<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994</id><updated>2012-02-18T09:07:05.225+05:30</updated><category term='இசை'/><category term='தீபாவளி'/><category term='பிரபஞ்சம்'/><category term='கழுகு'/><category term='200வது பதிவு அனுபவம்'/><category term='அனுபவம் நகைச்சுவை'/><category term='போதி தர்மா'/><category term='ரஜினி'/><category term='அனுபவம் உலகம்'/><category term='கவிதை ஆன்மீகம்'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='சமூகம்'/><category term='ஆன்மீகம் கவிதை'/><category term='சமூகம் ஆண் பெண் உறவு'/><category term='அரசியல் சமூகம்'/><category term='கவிதை காதல்'/><category term='கதை'/><category term='கதை வெட்டுடையாள்'/><category term='முந்நூறாவது பதிவு'/><category term='ஈழம்'/><category term='அனுபவம் காதல்'/><category term='பொங்கல்'/><category term='கதை விழிப்புணர்வு'/><category term='அனுபவம்'/><category term='கவிதை தேடல்'/><category term='கட்டுரை'/><category term='அனுபவம் ஆன்மீகம்'/><category term='கதை அனுபவம்'/><category term='400வது பதிவு'/><category term='காதல் கவிதை'/><category term='அனுபவம் கவிதை'/><category term='அரசியல்'/><category term='தன்னம்பிக்கை'/><category term='கடவுள்'/><category term='சுனாமி'/><category term='ஆன்மீகம் கடவுள்'/><category term='கதை பெண்'/><category term='கவிதை சமூகம்'/><category term='ஆன்மீகம் தேடல்'/><category term='சுதந்திர தினம்'/><category term='கதை சமூகம்'/><category term='சிங்கம்'/><category term='கவிதை ஈழம்'/><category term='கட்டுரை சமூகம்'/><category term='சமூகம் கலாச்சாரம்'/><category term='.அனுபவம் ஆன்மீகம்'/><category term='கட்டுரை பொழுதுபோக்கு'/><category term='ஆன்மீகம்'/><category term='ஆன்மீகம் தியானம்'/><category term='கவிதை கட்டுரை'/><category term='பெளத்தம்'/><category term='விவேகானந்தர்'/><category term='தீபாவளி கட்டுரை'/><category term='கட்டுரை அனுபவம்'/><title type='text'>Warrior</title><subtitle type='html'>இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>405</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7778053123849895718</id><published>2012-02-17T14:08:00.003+05:30</published><updated>2012-02-17T14:30:23.420+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் சமூகம்'/><title type='text'>விடியட்டும் ஒரு அரசியல் புரட்சி........!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-_sqMQD4-d2Q/Tz4RP-BwpsI/AAAAAAAADjE/pns7ZAkc_Fg/s1600/photo32.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-_sqMQD4-d2Q/Tz4RP-BwpsI/AAAAAAAADjE/pns7ZAkc_Fg/s1600/photo32.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த பிரமாண்டம்...? யாருக்காக இந்த கட்டமைப்பு....?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளை தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மன்னராட்சி நடந்த கலத்திலேயே.... மக்களை மாண்போடு நடத்தி ஜனநாயகத்தை வேரூன்றச் செய்து, பெண்களை எல்லாம் அதிகாரிச்சிகளாக்கிப் பார்த்து அதிகாரங்களைக் கொடுத்து, மக்கள் கருத்தினை கேட்டு, மக்களுக்கான அரசு என்பதை மனதிலாக்கி, நல்லாட்சி கொடுத்த தமிழனின் பாரம்பரியத்தையும், அவனின் வீரத்தையும், மாண்பினையும் ஒழுக்கத்தையும் இந்த நவீன காலத்தில் ஜனநாயகம் என்னும் நாகரீக அரசியலைக் கைக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் செய்கிறார்களா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேருந்திலேயே பயணித்துப் பார்த்திராத, சாலைகளில் மக்களோடு நடந்து பழகிடாத, இரு சக்கர வாகனங்களை நெரிசலில் ஓட்டியோ அல்லது பயணித்தோ பார்த்திராத....மக்களோடு மக்களாக பழக திராணியற்ற, &amp;nbsp;அரசியல் கட்சியின் தலைவர்களும், தலைவிகளும் என்ன தீர்வினை நமக்குச் சொல்லி விடப் போகிறார்கள்...என் அன்புத் தோழர்களே..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமகாலத்தில் நம்மைக் காக்க அவதாரம் பூண்டிருக்கும் இந்த தலைவர்கள் எல்லாம் யார்? இந்த தலைவர்கள் மற்றும் தலைவிகளின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன? எந்த எந்த தொழில் செய்து எப்படி இப்படியான ஒரு வசதியான வாழ்க்கையை எட்டிப் பிடித்தார்கள்...? இவர்களின் வருமானத்திற்கு இப்படியான ஒரு மிகப் பெரிய ஆசிர்வாதம் எங்கே இருந்து கிடைத்தது...?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாரேனும் சொல்ல முடியுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம் அப்பாக்களின் காலத்திலிருந்த அரசியல் தலைவர்கள் இப்படி இருந்திருக்கவில்லை என்பதை நாம் அறிந்தவர்களாயிருக்கிறோமா என் தோழர்களே..? காமராசர் என்னும் மிகப்பெரிய மனிதர் தமிழகத்தின் முதல்வராய் இருந்தார்...தன் சொந்த வீட்டுக்கு குடிநீர் குழாயை தன் வயதான தயாருக்கு அதிகாரிகள் முதல்வரின் தாயார் என்ற காரணத்தினால் போட்டுக் கொடுத்ததை கழட்டி திரும்பக் கொடுக்க சொன்னார்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காரணம்...காமராசரின் தாய்க்கு மட்டுமல்ல அந்த தெருவில் இருக்கும் அத்தனை பேருக்கும் வீட்டுக்குள் தண்ணீர்க் குழாய் வரும் போது தன் வீட்டுக்கும் வரட்டும் என்ற எண்ணம்தானே...? முதல்வரின் தாயார் என்பதால் எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகம் நடந்து விடக்கூடாது என்ற புனிதமான அரசியல் நல்நோக்குதானே...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேரறிஞர் அண்ணா முதல்வராய் இருந்த போது வாழ்ந்த வீட்டிற்கு ஒரு முறை நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது....அங்கே அண்ணாவின் வளர்ப்பு மகனான திரு. பரிமளம் அண்ணாத்துரையை காணும் வாய்ப்பும் கிடைத்தது. சாதாரண ஒரு வாழ்க்கை நிலையில் தன் சொந்த தொழில் மூலம் பொருள் ஈட்டி வாழும் ஒரு காலத்தின் கட்டாயத்தில் அவரை விட்டுச் சென்றிருக்கிறார் அறிஞர் அண்ணா..., காரணம்..அண்ணா அவர்கள் செய்ததும் மாசற்ற தெளிவான அரசியல்...! வாரிசுகளைக் கொண்டு வர அவர் விரும்பவில்லை....வாய்ப்புக்களும், திறமைகளும் இருந்தால் அவர்களே மேலே ஏறி வருவார்கள் என்ற மாபெரும் எண்ணம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அறிஞர் அண்ணாவும், ஐயா காமராசரும் போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என் அன்பானவர்களே..இதோ இப்போது நம் அப்பாக்களின் காலங்களில் நாம் பிறப்பதற்கு முன்னால் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த அரசியலையா இப்போது அவர்களின் பெயர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் செய்கிறார்கள்...? இல்லைதானே....தோழர்களே...????&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழனின் வீரமும், மானமும் தன்மானமும் எத்தகையது என்று நான் சொல்லி என் சமூகம் அறிய வேண்டியது இல்லை...! ஒவ்வொருவரின் உள்ளேயும் தன்மானமும் சுயமரியாதையும் மரபணுக்களாய் விதைக்கப்பட்டுதான் இருக்கிறது. கூடவே இந்த மரபணுவோடு நமது கூடுதலான நன்றியுணர்ச்சியும், சேர்ந்தே விதைக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய நமது பிரச்சினையே....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நமது நன்றியுணர்ச்சியை, தமிழுணர்வை, நமது வீரத்தை, நமது பாரம்பரியத்தை வைத்தே நம்மை ஒரு மகுடிக்கு மயங்கிய பாம்பாய் மயங்கவைத்து, இலவசங்களை வாரியிறைத்து அப்படி வாரிக் கொடுப்பதை என்னமோ அவர்களின் அப்பன் வீட்டு சொத்தில் இருந்து கொடுப்பது போல ஒரு மாயக்கட்டினை காட்டி நம்மை மயங்க வைத்து...இன்று வால் குழைத்து வாழ்க, &amp;nbsp;ஒழிக கோஷம் போடும் ஒரு நாயாய் நம்மை மாற்றி வைத்திருக்கிறார்கள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் தேசத்து இளைஞனே...நாயல்ல நாம்.....! வேங்கைககளின் கூட்டம்....உலகமெல்லாம் கட்டியாண்ட பாரம்பரியத்தின் வித்து...., உலகமே மொழியற்று காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த போது கவி செய்த பெருங்கூட்டம்....முத்தமிழை சுவாசித்து....செந்தமிழை புத்தியில் ஏந்திக் கொண்டிருக்கும் 54,000 வருடங்களுக்கும் முந்தைய தொன்மையான தேசிய இனம்......&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீங்களும் நானும்....என்ன வேண்டுமானாலும், படிப்போம்...., நேர்மையான எந்த தொழில் வேண்டுமானாலும் செய்வோம்...ஆனால் அரசியல் என்னும் ஒரு படி நிலையை கண்டிப்பாக விட்டுக் கொடுக்காமல் நமது பங்களிப்பினைக் சரியாய் செய்வோம்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசியலுக்குள் சரியானவர்கள் இல்லாததால் அது சரி இல்லாதவர்களின் கூடாரமாக...அவர்கள் சொல்வதே வேத வாக்காக நாம் நம்பும் ஒரு மாய கட்டமைப்பாக இருக்கிறது. அரசியல் எனக்குப் பிடிக்காது என்று கூறும் சகோதர்களே......அரசியல் இல்லாமல் நானும் நீங்களும், நம் பிள்ளைகளும் எப்போதும் இருக்கப்போவது இல்லை என்பதை உணருங்கள்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனுபவக் கல்வியையும், ஏட்டுக் கல்வியையும், வாழ்க்கையின் எல்லா படி நிலைகளிலும் கற்றுணர்ந்த ஆன்றோர்களே..., இணையத்தைச் சுற்றி வரும்ச் சிங்க நிகர் இளைஞர் கூட்டமே... தெளிவாக இரு.....! நீ புரிதலோடு இரு....! எந்த மாயக்கட்டிலும் சிக்கி விடாதே.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி தவறுகளை நாம் நேருக்கு நேராய் கண்களை பார்த்துக் கேட்க வேண்டுமெனில்....அரசியல் என்னும் ஆயுதத்தை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்...! தேர்தல் என்னும் நெருப்பினை சரியாய் நம் தேசத்து மக்களிடம் பற்ற வைக்க வேண்டும்....! சம கால அரசியல் கட்சிகளை விட்டு வெளியே நின்று கவனிப்போம்...அரசியல் புரட்டுக்களைக் கூறி வசியம் செய்ய வரும் போது கவனமாய் இருப்போம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரியான தலைவனும், மிகச்சரியான அரசியல் கட்சியும்....மக்கள் நலனையே நாடுவார்கள். அப்படியான ஒரு தலைவன் மக்களோடு மக்களாய்த்தான் இருப்பான்.., தமிழகம் நிஜமாகவே மின் பற்றாக்க்குறையால் பாதிக்கப்படுகிறது என்றால் அதைச் சரி செய்யும் வரை...சரசாரி மனிதர்கள் வாழும் தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் வசித்து அந்த பாதிப்பில் தன்னையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வான்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் ஒரு நல்ல தலைவன்...தன் வீட்டில அந்த அரிசியைத்தான் பொங்கிச் சாப்பிடுவான்.....அவன் எப்போதும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டவனாக... மக்களுக்கான ஒரு தலைவனாய் எப்போது தன் வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்திருப்பான்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தெளிவுகளை கைக் கொள்வோம்...! இணையைத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் ஆபத்துக்களை தெளிவாக்கும் வண்ணம் இந்தக் கட்டுரை என்னும் சிறு நெருப்பு இங்கே கொளுத்தப்படுகிறது..இங்கே எழுதிப் பயனில்லை என்று கூறும் புரட்டு வாதங்களை தூர குப்பையில் எறிந்து விட்டு.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயன்ற வரையில் இந்த விழிப்புணர்வுத் தீயைப் பற்றிப் பரவச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.....!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாமார்க்கும் குடியல்லோம்......நமனை அஞ்சோம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-7778053123849895718?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/7778053123849895718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=7778053123849895718&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7778053123849895718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7778053123849895718'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/blog-post_17.html' title='விடியட்டும் ஒரு அரசியல் புரட்சி........!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_sqMQD4-d2Q/Tz4RP-BwpsI/AAAAAAAADjE/pns7ZAkc_Fg/s72-c/photo32.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1712106942998023739</id><published>2012-02-15T18:26:00.005+05:30</published><updated>2012-02-15T19:07:26.449+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம் தேடல்'/><title type='text'>சரணாகதி....!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-in-g2i1tFxg/Tzuq_ummZRI/AAAAAAAADi8/mpog_7BzOw4/s1600/42691-bigthumbnail.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="300" src="http://4.bp.blogspot.com/-in-g2i1tFxg/Tzuq_ummZRI/AAAAAAAADi8/mpog_7BzOw4/s400/42691-bigthumbnail.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில நேரங்களில் வாழ்க்கையின் போக்கு நமக்கு பிடிபடுவதில்லை. &amp;nbsp;திட்டமிட்டு செய்தேன் என்று சொல்வது எல்லாம் வாழ்க்கையின் போக்கோடு பொருந்தி நடக்கும் ஒரு சில செயல்களைத்தான் மற்றபடி ஒரு ஆற்றில் மிதக்கும் மரக்கட்டையைப் போலத்தான் வாழ்க்கையின் நகர்வு இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரணாகதி என்பது என்பதின் தூய தமிழாக நான் நினைப்பது ஒப்புக்கொடுத்தல். இந்த ஒப்புக் கொடுத்தல் என்னுமிடம் வேசம் போடும் இடம் அல்ல, மாய வார்த்தைகளைக் காட்டி வசீகரிக்கும் வித்தையல்ல, காரியம் ஆகவேண்டி காலைப் பிடிக்கும் யுத்தியும் அல்ல....ஒப்புக் கொடுத்தல் என்பது மிகப்பெரிய புரிதல். தான் எதைச் சார்ந்திருக்கிறோமோ அல்லது எவரிடம் நம்மைக் முழுதுமாய் அர்ப்பணிக்கிறோமோ அந்த செயலிலோ அல்லது மனிதரிடமோ நாம் வைக்கும் நம்பிக்கை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடேயே வாழும் வாழ்க்கை ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை. தன் மீதும் தனது தீர்மானித்தின் மீதும் அவநம்பிக்கை கொண்ட மனிதர்கள்தான் எதிலுமே நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். கணிக்கத் தெரிந்த மனிதன், விசுவாசத்தாலும், புத்தியினாலும் மனிதர்களை எளிதில் கணிக்கிறான். அந்த கணித்தலை புரிதலாக்கி, புரிதலை நம்பிக்கையாக்கி தன்னை ஒப்புக் கொடுக்கிறான் அல்லது சரணாகதி அடைகிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையிடம் சரணாகதி அடைதலும், இறைவன் என்ற ஒரு மறை பொருளிடம் சரணாகதி அடைதலும் ஒன்றுதான். பிறப்பையும், இறப்பையும் உணர்ந்தவன், சக மனிதர்களின், காலத்தின் மற்றும் சூழல்களின் நகர்வுகளை உணர்ந்தவன், வாழ்க்கையின் அடர்த்தி என்னவென்று பிடிபட்டுப் போய் வாழ்க்கையிடம் தன்னை சரணாகதி கொடுக்கிறான். என் செயல்களைச் செம்மையாய்ச் செய்வேன். வாழ்க்கை என்ன வேண்டுமானலும் கொடுக்கலாம்...எனது விருப்பு வெறுப்புக்கள் இன்றி அவற்றை ஏற்று நகர்வதே எனது புரிதல் என்ற நகர்வுதான் வாழ்க்கையிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல் ஆகிறது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னை தானே மனிதர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வது இல்லை. தனது தகுதிகளாக ஏதேதோ குப்பைகளை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஏலம் போடும் மடத்தனத்தையே மிகைப்பட்ட பேர்கள் செய்வதால் அவர்களால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடைசி வரை இயலாமலேயே போகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையைப் புரியவில்லையா... சரி, இதோ இங்கே வா... இதோ பார் இவர்தான் உன் கடவுள் இவரைப் பற்றிக் கொள். இவரிடம் உன் குறைகளைக் கூறு, இவர் சரி செய்வார் என்று ஒரு மாற்று வழியை மன திடம் இல்லாதவர்களுக்கும், வாழ்க்கையைப் புரியாதவர்களுக்கும் சில நல்லவர்கள் உண்டு பண்ணிச் சென்றிருக்கின்றனர். இதைச் சரியாக புரிந்து கொண்டு தன்னை இறைவனிடம் சரணாகதி கொடுத்து திருப்தியின் எல்லையை தொட்டவர்களும் இருக்கின்றனர்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த வழி முறையிலும் சறுக்கி விழுந்து விலங்குளைப் போல அடித்துக் கொண்டு கடைசிவரை ஒரு மிருகத்தைப் போல வாழ்ந்து மரித்தவரும் இருக்கின்றர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த இரண்டு வழிமுறைகளையும் கடந்த ஒரு மிக உன்னதமான வழிமுறைதான் மனமற்ற நிலையில், இப்பிரபஞ்சத்தின் எல்லா நகர்வுகளும் தன்னோடு தொடர்புள்ளது என்று புரிந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரியான பாதையைக் காட்டும் ஒரு குருவிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குருநிலை என்பது ஆதியில் இருந்த சூன்யத்திற்கும் முன்பிருந்த ஒரு கருத்து வடிவம். குரு நிலை என்பது மேலே சொன்ன இரண்டு வழி முறைகளையும் விட மிகவும் எளிதானதும், மிகப்பெரிய புரிதலைத் தரக்கூடிய ஒரு உன்னத வழிமுறை. காரணம்....இங்கே உருவமாக குரு இருப்பார் ஆனால் அவர் உருவமற்றதை அடைய அல்லது உணர, அதாவது நமது உண்மை இருப்பை அறிய வழிகாட்டவும் செய்வார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்கே குருவின் விரலினை சந்தேகத்துடன் பிடிக்கும் ஒருவன் புலியின் வாயில் சிக்கிய இரையாய் குருவாலேயே அழித்தொழிக்கப் படுகிறான். அதாவது மனமற்ற நிலையில் பிரபஞ்சத்தின் இருப்பாய் இருப்பவர்தான் குரு...! இப்படியான குருவை தனது சுயநல பயன்பாட்டுக்குப் ஒரு பொருளாய் பயன்படுத்த நினைக்கும் ஒருவன்..தனக்கு தானே அந்த விளைவினைப் பெற்றுக் கொள்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு காறி உமிழும் ஒருவனின் நிலையை, பிரபஞ்ச இருப்பில் இருப்பவர்களை வியாபரத்திற்காக பயன்படுத்தும் போது அப்படி பயன்படுத்துபவனே வியாபாரமாகிப் போகிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்படிப் பார்த்தாலும் சரணாகதி என்று சொல்லுமிடம் ஒருவனின் நம்பிக்கையின் உச்சம். நான் வாழினும், கொடுமையாய் வீழினும் நான் பற்றிய கையை விடேன் என்று ஒருவன் சரணாகதி அடைவதற்கு முன் தன் தீர்மானத்தின் மீது நம்பிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னை சரியாகப் புரிந்து கொள்ளதாவன், தெளிவில்லாவதன், முட்டாள், மடையன், மூர்க்கன், மூட நம்பிக்கையை பின் பற்றுபவன், பேராசைக்காரன், முன் கோபி, பொறாமைக்காரன், தற்பெருமை பேசுபவன் இவர்களால் சரியான படி வாழ்க்கையையோ, இறைவனையோ, அல்லது குருவையோ உணரவே முடியாது. இப்படி தன்னை ஒரு தெளிவில்லாதவனாக வைத்துக் கொண்டு இவர்கள் பற்றும் கரம் ஒரு திருடனுக்கும், ஏமாற்றுக்காரனுக்கும், ஆன்மீகம் என்ற பெயரில் திருட்டு போகத்தில் திளைப்பவனுக்கும் சொந்தமானதாகியே போகிறது.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையும் அவர்கள் சரணாகதி என்றே கூறுவார்கள்...ஆனால் அது ஒரு ஞானத் திருட்டு அல்லது குருட்டுப் புரிதல் என்றே கூறவேண்டும். இப்படியான ஒரு செயல் சரணாகதி அல்ல...கிட்டத் தட்ட தற்கொலை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னை உணராதவன் இந்த உலகத்தில் தெளிவான காட்சிகளை காண முடியாது. சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு மாதிரியான மன நிலை பேதலித்தது போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தன்னைப் பற்றியும், தன் செயல்கள் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டே ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் இறுதியை எட்டி மரணித்துப் போகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை சரணாகதி கொடுத்திருக்கிறேன்...இந்த மனிதரிடமோ அல்லது விசயத்திடமோ அல்லது செயலிடமோ நான் முழுமையாய் நம்பி என்னை கொடுத்திருக்கிறேன். நான் சார்ந்திருக்கும் விடயம் என்னை கடைத்தேற்றும் என்று கூறுபவர்கள் அத்தனைப் பேரும் முதலில் தங்களைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படியான புரிதலில்.......நீங்கள் வாழ்க்கையிடமோ, புரிதலுடன் கூடிய ஒரு கருது பொருளான கடவுளிடமோ அல்லது தெளிந்து விளங்கிய ஒரு குருவிடமோ உங்களை ஒப்புக் கொடுக்கும் போது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் ஒரு சிம்மமாய் அதை அறுத்தெறிந்து வெளியே வருவீர்கள் என்பது முக்காலமும் உண்மை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. சு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின் குறிப்பு: வாழ்க்கையும், இறைவன் என்ற ஒரு கருது பொருளும் கூட குரு நிலையின் செயல் வடிவங்களே...