சொல்லும் நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்ய வேண்டும். எங்கேயோ கேட்டகுரல், புவனா ஒரு கேள்விக் குறி, முள்ளும் மலரும்.....என்று பார்த்த ஒரு ரஜினியை ஒரு ரசிகனாய் வெகு காலம் கழித்து திரையில் ரசித்த திருப்தியை எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. வெறுமனே எதையோ எதிர்ப்பார்த்து அது இல்லை என்று இந்த அவசர கதியில் ஏதோ ஒரு கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகைச்சுவையாய் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் அத்தனை பேரும் கபாலி சொல்லவரும் அரசியல் என்ன? சூப்பர் ஸ்டார் என்னும் சிங்கம் தன் பிடரி சிலிர்த்து நடித்து கர்ஜித்திருக்கும் அந்த நடிப்பின் சுவை என்ன என்பதை நிதானமாய் பார்த்தால் எல்லோருடைய ஆழ்மனதிலிருந்தும் வெளிபடும் உண்மை காபலி போன்ற படங்களை நாம் வரவேற்றுதான் ஆகவேண்டும் என்று சொல்லும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலிருந்து கீழ் பார்த்து தமிழ்த்திரைப்படங்கள் பேசிய வர்க்க அரசியலை நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருந்தோம். கீழை மேலாய் மாற்றி மேலை கீழாய் ஆக்காமல் சரி சமமாய் வைத்துக் கூட பார்க்க திரணியற்ற தொடர் தமிழ் சினிமா மரபில் வரவேற்கத்தகுந்த புரட்சிகரமான தனது கருத்துக்களை மிக தைரியமாய் முன்னெடுத்த இயக்குனர் ப. ரஞ்சித் பாரட்டுக்குரியவர், இந்தக் கதைக்கருவில் தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் முழுமையாய் தன்னை ஒப்புக் கொடுத்து நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் போற்றுதற்குரியவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போக படத்தின் இசை,ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுமே பாரட்டுதற்குரியவர்கள்தாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலியின் தீம் நெருப்பு...அந்த நெருப்பு கனலாய் படம் முழுதும் பரவி இருக்கிறது. அதை உணர்வாய் பற்ற வைத்துக் கொண்டு சமூக மாற்றத்துக்கான வித்தாய் பார்ப்பதும் அல்லது வெறும் சிகரெட்டுக்கான நெருப்பாய் பார்ப்பதும்...பார்ப்பவர்களின் மனோநிலையைப் பொறுத்த விசயம்.<br />
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44431087335496062622016-07-21T12:44:00.000+05:302016-07-21T12:44:42.383+05:30கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-losg9gMe7rA/V5B2IOiOfkI/AAAAAAAALLE/taKttyYvL4s9UzuU-pQP9NCLLLNKnoCXQCLcB/s1600/kabali-stills-photos-pictures-120.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://3.bp.blogspot.com/-losg9gMe7rA/V5B2IOiOfkI/AAAAAAAALLE/taKttyYvL4s9UzuU-pQP9NCLLLNKnoCXQCLcB/s400/kabali-stills-photos-pictures-120.jpg" width="357" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ரஜினி என்னும் சூப்பர் பவரும் ஒன்றாய் சேர்ந்ததின் விளைவுதான் இவ்வளவு கோலாகலத்துக்குமே காரணம். இன்றைக்கு நேற்று இல்லை 1991 ல் தளபதி வெளியாவதற்கு முன்பு இவ்வளவு தனியார் தொலைக்காட்சிகளும், இன்ன பிற சோசியல் மீடியாக்களும் இல்லாத காலத்திலேயே தளபதி அட்டகாசமான ட்ரெண்ட் ஆனது. தளபதி தொப்பி, தளபதி டிஷர்ட், தளபதி பேக்பேக்ஸ், தளபதி ஸ்டில்ஸ் அடங்கிய காலண்டர் என்று எல்லாமே விற்றுத் தீர்ந்தது. தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை என்றெல்லாம் ரசிகர்களால் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. ரஜினி எப்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத ஒரு மாஸ் என்பது இப்போது இங்கே சமூக பிரக்ஞை என்ற பெயரில் அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதை மக்கள் ரசிக்கிறார்களோ எதை அதிகம் பேர் பார்ப்பார்களோ அதை பயன்படுத்தி பணம் சம்பாரிப்பது என்பது மார்கெட்டிங் யுத்தி. கமர்சியல் உலகத்தில் இதுவெல்லாம் சர்வசாதரணம், இந்தியா என்றில்லை எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்களை வைத்து பொருளீட்ட முடியும் என்று எந்த ஒரு நிறுவனமம் நினைக்கிறதோ அவர்கள் அப்போதைய ட்ரெண்ட்டை , கவர்ச்சியைக் கையிலெடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலிதான் இப்போதைய ட்ரெண்ட் அதை வியாபரிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை இல்லை என்று அர்த்தம். இங்கே அடிப்படையில் மிகைப்பட்டவர்களுக்கு இருப்பது வயிற்றெரிச்சல், ஆழ்மனதின் பொறாமை அதனால்தான் அர்த்தமில்லாத கோரக் கேள்விகள் புரையோடிப்போன மனதிலிருந்து எழுகின்றது. அசிங்கமான அடிப்படை எண்ணம்தான் திருட்டுத்தனமாக இந்தபடம் வந்து யாரும் திரையரங்கிற்கு செல்லாமல் படம் தோல்வியடையவேண்டும் என்று எண்ண வைக்கிறது. பொறுக்கித்தனமான எச்சிக்களை புத்திதான் ப்ரிவியூ ஷோவில் உட்கார்ந்து கொண்டு மொபைலில் கபாலி ஓப்பனிங் காட்சியை எடுத்து இணையத்தில் வைரலாக்குகிறது. சென்னை வெள்ளத்தில் ரஜினி என்ன செய்தார் என்பது அப்போதே ஊடகங்களில் செய்தியாய் வெளிவந்தது. பத்துலட்சம்தானே கொடுத்தார் என்று கேள்வி கேட்கும் குரூர புத்திகள் தங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயைக் கூட கொடுக்க மனமில்லாதவைகள் என்பதோடு மட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தின் போது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் சென்றன என்பதை வேண்டுமென்றே மறைத்துக் கொண்டு பேசும் ஈனத்தனமும் கொண்டவை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சாதாரண கண்டக்டராய் இருந்து இன்றைக்கு தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாய் இருக்கும் ரஜினி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதராய் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க கொடுத்திருக்கும் உழைப்பும், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராய் ஆனபின்பும் இருக்கும் அவரது எளிமையும் இது எல்லாவற்றுக்கும் மேலாய் அவரின் அட்டகாசமான ஸ்டைலும் ஸ்பீடும்தான் ஒவ்வொரு ரசிகனையும் காந்தமாய் இன்னமும் அவரை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விமர்சனங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் புதிதல்ல பல காலகட்டங்களில் பல விதமான் சூழல்களை கடந்து வந்ததைப் போல இந்தச் சூழலையும் அவர்கள் எளிதாய் கடந்து வந்து விடுவார்கள். கபாலி ரஜினியின் படங்களில் கண்டிப்பாய் ஒரு மிகப்பெரிய மைல்கலாய் இருக்கும் என்பது வரப்போகும் வாரங்களில் எல்லோருக்கும் தெரியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-63707668875897314142016-07-05T14:53:00.000+05:302016-07-05T14:53:18.123+05:30யாரோ....யார் யாரோ...?!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-jZ58sBl7f8c/V3t8Px7kdNI/AAAAAAAALKc/EbGLAFHbIkY9ruIRacGP_4s-TJznkTJYgCLcB/s1600/Lord-Shiva-Face-with-Om-Namah-Shivaya-HD-Wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://2.bp.blogspot.com/-jZ58sBl7f8c/V3t8Px7kdNI/AAAAAAAALKc/EbGLAFHbIkY9ruIRacGP_4s-TJznkTJYgCLcB/s400/Lord-Shiva-Face-with-Om-Namah-Shivaya-HD-Wallpaper.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம் நீதான் மாடு என்று சொன்னால்தான் புரியுமா? உன்னை பொறுத்தவரை எப்படி நீ இருக்கிறாயோ அதே போல நானும் இருக்கிறேன். நீயும் காலத்தை கழித்து மரணத்தை முத்தமிடுவாய் நானும் அப்படியே. மாட்டின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்ட போது யாரோவாக நின்ற அந்க்ட மாடு என்னை நீ யாரோ என்று சொல்வது போல மெல்ல நகரத் தொடஙியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நானும் மெல்ல அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாரோவாக வாழ்வெதென்பது</div>
<div style="text-align: justify;">
ஆரம்பத்தில் இருட்டில் </div>
<div style="text-align: justify;">
நடப்பது போலத்தான்</div>
<div style="text-align: justify;">
கொஞ்சம் கலக்கமாயிருக்கும்</div>
<div style="text-align: justify;">
வெளிச்சம் பயின்ற விழிகள்</div>
<div style="text-align: justify;">
இருள் கண்டு மிரளும்</div>
<div style="text-align: justify;">
விழிகள் என்பதே காட்சிகளைக்</div>
<div style="text-align: justify;">
காணும் கருவிதானே..</div>
<div style="text-align: justify;">
இருளில் எதற்கு விழிகள்</div>
<div style="text-align: justify;">
என்ற உண்மை செவுட்டில் அறையும் போது</div>
<div style="text-align: justify;">
இருள் நிஜமான </div>
<div style="text-align: justify;">
வெளிச்சமாய் மாறும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருள்தான் சுதந்திரம்</div>
<div style="text-align: justify;">
கருமைதான் பொருளற்றது</div>
<div style="text-align: justify;">
யாதுமற்றதுதான்</div>
<div style="text-align: justify;">
யாரோவாக ஆகமுடியும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
சிவனுக்கு கருப்பு பிடிக்குமாம் என்று சொல்லும் போதே சிவன் வேறு கருப்பு வேறு என்றுதானே பொருள்வருகிறது. சிவனே கருப்பு, கருப்பே சிவன். ஆழ்ந்த பொருள் கொண்ட இல்லாமைதான் அவன். இல்லாமல் இருப்பவன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நானும் கூட யாரோதான்....இல்லாமையில் வீழ்ந்தவன் என்று எழுதலாம் இல்லை விழுந்தவன் என்றும் கொள்ளலாம். விழுவதை விட வீழ்வதுதான் சிறப்பாய் எனக்கு படுகிறது. விழும் போது அங்கே இன்னும் சக்தி மிஞ்சி நிற்கிறது...வீழும் போது மொத்தமாய் எல்லாம் அழிந்தொழிந்து போகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாரோவானவனுக்கு எழுதுவது என்னும் தேவை இருக்கிறதா என்ன? அப்படி ஒன்றும் கிடையாது... முன்பே சொன்னது போல இது நடந்து பழகிய வீதி...ஆடிய காலும், பாடிய வாயும் மட்டும்தான் சும்மா இருக்காதா என்ன...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கையும் கூடத்தான்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43232775450502659282016-03-28T18:47:00.000+05:302016-03-28T18:47:00.226+05:30கோதை...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-OMjNapYMSxc/Vvksqx-mmZI/AAAAAAAALG0/fL71I1bv2bUKjinGv1hfr5SqPnP97jdNg/s1600/BeY-sgaCYAEWl7m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://2.bp.blogspot.com/-OMjNapYMSxc/Vvksqx-mmZI/AAAAAAAALG0/fL71I1bv2bUKjinGv1hfr5SqPnP97jdNg/s400/BeY-sgaCYAEWl7m.jpg" width="305" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
வானிடை வாழும் அவ் வானவர்க்கு</div>
<div style="text-align: justify;">