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1712106942998023739?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1712106942998023739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1712106942998023739&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1712106942998023739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1712106942998023739'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/blog-post_15.html' title='சரணாகதி....!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-in-g2i1tFxg/Tzuq_ummZRI/AAAAAAAADi8/mpog_7BzOw4/s72-c/42691-bigthumbnail.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8004738226091251042</id><published>2012-02-12T23:39:00.003+05:30</published><updated>2012-02-12T23:52:58.579+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை அனுபவம்'/><title type='text'>உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Dzh17RXYKMo/Tzf_EPRVrcI/AAAAAAAADi0/tFyC-8ez5dM/s1600/1423703.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="230" src="http://2.bp.blogspot.com/-Dzh17RXYKMo/Tzf_EPRVrcI/AAAAAAAADi0/tFyC-8ez5dM/s400/1423703.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொஞ்சம் நாளாகிதான் விட்டது உடையார் பற்றி எழுத ஆனால் வாசிக்காமல் இருக்கவில்லை தொடச்சியாக ஒரு நகரப் பேருந்து செல்லும் வேகத்தோடு ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பதும், பின் அந்த வாசிப்பில் லயித்துக் கிடப்பதும் என்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு பரபரப்போடு தொடங்கிய முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் அதிரடியான ஆளுமை என்னவென்று புரிந்தது ஆனால் போகப் போக &amp;nbsp;ஒரு மனிதனின் மகா வெற்றிக்கு எத்தனை நல்ல மனிதர்களின் கூட்டு மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகள் தேவை என்று தெளிவாக உணர முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெற்றிகளைக் குவித்து மிகப்பெரிய புகழுடன் இருக்கும் ஒரு பேரரசனுக்கு ஒரு கோயில் அதுவும் பிரமாண்டமாய் செய்ய வேண்டும் என்று தோன்றிய இடத்தை உற்று கவனிக்கையில்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது அதாவது &amp;nbsp;திருப்தியின் அளவு பொருளோ, புகழோ, அல்லது போகமோ அல்ல...திருப்தியின் உச்சம் என்பது தன்னை உணர்தல் என்று....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தன்னைச் சுற்றிலும் பல தொழில்களை செய்யும் மக்களைத் கொண்டிருந்த இராஜ இராஜசோழன் என்னும் சக்கரவர்த்தி அத்தனை பேரையும் கையாளும் விதத்தை எழுத்துச் சித்தர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிக அலாதியானது. வாசிக்க வாசிக்க சுகமானது. கருமார்கள் எனப்படும் ஆயுதம் செய்யும் தொழிலைச் செய்யும் மக்களை நேசிக்கும் புலிக்குட்டி என்று வர்ணிக்கப்படும் இராசேந்திர சோழனின் வேகத்தையும், இராஜ இராஜசோழனின் அனுபவம் செறிந்த நிதானம் கொண்ட தெளிவையும் வார்த்தைகளுக்குள் &amp;nbsp;எப்படி கொண்டு வந்தார் பால குமாரன்....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிறுவயதில் முதன் முதலாய் நீங்கள் அனைவரும் யானையைப் பார்க்கும் போது எப்படி பார்த்து இருப்பீர்கள்....ஆ.ஆ.....ஆ........ என்று வாய்பிளந்து...அட இது என்ன விலங்கடா..இது இவ்வளவு பெரிதாய்? இவ்வளவு வலிதாய், அட இது என்னடா காது இவ்வளவு பெரிதாயிருக்கிறதே...? அட இது என்ன நாசியா....?அதன் பெயர் துதிக்கையா....இவ்வளவு நீளமா..? என்றெல்லாம் வியந்து பார்த்திருப்போம் தானே...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படியான ஒரு ஆச்சர்யத்தோடே நான் வாசித்துக் கொண்டிருப்பதால் என்னால் அதை விட்டு வெளியே வந்து ஒன்றும் தனியே பகிர முடியவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருமார்கள் எனப்படும் ஆயுதப் படைக்கலன்களை செய்பவர்களை இராசேந்திர சோழன் மிகவும் நேசிக்கிறார். காரணம் இராசேந்திர சோழன் ஒரு மிகப்பெரிய போர் வீரன். சோழர்களின் ஆயுதங்களை வடிவமைப்பதில் இருக்கும் நேர்த்தியின் பலன நேரடியாக அவர் அனுபவித்து இருக்கிறார். போர்க்களத்தில் யானை மீது ஏறி அமர்ந்து வாள் உயர்த்தி எதிர்ப்படைகளுக்குள் உள் நுழைந்து செல்லும் போது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;படைகளை பிளந்து கொண்டு முன்னேறுகையில் போர் வீரனின் கையிலிருக்கும் ஒரே நம்பிக்கை ஆயுதம். மழையைப் போல சீறிப்பாயும் எதிரிகளின் அம்புகளுக்கு நடுவே முன் செல்லும் போது தன் கையிலிருக்கும் வாளை வீசி எதிரியின் தலை கொய்கையில் வாளின் நேர்த்தியும் அதன் கூர்மையும் உடனே, உடனே தனது வேலையை முடித்து விட வேண்டும்.சண்டையைப் பொறுத்த வரை வேகம் &amp;nbsp;முக்கியமல்லவா...? வேகத்தை ஆயுதங்களின் நேர்த்தியின்மை கெடாமல் காக்குமெனில் அதைச் செய்தவனை ஒரு போர் வீரன் எப்படி போற்றுவான்....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராசேந்திர சோழன் தான் ஒரு போர் முடிந்து வந்து தனது தலை மற்றும் உடல் கவசத்தை எடுத்து தமது தளபதிகளிடம் காட்டுகிறார். அந்த கவசங்களின் எல்லா பாகங்களிலும் சிறிது கூட இடைவெளியின்றி எதிரிகளின் அம்புகள் துளைத்து எடுத்து இருந்தும் ஒரு அம்பு கூட அந்த கவசத்தைக் கடந்து அவரின் உடல் தொடவில்லை....! அவ்வளவு நேர்த்தியாக ஆயுதத்தை வடிவமைத்து இருந்தனர்...கருந்தட்டாங்குடியில் வசித்த கருமார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கருமார்களின் தொழில் பக்தி ஒரு வீரனை வலுவுள்ளவனாக்கி வெற்றியைத் தேடித் தருகிறது. தேசத்தின் வெற்றிக்கு மறுக்கமுடியாத ஒரு காரணமாய் கருமார்கள் இருக்கையில் அவர்களை ஏன் சீராட்டக் கூடாது....? இது இராசேந்திர சோழனின் எண்ணமாயிருந்திருப்பதில் தவறுகள் ஏதும் இருக்க முடியாது தானே...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நூறு பேர் சேர்ந்து நின்றால் அது எவ்வளவு பெரிய ஒரு கூட்டமாய் நமக்குத் தெரியும்...? ஒரு பத்தாயிரம் பேரை அதுவும் போரில் வெற்றி கொண்ட &amp;nbsp;கங்க தேச, சாளுக்கிய, சேர, பாண்டிய தேசத்து வீரர்களை திறந்த வெளி பொட்டலில் திருவொற்றியூரில் அடைத்து வைத்து அவர்களை பராமரிப்பது என்ன சாதாரண காரியமா? இரேசேந்திர சோழன் அதை மட்டும் செய்யவில்லை.தன் தந்தையின் கோவில் கட்டும் பணிக்கு உதவப் போவது மனித வளம் மட்டுமே என்று உணர்ந்து....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிவபணியில் ஈடுபடுத்தி கொள்பவர்கள் தஞ்சை செல்லலாம், ஒருவேளை வரவிருப்பமில்லையெனில் உங்களுக்கு இப்போதே விடுதலை தருகிறேன் என்று கூறி அப்படி சென்ற சொற்பமான பேரை மட்டும் விட்டு விட்டு மீதமிருந்த அதிகமான அடிமை வீரர்கள் தானே விரும்பி வரும் வகையில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்..., இராசேந்திரன் எவ்வளவு பெரிய வீரனென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெற்றிக் கொள்பவன் மட்டுமல்ல வீரன்....! தோல்வியுற்ற மனிதர்களை மனித நேயத்தோடு நடத்துபவன் தான் மாவீரன்...! இராசேந்திரா சோழன் மாவீரன்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிமை வீரர்களை அனுப்பி விட்டு தஞ்சைக்கு வரும் வழியில் தனக்குப் பிடித்த கருமார்களை குடந்தைக்கு அருகில் சந்திக்கும் இராசேந்திர சோழன்..., அவர்களின் கோரிக்கையான தாங்களும் முப்புரி நூல் (பூணுல்) அணிய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக தரையில் அடித்து புழுதி பறக்க...சங்கல்பம் செய்கிறார்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்து வந்த சக்கரவர்த்தி இராஜ ராஜ சோழனே எதிர்ப்பார்க்காத ஒரு விடயத்தை இராசேந்திர சோழர் சத்தியம் செய்து கொடுத்ததை எவருமே எதிர்ப்பார்க்கவில்லைதான்..உடையார் இராஜ இராஜத் தேவர் உள்பட..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிறைய அந்தணர்களைக் கொண்ட சோழ தேசத்தில்......கருமார்கள் முப்புரிநூல் அணிந்தால் அவர்கள் முகம் சுழிப்பார்களே...! அந்தணர்கள் நேரடியாக மோத மாட்டார்களே....உள் நாட்டு குழப்பங்கள் உண்டு பண்ணுவார்களே.....பேசிப் பேசி ஒருவரை ஒருவர் மோத விடுவார்களே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியெல்லாம்....என் எழுத்துலக குருநாதர் பாலகுமாரன் விவரித்துக் கொண்டே செல்வார். பாலகுமாரனும் ஒரு பிராமணர்தான் என்றாலும் பிராமணர்களைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து இருப்பத் ஆச்சர்யம் இல்லைதான் என்றாலும் எதிர்மறையான கருத்துக்களை எழுத ஒரு துணிச்சல் வேண்டுமே....&amp;gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை பொறுத்த வரையில் பாலகுமாரன் மதம், சாதி எல்லாவற்றையும் கடந்த நிலையில் தற்போது இருப்பவர் என்பதை தெளிவாக நான் அறிவேன். அது மட்டுமல்ல உடையார் என்னும் நாவலை வெறும் கதையைச் சொல்வது போல சொல்லிச் செல்ல வெறும் கதாசிரியரால் &amp;nbsp;முடியும்...ஆனால் பாலகுமாரன் அங்கே வாழ்ந்திருக்கிறார். நம்மையும் எழுத்துக்கள் என்னும்கை பிடித்து அந்த கால கட்டத்திற்குள் வாழ அழைத்துச் செல்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இராஜ இராஜ சோழன் தலைவன் என்றால்........இராசேந்திர சோழன் புரட்சித் தலைவன்..என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆமாம்....சாதி சமய வேறுபாடுகள் கடந்து அந்த காலத்திலேயே கருமார்களின் சேரியில் அப்போதே அமர்ந்து உணவு உட்கொள்ளவும், அவர்கள் வீட்டில் படுத்துறங்கவும் செய்தவன் புரட்சித் தலைவன் தானே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தலைவருக்கும் புரட்சித் தலைவருக்கும் நடக்கும் தீப்பொறி பறக்கும் மோதல்களை வரும் வாரங்களில் பார்ப்போம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;u&gt;கல்வெட்டு:&lt;/u&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;“ நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.&lt;/span&gt; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; text-align: -webkit-auto;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சோழம்...! சோழம்...! சோழம்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. சு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8004738226091251042?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8004738226091251042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8004738226091251042&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8004738226091251042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8004738226091251042'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/12022012.html' title='உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Dzh17RXYKMo/Tzf_EPRVrcI/AAAAAAAADi0/tFyC-8ez5dM/s72-c/1423703.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-287006357126757124</id><published>2012-02-11T18:04:00.004+05:30</published><updated>2012-02-11T22:54:39.874+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம் காதல்'/><title type='text'>பகிர முடியாத வார்த்தைகள்....!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-NBe3uvJU5AE/TzZkrhUyC3I/AAAAAAAADis/KiFzXe_2pHs/s1600/c1.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="352" src="http://3.bp.blogspot.com/-NBe3uvJU5AE/TzZkrhUyC3I/AAAAAAAADis/KiFzXe_2pHs/s400/c1.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயல்புகளை விவரிக்க முயலும் வார்த்தைகள் தோல்விகளையே எப்போதும் தழுவுகின்றன. கற்பனைக்கு நிறைய பொய் தேவைப்படுகிறது. நிஜமோ நேருக்கு நேராய் நம்மை எப்போதும் எதிர்கொள்கிறது. சிறகடிக்கும் மனம் இளைப்பாறுவது என்னவோ எதார்த்தத்தில் தான்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் கவிதை சாலைகளிலின் விளிம்புகளில்தான் அவள் எப்போதும் எனக்காக காத்திருப்பாள் நிஜமென்னும் உணர்வுகளை ஏந்திப் பிடித்தபடி. வர்ணிக்க கூடியது எல்லாம் விவரிக்க முடிந்தது. விவரிக்க முடியாதது வார்த்தைகளுக்குள் எப்போதும் வந்து விழுவதில்லை. காதலை விவரிக்கலாம்...கடவுளை...? பூமியை விவரிக்கலாம் அதன் மூலத்தை மொழி பெயர்க்கலாம்.. ஆனால் பிரபஞ்சத்தை அதன் ஆழத்தை எப்படி மொழியாக்கம் செய்வது..?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விரல் விட்டு எண்ணக் கூடியது எல்லாம் கடந்த பிரமாண்டத்தை உணர்தலே மிகப்பெரிய விடயம். அதை உணர்ந்தவன் அதில் லயித்துக் கிடப்பான் ஒரு நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல..., அவனில் இருந்து தெறித்து விழுவது &amp;nbsp;யாவுமே நிரம்பி பின் வழிவதுதான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்போது உள் நிறைந்து கிடப்பவது, எப்போதும் வெளியில் வர முடியாதது. &amp;nbsp;காந்தத்தின் அதிர்வுகளாய் உடலுக்குள் மையம் கொண்டிருப்பதை எப்போதும் காட்சிப்படுத்துவதிலும் கவிதைப் படுத்துவதிலும்..நாம் வெற்றி கொள்ள முடியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வண்ணக் கலவைகளை எடுத்து விசிறும் தூரிகைகளுக்கு ஒவியத்தின் அழகைப் பற்றி என்ன கவலை? தூரிகையின் விசிறிலே அதன் விஸ்தாரமே ஓவியம். வர்ணங்களை கரைத்துக் கொடுத்து அதில் ஊறிக் கிடந்து ஒரு ஓவியத்தை படைத்த திருப்தியில் தூரிகைகள் எப்போதும் சந்தோசித்துக் கிடக்கின்றன....அவை ஓவியமாக எப்போதும் முயல்வதே கிடையாது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படித்தான் காதலுக்கு ஒரு கருப்பொருளாய் ஒரு காதலி அவளே கைத்தளம் பற்றிய ஒரு வாழ்க்கைத் துணை என்று நகரும் போது, தனித்து பகுத்து பிரித்து எப்படி எழுதுவது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இயல்பை வெளிப்படுத்துதல் ஒரு போதும் கவிதையாவதில்லை...! நிறைவுகள் எப்போதும் காவியங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும் இல்லை. தீரத் தீர எரியும் பெருங்கனலில் எரிதல் மட்டும் நிகழும்....! அப்படியான ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய எரிதலில் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு நகரும் ஒரு பெருஞ்சக்தியாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் அமைகிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனக்கான நகர்வில் ஒரு சப்தமான மெளனத்தை நான் என் வாழ்க்கைத் துணையாக கொள்ள வெண்டியிருந்தது. நாம் பேசிப் பேசி சாதிக்க நினைத்ததை எப்படி ஒரு பெண்ணால் சப்தங்களற்று இறுக்கமான மெளனங்களால் மட்டுமெ வெற்றிக் கொள்ள முடிகிறது என்ற குழப்பமே எனக்கு இன்னும் தீரவில்லை....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் என்னை வார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் என்னை புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னோடு அழுகிறது. என்னோடு சிரிக்கிறது. என்னோடு பட்டினிக் கிடக்கிறது. &amp;nbsp;என் சந்தோசங்களை எப்போதும் தூர நின்று ரசிக்கிறது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் எப்போதும் நம் கூட இருப்பது...! அது நம் ஜனித்து விழுந்த நொடியில் இயங்கத் தொடங்கிய ஒரு மறைமுக வஸ்து ஆனால் ஒவ்வொருவரின் திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு அது ஆணாகவும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாகவும் தன்னை பரிணமித்துக் கொள்கிறது....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மானுடர்கள் இதை உற்றுக் கவனிப்பதில்லை. நான் நின்று நிதானித்து ஒரு குருடன் வாகனங்கள் நிறைந்த சாலையைக் கடக்கும் பொறுமையோடு இதை உணர்ந்திருக்கிறேன். வலியை வாங்கிக் கொள்ளவும், வலிகளை போக்கி விடவும் இந்தத் துணை காலம் காலமாக நம் சமூகம் மட்டுமில்லை...உலகத்தில் எல்லா சமூகத்திலும் உதவியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பந்தங்களை, உறவுகளை, வெறுமனே கருவிகளாக பாவிக்கும் மனிதர்கள் இதனைப் பெரும்பாலும் உணர்வதில்லை..ஆனால் வாழ்க்கையை உணர்ந்து நகரும் போது திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் ஆளுமை என்ன என்று ஒரு ஆணாலும், ஒரு ஆணின் தேவை என்ன என்று ஒரு பெண்ணாலும் தெளிவாக உணர முடியும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலங்கள் நகர, நகர என் புத்திக்குள் தேங்கிக் கிடந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திடம் எல்லாம் மெல்ல, மெல்லக் கரைய, &amp;nbsp;திருமணம் சடங்குகள் எல்லாம் கடந்த ஒரு துணையாக என் மனைவியை நான் பார்க்கத் தொடங்கினேன் அல்லது உணரத் தொடங்கினேன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாயைகள் எல்லாம் உடைந்து போக.... ஒரு கோப்பை தேநீரை எதிர் எதிரே அமர்ந்து பருகும் ஒரு சுகத்தில் பக்கதில் இருக்கும் இருப்பினை உணர்தலே மிகப்பெரிய பாக்கியம், ஆறுதலான ஒரு தோள் சாய்தலே மிகப்பெரிய நிம்மதி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவைகளற்ற ஒரு அன்பில் காதல் மிளிர்கிறது. அப்படியான தேவைகள் எல்லாம் தீர மிகப்பெரிய புரிதலும்...., பல தரப்பட்ட சூழல்களை நாம் கடக்கவும் வேண்டியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பகிரமுடியாத அன்பாய் பரவும் காதலில் இருப்பு மட்டுமே இருக்கிறது...அங்கே வார்த்தைகளோ வசீகரமோ எப்போதும் இருப்பதில்லை...! காதலோடு இருக்கும் போது அதை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொய்யைப் பகிர்ந்து மெய்யை எப்போதும் என்னோடே நான் சுமக்கிறேன்....! ஆமாம் வாழ்க்கையின் அனுபவங்கள் எப்போதும் சுகமனவை ஆனால் பகிர முடியாதவைதானே...!!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ப்ரியங்களுடன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. சு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-287006357126757124?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/287006357126757124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=287006357126757124&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/287006357126757124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/287006357126757124'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/blog-post_11.html' title='பகிர முடியாத வார்த்தைகள்....!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NBe3uvJU5AE/TzZkrhUyC3I/AAAAAAAADis/KiFzXe_2pHs/s72-c/c1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3656981934069536194</id><published>2012-02-09T14:13:00.001+05:30</published><updated>2012-02-09T14:15:10.267+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம் தேடல்'/><title type='text'>கற்பூரக் கனவுகள்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Fv0eTkIFCZk/TzOGqEItaoI/AAAAAAAADh4/pHTUsOFvolU/s1600/Flame_from_a_Burning_Candle.JPG" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-Fv0eTkIFCZk/TzOGqEItaoI/AAAAAAAADh4/pHTUsOFvolU/s400/Flame_from_a_Burning_Candle.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சாலையாய் கிடக்கிறது மனது. காலத்தின் நகர்வுகள் திணிக்கும் மனோநிலைகள் மறுக்க முடியாதவை. இயல்புகளைக் ஆக்கிரமித்துக் கொள்ளும் சூழல்களை எல்லாம் மெளனமாய் வேடிக்கைப் பார்க்கிறது உள்ளுக்குள் எப்போதும் விழித்துக் கிடக்கும் ஒரு நெருப்பு.