மறையவர் வேள்வியில் வகுத்த அவி</div>
<div style="text-align: justify;">
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து</div>
<div style="text-align: justify;">
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப</div>
<div style="text-align: justify;">
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று</div>
<div style="text-align: justify;">
உன்னித்து எழுந்த என் தட முலைகள்</div>
<div style="text-align: justify;">
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்</div>
<div style="text-align: justify;">
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இருந்தது எனது அதிகாலை மூன்றரை மணி விமானத்திற்கு....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூக்கத்தோடு எல்லோரும் விழிப்பாய் இருந்த அந்த நேரத்தில் நான் கண் மூடி ஆண்டாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பிரேமை இந்த ஆண்டாளுக்கு கண்ணன் மீது அவளின் காதலை உடல் சார்ந்தே மிகையாய் அவள் வெளிப்படித்தியிருக்கும் அழகில் கொஞ்சமும் மிகாத இளம் பெண்ணிற்குரிய தேவையும் தேடலும் சேர்ந்தேதானே இருந்திருக்கிறது. வெறும் பக்தி என்று விபூதியும் குங்குமமும் பூசிக் கொண்டு ஊரை ஏமாற்றவில்லை கோதை என்னும் அந்த ஆண்டாள். அவள் காதலை தன் பருவத்திற்கேற்ற மனோநிலையில் எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறாள். சுத்த பிரேமையில் இருந்திருப்பாள் போலும் என்று ஆண்டாளாய் மாறி அந்த பிரேம நிலையிலிருந்து பார்த்தால் இந்த உலக நியதிகள் எல்லாம் எவ்வளவு மட்டுப்பட்டதாய் தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்</div>
<div style="text-align: justify;">
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்</div>
<div style="text-align: justify;">
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்</div>
<div style="text-align: justify;">
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்றெல்லாம் எழுதி கிறங்கி கிடந்த பெண் எப்படி சராசரியான மானுட வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்? முக்தியைத் தேடிய மனதின் பிம்பவடிவம் கண்ணன், பிரபஞ்சத்தில் இல்லாத தன்மையோடு புணர்ந்து அழிக்க நினைத்த பெருங்காதலி ஆண்டாள் என்று யோசித்தபடி நானிருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் பாஸ்போர்ட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்த போது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று காதுக்குள் ஆண்டாளே பாடுவது போல எனக்குத் தோன்றியது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னை விமானநிலையத்தின் கூரைகள்தான் அடிக்கடி பெயர்ந்து விழுந்து விடுகின்றன ஆனால் சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் எல்லாம் தரமானதாய்தான் இருக்கிறது.... மார்கழி குளிர் போலவே அவ்வளவு குளிர். நான் டீ சர்ட்டை இறக்கி விட்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு கண்கள் மூடி தூங்கும் தூங்காமலும் எனது விமானத்தின் அழைப்பிற்காக காத்திருந்தேன் ஆண்டாளின் நினைவோடு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எக்ஸ் க்யூஸ்மீ ப்ளீஸ் என்று அழைத்த பெண் குரலைக் கேட்டு ஒரு வேளை ஆண்டாளாயிருக்குமோ என்று எனக்குள்ளிருந்த ஆண்டாளின் பிரேமை சுவாரஸ்யப்படுத்த மெல்ல கண் விழித்துப் பார்த்தேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பக்கத்து இருக்கையிலிருந்த பெண்... ட்யூ ஹேவ் எ லைட்டர் ப்ளீஸ் என்று கேட்டாள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நோ என்று நான் சொல்வதற்கு முன் என் பக்கத்து இருக்கையிலிருந்தவன் லைட்டரை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவள்... டூ யூ ஸ்மோக் என்று மறுபடி கொஸ்டினாள்..., எப்போதாவது புகைக்கும் பழக்கம் கொண்ட எனக்கு அப்போது புகைக்க வேண்டும் என்று தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று குளிர் இன்னொன்று அப்போதைய மனோநிலை...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரஸ்பரம் எங்கு செல்கிறோம் என்று தகவல்களை பார்மாலிட்டியபடி இருவரும் புகைக்க ஆரம்பித்தோம். தமிழ் மீது பற்று அதிகம் என்று சொன்னபடி தன் கையிலிருந்த ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பினை என்னிடம் கொடுத்தாள் அவள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாங்கி புரட்டிக் கொண்டிருந்த எனக்குள்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்</div>
<div style="text-align: justify;">
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்</div>
<div style="text-align: justify;">
பையத் துயின்ற பரம னடிபாடி</div>
<div style="text-align: justify;">
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி</div>
<div style="text-align: justify;">
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று ஆண்டாள் பாடியது மட்டுமே கேட்டது.... எதிரில் புகைத்துக் கொண்டிருந்தவளை பற்றிய யாதொரு யோசனைகளுமற்று....கண்களை மூடி சாய்ந்து சரிந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆண்டாள்களும் அவ்வப்போது வந்து போவர்கள் போலும் இந்த பூமிக்கு....!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44701087243096749802016-03-01T13:39:00.001+05:302016-03-01T13:39:30.875+05:30அவர்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-IIROdwI9Ka4/VtVLZcnF-SI/AAAAAAAALGU/BVvKtDsxZU4/s1600/bus2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://4.bp.blogspot.com/-IIROdwI9Ka4/VtVLZcnF-SI/AAAAAAAALGU/BVvKtDsxZU4/s400/bus2.jpg" width="300" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
ஒரே பேருந்து நிலையத்தில்தான் ஏறினோம்...<br />
வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார்<br />
சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார்,<br />
உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார்<br />
எந்த ஊர் போகிறேன் என்று விசாரித்தார்...<br />
உள்ளூர் அரசியல் பேசினார்,<br />
ஊர் முழுதும் ஒரே வெயில் என்றபடி<br />
ஜன்னலோரம் அமர்ந்து கொள்ளட்டுமா? என்று கேட்டமர்ந்தார்<br />
அம்மா உணவகம் நல்ல திட்டமென்றார்<br />
மீண்டும் இந்த அம்மாவே வரக்கூடாதென்றார்<br />
திமுகவிற்கும் என் வாக்கில்லை<br />
இருந்தாலும் கலைஞர் திறமையானவர்தான் என்றார்<br />
இந்த விலைவாசியில் எப்படி பிழைப்பதென்றார்?<br />
மோடியைக் கொடுத்து வைத்தவர் என்றவர்<br />
சொல்லிக் கொண்டிருந்த போதே...<br />
இடத்தின் பெயரை அதட்டிச் சொல்லி<br />
இறங்கச் சொன்ன கண்டக்டரின் குரலைக் கேட்டவுடன்<br />
அரக்கப் பறக்க இறங்கி ஓடிப் போன<br />
அவர்<br />
உங்களோடு கூட வந்திருக்கலாம்<br />
என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு பேருந்தில்..!<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-26120274645571329462016-02-28T11:57:00.002+05:302016-02-28T12:01:53.365+05:30பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-d2QnpC0bEBU/VtKTMtqeHrI/AAAAAAAALGE/fbv2UbNEJB8/s1600/anandham_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://4.bp.blogspot.com/-d2QnpC0bEBU/VtKTMtqeHrI/AAAAAAAALGE/fbv2UbNEJB8/s400/anandham_1.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊருக்கு நடுவேயிருந்த பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா என்னப்பத்தா...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே குப்பையா முள்ளுச் செடியா மண்டிக்கிடக்கு உள்ள இது என்னப்பத்தா...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டாங்கி சீலைக்குள்ளிருந்து அதிரசத்தைக் எடுத்து கொடுத்தபடியே அப்பத்தா சொன்னாள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதாப்பு நம்மூரு கம்மா...மல பேஞ்சு முன்னாடி தண்ணி நிறைஞ்சு தெப்பமா கிடக்கும் இதுலதேன் எல்லா பொழப்பு தலைப்பும் நமக்கு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மருதையில் ஆப்பரசேன் பண்னி போட்ட தடித்த கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு மறுபடி போட்டுக் கொண்டாள் அப்பத்தா, கண்ணாடியை கழட்டிய போது வேறு யாரோ மாதிரி இருந்தாள், கண்கள் சுருங்கி மூக்கின் மேல் அழுத்தமாய் கண்ணாடியின் தடத்தோடு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்மாக் கரையிலிருந்து இறங்கி நடந்தார்கள் அவர்கள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னப்பத்தா கருப்பு கருப்பா குட்டி குட்டி மரமா இருக்கே என்னப்பத்தா இதெல்லாம்..?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்க எல்லாம் பனைமரங்க இருந்துச்சப்பு முன்னாடி .... இந்தா நீ பாக்குறாயில்ல இந்த இடம் பூர பனை மரந்தேன்...இருந்துச்சு முன்னாடி. இப்ப.... வீடு கட்றதுக்கு பனங்கை வேணும்னு ஆளாளுகுக் வெட்டி வித்துப்புட்டாய்ங்கப்பா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே கல்லா நட்டு வச்சி இருக்காங்க...இதென்னப்பத்தா..? தரிசு காட்டை காட்டி அடுத்த கேள்வியைக் கேட்டான் பேரன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதான்ப்பு வயலு, அந்த கம்மாத் தண்ணிய பாச்சி இதுலதேன் விவசாயம் செய்வாக மொதவெல்லாம்..? அதுல ப்ளாட்டுக் கல்லு நட்டு வச்சிருக்ககப்பே..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓ.. ப்ளாட் கல்லா....சரிப்பத்தா என்றபடி மெளனமாய் கொஞ்ச நேரம் நடந்த பேரன் சடாரென்று கேட்டான் ....வெவசாயம்னா என்னப்பத்தா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோறு சாப்டுறீல்ல.. நீய்யி...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இல்லப்பத்தா நான் பிட்சா, பர்கர், நூடுல்ஸ், கேஎஃப்சி, கெலாக்ஸ், ஓட்ஸ், பாஸ்தா தான் எப்பவும் சாப்டுவேன்.. எப்பவாச்சும் அம்மா சோறு செய்வா....?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏப்பு நீ சொன்னதெல்லாம் திங்கிற சாமங்களா? அப்பத்தா ஆச்சர்யமாய் கேட்டாள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமாம்ப்த்தா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த கட்டக் கடைசியா சோறுன்னு சொன்னீல்ல அதை இங்கதேன் வெளைய வைப்போம்...அப்பத்தா சொன்னாள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏம்பத்தா அப்போ பர்கர், பிட்சா எல்லாம் எங்கப்பத்தா வெளைய வைப்பாங்க..? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒங்கூர்லயா இருக்கும்....வரண்ட தொண்டையில் சொல்லி விட்டு வெளுத்த வானத்தைப் பார்த்தாள் அப்பத்தா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பத்தா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்னால் செருப்புச் சத்தத்தோடு பேரன் நடந்து கொண்டிருந்தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊரைச் சுத்தி பாத்தியாப்பே...? அப்பத்தா கேட்டாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாத்த்தேன்னப்பத்தா... ஆனா....ஏம்பத்தா ஊர்ல யாரையும் வெளியிலயே காணாம்...வீடுக மட்டுந்தான் இருக்கு.. ஆளுகளயே காணோம்..? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாரும் பொழப்பு தலைப்புக்காக வெளியூரு போய்ட்டாகப்பே...என்ன மாதிரி கிழம் கட்டைக வீட்டுக்கு ஒண்ணு இரண்டு இங்கன இருக்குக...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் அப்பத்தா நீங்க எல்லாம் மட்டும் இங்க இருக்கீங்க....?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டு வாசற்படியில் ஏறிக் கொண்டே ...ஒங்கப்பன் வேலை தேடி மெட்டரசுக்கு போயிட்டு காசு சம்பாரிச்சுட்டு திரும்பி வந்துருவமத்தான்னு...சொல்லிட்டுப் போனானப்பு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டையும் காட்டையும் காப்பத்தி வச்சிருக்க இங்கனதான கிடக்குறமப்பே....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொண்டை அடைத்து வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்து விட்டு, மூக்கைச் சிந்திப் போட்டு விட்டு லீவுக்கு வந்த பேரனோடு வீட்டிற்குள் சென்றாள் கிழவி...!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6590617358684136132016-02-27T18:46:00.002+05:302016-02-28T11:45:20.200+05:30பாம்பு வந்திருச்சு....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-xIXQhue766o/VtGhZREEodI/AAAAAAAALFs/cPj_gNsZW7U/s1600/dirojap9T.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="381" src="https://3.bp.blogspot.com/-xIXQhue766o/VtGhZREEodI/AAAAAAAALFs/cPj_gNsZW7U/s400/dirojap9T.jpeg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்டிருந்த மீசையை தடவியபடியே அம்மா.... காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற என்னப் பார்த்தா சின்னப்பையனா தெரியுதா....</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">விடுங்கம்மா நான் பாத்துக்குறேன் சொன்னபடி ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்த முரளியை ஏற இறங்க பார்த்த பரந்தாமன், டேய் போய் பக்கத்து தெரு சைக்கிள் கடையில தனபால் உட்காந்திருப்பான் அவனைக் கூட்டிட்டு வேகமா ஒடியா என்று சொல்ல, ஏங்க தனபால் என்ன பாம்பு பிடிக்கிறவறா என்ன? அவர் சிகரட்தானே நல்லா பிடிப்பார் என்று பரந்தாமன் வீட்டுக்குத் தெரியாம அடிக்கும் திருட்டு தம்மை சீண்டினாள் ரமா. அப்போதுதான் பரந்தாமனுக்கு உறைத்தது பத்தாயத்துக்குப் பின்னால் இருக்கும் செல்ஃபின் மேல் கட்டையில் இருக்கும் சிகரட்டை ரமா பார்த்தாள் நாய் மாதிரி கத்துவாளே என்று...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">எப்படியாவது ரமா கண்ணுக்கு தெரியாமல் எடுத்து மறைக்க வேண்டுமே என்று யோசித்தார், சிகரெட் பாக்கெட் பாம்பை விட பயங்கரமாய் அவரை பயமுறுத்த...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">டேய்.. சொல்லிட்டே இருக்கேன் சும்மா நின்னுட்டே இருக்க போய் தனபால கூப்டுட்டு வாடா காசு கொடுத்தாதான் போவியோ என்று முரளியை பரந்தாமன் அதட்ட முறைத்தபடியே வாசலுக்கு வந்த முரளி தன் வீட்டு முன் தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பதை கவனித்த போதுதான் கூட்டத்துக்கு நடுவே எதிர்வீட்டு தேவகி நிற்பதையும் கவனித்தான்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">சுரீரென்று மண்டைக்குள் எதோ உறைக்க உள்ளே மறுபடி ஒடினான். அப்பா அந்த பாம்ப நானே அடிசுடுறேன் பா.. ரொம்ப ஈசி என்று அவனும் பத்தாயத்துக்குப் பின் இருந்த அந்த இடைவெளிக்குள் நுழையப் பார்க்க பரந்தாமன் அவனை முறைத்தார். டேய் போய் தனபால கூட்டிட்டு வாடா படுவா.... பாம்படிக்கிறானம் பாம்பு என்று அவர் சொல்ல அரைமனதோடு மெல்ல திரும்பி ஓட்டமாய் கடைத்தெருவுக்கு ஓடின முரளிக்கு எதிர் வீட்டு தேவகி கொடுத்த லவ் லெட்டரை பத்திரமாய் பத்தாயத்திற்குப் பின்னால் இருந்த பழைய ஷெல்ஃபிற்குள் ஒளித்து வைத்திருப்பதை பாம்படிக்கிறேன் பேர்வழி என்று அப்பா பார்த்து விடக் கூடாது என்ற பயம் நெஞ்சைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">மாலுவும், பாபுவும் தெருவில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பாம்பைப் பார்க்காமலேயே கதை அளந்து கொண்டிருந்தார்கள். இம்ம்பூட்ட்ட்ட்ட்ட்டு பெருசு தெரியுமா... என்று தன் குட்டைக் கையை நீட்டி கதையளந்து கொண்டிருந்த பாபுவின் காதி மாலு மெல்ல போய் ஏதோ கிசு கிசுக்கவும் அதுவரையில் உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்த பாபுவின் முகம் இருண்டு போனது...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">ஏண்டி உன் புத்தகப் பைக்கட்டுக்குள்ள தான வைக்கச் சொன்னேன்...ரெண்டு சப்ஜெக்ட்ல நான் ஃபெயிலு வேறடி, அப்பாக்கு தெரியாம அம்மாகிட்ட கையெழுத்து வாங்கி சமாளிச்சிடலாம்னு நினைச்சேனே பன்னி எரும இப்போ சாமன் சட்ட நகட்றேன்னு செல்ஃப்ல ஒளிச்சு வச்சிருக்க என் ப்ராக்ரஸ் ரிப்போர்டை பாத்து தொலைச்சா பாம்பை விட்டுட்டு என்னைய போட்டு அடிக்க ஆரம்பிச்சுடுவாரே...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">என்று அழுகமாட்டாமல் சொல்லிக் கொண்டிருந்த பாபுவின் சொக்காயை பிடித்து தொங்கியபடி ஏண்டா பாபு....பாம்ப நீ பாத்தியாடா? ரொம்ப நீட்டமாடா? என்ன பாம்புடா அது...பாம்பு மேல படம் இருந்துச்சுனா அடிக்கபுடாதும்பி அது சாமி பாம்பு....நீ ஆடி வெள்ளி படம் பாத்தியான்னா மாரியாத்தாதான் பாம்பு மாதிரி வந்து நம்மல செக் பண்ணுமாம்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">சாமி பாம்ப அடிச்சா அவ்ளோதான் அது கருவம் வச்சு அடுத்த ஜென்மத்துல கொன்னே போட்டுருமாம்...அப்டி இல்லேன்னா அதோட தொணை பாம்பு நம்மள கருவம் வச்சி கொத்திடுமாம் ஒங்கப்பா அம்மாவுக்கு தெரியாது போல இருக்கு...போய்ச் சொல்லுடா என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே இடுப்புக்கு கீழ் இறங்கிய கால்சட்டையை சரி செய்தபடி சொன்ன கோபுவை பார்த்து முறைத்தான் பாபு....</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">நீ போடா அங்கிட்டு இவரு பெரிய கலிக்ட்டரு வன்ட்டாரு மயிராண்டி என்று கத்தின பாபுவிற்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவன் அக்கா மாலுவிற்கும் ப்ராக்ர்ஸ் ரிப்போர்ட் அப்பா பரந்தாமனின் கையில் சிக்கி விடக் கூடாது, பெயிலானததுக்கு பாபுவிற்கும் அதை சொல்லாமல் மறைத்ததற்கு மாலுவிற்கும் செமத்தியாய் பூசை விழும் என்ற பயத்தில் பாம்பு பயம் எல்லாம் பறந்து போயிருந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">அந்த அண்டாவ நவுத்து, இந்த ஸ்டூல புடி, அந்த ஜன்னலைத் திற, டார்ச்சை தூக்கி அடி...என்று விறகு கட்டையை வைத்து தட்டி அடுப்பங்கறையையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்த பரந்தாமன் ரமாவைப் பார்த்து ஏண்டி எங்கடி இந்த முரளிப்பய தனாபால கூப்ட இம்புட்டு நேரமா....நையாப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லடி உன் மகன் உதவாக்கரை என்று கத்தியபடியே சிகரெட் பாக்கெட்டை ரமா பார்த்தால் இன்னைக்கு நைட் ஆரம்பிக்கிற கச்சேர் ஒரு மாசத்துக்கு ஓடுமே என்றும் பயந்து கொண்டும் தானிருந்தார்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">நையாப் பைசாவுக்கு முரளி பிரயோசனம் இல்லை என்று பரந்தாமன் சொல்லி முடித்த உடனேயே பைசா என்ற வார்த்தை பொளேர் என்று ரமாவை அறைந்து அவள் தூக்குவாளிக்குள் பரந்தமானுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சேர்த்து வைத்திருந்த 5000 ரூபாயை ஞாபகப்படுத்தியது. அடா...டா இந்த மனுசன் கண்னுல காசு பட்டுச்சுன்னா....காசு நம்ம கைய விட்டுப் போறதோட இல்லாம, பாழாப் போன மனுசன் சந்தேகப்பட்டே கொன்னுடுவானே இனி சல்லிக் காசு எக்ஸாட்ட்ராவ கையில கொடுக்க மாட்டானே என்று ராமா யோசித்துக் கொண்டிருந்த போதே அலமாரியிலிருந்த தூக்கு வாளியை பரந்தாமன் எடுத்து நகர்த்தப் போக...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-vk0QYEMnVXM/VtGhl8dmpCI/AAAAAAAALFw/zHRP3HSUQ8c/s1600/meena-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="127" src="https://1.bp.blogspot.com/-vk0QYEMnVXM/VtGhl8dmpCI/AAAAAAAALFw/zHRP3HSUQ8c/s400/meena-1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">ரமா பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் விக்கித்து நிற்க, தன் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பா பார்த்து விடுவாரோ என்று பயந்தபடியே எட்டிப்பார்த்த பாபு சரியாக பரந்தாமன் தூக்கு வாளியை எடுக்கப் போக எங்கே ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தொபுக்கடீர் என்று சரிந்து அப்பா முன்னால் விழுந்து விடுமே என்று பயந்த பாபு....அப்ப்ப்ப்ப்ப்ப்பா.... பாம்பு இங்கருக்க்கு..... என்று வேண்டுமென்றே கத்தி ஒரு மூலையிலிருந்த பொந்தைக் காட்ட....</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">முரளியும் பரந்தாமனின் நண்பர் கோபாலைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் வரவும் சரியாய் இருந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">பாபுவின் அலறைக் கேட்ட பரந்தாமன் தூக்கு வாளியை விட்டு விட்டு ஜம்ப் பண்ணி ஓடி அவன் காட்டிய பொந்துக்கு எதிரே ஓடி வந்து நின்று கொண்டார் பரந்தாமன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா சீட்டுப் பணம் தப்பிச்சுது என்று ரமா நிம்மதி பெருமூச்சு விட...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">நான் பாத்தேன் பாம்பு... இந்த பொந்துக்குள்ளதான் போச்சு.. என்று பாபு சொல்ல... .சின்னப் பிள்ளை பொய் சொல்ல மாட்டான்யா... வா தேடிப் பாப்போம் கிடைக்கலேன்னா இந்த பொந்துகுள்ளதான் இருக்கணும், ஏம்மா முதல்ல ஒரு துணி கொடுங்க என்று தனபால் கேட்க பழைய கைலி ஒன்றை தனபாலிடம் கொடுத்தாள் ரமா. பாபு காடிய பொந்தை முதலில் துணியைச் வைத்து அடைத்தார் கோபால்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">மறுபடி பாம்பு தேடும் படலம் தொடங்க.. பாபு நிம்மதியோடு வெளியே ஓடினான் விளையாட...!