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எப்போதும் பராக்குப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒன்று எழுதக் கிடைக்கும் அல்லது எழுதவேண்டும் என்ற மனோநிலைக்கு ஒரு மிகப்பெரிய முற்றுப் புள்ளி வைத்ததோடு மனிதர்களோடு இயங்கி மனித மனோநிலைகள் சாராமல், &amp;nbsp;நிர்ப்பந்தங்கள் அகன்ற ஒரு வெளியில் வந்து விழுந்து கிடக்கிறேன் என்பது ஒரு விதமான சந்துஷ்டியைக் கொடுக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமூகம் எப்போதும் எதிராளியை அவனின் போக்கிலேயே ரசித்தது &amp;nbsp;கிடையாது. அது எப்போதும் தனது தேவையை முன்னிறுத்தியே தனது தொடர்புகளை விஸ்தரித்துப் பார்க்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கையில், மனமற்று மனதின் மையப்புள்ளியை உடைத்துவிட்டு பரந்து வாழும் ஒரு நிலை உண்மையில் வரம்தான் என்றாலும் இந்த சமூகத்தோடு சேர்ந்து நகரும் போது அது சாபமாகிவிடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆசைகள் எல்லாம் தன்னின் திருப்தியை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. தான் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் இந்த சமூகம் தன்னை மதிக்க வேண்டும், தன்னைப் போல மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்று சக மனிதன் போற்ற வேண்டும் என்பதற்காகவே மிகைப்பட்ட மனிதர்கள் தங்களின் இலக்கினை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலக்குகளின்றி பயணிக்கும் அல்லது வாழ்க்கையின் சாரத்தை விளங்கி தன்னை உணர்ந்து நகரும் எவனொருவனும் இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ முடியாதவனாகிப் போகிறான். இது வாழ்க்கை, இங்கே இப்படித்தான் நகரவேண்டும் என்ற பொய் வேடங்களைப் போட முடியாமல் சத்தியத்தின் சுவையை உணர்ந்தவனாய் அவன் தனித்து இயங்கவே விருப்பங்கள் கொள்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதர்களின் குரூரங்களும், பகட்டான நடவடிக்கைகளும், விளம்பரமான வாழ்க்கை முறையும், சாதித்து விட்டேன் என்று அறைகூவல் விடும் கூக்குரல்களும், மாயை என்பதை அவன் தெளிவாகவே உணர்ந்திருக்கிறான். இதனாலேயே புற வாழ்க்கையில் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியும் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சப்தமில்லா ஒரு மனதில் சிறு குண்டூசியின் அதிர்வு கூட அதிரடியானதுதான். வெண்மையான ஒரு தூய ஒரு பரப்பில் சிறு துறும்பு கூட மிக மிகப் பெரிய அழுக்குதான். இதனாலேயேதான் மனிதர்கள் இல்லா ஒரு இடம் நோக்கி ஒரு மனிதன் ஓட வேண்டியிருக்கிறது. இவன் வாழ்க்கையை மறுத்து ஓடுபவதாக சராசரியான மனோநிலைகள் கூறி அதை வாதிட்டு வெல்லவும் முடியும்..ஆனால் அவன் வாழ்க்கையை மறுத்து வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாறாக....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையை உணர்ந்தே அதை விட்டு விலகுகிறான். நிலையாமையைக் உணர்ந்தவன் நிலையான பொருள் எதுவென்று தன்னுள் கேட்டுக், கேட்டு அதன் விடையைத் தேடி மெல்ல எல்லாம் புறம் தள்ளி விட்டு நகர்கிறான். கூச்சல்களும், கிண்டல்களும், ஆணவப் பேச்சுக்களும் குழப்பமான மன அதிர்வுகளும் அவனுக்கு தேவையில்லாததாகிப் போகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு வெள்ளைச் சுவரின் அடுத்தப் பக்கத்தில் ஏறிப்பார்க்க ஆசைப்பட்டு பலர் பகிரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். அப்படி ஏற முயலும் அத்தனை பேருக்கும் சுவற்றுக்கு அந்தப் பக்கம் ஏதோ ஒன்று இருக்கும் என்கிற ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். தான் மட்டுமே முந்திப் பார்க்க வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் தள்ளி விட்டு, அடித்து மோதி முண்டிக் கொண்டு, போட்டிகள் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கையில்.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்தப்பக்கம் என்ன இருக்கும் என்று உறுதியாய் தெரிந்த ஒருவன் என்ன செய்வான்...? இந்தப் போட்டியில் ஈடுபடுவானா? சக மனிதரை திட்டுவானா...?தான் பெரிய வலுவுள்ளவன் என்று கொக்கரிப்பானா? தன் ஆணவத்தை வெளிக்காட்டுவானா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்படி எல்லாம் செய்ய மாட்டான் தானே...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏனென்றால் மறுபக்கம் ஒன்றுமில்லை என்று அவனுக்குத் தெரியும். அப்படி தெரிந்ததாலேயே அவன் மெளனித்து நிற்பான். முயற்சிகள் செய்தால் அந்தச் சுவரை கடத்தல் கடினம் என்று தெரிந்து முயற்சிகளை விட்டு, விட்டு அவன் தனக்கு கிடைத்த இடத்தில் தனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். ஏனென்றால் முயற்சிகள் அற்றுப் போகும் போது அந்த சுவருக்கு அப்பாலிருக்கும் வெறுமைக்கு &amp;nbsp;தன்னாலேயே போய்விடுவோம் என்று அவனுக்குத் தெரியும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிடைத்திருக்கும் வாழ்க்கையை அன்பாய், அமைதியாய் வாழத் தெரியாமல் மிருகமாய் நகரும் சக மானுடக் கூட்டத்தைப் பார்த்து அவர்களுக்காய் இவன் பிரார்த்திக்கிறான். அவர்கள் மனம் அமைதி பெற இவன் தியானிக்கிறான். பொருள் சேர்த்து, புகழ் சேர்த்து ஒரு மனிதன் இவ்வுலகில் நிம்மதியடைய முடியாது என்பதை அவன் திண்ணமாய் உணர்ந்திருக்கிறான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலகில் மனிதன் தேடுவது நிம்மதி. கடவுளாய், மதமாய், சாதியாய், தத்துவமாய் பொருளாய், காதலாய், காமமாய், புகழாய், சண்டையாய், ஆக்கிரமிப்பாய், சமூக சேவையாய் இவ்வுலகின் ஒவ்வொன்றையும் மனிதர்கள் நுகர்ந்து, நுகர்ந்து கடைசியில் அவர்கள் சென்று அடைய வேண்டிய இடம் நிம்மதியான ஒரு வாழ்க்கை. ஆனால் பாவம் யாருக்குமே தெரியாது எதையும் சேர்க்க, சேர்க்க நமக்கு நிம்மதி கிடைக்காது என்று...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் ஒவ்வொன்றாய் விட, விடத்தான் நமக்கு அந்த நிம்மதி கிடைக்குமென்று....எத்தனை பேருக்குத் தெரியும்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த உலகில் நிம்மதியில்லாத மனிதர்களாய் நான் அறிவது மிகப்பெரிய பணக்காரர்களையும், புகழ் பெற்றதாய் தங்களை எண்ணிக் கொண்டு கனத்த தலையோடு நடமாடும் மனிதர்களையும்தான். இவர்கள் எல்லோரும் தங்களை யாரோ என்று மனதால் கற்பித்துக் கொண்டே காலெமெல்லாம் வாழ்கிறார்கள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மரணிக்கும் தருவாயில் ஒரு தெரு நாயும் தானும் ஒன்றுதான் என்று உணரும் போது அதிர்ந்தே போகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னைச் சுற்றியும் ஒரு ஓட்டமும், போட்டியும் எப்போதும் சூழ்ந்து கொள்கின்றன அது வாழ்க்கையின் மறுக்கமுடியாத சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியை விட்டு நான் நகரவே விரும்புகிறேன். என்னைச் சுற்றிய இரைச்சல்களிடம் எல்லாம் கை கூப்பி மனமார வேண்டுகிறேன் என் அமைதிக்கு உதவுங்கள், நீங்களும் அமைதியாயிருங்கள். நாம் பெறுவதற்காக வரவில்லை கடப்பதற்காக வந்திருக்கிறோம்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சத்தியமாக உங்களை வழிநடத்துகிறேன் என்று பணம் கேட்பவர்களை விட்டு நீங்கள் எப்போதும் விலகியே இருங்கள். ஏனென்றால் உங்கள் வழியை யாரும் காட்டவே முடியாது. பிரபஞ்ச சக்தியின் அற்புதத்தில் ஒவ்வொரு படைப்பும், ஒவ்வொரு மனிதனும் ஒரு வகை, ஒவ்வொரு சூழலும் ஒரு தினுசு, நீங்கள் உங்களை உணர்ந்தால் தான் உங்களின் பாதை உங்களுக்குத் தெரியும்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் இங்கே நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. நன்மை, தீமை என்று எதுவும் கிடையாது, உங்கள் கடவுள் என் கடவுள் என்று எதுவும் கிடையாது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருப்பதெல்லாம் வாழ்க்கை என்னும் ஒன்றே... அந்த வாழ்க்கையை எவ்வளவு திருப்தியாய், மனமகிழ்ச்சியாய் வாழ்ந்து நகர்கிறோம் என்பதே மையப் பொருள்...!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கோ நகர்ந்து ஏதோ ஒரு இடத்தில் தற்காலிகமாய் நான் இப்போது நிலைத்திருக்கிறேன். இந்த நிலையில் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் இருக்கிறேன். வாழ்க்கை கொடுத்த சூடு இன்னும் ஆறவில்லை, மனிதர்கள் கொடுத்த வடு இன்னும் இரணமாயிருக்கிறது.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காயங்கள் ஆறும் வரை, கடந்தகால நினைவுகள் மறையும் வரை....ஒரு கற்பூரமாய் நான் எரிந்துதான் ஆகவேண்டும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆமாம் எரிந்தால்தான்.....நான் கரைந்து மறைய முடியும்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-3656981934069536194?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/3656981934069536194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=3656981934069536194&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/3656981934069536194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/3656981934069536194'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/blog-post_09.html' title='கற்பூரக் கனவுகள்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Fv0eTkIFCZk/TzOGqEItaoI/AAAAAAAADh4/pHTUsOFvolU/s72-c/Flame_from_a_Burning_Candle.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8275882577176600179</id><published>2012-02-03T12:58:00.004+05:30</published><updated>2012-02-03T14:39:06.307+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='400வது பதிவு'/><title type='text'>அந்திமத்தின் விடியல்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BYerOqDoqsA/TyuMKAqzwnI/AAAAAAAADhw/fnptFu2K-Hg/s1600/indhavaraclick.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="260" src="http://2.bp.blogspot.com/-BYerOqDoqsA/TyuMKAqzwnI/AAAAAAAADhw/fnptFu2K-Hg/s400/indhavaraclick.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னும் சற்று நேரத்தில் நான் மரணித்து விடக் கூடும். தளர்ந்து போன கால்கள் துவண்டு கிடந்தன, இடுப்பில் சுத்தமாய் திடமில்லை. கைகளில் சக்தியில்லை. பிராணனை மூளைக்குள் செலுத்தி, திசுக்களில் பரப்பி பிராணனின் பொலிவினை எப்போதும் என் விழிகள் பளபளப்பாய் காட்டியிருக்கின்றன....ஆனால் இதோ என் விழிகளிலும் ஜீவனில்லை இப்போது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த ஒரு மாதமாய் விடிகிறது.....இருள்கிறது....விடிகிறது இருள்கிறது அவ்வளவே. நினைவுச் செல்களில் நான் சேர்த்து வைத்திருக்கும் கடந்த கால நினைவுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதைப் போல புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏதேதோ செய்தேன்...யார் யாரிடமோ சினேகம் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என்னைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சினிமாப்படத்தின் காட்சிகளாய் எல்லாம் நடந்தன....நகர்ந்தன. முதன் முறையாய் மெல்ல அடியெடுத்து வைத்து நான் நடை பழகிய என் குழந்தைப் பருவத்தில் நடப்பதும், ஓடுவதுமே எனக்கு மிக அதிகமான சந்தோசமாய் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் நகர, நகர சந்தோசம் என்பது வேறு வேறாக எனக்கு கற்பிக்கப்பட....வளர்ந்தேன் வாழ்ந்தேன்....! இதோ என் அந்திமத்தில் ஒரு கிழிந்த துணியாய் இந்த சுவற்றோரம் முடங்கிக் கிடக்கிறேன். முதுமை என்னைத் தொடத் தொட எனக்கான அங்கீகாரத்தை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. பிள்ளைகளும், சுற்றங்களும், என்னை ஒய்வெடுக்கச் சொல்லியே வற்புறுத்தின. பேசும் வார்த்தைகளை எல்லாம் கேட்க யாரும் இல்லை....! வாய் திறக்கும் போதே அது அடைக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனிமை என்னை சூழ்ந்தது. எனக்கென வாழ்க்கைத் துணையாய் வந்தவள் வழியிலேயே என்னை விட்டுச் சென்றுவிட்ட அன்று தனிமையோடு ஒரு சூன்யம் பேரமைதியாய் என்னில் படர்ந்தது. இப்போது எப்படி பால்யமும், பதின்மமும் இளமையும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பரபரப்பாய் இருக்கிறதோ...அதைவிட அதிகமான பரபரப்பில் நான் இருந்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காதலை நெஞ்சுக்குள் உணர்வுகளாய் தேக்கிக் கொண்டு திமிர் கொண்டு திரிந்திருக்கிறேன். பிடித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டவுடன் அந்த திமிரின் அளவு இன்னும் ஏறிப்போனது. காதலும், காமமும் சேர்ந்து வாழ்க்கையின் பக்கங்களை சந்தோச வர்ணங்களால் தீட்டித் தீட்டி இன்னும் என் வாழ்க்கையை அழகாக்கியது. நான் அப்போதெல்லாம் அதிகம் பேசுவேன். ஒரு தொழில் ரீதியான எழுத்தாளன் இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை கொட்டி கிறுக்கியும் வைப்பேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதோ அந்தப் பரணில் கிடக்கும் பெட்டியில் தூசிகளுக்கும் குப்பைகளுக்கும் நடுவில் புதைந்து கிடக்கிறது நான் எழுதி கவிதைகளும் கட்டுரைகளும். பல முறை அதை குப்பையில் எரிந்து விட என் மருமகளும் மகனும் முடிவெடுத்தபோது ஒரு பிச்சைக்காரனாய் கெஞ்சி கெஞ்சி அவற்றை காப்பாற்றி வைத்திருக்கிறேன். &amp;nbsp;நான் எப்படி எழுதினாலும் என் மனைவி ரசித்திருக்கிறாள். அவளின் நினைவுகளை எல்லாம் அவளின் மரணத்திற்குப் பிறகு என் கண்ணீரோடு சேர்த்து காகிதத்தில்தான் கரைத்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இளமையில் உடலின் உள்ளே சுரக்கும் சுரப்பிகளின் வேகம் அதிகாயிருக்கும். பிராணனை அழகாக, அதிகமாக சுவாசிக்க எனக்குத் தெரியுமாதலால் நான் வேகமாக சிந்திக்கவும், பேசவும் செய்வேன். என்னைச் சுற்றி இருக்கும் நேசிப்புகளை எல்லாம் ரசித்திருக்கிறேன். எதிரிகளை எல்லாம் என்னை முதலில் அடிக்க விட்டிருக்கிறேன். அப்படி அடிக்க விடுவது எனக்கு வலிக்கட்டும் என்றுதான்....அப்படி வலித்தால்தான் என்னால் சரியாய் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும். சில நேரம் மனிதர்கள் என் எதிரியாயும் பலநேரம் காலம் என் எதிரியாயும் இருந்திருக்கிறது....வலிக்க வலிக்க வாங்கிக் கொண்டு வலிக்க வலிக்க கொடுக்கவும் செய்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எல்லா நேரங்களிலும் தனிமை எனக்கு இளமையில் சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அதனாலேயே தனிமையில் நான் இருந்து விடலாம் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு. இளமையில் தனிமை, அமைதி என்று தேடிய என்னால் முதுமையில் நிஜமான தனிமையையும் பேரமைதியையும்....எதிர் கொள்ள முடியவில்லை. சுற்றி சுற்றி கோடிப் பேர் இருக்கையில் தனிமையைத் தேடுகிறேன் என்று கூறுவது &amp;nbsp;ஒரு போலி வேசம். அதை நான் என் இளமையில் குறையில்லாமல் போட்டிருக்கிறேன்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிராகரிப்பின் நிமிடங்களை யாருமற்ற தனிமைகள்...வலுக்கட்டாயமாக திணிக்கும் போது அது ஒரு மிகப் பெரிய வலி. என்னால் இயன்ற போது தியானம் செய்து பழகி இருக்கிறேன். இப்போது கண்களை மூடி தியானிக்கலாம் என்று யோசிக்கும் போது மூளை ஒத்துழைக்க மறுப்பதோடு மட்டுமில்லை...என் கடந்த காலப் புரிதல்களில் புத்திக்குள் படுத்து கிடக்கும் கடவுள்களைத் தொட்டு எழுப்பி,யார் யாரையோ எருமையில் ஏற்றி வந்து எனக்கான பாசக் கயிற்றை வீசிப்பார்க்கிறது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இமைகளை ஒன்று சேர்த்து கண்களை மூடவே பயமாயிருக்கிறது. இமைகள் இரண்டும் மூடும் போது அது மிகப்பெரிய பாராங்கல்லை எடுத்து விழிகளின் மீது வைத்தது போல கனக்கிறது. இதற்கு பயந்தே கண்களை நான் மூடுவதில்லை. யார் யாரோ என்னைப் பார்க்க வருகிறார்கள். உருவம் தெரிகிறது ஆனால் யாரென்று மூளையைத் தொட்டு நினைவுப்பகுதியைச் சரிபார்க்க முயலுகையில் வழுக்கி விழுந்து விடுகிறேன். அனேகமாய் என் நினைவுப்பகுதியிலிருக்கும் செல்க்கள் செத்துப் போயிருக்க வேண்டும் இல்லை செயலாற்ற முடியாமல் இருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாரையும் எனக்கு இப்போது தெரிவதில்லை. என் புத்திக்குள் இரண்டு பேரை மட்டுமே.. நான் நினைவு கொள்கிறேன். ஒன்று என் மனைவி...இன்னொன்று என் மகன். கட்டிப் பிடித்து, சீராட்டி பாரட்டி வாந்த வாழ்க்கை அல்லவா...? எப்படி மறக்கும்...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு நாள் எனக்கு வேலை அயற்சியில் ஒரு கையும் காலும் வலிக்கிறது என்று சொல்லி விட்டு நான் நான் உறங்கி விட்டேன். நடு இரவில் &amp;nbsp;யாரோ கால் அமுக்குவதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது கண்கலங்கியபடி என் கால்களை என் மனைவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் நான் இதை செய்வது உண்டு ஆனால் நான் செய்கிறேன் என்ற ஒரு உணர்வினைத் தேக்கிய படி செய்யும் ஒரு பரோபாகரம் அது. அதற்கான அங்கீகாரத்தை தேடும் ஒரு மறைமுக முயற்சி எப்போதும் என்னிடம் இருக்கும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் அவள் அப்படியல்ல...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னை அன்பு செய்யவே பிறந்தவள். உயிரில் நிறைந்தவள். என் கவிதைகளின் கரு. இறக்கும் வரை என்னை விட்டால் வேறெதுவும் தெரியாமல் இருந்து விட்டவள். எத்தனையோ பெண்களைக் &amp;nbsp;நான் கடந்து வந்திருந்தாலும் அவையெல்லாம் எனக்கு முளைத்த கனவுச் சிறகுகள்...ஆனால் அவள் என் எதார்த்த உலகின் பாதங்களாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுற்றி இருந்த எல்லோரையும் காலம் மிச்சமில்லாமல் கொண்டு சென்ற போது அவ்வளவாக கலங்காத நான்...என் அவள் என்னை பிரிந்த அந்த கணத்தினை விவரிக்க வார்த்தைகளின்றி என் விழி நீராய் வடிக்கத்தான் முடியும். சந்தோசங்களை பகிர நிறைய பேர்கள் என்னோடு இருந்த போது என் கஷ்டங்களை என்னோடு பங்கிட்டுக் கொண்டவளை எப்படி விட்டு விடும் இந்த மனது....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதுமை அழகானது...ஆழமானது! புரிதல் இருக்கும் பட்சத்தில் அது அற்புதமானது.....ஆனால் எப்படி பார்த்தாலும் அந்திமம் கொடுமையானது. சூன்யத்தின் அடர்த்தி நம்மை சூழும் போது, உயிரோடு இருக்கும் போதே மனிதர்கள் நம்மை நிராகரித்து உலகத்திலிருந்து ஒதுக்கி ஒரு மூலையில் கிடத்தி விடும் போது பேச்சுத் துணைக்கு கூட ஆட்களின்றி வெறும் வாயை மென்ற படி வானத்தை வெறித்துப் பார்த்தபடி மூன்று வேளை உணவுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும்தான் இந்த உடம்பு என்று ஆகிப் போகும் போது....அது எப்படி இனிமையாகும்....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரசித்தலும், அனுபவித்தலும் அந்திமத்தில் சாத்தியப்படாமல் போய்விடுவதற்கு புரிதலில்லாத வாழ்க்கை காரணமாய் ஆகி விடுகிறது. மரணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு, அதாவது அடுத்த நகர்வு மரணம் என்று தெரிந்த பின் மனம் மரணத்தைத்தான் ஆராயுமே அன்றி.....வாழ்க்கையை ரசிக்க முயலாது. நானும் மரணத்தை பால்யத்திலும், பருவத்திலும் ஆராய்ந்திருக்கிறேன் ஆனால் அதுவெல்லாம் யாருக்கோ நிகழுவதாய் மனம் கற்பனை செய்து கொண்டு தேடிப்பார்த்த நாடகங்கள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதோ என் உயிரின் அடுத்த நகர்வு மரணம்.அது இருளாய் இருக்குமா? ஒளியாய் இருக்குமா? மரணிக்கும் போது வலிக்குமா? கடவுளர்கள் இருப்பார்களா...? இல்லையா...? என் உறவுகள் எல்லாம் அங்கிருக்குமா? எனக்கு தெரியவில்லை மனம் கனக்க தலை பாரமாக நடு &amp;nbsp;நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு கடுமையான வலி பரவியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பரணில் அழுக்குக் கட்டாய் நான் வாசித்த புத்தகங்களும்....எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் என்னைப் பார்த்து சிரித்தன...கூடவே வாழ்க்கை முழுதும்.....ஒவ்வொரு சூழலிலும் நான் யார் தெரியுமா ....? நான் யார் தெரியுமா ....?என்று உரக்க கேட்டு சண்டையிட்டதும், பல நேரங்களில் மனதுக்குள் நான் யாரோ என்று நினைத்துக் கொண்டு இறுமாப்பாய் இருந்ததும் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்த்தன...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதோ...வலியோடு, அழுக்குகளோடு, ஒரு குப்பைக்காகிதமாய், நாற்றத்தோடு, முடிகள் கொட்டி, பற்கள் விழுந்து விழித்திரைகளிள் ஒளியிழந்து, இடுப்பில் உரமின்றி வாய் கோணிப்போய் எச்சில் வடிய அதை துடைக்கும் திரணியுமற்று......கடந்த காலத்தை எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு நாற்றப் பிண்டம் நான்....&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மரணித்த கொஞ்ச நேரத்தில் பிணம் நான். நான் செய்த நன்மைகளையும் தீமைகளையும் பற்றி இந்த உலகம் பேசும். அப்படி பேசினால் எனக்கு என்ன? பேசாவிட்டால் எனக்கென்ன...ஒன்றுமில்லை....