</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">தனாபாலும், பரந்தாமனும், முரளியும் ஆளுக்கொரு கம்போடு அடுப்படியில் அங்குமிங்கும் சுற்றித் தேடித் தேடி எங்கும் பாம்பு கண்ணில் படவில்லை, தனபால் காலில் சிக்கிய சிகரெட் பாக்கெட்டை யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் சொருகிக் கொள்ள, முரளி தேவகி கொடுத்த லவ் லெட்டரை மெல்ல எடுத்து கசக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">பாம்பு அந்த பொந்துக்குள்ள தான்பா போயிருக்கணும்..வேற எங்க போயி இருக்கும்...நாமதான் இம்புட்டு அலசி பாத்துட்டமே....என்ன பண்ணலம் இப்ப... என்று தனபாலைப் பார்த்தார் பரந்தாமன்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">சரி..சரி கொஞ்சம் சிமிண்ட்டும் மண்ணும் வாங்கிட்டு வாங்க அந்த இடத்தைப் பூசி அடைச்சிருவோம், பாம்பு உள்ளேயே செத்துப் போய்டும் என்று தனாபல் சொன்னதைக் கேட்ட பரந்தாமன்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">முரளியைப் போய் சிமிண்டும் மண்ணும் வாங்கி வரச் சொன்னார். பாபுவும், மாலுவும் மூணாவது வீட்டு வாசலில் ரொம்ப நாளாய் கிடக்கும் வீடு கட்டி மீதமான செங்கற்களை கொஞ்சம் பொறுக்கி வந்து வீட்டில் கொடுத்தனர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">ஏண்டி பாம்ப நீ பாத்தீல்ல என்ன பாம்பு அது ...நல்ல பாம்பா இருந்தா நாகத்தம்மனுக்கு காசு முடிஞ்சு போட்றணும் பாத்துக்க என்றார் பரந்தாமன்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">ஏங்க என்ன பாம்புன்னு எல்லாம் எனக்கு எப்டிங்க தெரியும்...? ஆனா நல்ல பாம்பு மாறிதான் இருந்துச்சு....எதுக்கும் நான் காசு முடிஞ்சு போட்டுறேன் ஆத்தாதான் தெரியாம நாம செய்ற தப்பை எல்லா மன்னிச்சு காப்பத்தனும் கன்னத்தில் போட்டுக் கொண்டால் ராமா.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">முரளி வாங்கி வந்த சிமிண்ட்டையும் மண்ணையும் கலந்து பூசுவதற்கு முன்னால் பொந்திற்குள் செங்கலைப் பொடித்து போட்டு நல்ல இறுக்கமாய் கட்டையை வைத்து குத்தி மேலே சிமிண்ட் போட்டு பூசி முடித்தார் கோபால்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">இனி வெளியே வர முடியாது, பய உள்ள்யே மாட்டிக்கிட்டான் என்று சிரித்தார் தனபால். சரி சரி.. இந்த சாமான் சட்டை எல்லாம் நவுத்தி வை... இந்தா வந்துர்றேன் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கோபாலின் தோளில் கை போட்டபடி வெளியே கிளம்பினார் பரந்தாமன். சிகரெட் பாக்கெட் கோபால் பாக்கெட்டில் இருப்பதை ஏற்கெனவே அவர் கவனித்திருந்தார்...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">மாலுவும் பாபுவும் தெருவில் ஓடிப்போய் பாம்பு சிறைப்பட்ட கதையை சொல்லி அளந்து கொண்டிருக்க முரளி ஜன்னல் வழியே வாசலில் நின்றிருந்த எதிர் வீட்டு தேவகியோடு கண்களால் பேச ஆரம்பித்திருந்தான்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">ரமா சாமான்களை ஒதுங்க வைத்து விட்டு ....பளீச் சென்று கொல்லைக் கதவை திறந்து வைத்து விட்டு கொல்லைக்குள் சென்று பொழுதாயிப் போடுச்சு....பாம்பு வந்தா என்ன பரதேசி வந்தா என்ன என் வேலையையும் நாந்தான் பாக்கணும்... என்று அலுத்து கொண்டே...பாத்திரம் தேய்க்க ஆரம்பித்த போது....</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">யாருமில்லாத அந்த அடுப்பங்கறையின் பத்தாயத்திற்கு பின்னால் குப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த சர்வப் பானைக்கு பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது....</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">அந்தப் பாம்பு...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">நாக்கை நீட்டி ...நீட்டி பயந்தபடியே பேந்த பேந்த முழித்தபடி....திறந்திருந்த கொல்லைக் கதவு வழியே தப தபவென்று....வெளியே கொல்லைக்குள் ஓடியே போனது அது...!</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;">தேவா சுப்பையா...</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: inherit;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50260886514251586762016-02-24T11:16:00.000+05:302016-02-24T11:16:01.014+05:30கிணற்றடி...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-l-F9CXuHmnM/Vs1DYAABZMI/AAAAAAAALFY/0plEde80tag/s1600/12734207_10153274522456780_6918700374691844187_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://1.bp.blogspot.com/-l-F9CXuHmnM/Vs1DYAABZMI/AAAAAAAALFY/0plEde80tag/s400/12734207_10153274522456780_6918700374691844187_n.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உருள ஆரம்பித்து விடுமாம்.</div>
<div style="text-align: justify;">
நான் வளர்ந்த பின்பு கிணற்றுக்கு மோட்டர் போட்டு வீட்டுக்குள் பைப் இழுத்த போது சகடையை கழட்டி ஒரு மூலையில் என் கடைசி மாமன் வீசிய போது...</div>
<div style="text-align: justify;">
அதை ஒரு கைக்குழந்தையைப் போல எடுத்து தன் கண்டாங்கிச் சேலைக்குள் பொத்தி எடுத்துச் சென்றாள் பாட்டி...! கொல்லைக் கடவிலிருந்த பெரும்புளியமரத்தூரினடியில் உட்கார்ந்து சகடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரும் கவனிக்கவில்லை என்னைப் போலவே...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேற்று பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது உருண்டு விழுந்த தரையில் ஓடிய சகடையைப் பார்த்த போதுதான் படக்கென்று நினைப்பு வந்தது....</div>
<div style="text-align: justify;">
இப்போதெல்லாம் எங்கே கேட்கிறது சகடைச் சத்தம்...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மோட்டார் பொருத்திய கிணற்றடி பக்கம் யாருமே செல்வதில்லை இப்போதெல்லாம்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பெல்லாம் வீடு தோறும் கிணறு இருந்தது, ஊர் ஊருக்கு ஒரு பொதுக் கிணறும் இருந்தது... அங்கெல்லாம் இடைவிடாமல் இந்த சகடைச் சப்தத்தோடு சேர்த்து எல்லோருடைய வாழ்க்கைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தது தானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14407209641085006672016-02-23T12:28:00.003+05:302016-02-23T12:28:32.593+05:30ராஜாவாக இருப்பதென்பது...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-MD7bWKbbW_4/VswC_Nyi5_I/AAAAAAAALFI/T6SRPoIiHiA/s1600/1925328_10151875603586780_1203839140_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://4.bp.blogspot.com/-MD7bWKbbW_4/VswC_Nyi5_I/AAAAAAAALFI/T6SRPoIiHiA/s320/1925328_10151875603586780_1203839140_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
ராஜாக்கள் உலகம் கொடுமையானதுதான்...<br />
தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும்<br />
முன் செல்ல வேண்டும்...<br />
கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லி<br />
அது சரிதான் என்று நிறுவ வேண்டும்...<br />
ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும்<br />
ஆபத்துக்களை கெதக் கெதக் என்று<br />
கடக்க வேண்டும்...<br />
பயப்படாத மனிதன் உண்டா இந்த புவியில்வ்.?<br />
ஆனால்...<br />
ராஜாக்கள் வாழ்க்கையில் பயப்படவே கூடாது...<br />
உடல் முடியாத போதும்<br />
கம்பீரமாய் நடக்கப் பழகவேண்டும்...<br />
குரல் வரவில்லை என்றாலும் கர்ஜிப்பது போல<br />
நினைத்துக் கொண்டு மியாவ் என்றாவது சப்தமெழுப்ப வேண்டும்<br />
ஊரையே நடு நடுங்க வைத்து விட்டு<br />
நம்பிக்கையின் நாயகனென்று முகம் இறுக்கி,<br />
உதடு துடித்து மீசை முறுக்கிவிட்டு...<br />
மொத்தத்தில்...<br />
வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும்...<br />
ஆமாம்...<br />
பேரவஸ்தைதான் ஒரு ராஜாவாக இருப்பதென்பது...!<br />
<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...<br />
<br />
<br />
<br /></div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46224267484215083742016-02-14T18:38:00.002+05:302016-02-14T18:38:53.894+05:30பேசித் திரியும் மான்கள்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-mgwRDT-Rqsw/VsB8I6j8eEI/AAAAAAAALDE/1wQvW-_8Dv8/s1600/ss101134_japanese_mountains_landscape.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://3.bp.blogspot.com/-mgwRDT-Rqsw/VsB8I6j8eEI/AAAAAAAALDE/1wQvW-_8Dv8/s400/ss101134_japanese_mountains_landscape.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்ன போது மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது. மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுதான் இன்னதுதானென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த நிதர்சனமற்ற வாழ்க்கையை சட்டை செய்யாமல் தன் போக்கில் வளர்ந்தவளைத்தான் இந்த கிராமத்தில் மின்மினிப் பூச்சியைப் போல கொண்டு வந்து போட்டிருக்கிறது காலம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவரையில் வாழ்க்கையில் நடந்து முடிந்தன யாவும் பொய்களே என்று அவள் கூறிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டிப்பார்த்த நிலவினை நான் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சூரியனைப் பார்த்தாயா மாறுவேடமிட்டு இரவிலும் சுற்றித் திரிகிறது என்ற பாட்டியை நான் ஊடுருவிப் பார்த்தேன்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விளக்கொளியில் பட்டு அவளது மூக்குத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது....வெளுத்த தலைமுடியும் பளபளக்கும் கண்களையும் கொண்ட அவள் யுகங்களாய் காதலோடு ஜனித்து மரித்து ஜனித்து வந்திருப்பவள் என்று என் மனது சொன்னது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதோ ஆயிற்று பத்து வருடங்களுக்கு மேல்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாத்தாவுக்கு அருகே பாட்டியும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்....ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது விளக்கு.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்குப் பின்னாலிருக்கும் சமவெளியில் பேருண்மையைப் பேசும் மான்கள் இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்க வேண்டும்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47162432001377819902016-02-08T13:38:00.000+05:302016-02-08T13:39:16.509+05:30இதன் பெயர்தான்(னா) காதல்..?!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://2.bp.blogspot.com/-_kbcRtfKCDA/VrhLmNO36LI/AAAAAAAALCo/0QWxiaxClCA/s1600/love-photography-wallpaper-hd-1024x640.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://2.bp.blogspot.com/-_kbcRtfKCDA/VrhLmNO36LI/AAAAAAAALCo/0QWxiaxClCA/s400/love-photography-wallpaper-hd-1024x640.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற பித்தமிகு நிலையில் தன்னிலை மறந்து, புறச்சூழல் மறந்து... இதோ...இவள் தான் என் தேவதை, இவள்தான் என் வாழ்க்கை, இவளின்றி ஏதும் நகராது என் வாழ்வில், இவளே எனது வாழ்வின் ஆரம்பம், இவளே என் வாழ்வின் இறுதி என்று எண்ணி எண்ணி இதயம் துடித்து எகிறி வெளியே விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஆழமான பெருமூச்சின் உஷ்ணத்தோடு நகர வேண்டும் நாட்கள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது காதல், அந்த காதல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை அவஸ்தைகளையும் செய்யும்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நள்ளிரவில் அது உறக்கம் கலைக்கும், திக்குத் தெரியாத கருவானின் தீராத தூரத்தை பார்த்தபடி தொண்டை அடைக்க, மூச்சு திணறி அது கேவிக் கேவி அழும், படுத்து கண் மூடி அவளைக் கண்ட அந்த கடைசிக் கணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து உமிழ் நீரை விழுங்கி ஆசுவாசப்பட்டு கொண்டு சிறகடித்து கனவில் பறக்கும். அப்பப்பப்ப்பா....இவள் இமைகளுக்குள் இருப்பது இரு விழிகளா இல்லை தீக்கங்குகளா என்ற கேள்வியொன்றை கேட்டு கேட்டு அடம் பிடிக்கும் பழக்கப்படாத யானையைப் போல நகராமல் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த பெரும் இரவை மெல்ல மெல்ல கட்டி இழுக்கும். காதல் பர்ப்பதற்கு என்னவோ கனமில்லாத ஒரு பஞ்சைப் போலதான் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்... ஆனால் காதல் கொள்ளும் போதுதான் அது ஒரு கனத்த மிருகம் ஆனால் பார்க்கமட்டுமே மென்மையானது என்ற ரகசியம் விளங்கும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவள் விழிகளால் புன்னகைப்பாள், உதடுகளால் உச்சரித்து உச்சரித்து உயிர் குடிப்பாள், அவ்வப்போது கேசம் ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என்று உயிரை பதற வைப்பாள், எங்கோ பார்ப்பது போல எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள், தீரத் தீர வேண்டும் என்பதை வேண்டவே வேண்டாமென்று சொல்வாள், வேண்டவே வேண்டாததைக் கொண்டு வந்து கொட்டு என்பாள், பேசாமலேயே இருப்பாள் ஆனால் தினமும் நினைவுகளில் பக்கம் பக்கமாய் பேசுவாள், கேள்விகள் கேட்டு வராத பதில்களுக்காய் வார்த்தைகளை தேடாமல் மெளனத்தால் மூர்ச்சையாக்குவாள்...ப்ரியத்தைச் சொல்லாமல் சொல்லவும், நேசத்தை கோபமாக காட்டவும் செய்வாள்...</div>
<div style="text-align: justify;">
அமிலக்கடலுக்குள் பிடித்துத் தள்ளி நெருப்பெரியும் ராத்திரிகளை பரிசளித்து விட்டு அவள் விழித்திருப்பாளா? உறங்கிக் கொண்டிருப்பாளா என்ற தர்க்கத்திற்குள் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிகாலையில் ஐ லவ் யூ என்ற மூன்றே வாக்கியத்தில் நம்மை இன்னுமொரு அதிய தினத்திற்குள் தள்ளிவிட்டு... மீண்டும் அவளைக் காணப் போகும் அந்தக் கணத்திற்காய் கடிகார முள்ளோடு சேர்ந்து நொடிக்கு நொடி நகரும் ஒரு பேரவஸ்தையைப் பரிசளிப்பாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காதலொன்றும் ஏதோ வழியில் எதிர்ப்படும் பால்ய சினேகிதனை பார்த்து சிரித்துப் பேசிச் செல்வதைப் போல எளிதானதொன்றுமில்லை, அது சுகமானதுதான் என்றாலும் வலியையும், கண்ணீரையும், ஏமாற்றத்தையும் எதிர்ப்பார்ப்பையும் போட்டுப் பிசைந்து பேரன்புக் கடலுக்குள் தள்ளிவிட்டு இனி இங்கே எதுவுமில்லை இதைத் தவிர என்றும் எண்ண வைப்பது...வாழ்க்கையின் எல்லாப் பொழுதுகளையும், எல்லாப் பருவங்களையும், போதும் போதுமெனுமளவிற்கு வானத்தையும் மேகத்தையும் நிலவினையும், இன்னபிற வாழ்வின் அத்தனை அழகியலையலையும் தன் அடையாளமாக்கிக் கொண்ட காதலென்ற ஒன்றின் ஆதி முத்திரையோடுதான் முடிச்சிட்டுத் தொடங்கியத் இந்த ராட்சச வாழ்வு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடிப்பெண்ணே..</div>
<div style="text-align: justify;">
சுறாவளியாய் என்னை சுழற்றி </div>
<div style="text-align: justify;">
அடிக்கும் இந்தக் கொடூரக் காதலையா</div>
<div style="text-align: justify;">
உன் கருணைமிகு விழிகளிலிருந்து</div>
<div style="text-align: justify;">
பிரசவித்து எனக்கு பரிசளித்தாய்...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரக்கமில்லாமல் என்னுள் அரற்றிக் கொண்டிருக்கும்</div>
<div style="text-align: justify;">
அத்தனை நினைவுகளையும் பெயர்த்தெடுத்து</div>
<div style="text-align: justify;">
உன் முன் கவிதையென்று மொழிபெயர்து வைத்து விட்டு</div>
<div style="text-align: justify;">
மண்டியிட்டுக் கிடக்கும் இந்த உணர்வுகளை,</div>
<div style="text-align: justify;">
விவரிக்க முடியாத என் கனவுகளை....,</div>
<div style="text-align: justify;">
நீ பட்டாம் பூச்சியைத் துரத்திப் பிடிக்கும்</div>
<div style="text-align: justify;">
சிறுமியைப் போல விரட்டி கொண்டிருக்கிறாய்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பஞ்சுப் பொதியினில் படுத்துறங்கும் தேவதையாய்</div>
<div style="text-align: justify;">
நீ என்னவோ சலனமின்றிதான் இருக்கிறாய் என்றாலும்</div>
<div style="text-align: justify;">
கடும் கனவு கண்ட கொடும் ராத்திரியில்</div>
<div style="text-align: justify;">
அலறி எழுந்து தாய் தேடும் பிள்ளையைப் போல...</div>
<div style="text-align: justify;">
உன்னையே மீண்டும் மீண்டும்</div>
<div style="text-align: justify;">
தேடி வரும் என் நினைவுகளை...</div>
<div style="text-align: justify;">
என்ன செய்வதென்றறியாமல்தான்...</div>
<div style="text-align: justify;">
இதோ இந்த வார்த்தைகளை எல்லாம் </div>
<div style="text-align: justify;">
நான் கடந்து கொண்டிருக்கிறேன்...</div>
<div style="text-align: justify;">
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51348093279568452272016-02-08T13:19:00.000+05:302016-02-08T13:19:15.784+05:30மழையாலானவள்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-hU0bT1TFjkg/VrhIV_y9Y2I/AAAAAAAALCc/bd9rzc1A1xs/s1600/ujI5uMvJ.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://1.bp.blogspot.com/-hU0bT1TFjkg/VrhIV_y9Y2I/AAAAAAAALCc/bd9rzc1A1xs/s400/ujI5uMvJ.jpeg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக் கூரைகள் கருணையோடு மழையை உன் வீட்டினுள்ளும் பெய்ய அனுமதிக்கும் என்று முன்பொரு நாள் நீ கூறியிருந்தாய்...ஊறிப் போன மண் சுவற்றையும் நீ சாய்ந்திருக்கும் முற்றத்து ஈர மரத்தூணையும் பார்த்தபடி உன் வீட்டு வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் பின் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆள் அரவமற்று இருக்கும் இந்த முற்பகலில் குடை கூட எடுக்கக் மறந்து போய் நான் இங்கு வந்து நிற்பது மழையையும் உன்னையும் பார்க்க மட்டுமே என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை அடித்துப் பெய்து இந்த மழை சொல்லிக் கொண்டிருந்ததை நீ கவனிக்கவே இல்லை..., மழை நனைத்திருந்த அள்ளிச் சொருகிய பாவடையுடன், காற்று கலைத்துக் கொண்டிருந்த உன் கேசத்தை சரிப்படுத்திக் கொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாய்... நீ...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யாருமற்ற இந்த தனிமையோடு அடர்த்தியான மழையை, அந்தமழையால் நனையும் சுற்றி இருக்கும் தாவரங்களை, மரங்களை, இந்த இரைச்சலை, இந்தக் குளுமையை, மண்ணை கரைத்தபடி சுழித்து நுரைத்து ஓடும் நீரின் சலசலப்பினை, குளிர் தாங்காமல் சிறகு ஒட்டிப் போய் தத்தித் தத்திச் செல்லும் அந்த காகத்தை, ஏதோ ஒரு மரத்திலமர்ந்து இந்த சூழலை இன்னும் அழகாக்க கூவிக் கொண்டிருக்கும் அந்தக் குயிலை....</div>
<div style="text-align: justify;">
என்று எதையும் விட்டுவிடாமல் விழி விரித்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காதலென்பது யாரோ ஒரு பெண்ணை காதலிப்பது மட்டுமல்ல, அவளின் அழகினை, அவளின் அவலட்சணத்தை, அவளின் சூழலை, அவளின் கோபத்தை, அவளிடம் பிடித்ததை, பிடிக்காததை என்று அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் யாவற்றையும் உள்வாங்கி நேசிப்பது. பேசினாலும், பேசாவிட்டாலும், கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மனக்கிளர்ச்சியைக் கொடுப்பவளாய் அவள் இருப்பாளாயின் அவளை விட்டு விடாதே...அவளை தொடர்ந்து கொண்டே இரு. தூர நின்றாவது அவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே இரு. நல்ல கவிதைகள் எல்லாம் வாசித்து கிரகித்து அந்த உணர்வில் ஊறிப்போய் திளைத்து,எப்படி மயங்கிக் கிடக்க வைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண்ணோடான காதலும் இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் சொல்லப் போனால் காதலென்ற பேருணர்வுப் பெருவெளிக்குச் செல்ல வேண்டுமானல் பெரும்பாலும் பெண் என்னும் பெருங்கதவைத் தட்ட வேண்டிதானிருக்கிறது....என்பது ஆண்களுக்கான விதி. பெண்களின் காதல் எப்படியிருக்கும் என்று ஆராய ஒன்று எனக்கு பிடிக்கவில்லை அல்லது நேரமில்லை. ஆணாய் இருந்து உலகத்தைப் பார்க்கும் போது பெண்ணை ஆணுக்குரியவளாய் மட்டும் பார்க்கும் போது ஏற்படும் அபத்தங்களுக்குள் நான் எப்போதும் போக விரும்பவதேயில்லை...</div>
<div style="text-align: justify;">
நான் ஆணாயிருந்து பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்...அதில் உன்னைப் போன்று என் உணர்வுகளை உரசி தீப்பிடிக்க வைப்பவளை காதலியாகப் பார்க்கிறேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை நீரில் கை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாய். மழை உன்னை நனைத்தது....நீ என்னை நனைத்தாய்....</div>
<div style="text-align: justify;">
காற்று வெகு உக்கிரமாய் அடித்து மேகங்களை கலைக்க முயன்று கொண்டிருந்தது... அங்குமிங்கும் தடுமாறிக் கொண்டிருக்கும் என் மனதை போலவே மேகங்களும் கனத்து கருத்து இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தன....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலையை உதறி மீண்டும் ரிப்பனால் தூக்கிக் கட்டியபடி ...</div>