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலக்கில்லா ஒரு பயணத்தில் நடுவில் நிறையவே இறுமாப்புடன் நடந்து கொண்டதும், &amp;nbsp;மனிதர்களிடம் சண்டையிட்டதும், தலைக்கனங்கள் கொண்டதும், நிறைய பேரிடம் பேசாமல் இருந்ததும் நான் இழந்தவை அவ்வளவே....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழும் வரை எத்தனை பேரை நட்பு கொன்டோம், எவ்வளவு பேசி சிரித்தோம், எத்தனை பேரை சந்தோசப்படுத்தினோம்.....இது மட்டுமே மிச்சம். அதுவும் வெற்று நினைவுகளான மிச்சம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடிவயிறு கலங்கியது...உள்ளுக்குள் ஒரு உஷ்ணம் பீறிட்டு....உடம்பு முழுதும் வலியாய்ப் பரவியது. நரம்புகள் இழுத்துக் கொள்ள இரத்த ஓட்டத்தின் வேகம் மெல்ல மெல்ல தடைப்பட...நுரையீரல் சுவாசிக்க திராணியற்று சுருங்க, இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்பட....மெதுவாய் அதன் துடிப்பினை நிறுத்த...புத்திக்கு பிராணன் கிடைக்காமல் மெல்ல மெல்ல ஒரு விளக்குகள் அணைவது போல மின்சாரம் அறுந்து விழ.....வாய் கோணிக் கொள்ள ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று மனமாய் நின்று நான் பதற....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதுவுமே தோன்றாமல்....என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் திகைத்து நிற்க....ஆயிரம் ஊசிகளை உடல் முழுதும் குத்தியது போன்ற ஒரு வேதனையில்...துடி துடித்து மேல் விட்டத்தை விழிகளாய் பார்த்தபடி...மெல்ல மெல்ல....நான் அடங்கிக் கொண்டிருந்தேன்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;பின்குறிப்பு:&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு இழப்பும், ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு பிரிவும் புதிய விசயங்களாய் பரிணமிக்கிறது. ஒரு அந்திமம் என்பது மரணத்தோடு முடிவதில்லை அது வேறு ஒரு பரிணாமத்தில் பிறக்கிறது. 400 பதிவுகளையும் ஒரு அந்திமமாய் கடந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு எழுத்துகளாய் பிறக்க காரணமாய் சில காரியங்கள் என்னைச் சுற்றி நிகழுகின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரசனையான விழிகளுக்குச் சொந்தமான அத்தனை பேர்களும்தான் அந்த காரியமாய் நின்று மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றை நான் படைக்க காரணமாகின்றனர். படைப்பவன் ஒரு வெற்றுக் கருவி....கர்த்தாவாக இருப்பது...எல்லாம் வல்ல வாசிப்பாளர்களே...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனது அன்பான நன்றி + வணக்கங்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8275882577176600179?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8275882577176600179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8275882577176600179&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8275882577176600179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8275882577176600179'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/02/blog-post.html' title='அந்திமத்தின் விடியல்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BYerOqDoqsA/TyuMKAqzwnI/AAAAAAAADhw/fnptFu2K-Hg/s72-c/indhavaraclick.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6281475802980352944</id><published>2012-01-28T18:02:00.002+05:30</published><updated>2012-01-28T19:06:47.096+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை அனுபவம்'/><title type='text'>வழிப்போக்கன்....!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ZezPRGDFVMI/TyPqMs6p_eI/AAAAAAAADho/GKoQXrcKfZs/s1600/arctic_tern2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; height: 270px; margin-bottom: 1em; margin-right: 1em; width: 401px;"&gt;&lt;img border="0" gda="true" height="266" src="http://4.bp.blogspot.com/-ZezPRGDFVMI/TyPqMs6p_eI/AAAAAAAADho/GKoQXrcKfZs/s400/arctic_tern2.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;ஒன்றை எழுதி தீர்ப்பதற்குள் பிராணன் போய் விட்டுதான் மீண்டும் வருகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையில் சாக்கு தைக்கும் கோணி ஊசியை வைத்து இந்த பக்கம் குத்தி அந்தப் பக்கம் இழுப்பது போன்ற ஒரு வித தையல் வேலைதான் எழுத்து. முழு மூச்சாக மனம் குவித்து எதையாவது எழுத வேண்டும் என்று கணிணியில் அமர்ந்த அந்த நொடிக்குப் பின்னரே முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொள்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;எழுதுதலை ஒரு பெண்ணோடு சல்லாபித்துக் கூடுவதற்கு சமம் என்று கூறலாமா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் அப்படித்தான் கூறுவேன். உச்சத்தில் துடி, துடித்து தன்னை மறக்கும் பொழுது அது சில மணித் துளிகள்தான் என்றாலும் அதற்கு ஈடான ஒரு அனுபத்தை ஒரு கட்டுரையோ அல்லது கதையோ எழுதி முடிக்கும் வரை நான் அனுபவிக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிகச் சிறந்த ஆக்கங்களை தருவிக்கும் ஒருவனுக்குத்தான் இப்படியான உணர்வு வரும் என்று சொல்வதற்கில்லை. உள்ளுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைக்கும் எவனொருவனுக்கும் இது சுகம்தான்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆமாம் கூடலின் உச்சத்தை ஒத்த சுகம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளுக்குள் படிந்து கிடக்கும் கறைகளையும், சமுதாயத்தால் ஏற்பட்ட வடுக்களையும், குற்றம் என்று அறிந்தே செய்த செயல்களுக்கான பிராயச்சித்தங்களையும், ஆன்ம தேடலின் உச்சத்தையும், சமூகத்திற்கு செய்ய நினைத்தும் இயலாமல் போகும் ஆற்றாமையையும்..., உருவம் கடந்த காதலின் உன்னதத்தையும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இறக்கி வைக்க இந்த எழுத்து உதவியாயிருக்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எழுத்து எழுதுபவனுக்கு சுகம். சில நேரங்களில் வாசிப்பவனுக்கும் சுகமாய் இருக்கிறது. பல நேரங்களில் அது எரிச்சலாகவும் போய் விடுகிறது. எப்படி பார்த்தாலும் எழுதுபவன் சுகமாய்த்தான் உணர்வான்.. இந்த சுகத்தை ருசித்தவன் யார் என்ன சொன்னாலும் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் கிறுக்கிக் கொண்டுதான் இருப்பான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏதோ ஒன்றை வாசித்து விட்டு அதன் மையக் கருவினை மனதிலாக்கிக் கொண்டு அந்த செய்தியை தான் பார்க்கும் விதம் இப்படி என்று எழுத்துக்களை கோர்த்து கொண்டு வருவது மிகச் சுலபமானதுதான் என்றாலும் எழுதும் அந்த செய்தி வலுவானதாய் அடிமனதை ஓங்கி அறைந்து அந்த வலியை உள்ளுக்குள் பரவவிட்டிருக்க வேண்டும். வெறுமனே மனம் போடும் உணர்ச்சிக் கூச்சலைக் கேட்டு விட்டு அதை எழுத்தாக்கும் போது அங்கே படைப்பு முழுமை பெறுவது கிடையாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்த ஒரு செய்தியும் இல்லாமல், எழுத ஒரு புறக் காரணமுமின்றி உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளின் மாற்றங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு உயிரால் உயிர் தொட்டு வாஞ்சையோடு அதை எழுதும் தருணங்கள் மிக அற்புதமானவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இருக்கும் ஏழு நிறங்களையும் தான் வரையும் ஓவியத்திற்குள் கொண்டு வர முயலுவது ஒரு பழக்கப்பட்ட புத்தி அல்லது தனக்குத் தெரிந்த வர்ணங்களைக் கூட்டிக் குறைத்து ஓவியத்தை படைக்கும் ஒரு தற்சார்பான புறம் சார்ந்த ஒரு முயற்சி. இதற்கு மாறாக ஒருவன் தனது கற்பனையில் தோன்றிய ஒரு புது வர்ணத்தை, இது வரை இவ்வுலகம் கண்டிராத நிறத்தைக் கொண்டு இயல்புகளைக் கடந்த ஒரு உருவமற்ற ஓவியம் வரைகிறான் என்றால்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது அவனின் கற்பனா உலகின் சஞ்சரிப்புகளை அனுபவமாக்கி, அனுபவத்தை மூளைக்குள் உணர்வாய் கிரகித்து அந்த கிரகிப்பினை முற்றிலும் புற உலகு சாராத ஒரு ஓவியமாக்குகிறான். அந்த ஓவியத்திற்கு ஒரு அர்த்தமும் இருக்க முடியாது. அது எந்த உருவத்தையும் சாரமல் இருக்கும். அது இந்த உலகோடு சம்பந்தப்பட்டது அல்ல...சரசரி மனிதக் கண்களுக்கு அது வெறும் வர்ணக் கலவையாய் ஏதே ஒரு பைத்தியக்காரனின் வேலையாத்தான் தெரியும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் அது ஒரு படைப்பாளியின் மிகப் புதிய யாருமே செய்திராத ஒரு படைப்பு. அதன் ருசியினை படைத்தவன் அறிவான்....! அந்த வர்ணக்கூட்டு அவன் புத்தியிலிருந்த போதும் அதை அவன் படைத்து முடித்த போதும் அவன் கொண்டிருந்த சந்தோசம் கூடலின் உச்சத்தில் ஒரு சில மணித்துளிகள் பெறும் சுகத்தை விட...கோடாணு கோடி முறை அலாதியானது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும்பாலும் எல்லோருக்கும் புரியும் அல்லது எல்லோரும் கை தட்டி பாரட்ட வேண்டும் என்ற நிலை கடந்து ஒருவன் தன்னுள் ஏற்படும் உணர்வு பரிமாற்றங்களை, உடல் கடந்த சூட்சும அனுபவங்களை எழுத்தாக்கும் போது அது அவனைப் பூரணப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கையில் புற உலகு அறுபட்டுப் போகிறது. உலகு சார்ந்த விடயங்கள் அற்பமாகிப் போகின்றன. எழுத்தினூடே குறுக்கிட்டு நலம் விசாரிக்கும் மனிதர்களும், சில தொலை பேசி அழைப்புகளும் சட்டென புத்தி மாற்றும் சில நிகழ்வுகளும் என்று வரும் போது.. ச்ச்சே....உங்களுக்குத் தெரியுமா நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று...? என்னை விட்டு விடுங்கள் நான் இல்லை என்று தயவு செய்து எண்ணிக் கொள்ளுங்களேன் என்று கெஞ்சத்தான் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையின் ஓட்டத்தில் சக மனிதர்களில் பெரும்பாலனவர்கள் நம்மை மதிக்க, நாமும் லெளகீகத்தில் நகர பொருள் இன்றியமையாததாகி விடுகிறது. என்னை இந்த சுழற்சி இன்றி விடுவிக்க ஏதேனும் ஒரு சக்தி உதவுமா என்று கூட சில நேரம் ஏங்கியும் போய் விடுகிறேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு மழையை ரசிக்கவும், வெயிலை உணரவும், மாலை வேளையின் ரம்யத்தை உள்வாங்கிக் கொள்ளவும், அதிகாலையின் குளுமையை உணரவும், பட்டாம் பூச்சியை பரவசமாய் பார்க்கவும் கூட பொருளாதார தன்னிறைவு வேண்டும் என்று லெளகீகம் கண்டிப்பாய் சொல்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லெளகீக பந்தங்களில் இருந்து கொண்டு வாள் எடுத்து உடலாய் நின்று ஒவ்வொரு பிரச்சினையையும், கபட மூளைகள் கொண்ட மனிதர்களையும், போட்டியையும் பொறாமையையும் வெட்டி வீழ்த்தி விட்டு சற்று திரும்பிப் பார்த்தால் முழுமையாய் வாழ முடியாமல் வாழ்க்கையில் இழந்து போனதும் மிகுதியாய் இருக்கிறது. ஏனென்றால் பொருள் தேடி ஓடும் ஓட்டம் ஒரு இலக்கு நோக்கிய நகர்வு.., அது ஒரு புலிப்பாய்ச்சல், இரைதான் கண்ணுக்கு தெரியுமே அன்றி... சூழலும், இருப்பும் அங்கே உணர முடியாத ஒரு மிருக நிலை அது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புறம் நோக்கிய வாழ்க்கையை தொட்டு விட்டால் அது விடாது ஒரு முரட்டுக் குதிரையாய் நம்மை இழுத்துக் கொண்டு வெறித்தனமாய் ஓடி, ஓடி எங்கோ கொண்டு போய் எது எதுவோ நமது இலக்கென்று காட்டி, யார் யாரோ எதிரிகள் என்று தீர்மானித்துக் கொடுக்கிறது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சட்டென்று அகம் நோக்கி திரும்ப அப்போது சாத்தியமே இல்லாமல் போகிறது. எழுத்து என்பதும், உணர்வு, அனுபவித்தல் என்பதும் கருங்கல்லில் ஆணி அடிப்பது போல கடினமாகிப் போகிறது. இரண்டையும் சரி சமமாய் அங்கே, இங்கே.. இங்கே.., அங்கே என்று ஓடி ..ஓடி.. அகம்.. புறம்....புறம்.. அகம்....என்று அலைந்து அலைந்து மனம் சமப்பட்டு.... &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டும் குவிந்த ஒரு இடத்தில் மெலிதாய் பிடிபடுகிறது இதுதான் வாழ்க்கை. இதுதான் முழுமை. இங்கேயே இருக்க வேண்டும் என்ற சூழல் இல்லாமல் இங்கேயே இருப்பவனும் முட்டாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கேயே இருக்கவேண்டும் என்ற சூழலும் நிபந்தனையுமின்றி அங்கேயே கிடப்பவனும் முட்டாள்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமப்பட்டுக் கிட.....! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மிருகம் போல போரிடு ஆனால் ஒரு வண்ணத்துப் பூச்சி பூக்களைப் புணர்வதைப் போல மென்மையாயிரு...! ஒரு இராட்சசனாய் வாழ்க்கையை எதிர் கொள் ஒரு சாதுவாய் அதைக் கவனி....! &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படித்தான் நகர்கிறது பொழுதுகள். எழுதி எழுதி வைத்துக் கொள்கிறேன். வேண்டும் என்று யாராவது கேட்கும் பொழுது கொடுக்கலாம்...என்று தீர்மானித்தும் இருக்கிறேன். கூவிக் கூவி விற்பதையும், கூச்சல் போட்டு நான் யாரென்பதையும் ஒரு போதும் கூறப்போவது இல்லை....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏனேன்றால்..நான் ஒரு வியாபாரி அல்ல....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;வழிப்போக்கன்....!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-AI0dbt7XNcE/TnDZle7xScI/AAAAAAAAAik/tawerF6rifU/s1600/arctic_tern2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;﻿&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-6281475802980352944?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/6281475802980352944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=6281475802980352944&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6281475802980352944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6281475802980352944'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_28.html' title='வழிப்போக்கன்....!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ZezPRGDFVMI/TyPqMs6p_eI/AAAAAAAADho/GKoQXrcKfZs/s72-c/arctic_tern2.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1387815720140235891</id><published>2012-01-26T13:07:00.002+05:30</published><updated>2012-01-26T13:09:27.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசையோடு இசையாக..தொகுப்பு 3 !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gl8-7t6CJoU/TyD-4-WyAKI/AAAAAAAADhY/C-wn6SeP-bs/s1600/nature_red_flower_800x600.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-gl8-7t6CJoU/TyD-4-WyAKI/AAAAAAAADhY/C-wn6SeP-bs/s400/nature_red_flower_800x600.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புத்துணர்ச்சி வீசும் புதிய நாளை சூரியனின் வருகைக்கு முன்னாலேயே எழுந்து ஆழ சுவாசித்து ஆரத்தழுவி அந்த அற்புத பொழுதின் குளுமையை உடலுக்குள் வாங்கி...புத்தியின் சூடு தணிய இரவு உறக்கத்தில் அயர்ச்சியில் கிடந்த மூளை தன்னை உலுக்கிக் கொண்டு அன்று பிறந்த குழந்தையைப் போல அதிகாலையை ஆச்சரியாமாய் நோக்கும் தருணம் சுகமானது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நகரத்து வாழ்க்கையில் மறுக்கப்பட்டுப் போய்விடும் பல அற்புதங்களை கிராமத்துக் காலைக்கு பிரபஞ்சம் ஆசிர்வாதம் செய்து கொடுத்திருக்கும்.... ஆடு, மாடு, நாய் போன்ற் மனித வாழ்க்கையோடு ஒன்றிப் போன விலங்குகளும், சேவல், கோழி, காகம், கிளி,குருவி, காடை,கவுதாரி, கொக்கு, மடையான், நாரை, சிட்டுக்குருவி, மரங்கொத்தி, குயில் போன்ற பறவைகளும் பிரபஞ்ச ஓட்டத்தில் விடியலை ருசிக்க எழுந்து கடவுளின் சாயலை தரிசித்துதான் விடுகின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெல்ல நகர்ந்து வயல் வெளிக்குள் நுழையும் பொழுதில் இரவு முழுதும் புற்களோடு சல்லாபித்த பனித்துளிகள் இன்னும் சற்று நேரத்தில் சூரியனின் வருகைக்குப் பின் கிளம்ப இருக்கிறோம் என்ற தகவலை சிரித்துக் கொண்டே சொல்ல... குளிர்வான இரு ஊதக்காற்று உடல் தடவி நாடி நரம்புகளின் அயற்சிகளை எல்லாம் சுகமாய் நீவி விட்டு எனக்கு வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி விட்டு போய்க்கொண்டே இருக்கும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ரோசா, ஆவாரம்பூ, அரளிப்பூ, காட்டு ஆமணக்குப் பூ, பூவரசம் பூ, காட்டு மல்லி, பட்டு ரோசா, டிசம்பர் பூ, கனகாம்பரம், கொடி மல்லி, கொடியிலே கிடக்கும் பூசணிப் பூ.. சூரியனை விட நாங்க ரொமப் கலராக்கும் என்று சிரிக்கும் செவ்வந்திப் பூ.....என்று எல்லாமே புது மணப் பெண்ணாய் மெல்லிய காற்றில் ஆடிக் கொண்டு காதலை இந்த பிரபஞ்சமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாக எனக்குள் விரியும் காட்சிகளை புத்திக்குள் நிறைத்துப் போட்ட ஒரு அற்புதமான இசையையும் பாடலையும் நீங்களும் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவோடு கூட்டு சேர்ந்து மனதை கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள் வைரமுத்துவும், ஜானகி அம்மாவும்.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;" வானில் தோன்றும் கோலம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது யார் போட்டதோ&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பனி வாடை வீசும் காற்றின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுகம் யார் தந்ததோ&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயதில் தோன்றிடும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நினைவில் ஆனந்தம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வளர்ந்தாடுது இசைபாடுது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழிந்தோடுது சுவைகூடுது "&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/INtE27Vtu-c" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மயக்கும் காலையைப் பற்றிய அற்புதமான நினைவுகளோடு இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாய் அமையட்டும்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1387815720140235891?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1387815720140235891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1387815720140235891&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1387815720140235891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1387815720140235891'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/3.html' title='இசையோடு இசையாக..தொகுப்பு 3 !'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gl8-7t6CJoU/TyD-4-WyAKI/AAAAAAAADhY/C-wn6SeP-bs/s72-c/nature_red_flower_800x600.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1126901514999742785</id><published>2012-01-24T10:45:00.003+05:30</published><updated>2012-01-24T10:56:49.434+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை காதல்'/><title type='text'>மெளனமாய் ஒரு காதல்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-CcmQuumfIZ0/Tx4-AUQKfBI/AAAAAAAADhQ/aKOzmBCOx5I/s1600/pic.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="265" src="http://3.bp.blogspot.com/-CcmQuumfIZ0/Tx4-AUQKfBI/AAAAAAAADhQ/aKOzmBCOx5I/s400/pic.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டெடுக்க முடியாத&lt;br /&gt;மெளனத்திற்குள் தள்ளி&lt;br /&gt;எனக்குள் ஊற்றெடுக்கிறது&lt;br /&gt;ஒரு காதல்...!&lt;br /&gt;&lt;br /&gt;சப்தமில்லா அதிர்வுகளை&lt;br /&gt;காற்றில் பரவ விட்டு&lt;br /&gt;கரைந்து போன கனவுகளை&lt;br /&gt;அவ்வப்போது உரசி செல்லும்&lt;br /&gt;நினைவுகளை பரிசளித்து விட்டு&lt;br /&gt;காணாமலேயே போனாள்...&lt;br /&gt;என் காதலி...!&lt;br /&gt;&lt;br /&gt;மறந்து விட்டேன்&lt;br /&gt;என்றிருக்கையில் கனவுகளில்&lt;br /&gt;வந்து கண் சிமிட்டுகிறாள்,&lt;br /&gt;காதலென்ற உணர்வு ஊற்றி&lt;br /&gt;நெஞ்சு நிறைக்கிறாள்,&lt;br /&gt;விழித்துக் கொண்டே...&lt;br /&gt;நான் காணும் கனவுகளில்&lt;br /&gt;எப்போதும் என் விழித்திரையில்&lt;br /&gt;காட்சியாய் விரிகிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;இறுக்கமான நிசப்தங்களில்&lt;br /&gt;காதோரம் வந்து&lt;br /&gt;பெயர் சொல்லி கிசுகிசுக்கிறாள்,&lt;br /&gt;பதறி நான் தேடுகையில்&lt;br /&gt;புத்திக்குள் கை கொட்டி சிரிக்கிறாள்...;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாமல் கொள்ளாமல் போனாலும்&lt;br /&gt;முழுதும் இல்லாமலேயே ஆனாலும்&lt;br /&gt;இருக்கத்தான் செய்கிறது&lt;br /&gt;மீட்டெடுக்க முடியாத&lt;br /&gt;மெளனத்திற்குள் தள்ளி விடும்&lt;br /&gt;ஒரு காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;தேவா. &amp;nbsp;S&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1126901514999742785?