<div style="text-align: justify;">
நீ வாசலுக்கு வந்தாய்...</div>
<div style="text-align: justify;">
ஒரு கவிதையில்</div>
<div style="text-align: justify;">
இன்னொரு கவிதை</div>
<div style="text-align: justify;">
நனையத் தொடங்கி இருக்க...</div>
<div style="text-align: justify;">
விழிகள் விரித்து....</div>
<div style="text-align: justify;">
அந்தக் காவியக் காட்சியினை</div>
<div style="text-align: justify;">
பார்க்கத் தொடங்கி இருந்தேன் நான்....</div>
<div style="text-align: justify;">
என்னுள்ளும் அடித்துப் பெய்ய</div>
<div style="text-align: justify;">
ஆரம்பித்தது மழை...</div>
<div style="text-align: justify;">
உன் வாசத்துடன்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-47316312580056162482015-12-22T19:46:00.000+05:302015-12-22T19:46:56.645+05:30சிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/--QZbNhYqCBo/Vnla8s94VCI/AAAAAAAALAM/JrlBFBrYO3c/s1600/vaanam-stills-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://2.bp.blogspot.com/--QZbNhYqCBo/Vnla8s94VCI/AAAAAAAALAM/JrlBFBrYO3c/s400/vaanam-stills-1.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது. விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...? சிம்புவின் பாட்டாச்சு அவர் வீடாச்சு அதைக் கேட்கும் அவரது உறவுகளாச்சு என்று வழக்கப்படி தன் தொடர் வேலைகளைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்திருப்பார்கள் மக்களும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்களுக்கா வேலை வெட்டி இல்லை...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நேரமிருந்தால் சமூக இணைவு தளங்களுக்குள் எப்போதாவது எட்டிப் பாருங்கள் இணையம் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் எவ்வளவு அவசரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று? தினம் தினம் எதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தெருவில் யாரோ இருவர் அடித்துக் கொள்ள நம் மண்டையா அதில் உடையப்போகிறது? எவன் மண்டையோ எங்கோ உடைந்தால் சரிதான் என்ற சமூக பக்குவத்தோடு வெகு சிரத்தையான பாதுகாப்புணர்வோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எம்பி, எம்பி இவர்கள் கம்பு சுற்றும் லாவகத்தை பார்க்கவேண்டும் நீங்கள். அன்றாட இணைய உலாவிகள் சராசரியாய் தங்களுக்கு எத்தனை லைக்குகள் எட்டிப்பார்க்கின்றன என்ற தொடுபதத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் சமூகப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞையையே தொழிலாய் செய்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரர்களுக்கும், சாருக்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அள்ள அள்ளக் குறையாத வைரம் போல நித்தம் நித்தம் நிகழும் சமூக நிகழ்வுகள்தான் இவர்களுக்கு தீனியே. எது நடந்தாலும் அதில் தன் கருத்தை சொல்லியே தீர்வது என்ற தீர்மானத்தோடுதான் இவர்களெல்லாம் பிறந்திருப்பார்கள் போலும்...? அடித்துப் பெய்த மழையில் ஆதரவாய் நின்ற மனிதர்களைப் பற்றி சொல்லிச் சிலாகித்துக் கொண்டிருந்த எல்லோரும் சடாரென்று தாவிக்குதித்து சிம்புவின் சொம்பு பாட்டை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஆலமரமாய் பார்த்து தேடி அமர்ந்து ஆளுக்கொரு கவுலி வெற்றிலையை வாங்கிப் போட்டு குதப்பியபடி நாட்டாமையாய் நர்த்தனம் ஆடத் தொடங்கிய பொழுதில் வெளுக்க ஆரம்பித்திருந்தது சென்னையின் வானம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிம்புவைப் பற்றி வந்த நிறைய விமர்சனங்களையும் கண்டனக்கட்டுரைகளையும் படித்து கடந்து கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்தே விட்டேன் நவீன புத்தபிரான் சாருநிவேதாவின் வெருண்ட கோபக்கட்டுரையைக் கண்டு. அவர் வயது வந்தவர்களுக்காக மட்டும் ஆபாசங்களை எழுதித்தள்ளுவாராம் அதனால் சமூகத்தில் ஒரு பாதிப்பும் வராதாம், அவர் வயது வந்தவர்களைப் பார்த்து ஆபாச விமர்சனங்களை வைப்பாராம் அதனால் சமூகம் இன்னும் நன்றாய் வளர்ந்து மேலேறி வருமாம்.... அய்யோ பாவம் அவரால் சிம்புவின் பாடலைக் கேட்டுவிட்டு தாங்க முடியவில்லையாம், அவருக்கு கோபம் கோபமாய் வந்ததெல்லாம் சரிதான் என்றாலும் அவர் வீசிய கல்லில் பாவம் டன் கணக்கில் இருந்ததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிம்புவாகட்டும், சாருவாகட்டும் தத்தமது வெளி என்று ஏதேதோ ஒன்றை தாங்களாகவே வரையறை செய்து வைத்துக் கொண்டு நீதிகளை தங்கள் வீட்டு முற்றத்தில் கட்டும் நாயைப் போல பாவிக்கும் பாங்கினை நினைத்தால் உவ்வ்வ்வே என்று குமட்டிக் கொண்டுதான் வருகிறதெனக்கு. சிம்பு விவகாரத்தில் சிம்புவை விட நான் நினைத்துப் பரிதாபப்படுவது அவரது அப்பா டி.ஆரைத்தான். பாவம் மனுஷன் தனி மனிதனாய் நின்று பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எதிர்த்து நின்று இசையமைத்து, பாட்டெழுதி, கதையெழுதி அதில் கண்ணியமாய் நடித்து, இயக்கி அப்ப்பப்பா....இன்றைக்கு வளர்ந்து நிற்கும் தலை, தளபதி ரசிகர்களின் காலத்தில் அவர் காமெடியனாய் பார்க்கப்பட்டாலும்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது</div>
<div style="text-align: justify;">
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது</div>
<div style="text-align: justify;">
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது</div>
<div style="text-align: justify;">
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்றெல்லாம் பாடி எழுதி கண்ணியமாய் நேற்று வரை மகன் செய்த தவறுக்கு தாய்க்குலங்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளியில் கண் கலங்குகிறார் அவர். தகப்பனின் உழைப்பால் கிடைத்த புகழையும், அவரால் கிடைத்த மரியாதையையும், கற்றறிந்த கலையையும் எந்த அளவுக்கு தவறாக கையாண்டிருகிறோம் என்பதை சிம்பு உணரவேண்டும். பெண்களைப் பற்றி விமர்சித்து எப்போதும் தன்னை ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொள்ளும் சிம்புவின் தாறுமாறான எண்ணங்களுக்கும் தான் தோன்றித்தனத்திற்கும் காலம் சரியான கடிவாளத்தைப் போட்டிருக்கிறதுதானென்றாலும்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதையெல்லாம் கடந்து வந்த பின்னர் தெளிவான மனிதராய் தன் தந்தையை போல தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிம்பு இருந்தால் சரிதான்...!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68203035155848390192015-12-15T18:50:00.000+05:302015-12-15T18:53:44.265+05:30அது அங்கேதானிருக்கிறது...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-u27HIePRN7I/VnATTRl9lfI/AAAAAAAAK_U/BjvxNDw6kGM/s1600/eb840521-a924-4f71-8587-18ecb6dd581b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-u27HIePRN7I/VnATTRl9lfI/AAAAAAAAK_U/BjvxNDw6kGM/s400/eb840521-a924-4f71-8587-18ecb6dd581b.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
எழுதுவதென்பது எதுவுமில்லை. அது தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொள்ளல். கருத்துக்களை விட்டு வெளியே வரும் ஒரு யுத்தி. யாருமற்ற பெருவெளியில் தன் காலடி ஓசையை மட்டும் கேட்டபடி நடக்கும் பிரக்ஞை நிலை. கோட்பாடுகளில்லா ஒரு தவம். இதுதான் இன்னதுதானென்று ஒரு நாளும் வரையறுத்துக் கொள்ள முடியாத வரையறுத்து சொல்ல முடியாத சூன்யம்.<br />
<br />
இருத்தல் மட்டுமே சத்தியமென்பதை உணர்ந்தபடி ஒன்றுமில்லாததை எழுதிக் கொண்டிருக்கிறேனே இப்போது, அதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இல்லாமல் இருக்கும் காலத்தைப் போன்று அசைவற்றுப் போய் அதை<br />
தான் எழுத்து அதிகபட்சமாய் செய்ய முயலும் அல்லது முடியும்.<br />
<br />
ஏதோ ஒன்றை சொல்ல முயலும் எல்லா முயற்சிகளையும் அறுத்தெறிந்து விட்டு ஒரு முற்று புள்ளியோடு முடிந்து போகும் எழுத்துக்கள் எல்லாம் நிஜத்தில் அதோடு முடிந்து போய்விட்டதென்றுதானா நீங்கள் கருதுகிறீர்கள்...?<br />
<br />
எங்கிருந்ததோ அது...<br />
அது அங்கேதான் இருக்கிறது இன்னும்<br />
எப்போதுமிருந்தது போலவே<br />
அது இங்கும்தானிருக்கிறது<br />
என்றறியும் போது பிறக்கும்<br />
தெளிவினைத்தான் காலம் காலமாக<br />
சித்தார்த்தர்களுக்கு<br />
எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன<br />
போதிமரங்கள்...,<br />
போதும் போதுமெனுமளவிற்கு<br />
கனவுகளை உங்கள் பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள்<br />
வழிநெடுகிலும்...<br />
அது மட்டும்தான் உங்களுக்குத்<br />
துணையாயிருக்கப் போகிறது...!<br />
<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43040702340417651052015-12-12T18:39:00.000+05:302015-12-12T18:39:28.422+05:30மெலுகா - சிவா த வாரியர் 0.1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-2iX7B_NNM1w/VmwcQpgZe1I/AAAAAAAAK_A/D8TvjUbCmm8/s1600/shiva_by_smkotian-d5etuqa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="http://4.bp.blogspot.com/-2iX7B_NNM1w/VmwcQpgZe1I/AAAAAAAAK_A/D8TvjUbCmm8/s400/shiva_by_smkotian-d5etuqa.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில் நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது போலவே எனக்குத் தோன்றியது. மஞ்சள் சூரியன் தூரத்தில் நிதர்சனமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன தெரியும் என்பது போல என்னை பார்த்து புன்னகைத்தபடியே மெல்ல மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பால்யம்தான் எவ்வளவு அழகானது? சிறு பிள்ளையாய் இருந்த போது இந்த மானசரோவர் கரையில் கற்களை விட்டெறிந்து யார் எறிந்த கல்லினால் அதிக அலைகள் உருவாகின்றன என்றெல்லாம் விளையாடிச் சிரித்திருக்கிறோம். என் உடம்பு முழுதும் போரில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இருந்தன. அந்தத் தழும்புகளை சூரியனின் செங்கதிர்கள் தொட்டு தடவ, மெலிதாய் வீசிய தென்றல் காற்று என்னையும் அந்த பிராந்தியம் முழுதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் ஷிவா...என்னை ருத்ரன் என்றும் என் மக்கள் அழைப்பதுண்டு. என் மக்களை இந்த காட்டுமிராண்டித்தனமான பாக்கிரதி கூட்டத்திடம் இருந்து காப்பதற்கே என் நேரம் எல்லாம் சரியாய்ப் போய் விடுகிறது, பிறகெப்படி இந்த வாழ்க்கையின் ஆழத்திற்குள் நான் சென்று விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலைப் பெறுவது...