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1126901514999742785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1126901514999742785&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1126901514999742785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1126901514999742785'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_24.html' title='மெளனமாய் ஒரு காதல்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CcmQuumfIZ0/Tx4-AUQKfBI/AAAAAAAADhQ/aKOzmBCOx5I/s72-c/pic.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1658705293702648319</id><published>2012-01-21T22:59:00.005+05:30</published><updated>2012-01-21T23:21:55.818+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசையோடு இசையாக..தொகுப்பு 2 !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/2008/0509/p19s03-hfes.html/uthanks_p1.jpg/6061442-1-eng-US/UTHANKS_P1.jpg_full_380.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="266" src="http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/2008/0509/p19s03-hfes.html/uthanks_p1.jpg/6061442-1-eng-US/UTHANKS_P1.jpg_full_380.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிறப்பு மனித வாழ்வின் முதல் முடிச்சு. தாய் அந்த முதல் முடிச்சை சுமக்கும் ஜீவன். படைக்கும் சக்தியைக் கொண்டிருப்பவன் யாரென்ற விவாதத்தை தள்ளி வைத்து விட்டு படைப்புக்களை சுமக்கும் வரம் பெற்ற ஜீவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மேன்மையானது, உன்னதமானது, புனிதமானது, நிறைவானது, கருணை நிறைந்தது...இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அம்மா...&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எத்தனை இரும்பு மனம் படைத்தவர்களும் ஒரு முறை உதடு பிரித்து உச்சரித்துப் பார்க்கட்டும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையை அந்த வார்த்தைக்குப் பின் இருக்கும் கருணை என்னவென்று தெரியும், ப்ரியம் என்னவென்று புரியும், நேசம் என்னவென்று &amp;nbsp;விளங்கும். பிரதிபலன் பார்க்காமல் ஒவ்வொரு உயிரையும் சுமக்கத் தொடங்கும் தாய்மை எப்போதும் போற்றுதற்குரியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் அம்மா எனக்காய் என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதை வார்த்தைகளாய் நான் அறிந்திருந்தாலும், என் பெரியம்மா மகளான என் அக்காவின் பேறு காலத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். 7 மாதத்தில் வளைகாப்பு முடிந்து வந்ததிலிருந்து அவளின் அன்றாடங்களை நான் கவனித்து இருந்திருக்கிறேன். நடக்க முடியாது, ஒருபக்கம் ஒருக்களித்துதான் படுக்க முடியும், சட்டென்று எழ முடியாது வலது கையை ஊன்றி மெல்ல தடுமாறி எழ வேண்டும், வெளியே சொல்ல முடியாத வலிகளோடு, இயற்கை உபாதைகளை கழிப்பதும் மிக மிகக் கடினம் என்று அவள் கூறுவதை வலியாய் எனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குறு குறுப்பாய் வயிற்றுக்குள் ஒரு குட்டி உயிர் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் அசைவுகளைப் பார்த்து மிரண்டு போய் பெண்ணின் வலுவினையும், தைரியத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். ஒரு நடு இரவில் உண்ட உணவு செரிக்காமல் அவள் நெஞ்சை தடவிக் கொண்டிருக்கையில், &amp;nbsp;மெல்ல எழுந்து போய் ஆச்சரியமாய் பார்த்திருக்கிறேன்..! அவள் யாரையும் எழுப்ப விரும்பவில்லை இது அவளின் வலி...அவளின் தேவை, அவளின் சுமை, அவளே சுமக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆரம்ப நிலைகளில் தாயே எப்போதும் உடனிருக்கிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவ்வப்போது அவளுக்கு விக்கல் கூட வரும் ஒவ்வொரு விக்கலிலும் வயிறு இழுத்துக் கொண்டு மேலெழும்பி கீழே வரும், உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று அவள் பயந்திருக்கிறாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வலி, வலி, வலி....இந்த வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுள் ஒரு உயிரினைச் சுமந்து மெளனமாய் எல்லாம் தாங்கி ஒவ்வொரு பெண்ணும் இந்த இடத்தை கடக்கிறாள். பிரசவ வலி என்னவென்று ஒரு பெண்ணாய் உணராத வரைக்கும் ஒரு ஆணுக்கு அதைப் பற்றிய புரிதல் கண்டிப்பாய் வர முடியாது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இடுப்பு வலி எடுத்து, தண்ணீர் குடம் உடைந்து, இடுப்பெலும்புகள் மெல்ல விரிந்து கொடுக்க ஒரு பிரசவம் நிகழும் கணம் இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம்.....எத்தனை வலியோடு, எத்தனை சிரத்தையோடு ஒரு பிள்ளையை தவமிருந்து பெற்றெடுக்கிறாள் ஒரு தாய், அவளின் நிறைவுதான் என்ன? என்று ஒரு சிறு கேள்வியை ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிள்ளை பிறந்த நொடியில் மயக்கமாயிருந்தாலும், மயக்கம் தெளிந்து தன் மகனையோ அல்லது மகளையோ காணும் அந்த நொடியில் அவளின் வலிகள் எல்லாம் மறைந்து உலகத்தில் எந்த ஜீவராசிகளும் பெறமுடியாத ஒரு திருப்தியை முழுமையை ஒரு பெண் பெறுகிறாள். தாய்மை என்னும் உன்னத நிலையை அடைகிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆன்மீக வரலாற்றில் கூட பெண்கள் தனியே தியானம் என்றோ, முக்தி என்றோ, முழுமை என்றோ, ஞானி என்றோ அதிகம் தனித்து விவரிக்கப்படுவது இல்லை. காரணம்....ஒரு ஆணுக்குத்தான் முழுமையடைய ஓராயிரம் வழிமுறைகளும், தேடல்களும் தேவைப்படுகின்றன ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடைந்து தன்பிள்ளையை பிரசவிக்கும் கணத்தில் பிரபஞ்சப் புரிதலை தன்னையறியாமலேயே புரிந்து அவள் தன்னிச்சையான முக்தி நிலையை,ஞான நிலையை எய்தி விடுகிறாள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தாய்மை என்பது உணர்வு நிலை. இளகு தன்மை. நேசிப்பின் உச்சம். வலிகளை தாங்கும் உத்வேகம். பிரபஞ்ச சுற்றினை முழுமையடைய வைக்க இந்த குணங்கள் உதவுகின்றன. ஒரு குழந்தையை சுமந்து வலிகளை தாங்கி அதைக் கடந்து வருகையில் ஒரு பெண் அதை எளிதில் எட்டி விடுகிறாள். இது இல்லாமலும் தாய்மை என்னும் உணர்வு நிலையை எல்லோராலும் அடைய முடியும்...ஆனால் அதற்கு உயரிய புரிதலும், அனுபவமும், தெளிவும் வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மரணத்தின் உச்சம் தொட்டு ஒரு பிறப்பைக் கொடுக்கும் போது அது மிகப்பெரிய அனுபவமாகி அது தாயாகிறது. காலப்போக்கில் புறச்சூழல்கள் இவற்றை மறக்கடித்தாலும் இதன் மையத்தை எப்போதும் ஏந்திக் கொண்டுதான் ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ராஜா சாரின் இந்தப்பாடல் கூட தாய்மை நிரம்பியதுதான். புரிதலும் தெளிவும் கொண்ட அதிர்வுகளைப் நாதப் பெருவெளியில் இருந்து பிரித்து எடுத்து ஸ்வரங்களாக்கி, ஏற்ற இறங்களை கூட்டிக்குறைத்து அற்புதமான இசையைப் பிறப்பித்திருக்கும் ராஜாசார் தாய்மை நிரம்பியவர்தான். தாய்மை என்பது உருவமல்ல அது அனுபவங்களும் புரிதலும் கொண்ட உணர்வு நிலை என்று இந்தப்பாடல் தெளிவாகவே சொல்லும்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வார்த்தைகளைக் கடந்து, ஜேசுதாஸின் தெய்வீகக் குரலோடு இந்த இசை கூட்டிச் செல்லும் தூரத்திற்கு கண்களை மூடிக் கொண்டு பயணித்துப் பாருங்கள்...நீங்களும் தாய்மை என்னும் உணர்வு நிலையை உணரக் கூடும்..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/5LsWC5Mcb4E" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1658705293702648319?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1658705293702648319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1658705293702648319&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1658705293702648319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1658705293702648319'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/2.html' title='இசையோடு இசையாக..தொகுப்பு 2 !'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/5LsWC5Mcb4E/default.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8416337306614970420</id><published>2012-01-21T13:24:00.006+05:30</published><updated>2012-01-21T23:19:05.586+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை அனுபவம்'/><title type='text'>எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6P_bk9jeCIs/TxptFstV7HI/AAAAAAAADeE/mHOxq68vNyA/s1600/iamge.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="285" src="http://4.bp.blogspot.com/-6P_bk9jeCIs/TxptFstV7HI/AAAAAAAADeE/mHOxq68vNyA/s400/iamge.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த போது எனக்கு ஏற்பட்ட கூச்சத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு விட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இங்கே தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும் &amp;nbsp;மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி இல்லாத களமாய் இது ஆகிப் போனது வரலாற்றில் பெரும் பிழையை ஏற்படுத்தியே தீரும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எதை எழுதலாம், எதை எழுதினால் வியாபாரம் ஆகும் என்று யோசிப்பது தவறில்லை அதற்காக பத்திரிக்கை துறையினரும், தனியார் தொலைக்காட்சித் துறையினரும் செய்யும் அதே யுத்தியை தனி மனிதர்கள் எழுதும் வலைப்பூக்களில் அரங்கேற்றிக் கொள்வது அவமானத்தின் உச்சம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரும் புரட்சியாளராய் என்னைக் காட்டிக் கொண்டு, என்னை பின் தொடருங்கள் மக்களே என்று போர்க்கொடியை எழுத்துக்களால் நான் ஏற்றும் போதே என் அருகதையையும் உற்று நோக்க வேண்டும் என்ற ஒரு நியாயத்தை ஏன் என்னால் கடை பிடிக்க முடியவில்லை..? இப்படியாய் நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம் இதில் இருக்கும் சத்தியத்தை உணருங்கள் வாசிப்பாளர்களே.. என்று தொடை தட்டி நேர்மையான பகிர்தலைச் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எழுத்துக்கள் பயணிப்பது.....ஆரோக்கியமான விடயமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதனின் புறத்தை மாற்ற முயல்வது ஒரு தோற்றுப் போன வழிமுறை.... அது எப்போதும் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்பவனைத் தலைவனாக்கி விட்டு மிச்சமுள்ளோரை தெருமுனையில் பிச்சைக்காரனாய், புத்தி கெட்டவனாய் எப்போதும் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் ஒரு கையாலாகாதவனாய் நிறுத்தி வைத்து விடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மனிதர்களின் அகமாற்றம் இதற்கு நேர்மாறானது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;இதன் விளைவுதான் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முழு விழிப்போடு ஒவ்வொரு குடிமகனும் இருந்த பொழுதில் இந்த தேசம் மிளிர்ந்தது. மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேரரசர்களும் அதிகாரத்தால் தங்கள் நிர்வாகத்தை நடத்தினாலும் தமது தேசத்தின் குடிமக்களை முழு விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். அந்த விழிப்பு நிலையால்தான் பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய வணிகப் பெருக்கம் இருந்தது, போர்களில் தமிழன் வெற்றி வாகைகள் சூடினான், பிரமாண்ட கற்கோயில்களை கற்பனைக்கும் எட்டமுடியாத வண்ணம் ஆக்கிக் கொடுத்தான்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தொழில் நுட்பம் வளர்ச்சிகள் இல்லாமல், இயந்திரங்களின் பயன்பாடுகள் அறவே இல்லாமல், மனித வளத்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக இருக்க முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாய் நான் வழிகாட்ட என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல் அங்கே இருந்திருக்கவில்லை. மனிதவளம் மேம்படாத ஒரு சமூகம் தொழில் நுட்பத்தையும் அறிவியலையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்...? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதற்கான பதிலாய்த்தான் சமகாலத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனத்தில் நமது பயன்பாடுகள் இருக்கின்றன. வலைப்பூக்கள் தனிமனிதர்களால் எழுதப்படும் ஒரு களம். இங்கே வியாபரம் செய்வது தவறில்லை. வணிகமும், பொருளாதாரமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எப்படி வணிகம் செய்கிறோம்...? எதை வணிகம் செய்கிறோம் என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாகிறது..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனதில் தோன்றுபவைகளை எல்லாம் எழுதிப் பார்க்கும் ஒரு சாரார், சமூக அக்கறைகளை எழுத்தில் கொண்டு வந்து ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்குச் சொல்லிச் சொல்ல விரும்பும் சிலர், இதை இதை எழுதினால் வசீகரப்படும், இதற்கு கூட்டம் நிறைய வரும் என்று எழுத்தில் விசத்தை கலக்கும் ஒரு கூட்டம்,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எது எப்படி இருந்தாலும் நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவினர், அற்புதமாய் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தங்களின் உணர்விலிருந்து பிரதிபலித்து உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு பக்கம், மனிதன் விரும்புவது கேளிக்கைகளையும், அடுத்தவர் வாழ்க்கை பற்றிய அந்தரங்க செய்திகளையும், எப்போதும் மறைக்கப்பட்ட காமத்தையும்தான் என்று அதை அரங்கேற்றிக் கொள்ளும் வேறு சிலர்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்று தனி மனிதனின் ஆக்கங்கள் ஒரு மிகப்பெரிய காட்டாறாய் இயங்கிக் கொண்டிருக்கையில் வாசிக்கும் வாசிப்பாளன் தனது வயது, அனுபவம், மற்றும் புரிதலுக்கு ஏற்ப தனக்கு தேவைபடும் விடயத்தை இங்கே தேர்ந்தெடுக்கிறான்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் அன்பின் உறவுகளே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இணையத்தை இன்று மிகுதியாக பயன்படுத்துபவர்கள் இளையர்கள், 18ல் ஆரம்பித்து 30வயதுக்குள் இணையத்தை பயன்படுத்துபவர்களின் விகிதாச்சாரம் அதிகம். சரியான வழிகாட்டுதல் தேவையான இந்த பருவத்தில் தனக்கு அறிமுகமாகும் இணையத்தில், தற்போது தமிழில் மிகுதியானவர்கள் பார்க்கும் ஒரு ஊடகமாய் இந்த வலைப்பூக்கள் இருக்கின்றன...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழிகாட்டுதல் தேவையான இந்த இளையர்களுக்கு எதை நாம் பகிரப் போகிறோம்...? நமது தலைக்கனத்தையா...? நாம் மிகைப்பட்டபேர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்முனைப்பையா? பரபரப்பு அரசியலையா? நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தையா? &amp;nbsp;காமக்கதைகளையா? இல்லை சமூகத்தால் எப்போதும் விலக்கப்பட்ட தவறான விடயங்களை நான் செய்தேன் என்ற திமிரையா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். நான் செய்கிறேன் நீயாரடா கேள்வி கேட்க என்று அத்து மீறுபவர்களின் குரல்வளைகளை முடக்கிப் போடவேண்டிய சமூகக் கடமை இன்றைய இணைய பயன்பாட்டாளர்களிடம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. இது பொதுவெளி..இங்கே உச்சபட்ச நாகரீகம் தேவைப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான எமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை உமக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனிதர்களின் அகவிழிப்பும், புரிதலும் கூர்மையாக இருப்பின்....மோடி மஸ்தான்களின் மாயஜாலங்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும் என்பது &amp;nbsp;நிதர்சனம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்&lt;br /&gt;உலகத்தில் போராடலாம்…..&lt;br /&gt;உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்...&lt;br /&gt;தலை வணங்காமல் நீ வாழலாம்..! "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8416337306614970420?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8416337306614970420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8416337306614970420&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8416337306614970420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8416337306614970420'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_21.html' title='எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6P_bk9jeCIs/TxptFstV7HI/AAAAAAAADeE/mHOxq68vNyA/s72-c/iamge.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8965983676008236140</id><published>2012-01-20T21:43:00.001+05:30</published><updated>2012-01-20T21:48:00.257+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம் ஆன்மீகம்'/><title type='text'>மெளன விரதம்....!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-JMiVuSzSwPQ/TxmSKlwc-KI/AAAAAAAADd4/aKbLBOZTbnw/s1600/image004.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" height="265" src="http://4.bp.blogspot.com/-JMiVuSzSwPQ/TxmSKlwc-KI/AAAAAAAADd4/aKbLBOZTbnw/s400/image004.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இன்று எதுவும் பேசக் கூடாது, என்று சங்கற்பம் எடுத்திருக்கிறேன். பேசக் கூடாது என்று தீர்மானித்த உடனேயே....மனம் விசுவரூபமெடுத்து வார்த்தைகளை மூளைக்குள் உடனே அலைய விட்டது. மெல்ல, மெல்ல அலைந்த வார்த்தைகள் எல்லாம் அதிர்வுகளாகவே வெகு நேரம் உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன. சப்தங்களாய் தொண்டையிலிருந்து வெளி வந்து விடவேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது மட்டும் என்னால் தெளிவாக உணர முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெளனம் என்று வெளியில் சப்தம் செய்யாமையை சங்கல்பம் செய்யும் பலரால் உள் சப்தத்தை நிறுத்த முடிவதில்லை. &amp;nbsp;ஏதோ ஒன்றை இப்போதே நீ பேசியே ஆகவேண்டும் என்று கட்டளையிட்ட புத்தியை நான் உற்று நோக்கினேன்... புத்திக்குள் நினைவுகளாய் தேங்கிக் கிடந்த மனம்தான் எல்லா வேலையையும் செய்து கொண்டிருந்தது புரிந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மற்ற புலன்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் சடாரென ஒரு புலனின் இயக்கத்தை நிறுத்தியது மனதுக்கு புதிதாய் பட்டிருக்க வேண்டும். இந்த மனம் எப்போதும் புது விடயங்களை ஆதரிப்பது இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனதிற்கு வசதியான விடயம் பழக்கப்பட்ட சூழல்களில் சுற்றிக் கொண்டிருப்பதுதான். புதிதாய் எது செய்தாலும் அல்லது மாற்றினாலும் மனம் அவ்வளவு சீக்கிரம் அதை ஒத்துக் கொள்வது கிடையாது. ஒரு ரவுடியாய் அது மிரட்டிப் பார்க்கும், பல கற்பனைகளைக் கொண்டு வந்து கொட்டி கோரப் பல் காட்டி பயமுறுத்திப் பார்க்கும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த காலத்தில் பயணிப்பதில் மிகப்பெரிய கில்லாடி இந்த மனம்...கடந்த காலத்தை கையில் எடுத்துக் கொண்டு நிகழ்காலத்தை மிரட்டி எதிர்காலத்தைப் பற்றி மிகப்பெரிய புரிதலைக் கொண்டிருப்பது போல தத்து பித்துவென்று எப்போதும் உளறும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆன்மாவிற்கு முக்காலமும் தெரியும். மனதிற்கு கடந்தகாலம் மட்டுமே தெரியும்... நிகழ்காலத்தில் அதனால் எப்போதும் நிற்க முடியாது....நிகழ்காலத்தை ஒரு ஊன்று கோலாய் வைத்துக் கொண்டு எதிர்காலத்திற்குள் கற்பனையாய் பயணிக்கும். மனம் வேறு, ஆன்மா வேறா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இருப்பது ஒரு மூளை இதில் எப்படி வெவ்வேறு என்று சந்தேகமாய் பார்ப்பார்கள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மனம் என்பது ஐம்புலன்களின் கூட்டு. ஐம்புலன்களின் அனுபவங்களை மூளைக்குள் கொண்டு போய் சேர்த்து, சேர்த்து அதை விவரித்துப் பார்த்து எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சூட்சுமம். அதிர்வுகளால் ஆன ஒரு அதிசயம். ஐம்புலன்களின் இயக்கமில்லாத பொழுது இந்த மனம் மெல்ல, மெல்ல ஒடுங்க ஆரம்பிக்கும். மனம் இயங்க புலன்களின் இயக்கம் தேவை. புலன்கள் ஒடுங்க....அது பேந்தப் பேந்த விழிக்கும் புத்திக்குள் போய் அவசர அவசரமாக கடந்த காலத்தை எடுத்துக் குப்பையைக் கிளறுவது போல கிளறும்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீ...என்ன வேண்டுமானலும் செய்து கொள்...மனமே, &amp;nbsp;புலன்கள் மூலம் உனக்கு ஒரு அனுபவத்தையும் நான் கொடுக்கப் போவதில்லை என்று அந்த மனதை வைத்தே நாம் பதில் மிரட்டலை ஒரு கட்டளையாய் சங்கல்பித்து விட்டு மெளனமாய் அதன் செயல்களை வேடிக்கை பார்க்க வேண்டும். இந்த வேடிக்கைப் பார்க்கும் இடத்தில்தான் தியானம் தொடங்குகிறது. தியானம் என்றால் கமண்டலம் சகிதம், சடாமுடியோடு இருக்கும் முனிவர்கள்தான் நமது புத்திக்குள் வந்து நிற்பார்கள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அது ஒரு திணிக்கப்பட்ட பொது புத்தியின் காட்சி. காவி உடுத்துதலும், கமண்டலம் சுமத்தலும், துறவறம் செல்லுதலும் ஒரு வழிமுறை. நாம் அந்த வழியில் பயணிக்கவில்லை.....இன்னும் சொல்லப் போனால் பயணம் என்ற ஒன்றே இல்லை. சரி அதை விட்டு விடுவோம்....இப்போது மனதின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம், அதை கவனிப்போம்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மற்ற நான்கு புலன்களும் ஒடுங்கும் போது செவி தானே தன்னால் சுற்றுப் புற ஒலிகளை வாங்கிக் கொள்ளும் அவ்வளவே அதனை மூளையில் ஒரு கிரகிப்பாய் ஆக்காது, ஆனால் கண்கள் அப்படி அல்ல மற்ற புலன்களை வேகமாய் இயக்க காட்சிகள் மிகப்பெரிய அளவில் உதவத்தான் செய்கின்றன. அதனால்தான் மெலிதாய் கண்களை மூடிக் கொள்கிறோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புறத்தாக்கத்தை வேகமாய் பரிமாற்றம் செய்து மனதை விசுவரூபமெடுக்கச் செய்வதில் பார்வை பெரும் பங்கு வகிக்கிறது. கண்களை மிருதுவாக மூடிக் கொண்டு நுகர்ச்சி கடந்து வெறுமனே மூச்சினை கவனித்தபடி மனம் செய்யும் சேட்டைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கையில்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல மிரட்டகள், பல புலம்பல்களுக்குப் பிறகு மனதுக்கு புதிதாய் செய்தி கிடைக்காமல், பழைய விடயங்களை புரட்டி புரட்டி அலுத்துப் போய் மெல்ல மெல்ல சுருண்டு போக ஆரம்பிக்கும். மூச்சு மட்டும் சீராக உட்சென்று வெளிவர, மனமென்ற ஒன்று புள்ளியாய்க் கரைந்து போக எந்த நினைவுகளிமின்றி உடல் முழுதும் முழு உணர்வு நிலைக்கு வந்து உடலின் இருப்பும், சுற்றுப் புறங்களின் இருப்பும் தெளிவாய் உணர ஒரு சக்தி பளீச்சென்று பரவி உதவி செய்யும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புலன்களின் உதவியின்று...எல்லாமாய் இருக்கும், எங்கும் இருக்கும் அந்த சக்திதான், உயிர், அல்லது ஆன்மா அல்லது உணர்வு நிலை அல்லது கடவுள் தன்மை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது தனித்ததாய் உள்ளுக்குள் அடங்கிக் இருந்தாலும் புறத்திலிருக்கும் எல்லா சக்திகளோடும், உயிரோட்டங்களோடும் அணுக்களின் நகர்வுகளோடும் தொடர்புள்ளது. நான் உடல் அல்லது பெயர் அல்லது மனம் என்ற எல்லாம் கடந்து அங்கிங்கெனாதபடி அலையும் இந்த சக்தி பரிமாற்றமே பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற விரவிப் பரவிக் கிடக்கிறது. இந்த சக்தியே விகிதாச்சாரத்தில் வேறுபட்டு பல ஸ்தூலப் பொருட்களாயும் இருக்கிறது. ஸ்தூலமாய் இருக்கையில் இதன் குணம் வேறு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெளன விரதத்தில் பேச்சற்று மெல்ல கண் இமைகளை மூடி அமர்ந்திருக்கையில் நான் மேலே சொன்ன எல்லாம் நிகழும். நிகழும் என்று சொல்லும் போதே நிகழும் வரை காத்திருத்தல் அவசியமென்பதை உணர்க; புலன்கள் அடங்க மனம் அடங்கும். புலன்களை அடக்க புலன்களின் செயல்பாடுகளைப் புரிதல் அவசியம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-JMiVuSzSwPQ/TxmSKlwc-KI/AAAAAAAADd4/aKbLBOZTbnw/s1600/image004.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தப் புரிதல் மனதை அறிய உதவும். அறிந்து அறிந்து விலக்காமல் நெருக்கமாக மனதோடு நின்று செய்...செய்...என்று சொல்லி மெளனமாய் வேடிக்கைப் பார்க்கையில் மனம் ஒடுங்கும். வாயில் போடப்படும் ஒரு திடமான மிட்டாயை சப்பி சப்பி சுவைத்து மெலிதாய் அது கரையுமே, அதுபோல கரையும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமகாலத்தில் இருக்கும் சூழ்நிலையும் பொறுப்புக்களும் ஒன்று சேர்ந்து நம்மை மெளன விரதம் எல்லாம் இருக்க விடுவதில்லை. பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது என்கிற ஒரு காலச் சூழலில் வாழ்கிறோம் என்றாலும்..மாதம் ஒரு முறை மெளன விரதம் இருந்து பாருங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெளனம் என்றால் வாய் மட்டும் பேசாமல் மனம் பேசும் விரதம் அல்ல....! மெளன விரதம் என்று கூறி விட்டு பத்திரிக்கைகளையோ, தொலைக்காட்சியையோ அல்லது கணிணியையோ மேய்வது அல்ல. மெளனம் என்றால் புறமும் அகமும் ஒன்று சேர நமக்குள் ஏற்படும் ஒரு சீரான ஒத்ததிர்வு...! &amp;nbsp;பேசி பேசி ஒன்றும் யாரும் சாதித்து விடவில்லை...என்பதையும், மொழி என்பது நினைத்ததை நினைத்த மாதிரி பகிர முடியா ஒரு மொக்கைக் கத்தி என்பதையும் மெளன விரதம் தெளிவாய் உணர்த்தும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வார்த்தைகளால் புரியவைக்க முடியாதவற்றை மெளனம் அழகாக மனிதர்களுக்கு உணர்த்தும் என்பது முக்காலமும் உண்மை....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அற்புதமான உங்களின் ஒரு மெளனவிரத தினத்திற்கு எனது வாழ்த்துக்கள்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8965983676008236140?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8965983676008236140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8965983676008236140&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8965983676008236140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8965983676008236140'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_20.html' title='மெளன விரதம்....!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JMiVuSzSwPQ/TxmSKlwc-KI/AAAAAAAADd4/aKbLBOZTbnw/s72-c/image004.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6596086284247951662</id><published>2012-01-19T22:09:00.006+05:30</published><updated>2012-01-19T22:36:49.246+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை அனுபவம்'/><title type='text'>கவிதைக்கு அவள் என்று பெயர்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wjfDrok1Fsg/TxhGCCs4YFI/AAAAAAAADdw/A-M_C6mR_z8/s1600/image.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-wjfDrok1Fsg/TxhGCCs4YFI/AAAAAAAADdw/A-M_C6mR_z8/s400/image.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு மழை பெய்யவும் பெய்யாமலிருக்கவும் சாத்தியமாயிருந்த விடுமுறை நாளின் மதிய மூன்றரை மணிக்கு புரண்டு படுக்கையில் கம்பளிக்குள் இருந்து அரைத் தூக்கத்தில் பார்த்த போது கையில் தேனீரை வைத்துக் கொண்டு&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஆவி பறக்கும் டீ......" என்று அவள் பயமுறுத்த தொடங்கி இருந்தாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ச்ச்ச்சிம்னி அப்டித்தான்....எப்போதும்! &amp;nbsp;விளையாட்டாய் என்னை காதலித்து விளையாட்டாய் கைப் பிடித்து விளையாட்டாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள்...! என்னாச்சு...இப்பவே டீ...போட்டுக் கொண்டு வந்துட்ட என்று நான் சோம்பல் முறித்து எழ எத்தனிக்கையில் டீயை பக்கத்து மேசையில் வைத்து விட்டு சரியாய் என் மேல் வந்து சாய்ந்தவளை ஓ......எழுந்திரு ச்ச்ச்சிம்னி என்று தடுக்க முயன்றதை பார்த்து விட்டு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்ன...? என் வெயிட் தாங்க முடியலையா......உதடு சுளித்து பொய்யான கோபத்தை கண்களில் கொண்டு வந்து என் முகவாயை தூக்கி முத்தமிட நெருங்கி வந்தவள் சட்டென்று ரூட்டை மாற்றி முன் நெற்றியில் முத்தமிட்டு கேசம் கலைத்து....பப்பு கண்ணா....வீ நீட் டூ கோ ஃபார் எ வாக்....அதுவும் வெளில மழை வர மாதிரி இருக்கு தூறல் போட ஆரம்பிக்கப் போகுது... வீ கோ........நவ் நவ்வ்.....நவ்...தைய தக்க் தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்திருந்தாள்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கண்ணாடி ஜன்னலின் வழியே திரண்டிருந்த கருமேகங்களும் சுற்றி சுற்றி அடிக்கும் காற்றும்.... மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடும் பெண்களைப் போல தலையை ஆட்டி ஆட்டி ஆடிக்கொண்டிருந்த மரங்களும் என்று இயற்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜன்னலைப் பார்த்தபடி...தலைக்கு ஒரு கையைக் கொடுத்து மறுகையால் அவளின் இடுப்பை வளைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தவனின் மூக்கைப் பிடித்து சடாரென்று திருகி...இடியட்.......நான் என்ன சொல்றேன்....நீ என்ன பண்ணிட்டு இருக்க..என்று என் செல்லப் பிசாசு இம்சித்தது. &amp;nbsp;இருடி....மொதல்ல நீ கைய எடு லூசு, &amp;nbsp;என்ற படி எழுந்து நின்று கிவ் மி டூ செகண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்து முகம் கழுவி தலைக்கு தண்ணீர் விட்டு கைகளால் படிய வாரிய படி வெளியே வந்து...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ப்ளூ கலர் ஜெர்கினுக்குள் நுழைந்து, பிளாக் கலர் ட்ராக் பேண்ட் உடுத்தி, கேன்வாஸோடு வாசலில் நின்று....ஏண்டி எருமை எவ்ளோ நேரம் வெயிட் பண்றது நீ வர்றியா...?இல்லை நான் போட்டா..என்று போட்ட கூச்சலில் லபோ ...திபோ என்று ஓடி வந்து வாசல் கதவு அருகே நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தது என் கவிதை.....! &amp;nbsp;அவள் மூச்சிறைத்துக் கொண்டிருக்க என் புத்தி ஏதோ குறுக்கு நெடுக்காக ஓடி வேறு திட்டம் தீட்டியது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ச்ச்சிம்னிமா..நாம வேணும்னா இன்னொரு நாளைக்கு போலாமாடா வாக் என்று கை தூக்கி சோம்பல் முறிக்கையில்...அது எல்லாம் ஒண்ணும் வேணாம்.. உங்க புத்தி எல்லாம் எனக்கு தெரியும்...லெட்ஸ் கோ நவ் ஒன்லி...கதவு மூடி பூட்டி விட்டு... என் முதுகைத் திருப்பி போ...போ......போடா.என்று முன்னால் தள்ளினாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த எஸ்டேட்டுக்கு நான் மாற்றாலாகி வந்து 6 மாதங்கள் ஆகி விட்டது. தேநீர் தூள் தயாரிக்கும் ஒரு பிரத்தியோக தென்னிந்திய கம்மெனியின் எச்.ஆர் உத்தியோகத்தின் சுமையை துளியேனும் தலைக்கு ஏற்றி டென்சன் ஆக்காமல் இந்த இயற்கையும், மலைகளும், ஆரவாரமான பள்ளத்தாக்குகளும் என்னை ப்ரஷ்ஷாகாத்தான் வைத்திருக்கின்றன.. பத்தாக் குறைக்கு என் ச்செல்ல ச்ச்சிம்னி என்னும் ஷர்மிலி....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறுமனே அவளைச் சிம்னி என்று கூப்பிடமாட்டேன் "சி" க்கு முன்னால் ஒரு இரண்டு மூன்று ச்ச்ச்சை அழுத்தி சேர்த்து ச்ச்ச்சிம்னி என்று கூப்பிடும் போது காதலை அழுத்தமாய் வார்த்தைகளில் அடிக்கடி அவளுக்கு என்னால் பரிமாற முடிந்தது. ச்ச்ச்மினி ஒரு சர்வாதிகாரி. ஆமாம்...காதல் சர்வாதிகாரி. அவள் சொன்னாள் மறு பேச்சில்லை...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கவனமாய் என் ஆசைகளை கண்டு கொண்டு அதை சரியாய் நிறைவேற்றியும், அபிலாசைகளை அடக்கியும் வழிநடத்தும் கெட்டிக்காரி. என் கவிதைகளால் எப்போதும் அர்ச்சனைகள் செய்வேன் அவள் புன்னகையால் எனக்கு அருள் பாலிப்பாள். அருள் பாலித்த மூன்றாவது நொடியில் பிரபஞ்ச ரகசியத்தின் மூலத்தை நோக்கி மெல்ல மெல்ல பயணிப்போம். மூர்ச்சையாகும் அளவு நடக்கும் யுத்ததில் பக்தி எல்லாம் உடைந்து போய் மூலாதாரம் விழித்துக் கொண்டு முதுகுத் தண்டின் வழியே மெல்ல மெல்ல பயணித்து சகஸ்கரம் தொட முயன்று ஞான மார்க்கத்துக்குள் மெல்ல நுழைவோம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மூலாதாரம் தாண்டி சுவாதிஷ்டனம் கடந்து மணிப்பூரகம் தொடும் முன்பு பல முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். பக்தியாய் தொடங்கும் காமம் ஒரு கட்டத்தில் அதைக் கடந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கத்தான் செய்தது....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னா சார் எங்க போய்ட்டீங்க....? என் கூடத்தானே நடந்து வர்றீங்க....ச்ச்ச்சிமினி என்னை உலுக்கினாள்....ஹி ஹி ஒண்ணும் இல்லை ச்ச்சிம்னி ச்ச்சும்மா என்றேன்...! சரியான சாமியார்டா... நீ, டக்கு டக்குன்னு வேற எங்கயும் போய்டாத.. இப்போ..இங்க இந்த நிமிசத்துல இரு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சாரலாய் மெலிதாய் தூறல் போட ஆரம்பிக்க அவள் துள்ளிக் குதித்தபடி என் கைகளைக் கட்டிக் கொண்டு எனக்கு நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள்..! ஏண்டா... இந்த மலை மேல இருக்க மரம் எல்லாம் காலம் பூரா வானத்தை பார்த்துகிட்டு மழையில நனைஞ்சுகிட்டு எவ்ளோ சந்தோசமா இருக்கு பாத்தியா...?!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கட்டுப்பாடுகள் இல்லை கேள்வி கேப்பாடு இல்லை.. இயற்கையான ஒரு விதியை தனக்குள்ள மெளனமா சுமந்துகிட்டு..தன்னால வாழுதுங்க.....பேச்சிலர் ஆஃப் ஆர்ட் இன் இன்டிரியர் டெக்னாலஜி படித்தவள் தத்துவம் பேசிக் கொண்டிருந்தாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உனக்கு ஏன் ச்ச்ச்சிம்னி ரொம்பவே லோன் லினெஸ்சும்.. இந்த மாதிரி இயற்கையும் பிடிச்சு இருக்கு...இன்பேக்ட் சிட்டில வளர்ந்த பொண்ணு எப்டி என் கூட அட்ஜஸ்ட் பண்ணி இருப்பன்னு நான் உன்னை கூட்டிட்டு வரும் போது ரொம்பவே யோசிச்சு இருக்கேண்டி...பிக்காஸ்..இட்ஸ் டிப்பிகல்ட் டு கோ வித் மீ.....என்றேன்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அட லூசு புருஷா... சிட்டில வளர்ந்தா என்ன.. ? கிராமத்துல வளர்ந்தா என்ன...? ஆணா இருந்தா என்ன...? &amp;nbsp;பெண்ணா இருந்தா என்ன? உள்ளுக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசைகள், &amp;nbsp;ஒவ்வொரு கனவுகள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் கனவு கண்டேன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீ வர்ணம் பூசினாய்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சொல்லிவிட்டு எப்டி நம்ம கவிதை..? என்று அவள் ஸ்வெட்டரின் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்...! நீ யாரு...இன்னொரு கவிதை சொல்லு ச்ச்ச்சிம்னி என்றேன் கெஞ்சலாய்...! ஏய்....என்ன விளையாடுறியா...பிச்சு புடுவேன் படுவா....நான் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிடா....நீதான் என் கம்பன்...நீ சொல்லு ஏதாச்சும்...! என்னை சும்மா சீண்டாத......,அவள் சிணுங்கலாய் ஒரு கவிதையைப் பிரசவித்து விட்டு.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒன்றும் தெரியாதது போல, என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளி சீராக எனக்கு சரியாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்..!&lt;br /&gt;&lt;br /&gt;நான் கவிதை சொல்வேன் என்று அவள் அமைதியாகி இருந்தாள். என் எல்லா நகர்வுகளையும் மூர்க்கமாய் ரசிப்பவள் அவள்...அவளின் ரசனைக்காகவென்றே நான் படைப்பாளியாய் இருக்க ப்ரியமாயிருந்தேன். ரசனைகளின் உச்சங்கள் கொடுக்கும் போதையில்தான் ஒரு படைப்பாளியின் நகர்வு எப்போதும் இருக்கிறது. அவள் ரசிக்கிறாள்...நான் அவளுக்காய் படைக்கிறேன்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அந்த சூழல் எனக்குள் கிறக்கத்தை அதிகமாக்கி இருந்தது. மழை பெய்யாமலும் பெய்தும் ஒரு மாதிரி விளையாடிக் கொண்டு இருந்ததும், அத்தனை சரிவாக இல்லாத சிறு ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்த மலைப்பாதையும், சுற்றி இருந்த தேயிலைத் தோட்டங்களும், கண்ணுக் கெட்டிய தூரம் வரைப் பரவிக் கிடக்கும் பசுமையும்.....,சுழன்று சுழன்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்களும் என்று....நான் மொத்தமாய் தொலைந்து போய்தான் நடந்து கொண்டிருந்தேன்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டக்.. டக்.. டக்.. டக்.. டக்.............&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெளனத்தை இருவருமே போர்த்திக் கொண்டிருந்தோம். எதுவுமே பேசவில்லை. அவளை நானும், என்னை அவளும், &amp;nbsp;அவ்வப்போது விழிகளால் வருடிக் கொண்டோம். என் மனசு முழுதும் முழுமையான காதலில் நிரம்பிக் கிடந்தது, காதலை ஏதேனும் ஒரு சக்திதான் தூண்டி விடும்...பெரும்பாலும் அவள் காதலான மனைவி..., ஆழமான மெல்லிய பாடல், ஒரு சூழல், யாரென்றே தெரியாத முகம் தெரியாத சில பெண்கள் என்று பலவும்....காதலின் கிரியா ஊக்கியாய் இருக்கலாம்..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காதலிப்பதும் பெரும் சுகம் என்றால் காதலிக்கப்படுவது அதை விட பெரும் சுகம். அந்த ஒரு குறிப்பிட்ட தினத்தில் இயற்கையையும், என் வழித்துணையாய் வந்த வாழ்க்கை துணையையும் நான் தீரத் தீர காதலித்து காதலில் கிறங்கிக் கிடந்தேன்...பதிலுக்கு அவளும், சுற்றியிருந்த ரம்யமான சூழலும் என்னை மூர்ச்சை கொள்ளும் அளவு காதலித்துக் கொண்டிருக்க..நான் வார்த்தைகள் கடந்த, உணர்வுகள் கடந்த, மனம் கடந்த ஒரு சமாதியில்....நானே நானாய், நானே மழையாய், நானே, மரமாய், நானே மேகமய் நானே....என் மனைவியாய்....ஒரே நேரத்தில் எல்லாமாய் உணர்ந்து ஊறிக் கிடந்தேன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மறுபடியும் மூலாதாரம் விழிக்க..., சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று சக்தி மேலே எழ ஆரம்பிக்க மூச்சு மெல்ல சீராக.....அனாதகத்தை தொடப் போகும் முன்பு....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யூ இடியட்....!!!! நான் உன்னை கவிதை சொல்ல சொன்னேன்டாஆஆஆஆ........!!!!! .ஸ்டுப்பிட்....என்று லெளகீகம் என் வயிற்றில் குத்தியது....அடிக்கத் துரத்தியது....ஓ.....சாரி, சாரி..... சாரிடி.....நான் சொல்றேன்....சொல்றேன்....சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தேன்....அவள் துரத்தினாள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாதை ஓரம் கிடந்த ஒரு சிறு பாறையில் மூச்சிறைக்க அமர்ந்தேன்...., என் முன் வந்து மறுபடியும் அவள் மூச்சிறைத்தாள்...கண்ணடித்து வீட்டுக்கு போலாமா என்றேன்......! ஹி ஹி.. வீட்டுக்குத்தானே போகணும் சார்.... பின்ன என்ன காட்டுக்கா போகப் போறோம்....? என்று சொல்லி விட்டு ஹா.. ஹா என்றாள்..., ஜோக்கடித்து விட்டாளாம்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காகிதத்தில் கவிதை செய்து, செய்து...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் களைத்தே போய்விட்டேன்....,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என் உதடுகளில் தேக்கி வைத்திருக்கிறேன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஓராயிரம் கவிதைகளை...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கே உன் முன் நெற்றி காட்டு,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாசி காட்டு, கன்னம் காட்டு, கழுத்து காட்டு&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உதடுகளைக் காட்டு.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்று நான் கவிதையென்று ஒன்றை சொல்ல....ச்ச்சீ படுவா உதை படுவ.. என்று என் நெஞ்சு பிடித்து தள்ளி மிருதுவாய் சாய்ந்தாள்....! சரி வா வீட்டுக்கு போகலாம்....இருட்டிடுச்சு...என்றாள். அவள் சொன்னதையே நான் வேகமாய் அழுத்தி திருப்பிச் சொன்னேன்....முறைத்தாள்.....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெல்ல கை கோர்த்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு மெல்ல வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நல்ல வேளை மழை வரலேல்ல........என்றவள் வீடு நெருங்கியதும்...ஆமா நைட் உனக்கு என்ன டின்னர் வேணும்டா.....? இட்லி, தோசை , சப்பாத்தி, சாதம்.....