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சற்று தூரத்தில் இருந்த எம் கூடாரத்தின் நுழை வாயிலில் பத்ரா பாதுகாவலனாய் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் ஏதோ கனவில் உறங்கிக் கொண்டிருக்க நான் பத்ராவை பார்த்து புருவம் உயர்த்தினேன். பத்ரா என் முகமாற்றத்தைப் புரிந்தவனாய் அவனுக்கு பின்னால் திரும்பிப்பார்த்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களை எட்டி உதைத்து அவர்களை கவனமாயிருக்க சொன்னான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மீண்டும் மானசரோவர் ஏரியை நோக்கி முகம் திருப்பிக் கொண்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தக் ஏரிக்கரையில்தான் என் வாழ்க்கை துவங்கியது. யாதென்றும் இன்னதென்றும், விளங்கிக் கொள்ள முடியாத புதிரோடு நகரும் இந்த வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கேள்விகள் என்னுள் எழுந்ததும் இந்த ஏரியின் கரையில்தான். புற்றீசல்கள் போல மனிதர்கள் பிறப்பதும் பின் மறைவதுமென தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டிருக்க அசையாமல் நிற்கும் இந்த காலத்தை எப்படி நான் வெல்வது...? உண்ணவும், உடுக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் என்று மனிதர்கள் எல்லோரும் ஏதேதோ ஒரு அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்க எனக்கும் இந்த காலத்திற்கும் இருக்கும் தொடர்பின் முதல் முடிச்சை எப்போது தொட்டவிழ்ப்பது நான். இடைவிடாத போர்கள், போர்கள், உயிர்காத்துக் கொள்ள உயிர்களை கொல்ல திட்டங்கள் என்று எங்கே சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
யோசித்தபடியே எனது இடது பக்கம் திரும்பினேன். அங்கிருக்கும் கூடாரத்தில்தான் அன்னிய தேசத்தவர் இருவரயும் தங்க வைத்திருக்கிறேன். இருபது காவலர்கள் அந்த கூடாரத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். பாகிரிதிகளாலும் இன்ன பிற மலைவாழ் இனக்குழுக்களாலும் எப்போதும் உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த மலைகளுக்கு அப்பால் பெருஞ்சமவளிப் பகுதியிலிருக்கும் மெலுகாவிற்கு வரக்கூடாது என்று அவர்கள் என்னிடம் கேட்டதில் ஒரு நியாயம் இருப்பதாய்த்தான் எனக்கு தோன்றுகிறது...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீண்டும் ஆழமாய் புகைத்தபடியே.....யோசிக்க ஆரம்பித்தேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
...will continue....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13162817969685127692015-11-23T17:42:00.000+05:302015-11-23T17:42:04.835+05:30காதல் நர்த்தனம்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-tii7kJGluEc/VlMBzwA5jKI/AAAAAAAAK-Q/6YAlmQk3LCM/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="368" src="http://4.bp.blogspot.com/-tii7kJGluEc/VlMBzwA5jKI/AAAAAAAAK-Q/6YAlmQk3LCM/s400/download.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
காதல் கவிதையென்று<br />
அவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்து<br />
ஒவ்வொரு சொல்லாய்<br />
பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன்<br />
அது கண்ணீராலும் வலியாலும்<br />
நிரம்பிக் கிடக்கிறது..<br />
காதல் கவிதையென்று சொன்னாயே...<br />
என்றவளிடம் கேட்டதற்கு<br />
கண்ணீரும் வலியும் இல்லாமல்<br />
காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது<br />
உனக்கு காதல்...என்று<br />
கோபமாய் முகம் திருப்பிக் கொண்ட<br />
அந்தக் கணதில்<br />
காகிதத்திலிருந்து எழுந்து...<br />
நர்த்தனமாடத் தொடங்கி இருந்தது<br />
காதல்..!<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...<br />
<div>
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41818328613813701002015-11-23T16:23:00.000+05:302015-11-23T16:23:04.611+05:30கனவுகள் வாங்குவன்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-3chBPXm8c7M/VlLvmQVKs9I/AAAAAAAAK-A/DrHO2hfTNdU/s1600/balloons.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://4.bp.blogspot.com/-3chBPXm8c7M/VlLvmQVKs9I/AAAAAAAAK-A/DrHO2hfTNdU/s400/balloons.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
கனவுகள் நன்றாயிருக்கின்றன<br />
நிஜத்தினை விட என்றெண்ணிதான்<br />
கனவுகளை சீசாக்களில் பிடித்து<br />
வளர்க்கத் தொடங்கினேன்...<br />
முந்தா நாள் கண்ட அந்த கனவினையும்<br />
சேர்த்து ஆயிற்று மொத்தம்<br />
லட்சத்து நாற்பதாயிரம்<br />
எதார்த்தங்கள் கோரப்பற்களால்<br />
உயிர் குடிக்க முற்படும்போதும்<br />
நிகழ்காலம் துரோகக் கத்தியை<br />
கூர் தீட்டி வன்மம் கொள்ளும் போதும்<br />
யோசித்துபார்க்கவே முடியாத<br />
அபத்தங்கள் மூச்சைப் பிடித்து<br />
கழுத்தை நெரிக்கும் போதும்<br />
ஒவ்வொரு சீசாக்களாய் திறந்து<br />
என் கனவுகள் விடுவித்து<br />
அவை சொல்லும் கதைகளை<br />
கேட்டுக் கேட்டு என்னை<br />
மீட்டெடுத்துக் கொள்வதுமுண்டு...<br />
நாளையும் எனக்கு வேறொரு<br />
கனவு வரும்....<br />
என்ற கனவோடுதான்<br />
நித்தம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்<br />
இந்த நிதர்சனமற்ற<br />
அரக்க வாழ்க்கையொடு...!<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44552863881752082202015-11-23T15:59:00.000+05:302015-11-23T15:59:53.496+05:30மழை என்னவோ மழைதான்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-bGNk5sDdXrg/VlLpONj1hRI/AAAAAAAAK9w/E2gs-zIN4ls/s1600/RAIN6.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-bGNk5sDdXrg/VlLpONj1hRI/AAAAAAAAK9w/E2gs-zIN4ls/s400/RAIN6.JPG" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
மழை பெய்த நாளின்<br />
அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும்<br />
வானம் தெருவெங்கும்<br />
தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறது<br />
முட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டிய<br />
உடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்து<br />
நடந்து செல்கிறார்கள் மனிதர்கள்<br />
மழையை சபித்தபடி...,<br />
வீட்டுக்கூரையையும் தெருவையும்<br />
நனைத்தவிட்டு கணுக்கால் வரை<br />
தேங்கிக் கிடக்கும் மழையிடம்<br />
யாதொரு பிணக்குமில்லை அவர்களுக்கு,<br />
மழைக்கும் தெரிவதில்லை<br />
தான் வாசல் வரை மட்டும்<br />
வந்து செல்லக் கூடிய விருந்தாளி என்று,<br />
இது புரியாமலேயே<br />
விரும்புகிறார்கள் மனிதர்களென்று<br />
வீட்டு அடுக்களை வரை எட்டிப்பார்த்துவிட்டு<br />
மனிதர்களின் சலிப்பினையும் வெறுப்பினையும்<br />
பரிசாய் வாங்கிக் கொண்டு<br />
கோடையில் கொளுத்தும் வெயிலில்<br />
மீண்டும் என்னைத் தேடுவீர்கள்தானே...<br />
அப்போது பார்த்துக் கொள்கிறேன்<br />
கடிந்தபடியே<br />
உறிஞ்சும் வரை மெளனமாய்<br />
படுத்துக் கிடக்கிறது பூமி மீது...<br />
அடித்துப் பெய்தாலும் அழித்துக் கொன்றாலும்<br />
மழை என்னவோ மழைதான்...<br />
அதற்கென்ன மனதா இருக்கிறது...<br />
ஆனால் மனிதர்கள்தான்....<br />
<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா...<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66341855951904689322015-11-21T15:03:00.000+05:302015-11-21T15:03:01.033+05:30துளசி...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-GlZQaYM401g/VlA5cCEJocI/AAAAAAAAK9c/zbyXjepyjI8/s1600/Ai38T3pAtZEfWp8GgUJdRFKSR4G0yL5VZwq8HSp-l9JM.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="http://2.bp.blogspot.com/-GlZQaYM401g/VlA5cCEJocI/AAAAAAAAK9c/zbyXjepyjI8/s400/Ai38T3pAtZEfWp8GgUJdRFKSR4G0yL5VZwq8HSp-l9JM.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
துளசியும் நானும் காதலித்தோம்<br />
திருமணம் செய்து கொண்டோம்<br />
எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன<br />
ஒரு நாள் எதிர்பாராமல்<br />
வழியில் சந்தித்தும் கொண்டோம்<br />
அவள் கணவனுக்கு என்னை அறிமுகம்<br />
செய்தது போலே<br />
நானும் என் மனைவியை அவளுக்கு<br />
அறிமுகம் செய்து வைத்தேன்...<br />
பின் விடைபெற்றுக் கொண்ட<br />
அந்த நாளின் மதியத்தில்<br />
துளசி என்னிடம் தொலைபேசியில்<br />
இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்...<br />
நானும்தான் காதலிக்கிறேன்<br />
என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது<br />
என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...!<br />
<br />
<br />
<br />
தேவா சுப்பையா..<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72667310499931257012015-11-19T12:14:00.001+05:302015-11-19T12:14:52.718+05:30சப்தத்தின் மெளனம்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-YIfe9TpkEhE/Vj3S313oMbI/AAAAAAAAK8Y/S0We4Yyvjt4/s1600/10376175_204719716526288_99946469239359856_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="268" src="http://2.bp.blogspot.com/-YIfe9TpkEhE/Vj3S313oMbI/AAAAAAAAK8Y/S0We4Yyvjt4/s400/10376175_204719716526288_99946469239359856_n.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு தலையிலடித்தபடியே சரி போறதுதான் போற தலையை கவர் பண்ணிக்கபா என்று சொன்னபடியே அம்மா உள்ளே சென்று விட்டாள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் கவனமாய் கேமராவை பாலித்தின் கவரில் சுற்றி பத்திரப்படுத்திக் கொண்டேன், தலைக்குத்தான் ஹெல்மெட் இருக்கிறதே...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குளிர்ந்த காற்றோடு சேர்ந்து சில்லென்ன மழைத்துளிகளை முகத்தில் தெளித்துக் கொண்டிருந்தது வானம். மப்பும் மந்தாரமுமாய் அலைந்த மேகங்களை கலைத்து கலைத்து விளையாடிக் கொண்டிருந்த காற்று இஷ்டத்திற்கு என் முடியை கலைக்க முடியாமல் பொய்யாய் கோபித்துக் கொள்ளும் காதலியைப் போல பட்டும் பாடாமலும் ஹெல்மட்டுக்கு நடுவே கொஞ்சமாய் தெரிந்த என் முகத்தை தடவிச் சென்று கொண்டிருந்தது. கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன். நகரத்தின் நெரிசல் மெல்ல வழுக்கிப் பின் சென்று விட போக்கு வரத்து நெரிசலில்லாத சென்னையின் ஒரு புறநகர்ப்பகுதியில் உறுமியபடி விரைந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தூரத்தில் ஆள் அரவமில்லாத கிட்டத்தட்ட கைவிடப்பட நிலையில் இருந்த அந்த பேருந்து நிலையம் என்னை என்னவோ செய்தது தெரிந்து தன்னிச்சையாய் என் வாகனம் அந்த பேருந்து நிலையம் நோக்கி வழுக்க ஆரம்பித்தது. புதியாய் கட்டியும் கட்டப்படாமலும் ஓ..வென்று திறந்த வெளியில் பரந்து கிடந்த அந்த பேருந்து நிலையத்திற்குள் அவ்வப்போது புறநகர் பேருந்துகள் வந்து சென்ற தடம் தெரிந்தது. அமானுஷ்யமாய் தெரிந்த அந்த கட்டிடத்தின் ஒரு ஓரமாய் யாரோ ஒருவர் லுங்கி உடுத்தியபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். ஏதாவது அவரிடம் சென்று பேசலமா என்று யோசித்தபடியே வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர் ஏன் அங்கே அமர்ந்திருக்கிறார்? பயணியைப் போலவும் தெரியவில்லை அந்த ஏரியாவாசியாகவும் தெரியவில்லை. ஒருவேளை என்னைப் போலவே மழைச் சூழலை அனுபவிக்க அமர்ந்திர்க்கும் இன்னொரு ஏகாந்த வாசியா? மெல்ல அவரிடம் சென்றேன் காலை மடக்கி கொண்டு யாரடா நீ கற்பனைக் கிரகத்துக்குள் வந்த வேற்றுக் கிரகவாசி என்பது போல பார்த்தார்....எனக்கு அந்த தனிமையும் சூழலும் உள்ளுக்குள் ஏதோ செய்ய, மெல்ல என் கேமராவை எடுத்து பிரிக்க ஆரம்பித்தேன். ஆளில்லாத இந்த பேருந்து நிலையத்திற்குள் அதிரடியாய் வந்து ஏதோ ஒன்றை எடுக்கிறானே என்ற மில்லியன் டாலர் கேள்வி அவர் முகத்தில் கேள்வியாய் மாறி நெற்றிச் சுருக்கமாய் விழுந்தது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கேமராவை பார்த்தவுடன் பளீச் சென்று கரை படித்த பற்கள் மூலம் தன் வெள்ளந்தியான மனதை மெல்ல மெல்லத் திறந்தார் அந்த நடுத்தரவயது மனிதர். தன்னைத் தானே புகைப்படத்தில், கண்ணாடியில் பார்த்துக் கொள்வது மனிதர்களுக்கு அத்தனை ப்ரியமான விசயம். எங்கோ யாரோ ஏதோ ஒரு கூட்டத்தில் புகைப்படம் எடுத்தாலும் மீண்டும் அந்த புகைப்படத்தை நாம் பார்ப்போமா இல்லையா என்பது உறுதியாய் தெரியாவிட்டாலும் கூட தங்களை சரி செய்து கொண்டு ஆர்வமாய் கேமராவைப் பார்ப்பதெப்படி? எப்படி நிகழ்கிறது இந்த ஆச்சர்யம் என்று நான் பலமுறை யோசித்ததுண்டு...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொஞ்சம் உங்களை போட்டோ எடுத்துக்கலாமா என்ற என் மிக மிருதுவான அறிமுகத்தை மலர்ச்சியாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்த அவரை க்ளிக்கி விட்டு டிஜிட்டல் இமேஜை அவரிடம் காட்டிய போது சந்தோஷமாய் அதைப் பார்த்து சிரித்தார். மழைக்கு ஒதுங்க வந்தவன் யாரென்றே அறியாத மனிதனைப் புகைப்படம் பிடிக்கிறானே என்று யோசித்திருக்காலாம் இல்லையேல் திருத்தமாய் தன்னை முதன் முதலாய் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கலாம் இது இரண்டுமே இல்லையென்றாலும் கூட சட்டென்று தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ஏற்று மகிழ்ந்திருக்கலாம். மனித மனம் ஏங்குவதெல்லாம் இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுதான், அதுதான் எல்லா மனிதத்தேவைகளின் அடிப்படையாயும் இருக்கிறது. அன்பு, அனுசரனை இந்த இரண்டையும் தேடித்தான் மனிதன் தனக்குத் தெரிந்த எல்லா வழிகளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறான். முழுமையான அன்பும் அனுசரனையும் கிடைத்தவனுக்குத் தெரியும் இந்த உலகில் வேறொன்றும் முக்கியமில்லை என்று....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி சொல்லி விட்டு மழைச்சாரலை வாங்கியபடியே என் பைக்கில் வந்து அமர்ந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் முன் நெற்றியில் விழு மழையே...</div>
<div style="text-align: justify;">
கன்னத்தி தவழ்ந்து....</div>
<div style="text-align: justify;">
என் உதடுகளை முத்தமிடு....</div>
<div style="text-align: justify;">
கண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்யும்</div>
<div style="text-align: justify;">
என் விழிகளுக்குள்</div>
<div style="text-align: justify;">
சந்தோஷத்தின் திரவமாய் நீ இறங்கு</div>
<div style="text-align: justify;">
என் கண்ணீரினைச் சுத்தம் செய்...</div>
<div style="text-align: justify;">
கன்னம் கழுத்து வழியே சென்று</div>
<div style="text-align: justify;">
உடலைத் தழுவு...</div>
<div style="text-align: justify;">
என் ஆருயிர் மழையே</div>
<div style="text-align: justify;">
இவ்வுலகிலகின் பேருயிர் மழையே..</div>
<div style="text-align: justify;">
வா....கரைந்து போக நான் தயார்...</div>
<div style="text-align: justify;">
என்னை காதல் செய்ய நீ தயாரா...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தேன். ஹெல்மெட் இல்லாத என் தலையை பொய்க்கோபம் கலைந்த காதலியாய் தொட்டு நனைக்க... வானிலிருந்து விழுந்து கொண்டிருந்தன கோடி மழைத்துளிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்போதுதான் கவனித்தேன் யாரோ ஒருவர் கவனத்தோடோ அல்லது கவனமில்லாமலோ கொட்டிச் சென்றிருந்த சோற்றுக் குவியலை. யாருமில்லாத இந்த பேருந்து நிலையத்தில் சிதறிக்கிடக்கும் இந்த சோற்றுப் பருக்கைகளை யார் படைத்தது..? யாருக்கு படைத்தது....? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உனக்கான ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்ற திருக்குரானின் ஆயத்தொன்று என் நெஞ்சிலிருந்து எழும்பி செவியோரம் கிசுகிசுத்தபடியே காற்றில் சென்று கரைந்து கொண்டிருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தச் சோற்றுப் பருக்கையில் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று யோசித்தபடியே கன்னத்திற்கு கையைக் கொடுத்து தாங்கிப் பிடித்தப்படி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பட்டும் படாமல் தூர நின்று பார்ப்பதுதான் வேடிக்கை. வேடிக்கப் பார்ப்பது என்பது ஈடுபடுதல் கிடையாது. அதே நேரத்தில் தொடர்பறுத்துக் கொள்ளுதலும் கிடையாது. ஈடுபட்டுக் கொண்டே வெறுமனே இருத்தல். எங்கிருந்தோ சாரையாய் ஏற்கெனவே மொய்த்துக் கொண்டிருந்த அந்த எறும்புகளின் பெயர்தான் இந்த சோற்றில் எழுதபட்டிருக்கிறதோ, அவற்றின் பெயர் எழுதி இருப்பதால்தான் யாரோ ஒருவர் கொண்டு வந்து இங்கே இறைத்துச் சென்றிருக்க வெண்டுமோ என்று என் ஆன்மீக புத்தி வேகமாய் உள்நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கிருந்தோ வந்த ஒரு தெரு நாய் ஒன்று வேக வேகமாய் அந்த எறும்புகளைப் பற்றிய எந்த கவனமுமின்றி அந்த் சோற்றினை உண்ண ஆரம்பித்தது. பசிதான் இந்த பிரபஞ்சத்தில் பிரதானம். பசித்திருக்கும் போது எந்த ரசனையும் மனித மூளையில் ஏறாது....அப்படித்தானே விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் இருக்கும். உயிர்களின் அடிப்படை தேவை உயிர்வாழ்தல். இந்த நாயின் பேரும் பல பருக்கைகளில் எழுதப்பட்டிருக்குமோ என்ற யோசனையோடு வேகமாய் உணவருந்தும் அந்த நாயை என் கேமராவிற்குள் கொண்டு வர முயற்சி செய்தேன். நாயை எடுக்கிறேன் பேர்வழி என்று நான் எடுக்க முயன்றதெல்லாம் அந்த ஜீவராசியின் பசியை, திடீரென்று கிடைத்த உணவு எந்த நிமிடமும் பறிபோகலாம் என்று அதற்குள் இருந்த பதட்டத்தை, சந்தோஷத்தை, பயத்தை.....இப்படியாய் ஒரு புகைப்படமென்பது எனக்கு வெறுமனே ஏதேதோ பிம்பங்களை மட்டும் பதிவு செய்து கொள்ளும் ஒரு யுத்தியே அல்ல....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் புகைப்படங்கள் மூலமாய் என்னைச் சுற்றி நிகழும் வாழ்க்கையை, உணர்வுகளை, விவரிக்க முடியாத கனவுகளை பதிவு செய்யவே முயன்று கொண்டிருக்கிறேன். எனக்குள் நானே பேசிக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றது அந்த நாய்க்கு தொந்தரவாய் இருந்திருக்க கூடுமென்று நினைக்கிறேன் அதன் உணவருந்தும் வேகம் தடைப்பட பட்டென்று பதறி கொஞ்சம் தூரமாய் சென்றமர்ந்து அதைத் தொந்திரவு செய்யாத படிக்கு அமர்ந்து கொண்டு கிளிக்கிக் கொண்டிருந்த போது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சலனமில்லாத குளத்தில் தூக்கி எறியப்பட்ட கல்லாய், பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போதே நறுக்கென்று கையில் குத்தும் முள்ளாய், சாந்தமான பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது உறக்கம் கலைக்கும் பெரும் அலறலாய் வந்தான் ஒருவன் கையில் இருந்த பாலித்தின் பாக்கெட்டிலிருந்து எதையொ எடுத்து கொறித்தபடியே... அந்த நாயின் அருகே வந்து ச்ச்ச்சூ....ச்ச்ச்சுச்ச்சூ என்று அதட்டி அந்த நாயை விரட்டினான் அந்த மனிதன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயத்தோடு வாலை சுருட்டியபடி பின்வாங்கிக் கொண்டிருந்த அந்த நாயைப் பார்க்க எனக்கு என்னவொ போல இருந்தது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பூமி எல்லா ஜீவராசிகளுகும் பொது என்று மனிதன் ஒரு பொதும் நினைப்பதில்லை. தான் வாழ மட்டுமே இந்த பூமி என்ற மனோபாவத்தில் அவன் செய்யும் அடாவடியும் அட்டூழியங்களும் மீண்டும் முரண்பட்ட வாழ்க்கையாய் அவன் மீதே வந்து படிகிறது. மரத்தை வெட்டினான், மழை முரண்டு பிடித்தது, இயற்கை வாழ்க்கைக்கு எதிராய் திரும்பினான் நோய்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கால்மேல் கால் போட்டு தான் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியை எந்தக் கவலையுமின்றி அவன் தின்று கொண்டிருக்க...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னைப் போலவே கொஞ்சம் தூரத்தில் போய் அமர்ந்து கொண்ட நாயும் என்னோடு சேர்ந்து அவனை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்போது போவான் என்று நானும் நாயும் வேடிக்கப்பார்த்துக் கொண்டிருந்த போதே.... அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்த மழையில் கரையத் தொடங்கி இருந்தன அந்த சோற்று பருக்கைகள்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கேமராவை பாலித்தின் கவருக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பினேன் நான்.....ஆக்ஸிலேட்டரை முறுக்கி கொஞ்ச தூரம் நகர்ந்து திரும்பிப் பார்த்தேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த மனிதனையும் காணவில்லை, நாயையும் காணவில்லை, அங்கே சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் மழை மண்ணோடு கரைத்துவிட்டிருந்தது.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் விடு திரும்பிக் கொண்டிருந்தேன்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேவா சுப்பையா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: #666666;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: #999999; font-family: "trebuchet ms" , sans-serif; font-size: x-small;"><i>Photo Courtesy: Bala Photography</i></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com2