என்று பட்டியலிட்டு பதிலுக்காய் என்னைப் பார்த்தாள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் " நீ " என்றேன்...எங்கோ பார்த்தபடி....,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யூ டாமிட்.....நீ பட்னிதான் இன்னிக்கு.....அவள் பேசிக் கொண்டே வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் வாசற்படியில் அமர்ந்து வானம் பார்த்தேன்....நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;" பட்டு கருநீல - புடவை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதித்த நல்வயிரம்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நட்ட நடுநிசியில் - தெரியும்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நட்ச்த்திரங்களடி "&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாரதி மூளைக்குள் ஏறி மீசை அமர்ந்து முறுக்கிக் கொண்டிருந்தான்.....நேரம் போனதே தெரியவில்லை....மறுபடியும் மூலாதாரம், சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று நகர ஆரம்பித்து இருந்தேன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உள்ளேயிருந்து என் ச்ச்ச்சிம்னி கூப்பிட்டாள்......." சாப்பாடு ரெடி வாங்க........."&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனாதகம் தொடும் முன் வழுக்கி விழுந்த படி எழுந்தேன்....இதோ வந்துட்டேன்மா......!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வீட்டுக்குள் சென்று விட்டேன்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-6596086284247951662?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/6596086284247951662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=6596086284247951662&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6596086284247951662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6596086284247951662'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_9075.html' title='கவிதைக்கு அவள் என்று பெயர்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wjfDrok1Fsg/TxhGCCs4YFI/AAAAAAAADdw/A-M_C6mR_z8/s72-c/image.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3267855757318122021</id><published>2012-01-19T14:18:00.004+05:30</published><updated>2012-01-19T14:38:06.291+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை அனுபவம்'/><title type='text'>மரம்...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Sg9vlRYcIgU/TxfYTVLUgOI/AAAAAAAADdo/FrDsHUZJvA8/s1600/small+tree.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="265" src="http://2.bp.blogspot.com/-Sg9vlRYcIgU/TxfYTVLUgOI/AAAAAAAADdo/FrDsHUZJvA8/s400/small+tree.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாருமற்ற ஒரு பொழுதில் அந்த மரத்தடியில் நான் நின்று கொண்டிருந்தேன். என்ன மரம் என்று மனம் ஆராயவில்லை. மரத்தின் வேர்களில் பார்வையை ஊன்றி அதன் பிடிப்புகளுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி வெகு ஆழத்தில் சென்று அதன் மையவேரினை மனம் பற்றி முடிச்சிட்டுக் கொண்ட சற்று நேரத்தில் நான் மரமாகிப் போனேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல் முறையாய் மனமற்ற ஒரு உணர்வு நிலையில் மண்ணின் ஆழத்தில் இருந்த ஈரப்பதத்தை சுகமாய் உறிஞ்சி உறிஞ்சி என் உடலின் பாகங்களுக்கெல்லாம் பரவ விட்டுக் கொண்டிருந்தேன். சலனமில்லாமல் ஒற்றைக் காலில் நிற்பது ஒரு சுகானுபவம். சுகத்தை உடலுக்குள் தேக்கிக் கொண்டு என் நீட்சிகளை மெல்ல மெல்ல உணர்தலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகள் இல்லை ஆனால் பார்வை இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மண்ணுக்கடியில் எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. ஒவ்வொன்று குறு குறுப்பாய் அங்கும் இங்கும் ஒரு ஓட்டத்தில் இருப்பதை தெளிவாக உணர முடிந்தது. அவைகளுக்கெல்லாம் நினைவுகள் பல மையப்புள்ளிகளளில் இருக்கவில்லை. ஒரே புள்ளியில் அவற்றின் மனம் குவிந்து கிடப்பதை அதிர்வுகளாய் அறிய முடிந்தது. அந்த ஒற்றைப் புள்ளியில் உயிர் வாழும் ஆசை தேங்கிக் கிடப்பதும், அந்த ஆசையின் இரண்டு முகங்களாய் பசியும், காமமும் ஒடுங்கிக் கிடந்ததும் தெரிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உணவு தேடுதலும் உண்ணலும், இனப்பெருக்கம் செய்தலும் மட்டுமே அவற்றின் வேலையாயிருந்தன. உயிர்ப்பயமும் எல்லாவற்றுக்குள்ளும் இருந்தன. ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் எந்த ஒரு பதிலும் இல்லாமல் வெற்றுக் கூடாகவே இருந்தது. பூமின் ஆழத்தில் அதன் நடு மையம் கனன்று கொண்டிருந்தாலும் அதன் அடுத்த அடுத்த அடுத்த கட்டங்களில் நீர் கசிந்து கசிந்து ஒரு மாதிரியான குளுமையாய்த்தான் பூமி எப்போதும் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெல்ல என் வேர்களை பரப்பி....ஒரு உற்சாக கூடலாய் பூமியை அழுத்தி அந்த சுகத்தை அனுபவித்து நான் விடாமல் நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தேன். தனிமைதான் அது ஆனால் சுற்றிலும் எல்லாம் அதன், அதன் அழகில் இயங்க நானே நானாய் நானும் இயங்கும் ஒரு தனிமை. ஆழமான ஆனால் எல்லாமே அழகான ஒரு தனிமை. பல காலச் சூழல்களிலும் நான் இங்கே நின்றிருக்கிறேன். ஒரு பறவை எங்கிருந்தோ வந்து இந்த காட்டுப் பகுதியில் எச்சமிட அதன் எச்சத்திலிருந்த ஒரு பழத்தின் கொட்டையாய் நான் இருந்தேன் முன்பு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விதையாய் நான் இருந்த போதும் எனக்குள் ஒரு இயக்கம் இருந்தது, மெல்ல மெல்ல என் பிஞ்சுக்கால்களை மண்ணில் பதித்தேன். மெல்லிய சவ்வுகள் எல்லாம் விதையாய் இருந்த எனக்குள் மெல்ல அறுபட மண்ணில் ஒரு சிறு வேராய் நான் இறங்கிய அந்த தினம் எனக்கு மறக்க முடியாத தினம்தான்...., ஒரு மாதிரி கூச்சத்தோடு மண்ணை தொட்ட என்னை வாரி இழுத்துக் அணைத்துக் கொண்டது இந்த பூமித் தாய். &amp;nbsp;மனிதர்களின் வாழ்க்கையில் சிசுவினை பிறப்பித்து விட்டு தாய் நகர்ந்து விடுவாள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இங்கே....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சிசுவினை தன்னிடம் இழுத்துக் கொண்டு காலெமெல்லாம் கூடவேதான் இந்த தாயிருப்பாள். அவளின் தொடர்பின்றி நான் இல்லை. நான் பரப்பிய வேர்கள் மண்ணுக்குள் நுழைய சிரமப்பட்ட காலங்களில் எல்லாம் ஒரு மழையோ இல்லை இரவு நேர பனியோ பூமித்தாயோடு கூடிக் கலந்து மெல்ல அவளை இலகுவாக்கி நான் உட்செல்ல இடம் கொடுத்து இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிஞ்சாய் நான் கண் மூடிய படியே மண்ணுக்குள் அமிழ்ந்து முதன் முதலாய் என்னுள் முலைப்பாலாய் என்னுள் செலுத்திய நீர்தான் என் உயிரின் முதல் வித்து. ஒரு துளியினை எனக்குள் அனுப்பி...உற்சாகமாய் தாய் பசுவின் முலை முட்டும் ஒரு கன்றினைப் போல பூமியை மெல்ல மெல்ல முட்டி, முட்டி மோதி சிலிர்ப்பாய் சிறு துளிர்ப்பினை இலைகளாக்கி தலை தூக்கி நான் பூமியை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த போது சடாரென்று சூரியனின் ஒளி எனக்குள் ஊடுருவ எனக்கான உணவு செய்யும் ஒருவித்தையை நானே புரிந்து கொண்டேன்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கும் இங்கும் அலையும் காற்றினை சுவாசித்து, சுவாசித்து பிராணனை என்னுள் ஆழமாய் &amp;nbsp;நிரப்பிக் கொண்டேன்..! நான் உயிர்வாழ ஒரு கூட்டுக் கலவையான காற்றும், உணவு செய்ய ஒரு கூட்டுக் கலவையான காற்றும் என்னைக் கேட்க்காமலேயே எனக்கு உதவி செய்ய...நானே நானாய் இருக்க...என்னைச் சுற்றி இருந்த எல்லாமே உதவின..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் தனிதான் இருந்தாலும் கூட்டினால் கிடைத்த தனிமை இது. நான் மெளனமாய் இருப்பதற்கு என்னைச் சுற்றி இருக்கும் நிறைய சப்தங்கள் எனக்கு உதவி இருக்கின்றன. தட்டுத் தடுமாறி மெல்ல மெல்ல வேர்பிடித்து நிதானமாய் நான் வளர வளர நான் பலமானேன்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிளைகளானேன்...பல இளைகளானேன்....பருவம் எய்தி மெல்ல மொட்டுக்களாய் என் பருவத்தின் எழுச்சியினை வெளிப்படுத்தினேன்....பூவானேன்....வண்டுகளோடு கூடிக் கூடிப் பின் காயானேன்...பின் பழுத்த பழமானேன்...! தனித்திருந்த நான் &amp;nbsp;ஒரு கட்டத்தில் பெரும் கூட்டத்திற்கு சொந்தமாயும் ஆகிப்போனேன்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கெங்கிருந்தோ பறவைகளும், பல்லிகளும், பாம்புகளும், பூச்சிகளும், பல ஜீவராசிகளும் என்னிடம் வரும்..! நான் முழு உறக்கமோ அல்லது விழிப்போ இல்லாத மத்திமத்தில் எப்போதும் ஒரு மோன நிலையில் இருக்கும் ஒரு உயிர் ஆனால் என்னிடம் வரும் யாவும் இரவுகளில் உறங்கும், பகற் பொழுதில் சண்டையிடும், தத்தம் அலகு கொண்டு பழங்களாய் பரவிக் கிடக்கும் என்னை குத்திக் கிழித்து தன் பசி தீர்க்கும்.......&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில விலங்குகள் என் மீது உராய்ந்து உராய்ந்து ஏதோ ஒரு சுகம் தேடும்...! சில தன் கூடு கட்ட என்னை துளையிடும்...., எல்லாம் வலிதான் ஆனால் அதுவும் சுகம்தான். நான் என்ற என்னை எனக்காக மட்டும் வைத்து கொண்டு நகர்தல் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணானது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சார்புடைமை என்பது பிரபஞ்ச நியதி. நான் வாழ நான் நிறைய பேரைச் சார்ந்திருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...! அப்படித்தான் தான் வாழ என்னைச் சார்ந்து மற்றவை இருக்கின்றன...! கூட்டமாய் கோடி பேர் வந்தாலும், ஆடிப்பாடி சிரித்தாலும், உண்டு களித்து சென்றாலும், நிழலில் ஓய்ந்து உறங்கி மகிழ்ந்தாலும் நிகழ்வுகளாய் பகிர்தலாய் மட்டுமே பயணிக்கிறது எங்கள் உறவு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிபந்தனைகளோடு யாரும் வருவதுமில்லை. நிபந்தனைகளோடு யாரும் செல்வதும் இல்லை. நான் இருக்கிறேன்... .என்னைச் சுற்றி எல்லாம் நிகழும், செல்லும்...எங்களுக்குள் எந்த உறவுப் பரிமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கிடையாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நிலத்தில் நீர் வற்றிப் போய், மழை பெய்யாமல் போன காலங்களும் உண்டு, அப்போதெல்லாம் தண்ணீர் இல்லாமல் நான் கருகி இலைகளெல்லாம் உதிரிந்து உயிர்ப் போராட்டம் கூட நடத்தி இருக்கிறேன். எனக்கு வலிக்கிறது என்று அதை நான் வேறு யாருக்கும் மாற்ற நினைத்ததில்லை....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செழித்து இருக்கும் போது என்னோடு கொஞ்சிக் குலாவிய குயில்களும், கோட்டன்களும், காகங்களும், இன்ன பிற பறவைகளும், நிழழுக்காய் என்னிடம் ஒதுங்கிப் பாராட்டிய மனிதர்களும், மனம் மகிழ்ந்த விலங்குகளும் என்னிடம் நெருங்கக் கூட இல்லை....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் செழித்திருந்தேன்..அவை என்னை இருப்பாக்கிக் கொண்டன. நான் பட்டுப் போக ஆரம்பித்தேன் அவை இடம்பெயர்ந்து விட்டன. நாளை மீண்டும் செழிப்பாவேன் அவை மீண்டும் வரும். &amp;nbsp;இது நியதி.....இதில் சந்தோசமும் இல்லை துக்கமும் இல்லை...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உறவுகளை உரிமைகளாக எடுத்துக் கொள்ளும் போது வலியும் கூடிப் போகிறது வாழ்க்கையும் வெறுத்துப் போகிறது. உறவுகளும் இன்ன பிற சுக துக்கங்களும் வெறும் நிகழ்வுகள்தான்! நானும் ஒரு நிகழ்வு....இங்கே வருத்தப்பட ஒன்றுமில்லை...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாழ்க்கையின் நகர்வோடு நான் நகர்கிறேன் என்னைச் சுற்றியும் எல்லாமும் நகர்கின்றன.....! இதோ இன்று வேர் பிடித்து பிரமாண்டமாய் ஒரு அரசனாய் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.....நாளை வேரோடு சாய்ந்து வீழவும் செய்வேன்.... ஆழமான புரிதல்களோடு எப்போதும் பரஸ்பரம் அன்பை மட்டுமே பகிரத் தெரிந்திருக்கும் ஒரு உயிர்...அவ்வளவே..!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்னைப் பொறுத்த மட்டில் என் வாழ்க்கை ஒரு தவம். புலன்கள் இல்லாமல் உடலே உணர்வாய், உணர்வே புத்தியாய், புத்தியே புரிதலாய் ஆழமான சுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என் தவம்.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;" எலேய்...........கிறுக்குப் பயலே....பர்மாக்காரரோட மரத்தடியில நின்னுகிட்டு என்ன ரோசிச்சுக்கிட்டு இருக்க....மாட்டப் பத்துடா கூதற....."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாரோ வேகமாய் கத்த சட்டென்று முடிச்சுக்கள் அவிழ்த்து நான் மனிதனானேன்....மரம் பர்மாகாரருக்கு சொந்தமாகிப் போனது......!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. &amp;nbsp;S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-3267855757318122021?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/3267855757318122021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=3267855757318122021&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/3267855757318122021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/3267855757318122021'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_19.html' title='மரம்...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Sg9vlRYcIgU/TxfYTVLUgOI/AAAAAAAADdo/FrDsHUZJvA8/s72-c/small+tree.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1100060603134847371</id><published>2012-01-15T23:47:00.008+05:30</published><updated>2012-01-16T00:26:44.857+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசையோடு இசையாக..தொகுப்பு I !</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-gd8DmuTkXGg/TxMXGCYZYUI/AAAAAAAADdg/u0pQPbnqfFg/s1600/ooty11.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="243" src="http://4.bp.blogspot.com/-gd8DmuTkXGg/TxMXGCYZYUI/AAAAAAAADdg/u0pQPbnqfFg/s400/ooty11.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீர் வேண்டாம் என்று...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பூமி சொன்னால்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எங்கேதான் பெய்யும் மழை?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீ அழைக்காத என் அலைபேசி இறந்து போய் கிடக்கிறது.....என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் தான் பெண்ணே ரசித்தாய் ஆனால்...........என்னை மட்டும் நீ ரசிக்கவேயில்லையே ஏன்...? '&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படியாக நீண்டு கொண்டிருக்கும் வரிகளில் காதல் ஒன்று தொலைந்து போனதை ஒரு கவிதையாய் சொல்லும் இந்தப் பாடலின் தாக்கம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது. எப்பவுமே எனக்கு விஜய் பிடிக்கும் ஐ யூஸ்ட் டு சே நெக்ஸ்ட் தமிழ் சினிமாவ ரூல் பண்ணப் போறது விஜய்தான்னு....! இப்போ வேணா டைமிங்க் ஒரு மாதிரி இருக்கலாம்....பட் ஒழுங்கா கதை ச்சூஸ் பண்ணி நடிச்சா....கண்டிப்பா இன்னொரு ரஜினி.. !!!அப்டி ஒரு பக்கா பக்கத்து வீட்டுப் பையன் முகம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி.. விஜய் பிடிக்கதவங்க இங்க வந்து ஒழிக கோசம் போட்டுடாதீங்க..!!! இந்த பதிவு பாட்டுக்கு... மேலே இருக்கும் சூழலுக்கு அட்டகாசமாய் விஜய் ரிஆக்ட் பண்ணியிருப்பாங்க....மணி சர்மாவோட சாரோட இசை இனிமைக்கு வைரமுத்து சார் வரிகள்...சரியா பொருந்தியிருக்கும். பாடலின் ஜீவன் ஹரிஸ் ராகவேந்திரர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;" காதல் என்ற ஒன்று அது கடவுள் போல&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை "&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இனிய இசை அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/tFi-YTyMGx4" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போ.........வர்ர்ர்ட்ட்டா...!!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பின் குறிப்பு: அப்போ அப்போ இது மாதிரி பாடல்களை கேட்டுட்டு...அப்போ தோணுறத டக்கு டக்குனு எழுதிடலாம்னு இருக்கேன். பாடல் விமர்சனம் கிடையாது...விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நமக்கு புத்தி பத்தாது....! இது ச்ச்சும்மா....அட..ச்ச்சுமன்னா என்னவா? ச்ச்சுமான்னா சும்மாதான்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1100060603134847371?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1100060603134847371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1100060603134847371&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1100060603134847371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1100060603134847371'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/i.html' title='இசையோடு இசையாக..தொகுப்பு I !'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gd8DmuTkXGg/TxMXGCYZYUI/AAAAAAAADdg/u0pQPbnqfFg/s72-c/ooty11.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1875567440776867594</id><published>2012-01-15T00:07:00.003+05:30</published><updated>2012-01-15T00:12:26.878+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மாடு புடிக்க வாரியளா....?!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BPlyGLiJILQ/TxHKi-wK1jI/AAAAAAAADdY/VmaUF5ILiRs/s1600/3210544770_9bea0e22a7.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;img border="0" height="285" src="http://3.bp.blogspot.com/-BPlyGLiJILQ/TxHKi-wK1jI/AAAAAAAADdY/VmaUF5ILiRs/s400/3210544770_9bea0e22a7.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறு தழுவுதல்னுதானே சல்லிக்கட்டை அப்பவே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்க...இன்னிக்கு புதுசா வந்து மிருக வதை லொட்டு லொசுக்குன்னு கோர்ட்ல கேச போட்டுகிட்டு...என்னாப்பு நீங்க...? ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ரெகுலேசன் எல்லாம் வச்சிகிட்டு, காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு இருந்த விசயதை இம்புட்டு சீரியசா ஆக்கிபுட்டியளே....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சல்லிகட்டுல மாடு குத்திதேன் மனுசங்க செத்துப் போயிருப்பாய்ங்கன்னு பேப்பர்ல படிச்சி இருப்பீக...? எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா என்ன மாட்ட தும்புறுத்துறதா....? அங்க அங்க சில பேரு அத்து மீறி இருப்பாய்ங்க...அது கழுத எல்லா பொழப்புலயும்தானே அத்து மீறிப் போற ஆளுக இருக்கு....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சல்லிகட்டு எங்களுக்கு வீர வெளையாட்டுப்பா...?என்னாண்டு நினைச்சீய..? இதுல என்னப்பு வீரம் இருக்குன்னு கேக்கிறியளா...? மாட்டை புடிச்சு அடக்கி கீழ தள்ளி மேல ஏறி நிக்கிறதுதான் சல்லிக்கட்டுன்னு யாரு சொன்னது....அப்டி &amp;nbsp;எல்லாம் செய்றது இல்லப்பு சல்லிக்கட்டுனா...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாட்ட வெரசா வெரட்டிகிட்டு போயி அதோடு திமிலிசங்கைய புடிச்சி கட்டிப் புடிச்சிகிட்டு, கீழ விழுந்துறாம வெரசா மாட்டோட வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமா ஒடியாரணுமப்பே...மாடு குத்தப் பாக்கும், சில நேரம் குத்தியேபுறும், அங்கிட்டு இங்கிட்டு தள்ளி நம்மள விழுத்தாட்டப் பாக்கும் அம்புட்டையும் தாங்கி கிட்டு ரெம்ப நேரம் யாரு நிக்கிறானோ அவென் செயிச்சவன்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாட்டு புடிக்கிறதுல என்ன வீரம்னு கேப்பாய்ங்க..நீங்க அம்மூரு மாடுகள வந்து பாக்கணும்...தீனியப் போட்டு,...கொம்புகளை சீவி சிங்காரமா இதுக்காண்டியே வளர்த்தி வச்சு இருப்பாய்ங்க...! மாடுன்னு சொன்னா அது மிருகந்தேன்..அதுக்கு ஒரு கூறு மாறும் தெரியாது ஆனா மனுசப்பயலுக்கு கூறு மாறு தெரியும்ல...மாடு எங்கிட்டு எப்போ திரும்புதுன்னு மனுசப்பயலாள ரோசிக்கவே முடியாது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அங்கிட்டு திரும்பும், இங்கிட்டு பாத்து முறைக்கும், முன்னாடி இருக்க கால சிராண்டிகிட்டே நம்மள குத்தறதுக்கு குறிபாக்கும், வாலை தூக்கும்...முன்னாடி பாயும், பின்னாடி கால எட்டி ஒதைக்கிம், அங்கிட்டு போகுதுன்னு நினைப்பீக லவக்குன்னு இங்கிட்டு வெரசா திரும்பும்...,&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அசந்து மசந்து நின்னியன்னு வச்சிகிறுங்க...எந்தப்பக்கட்டு சதைய குத்தி கிழிக்கும்னு நமக்கே தெரியாது...! ஒண்ணுந்தெரியாட்டி லவக்குனு கீழ படுத்துக்கிட்டியன்னா பேயாம திரும்பிகிட்டு போயிறும்..ஓடி ஒளிஞ்சறாலாம்னு வெரசா ஓடினா வெரட்டி வந்து குத்தும்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கனமான மாடுகள எவ்விப் புடிக்கறதுக்கு முன்னாடி நம்மள் எவ்வி குத்தியேபுடுமப்பே...வவுத்துல குத்தி தூக்கி எறிஞ்சுச்சுனா... அம்புட்டுதேன்....குடலு வேற குந்தாணி வேறயா போயி விழுக வேண்டியதுதேன்....!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்புட்டும் தெரிஞ்சும் அந்த உசுர துச்சமா மதிச்சு மாடுக கிட்ட போயி அதுவும் பெல்லா கோவக்கார மாடுகளா பாத்து அதுக மேல பாஞ்சு திமிலி சங்கிய புடிச்சு அணைச்சுகிட்டு போகையில் மனசு பூரா காத்துல பறக்குற மாதிரி இருக்கும் பாருங்க....அதேன்...அதேன் சந்தோசம்....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மாடு குத்திபுறும்னு தெரிஞ்சும், குத்தினா செத்துப் போயிருவோம்னு புரிஞ்சும் போயி மாட்ட புடிக்கிறோம் பாத்தியளா அது வீரந்தானே....! இதைப் போயி என்னமோ நாங்க மாடுக கூட மல்லுக்கட்டி சண்டை போடுறமாதிரி இட்டுக்கட்டி சல்லிக்கட்ட நிறுத்துங்க..அது இதுன்னு பொலம்பிகிட்டு இருக்காய்ங்க....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இளந்தாரிப் பயலுக இப்படி சாடிப் போயி மாடு புடிக்கிறது எல்லாம் அதுவும் முரட்டு முரட்டு மாடுகளை பிடிக்கிறது எல்லாம் வீரம்யா...வீரம்..பொறவு இதை என்னாண்டு சொல்லுவிய? மாடு குத்தி பத்து பன்னெண்டு தையலுகள போட்டுகிட்டு அடுத்த சல்லிகட்டுக்கு வந்து நின்ன பயலுக எங்கூர்ல ரெம்பப் பேரப்பே....! சும்மா காச்சுக்கும் ஓடிப்பிடிச்சு வெளையாடுற வெளையாட்டு இல்ல இது....சல்லிக்கட்டுன்னா...தமிழப்பயலுகளோட வீர வெளையாட்டு...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயக்காட்ல நின்னு விதை போட்டு தண்ணி பாச்சி, ஏறு ஓட்டி உழுது, களையெடுத்து, நட்டு, வெள்ளாமை செஞ்சு, கதிரறுத்து, பொனையடிச்சு, தூத்தி, அதை நெல்லா ஆக்கி அதை மூடையில கட்டி இந்தா......அப்டி முதுகுல தூக்கி பாரவண்டியில இப்டி இறக்கி வைக்கியில மனசு ரெக்கை கட்டி பறக்குமப்பு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயக்காட்டுப் பொழப்பு கஷ்டப்பாடு பொழப்புதேன்...ஆனா அடிமை பொழப்பு இல்லப்பு...வலியோட செஞ்சாலும் மனசு நெறஞ்சு செய்யிறோம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சொல்ல வந்த சோலிய மறந்து போயிட்டேன் பாருங்க...அம்மூர்ல நாளைக்கி சல்லிகட்டு வந்திருங்கப்பு...., மாடுகளை இளந்தாரிக புடிக்கிறதும், புடிமாடுகளைக் கொண்டு வந்தவைங்க மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு அழுகுறதும்னு..........ஒரே ஆட்டமாத்தான் நிப்போம்....,அம்ம வீட்டுக்கு வந்துருங்க...சாப்டு கீப்டுபுட்டு...போயி மாடு புடிக்கலாம்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போ.....வர்ர்ர்ர்ர்ட்ட்டடா!!!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1875567440776867594?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1875567440776867594/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1875567440776867594&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1875567440776867594'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1875567440776867594'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_15.html' title='மாடு புடிக்க வாரியளா....?!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BPlyGLiJILQ/TxHKi-wK1jI/AAAAAAAADdY/VmaUF5ILiRs/s72-c/3210544770_9bea0e22a7.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1970229729271371768</id><published>2012-01-14T14:45:00.001+05:30</published><updated>2012-01-14T14:46:48.443+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழம் என்னும்  கனவு...!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fatEUBhAqDE/TxFHVkGNFvI/AAAAAAAADdQ/AT5jZ2pssAU/s1600/mulveli21.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://2.bp.blogspot.com/-fatEUBhAqDE/TxFHVkGNFvI/AAAAAAAADdQ/AT5jZ2pssAU/s400/mulveli21.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீண்டும் சில காணொளிகளை இரத்தக் கறைகளை விழிகளில் தேக்கியபடி காண நேரிட்டது.. ஈழத்தில் நடை பெற்றது போர் என்று உலக நாடுகளோடு சேர்ந்து அரக்கன் ராஜபக்சே வேண்டுமானால் கூறலாம் ஆனால் ஈழத்தில் நடந்தது போர் அல்ல.. அது திட்டமிடப்பட்ட பெரும் இன அழிப்பு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனியொரு படையாக இலங்கையின் பேரினவாத அரச படைகள் எம்மவரை நோக்கிச் சென்றிருக்குமெனில் காலம் இந்நேரம் அவர்களைச் செரித்துப் போட்ட இடத்தில் தமிழீழக் கொடி பட்டொளி வீசி பறந்து இருக்கும். ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை இலங்கை இராணுவத்தை அழித்தொழிக்கும் வல்லமையை தமீழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் வார்த்தைகளைக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சண்டையிட்டால்தான் வெல்ல முடியும் என்ற ரீதில் எங்கும் நகர்தல் சாத்தியமில்லாமல் விடுதலை புலிகளின் கைகளும் தொடர்புகளும் கட்டப்பட்டுதான் போர் எனப்படும் மிருக வெறியாட்டம் ஈழத்தில் நடந்தேறியது. இப்போது சொல்லுங்கள் எப்பேர் பட்ட இராணுவத்தை அண்ணன் பிரபாகரன் கட்டியெழுப்பி இருப்பார் என்று...? அதன் வல்லமை என்னவென்று சற்றே கண் மூடி யோசித்துப் பாருங்கள் உலகத்தீரே.....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டார்கள், ஈழத்து மக்கள் இலங்கையைப் பிரித்துக் கேட்டார்கள் என்று இனியும் பொய்ச்செய்திகளைப் பரப்பாதீர்கள் மனிதர்களே...குறிப்பாய் தமிழ் பேசும் தமிழர்களே....!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈழப்போர் நிகழ்த்தப் பெற்றது தம் தேசத்தை அடையும் நோக்கில், தாய் தமிழரின் மண்ணில் சுதந்திரமாய் வாழ முடியாமல் அடிமைகளாய் சிங்களவனிடம் உரிமைகளைப் பலி கொடுத்து விட்டு திணறிப் நின்று கொண்டிருந்த மக்கள் எடுத்த எடுப்பிலேயே ஆயுதமேந்திப் போராடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காந்திய வழியில் அறப்போராட்டத்தை நம் உறவுகள் முன்னேடுத்தப் போது வன்முறையைக் கொண்டு மிருகமாய் அவர்களை அடக்க முற்பட்ட வெறி பிடித்த சிங்களவன் வன்முறையாளன் இல்லையா? தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும் தமிழச்சியின் முலைக் கறி இங்கு கிடைக்கும் என்று தமிழர்களை கொன்று கிழித்து அவன் ஆடிய வெறியாட்டங்களை எல்லாம் எப்படி நாம் மறந்து போவது...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அற வழியில் போராடி, போராடி ஓய்ந்து போய் இனி சிங்களவனோடு ஒத்து வாழ முடியாது என்ற முடிவுக்கு தந்தை செல்வா போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்து 1976ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று தீர்மானித்தார்கள்...!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனித் தமிழ் ஈழம் என்று குறிப்பிட்ட பகுதியை மீட்டெடுக்க களமாடினாலும் வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாலும், பழம் பெரும் தமிழ் இலக்கியங்களை வாசித்தாலும் அங்கே ஈழம் என்ற ஒற்றை வார்த்தைதான் இருக்கிறதே அன்றி இலங்கை என்ற ஒரு வார்த்தையே இல்லை என்பதை நாம் அறிய முடியும்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மொத்த ஈழத்தையும் சிங்களவனிடம் கொடுத்து விட்ட தமிழர்கள் தான் வாழ தன் நாட்டில் சிறு நிலப்பரப்பை அதுவும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டும் அடிமைகளைப் போல ஆள நினைத்தவனிடம் கேட்டுப் போராடியதுதான் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தீவிரவாதமாய்ப் போய்விட்டது...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீவிரவாதம் என்ற வார்த்தையை ஈழப் போரட்டத்தை சுட்டிக் காட்டப் பயன்படுத்திய கயவன் சிங்களவன் செய்ததுதான் தீவிரவாதம். &amp;nbsp;விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றால், ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பி கிட்டத்தட்ட 70,000 தமிழர்களைக் கொன்று குவித்த தேசத்தை என்னவென்று அழைப்பீர்கள் தோழர்களே....?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதிலும் தனித் தமிழ் ஈழம் என்பது அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் எந்த வித மாற்று அடையாளங்களும் இன்றி தமிழன் என்ற ஒரு அடைப்புக்குள் தமிழர்கள் ஒன்று இணைய வேண்டும் என்பதுதான் காலம் நம் முன் வைத்திருக்கும் மிகப்பெரிய வேண்டுகோள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர் திருநாளாய் அடையாளம் காணப்படும் பொங்கல் திருநாளை நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டடிக் கொள்ளுங்கள் அல்லது உழவர் திருநாள் என்று கொண்டாடிக் கொள்ளுங்கள்....இதுவல்ல நமது தலையாய பிரச்சினை,&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழன் &amp;nbsp;என்று நாம் உரைக்கும் போதெல்லாம் நம் இனத்திற்கு நடந்த பெரும் வஞ்சிப்பினையும் பேரழிவினையும் மறந்து விடாமல்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எழுத்தாய், பேச்சாய், செயலாய் இந்த இன உணர்வு என்னும் நெருப்பினைப் பரவச் செய்யுங்கள். மீண்டும், மீண்டும் காணும் ஈழப் போர்க்குற்ற காணொளிகளும், புகைப்படங்களும் நம் நெஞ்சை கருக்கிப் போடத்தான் செய்கின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் ஈழம் என்ற ஒரு பெரும் துரோகத்தை மறந்து விடாதீர்கள்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர் திருநாளை நாம் கொண்டாடும் இவ்வேளையில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களையும், உறவுகளை எல்லாம் இழந்து விட்டு சிங்களவனின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் மன ஊனத்தோடு வாழ்வதையும் மறந்து போகாதீர்கள்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர்கள் எல்லாம் சுபிட்சமாய் தனி ஈழம் அமையப் பெற்று சுதந்திர ஈழக்காற்றை சுவாசுக்கும் பொழுதில்தான்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழர் திருநாட்களை நாம் கொண்டாடுவதிலும் வாழ்த்துக்கள் கூறுவதிலும் ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும் என்ற வலியினைப் பதிவு செய்வதோடு கட்டுரை வாய் மூடிக்கொள்கிறது தற்காலிகமாய்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-1970229729271371768?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/1970229729271371768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=1970229729271371768&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1970229729271371768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/1970229729271371768'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_1341.html' title='ஈழம் என்னும்  கனவு...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fatEUBhAqDE/TxFHVkGNFvI/AAAAAAAADdQ/AT5jZ2pssAU/s72-c/mulveli21.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7660794929899802070</id><published>2012-01-14T11:50:00.001+05:30</published><updated>2012-01-14T11:51:50.365+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><title type='text'>தீமைகளை கொளுத்துவோம்.....!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-LX_pLwC8e84/TxEclNO5RCI/AAAAAAAADdA/SAm42LfvzyA/s1600/p92a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;&lt;img border="0" height="317" src="http://1.bp.blogspot.com/-LX_pLwC8e84/TxEclNO5RCI/AAAAAAAADdA/SAm42LfvzyA/s320/p92a.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், மன முதிர்ச்சிகளை காட்டும் எழுத்துக்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் திட்டங்களையும் கோஷங்கள் இட்டு மனிதர்களை குவிக்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சரசாரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழுப்புணர்வு தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மூளைகளையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக நல் இயக்கங்களும் போதும் போதுமென்ற அளவிற்கு தங்கள் பெயர்ப்பலகைகளை இந்திய தேசம் முழுமைக்கும் மாட்டி வைத்திருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தனி மனித வாழ்வின் உயரம் இன்னும் மாற்றப்படவே இல்லை அல்லது மாறவே இல்லை. தோற்றுப் போன வழிமுறைகளையே மனிதர்கள் மீண்டும் மீண்டும் தூசு தட்டி எடுத்து வைத்துக் கொண்டு அதை விடியலுக்கான பாதையென்று விடாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேச்சும் எழுத்தும் என்ன செய்து விடும் என்று ஏளனம் செய்யும் மூளைகள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் சரியாய் தங்களின் விழிகளை பதிக்காதவை. பேனா முனையிலிருந்து வீறிட்டு வெளிப்பட்ட சக்தி மிகுந்த எழுத்துக்களும், மக்களின் மனங்களைப் புரட்டிப் போடும் செறிவு நிறைந்த உணர்ச்சி மிகு பேச்சுகளும் புரட்சி விதையை மனித மனங்களில் விதைத்து மாற்றங்களின் காரணியாய் எப்போதும் இருந்திருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதத்துப் போன திட்டங்களை ஓராயிரம் மனிதர்களிடம் திணித்து இதை நீ செய்.. அதை நீ செய்.. என்று தம்மை அறிவு ஜீவிகளாய் காட்டிக் கொண்டு சகமனிதனை கை பிடித்து கூட்டி செல்கிறேன் என்று கூறுபவர்களே..... உமது பயணம் எதுவரை? ஒரு ஏழையின் ஒரு வேளை வயிற்றுப் பாட்டிற்கு நீங்கள் உணவழிக்கும் வழிமுறையில் உங்களின் திருப்தி இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை...&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால்...அடுத்த வேளை உணவுக்கு அவனை உழைக்க வைக்க என்ன வழிமுறையைச் செய்து கொடுத்தீர்கள் நீங்கள்....? மக்கள் பணி ஆற்றும் சிங்கங்களே.....அடுத்தவரோடு உங்கள் அனுபவங்களை புரிதல்களை தெளிவு படுத்தி விவாதித்து சரி தவறுகளை சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்காமல் மேடைகளில் முழங்கி இதுவரையில் என்ன சாதித்து விட்டீர்கள் இந்த சமுதாயத்தில்...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பெரியார், அண்ணா போன்ற புரட்சித் தலைவர்களின் பேச்சிலும் எழுத்திலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் மேம்போக்குத் தனம் மட்டுமா மிகுந்திருந்தது....அல்லவே.....அவர்களின் வழிமுறைகளை,வார்த்தைகளை கேட்கும் மனிதர்களின் புத்திகள் எல்லாம் தம்மை உலுக்கிக் கொண்டு கேள்விகளை கேட்டு பகுத்தறியும் தன்மையினை அவனுக்குள் ஊற்றி மாற்றத்தை அவர்களின் மனதிலே ஏற்படுத்ததானே செய்தது...?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழிகாட்டுகிறேன் என்ற வழிமுறையை விட்டு &amp;nbsp;தள்ளி நின்று அதற்கு மாறாக ஒவ்வொரு தனி மனிதனையும் இந்த சமுதாயத்தின் பொறுப்புக்களையும் தத்தம் குடும்பத்தின் பொறுப்புக்களையும் உணரவைக்கும் ஒரு மிகப்பெரிய யுத்த களத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தயவு செய்து தெருவிற்கு வராதீர்கள் மனிதர்களே....சமுகம் என்பதை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உமது வீட்டினை சரி செய்வது...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தயவு செய்து யாருக்கேனும் கொடி பிடிக்கவும் கோஷங்கள் இடவும் செல்லாதீர் மானுடரே... நீர் செய்ய வேண்டியது எல்லாம் உமக்கும் உம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சுமூகமான பகிர்தலைக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்வது. பொய்யையும் புரட்டு அரசியலையும் வாய் மொழியாக யாரோ சொல்வதைக் கேட்டு யாரையும் உங்கள் தலைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என் சமூகத்தீரே...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உணர்வுகளால் ஒருவன் உங்களைக் கட்டிப் போடுவான் அவன் உங்களுக்கு பொருளாய் உதவிகள் செய்ய ஒரு போதும் விரும்பமாட்டான். உமது நேரத்தை செலவு செய்து அவனுக்காய் கோஷமிடவும், ஊர்வலம் போகவும் அழைக்க மாட்டான். உம்மின் அகக் கண்களை திறந்து உமது உழைப்பை உமக்கே மூலதனமாக்கி, எழுத்தினை உமக்கு அறிவித்து வாசிக்கவும், அந்த வாசிப்பினால் உலகின் நடைமுறைகளை உமக்குள் ஏற்றி வைத்து தெளிவுகளை உங்களைக் கொண்டே கைகொள்ளச் சொல்வான்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;அவனே உங்கள் தலைவன்!!!!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவன் எப்போதும் உங்களுக்கு நல் வார்த்தைகள் மட்டுமே கூறி உங்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க மாட்டான்..., மாறாக உமது வேலையைச் சரியாய் செய்யாவிடில் எப்போதும் உம்மைச் சாடி விரட்டுபவனாய் இருப்பான்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;a href="http://www.kazhuku.com/" target="_blank"&gt;கழுகு&amp;nbsp;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;என்னும்&amp;nbsp;சமூக விழிப்புணர்வு இணைய தளத்தின் மூலம் இதையே நமது செய்தியாக பகிர விரும்புகிறோம்.&amp;nbsp;&amp;nbsp;கழுகு&amp;nbsp;இணைய உலகில் இயன்ற வரை தம் சிறகினை அசைத்துப் பறந்து இணைய பயனீட்டார்களிடம் விழிப்புணர்வையும் தத்தம் கடமைகளை அறிந்தவர்களாயும் இருக்கச் செய்கின்றது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தெருவில் இறங்கி மனிதர்களை வழி நடத்த ஒருவன் வருகிறான் என்றால் அவன் தன்னிறைவு பெற்றவனாய் இருந்தால் தான் முழுமையான சமூக நல்நோக்கு இருக்கும் இல்லையேல் தத்தம் சுய நலக் கொம்புகள்தான் சமூக நல் நோக்கு என்று வேசமிட்டுக் கொள்ளும் என்று நம்புகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதற்காகவே ஒவ்வொரு தனி மனிதரையும் தன்னிறைவு அடைந்த மனிதராய் மாறச் சொல்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கழுகின் வழிமுறைகளும் செயல் திட்டங்களும் ஒருக்காலமும் முன்னால் எப்போதும் எல்லோரும் செய்ததாய் இருக்கப் போவது இல்லை. இப்படி இல்லாமல் யாம் இருப்பதாலேயே பலருக்கும் எமது நகர்வுகள் பிடிபடுவதுமில்லை. மீன்களை வாங்கிக் கொடுத்து மனிதர்களை சோம்பேறிகளாக்கி தம்மை கர்ண பிரபுக்களாக, எப்போதும் தம்மை உயரத்தில் வைத்துக் கொள்ள முனையும் வியாபார மனிதர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் ஒரு யுத்தக் களத்தில் நாங்கள் எழுத்துக்களால் களமாடிக் கொண்டிருக்கிறோம்....&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மீன் பிடிக்கக் கற்றுக் கொண்ட மனிதர்கள் மீன்களை பிச்சையாக கொடுக்கும் மனிதர்களின் முகத்தில் விசிறியடித்து உங்களின் பிச்சைகள் எமக்கு வேண்டாமென்று உறுதியாய் ஒரு நாள் கூறுவார்கள்.......... அந்த அற்புத தினத்தில்....பகட்டுத் தலைவர்களும், போலியாய் புரட்சிக் கொடி ஏந்தும் மனிதர்களும் பிழைப்பற்றுப் போய் தத்தம் கடைகளுக்கு பூட்டுக்களை போட்டு பூட்டி விட்டு...&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற செவுட்டில் அறையும் உண்மையை உணரத்தான் போகிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இயற்கையின் விதி...இந்த போகி தினத்தில் தேவையற்ற மன அழுக்குகளை எல்லாம் கலைந்து, தீமைகள் என்னும் என்னும் குப்பைகளை எல்லாம் மனதளவில் கொளுத்தி புதுப் புது முயற்சிகள் செய்து வெற்றிகளை குவித்து நாளும் மிளிர்வோம்...!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8UcAYWLClZg/TxEePJUd4SI/AAAAAAAADdI/zBxj1AG6F1Q/s1600/pongal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-8UcAYWLClZg/TxEePJUd4SI/AAAAAAAADdI/zBxj1AG6F1Q/s1600/pongal.jpg" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேவா. S&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-7660794929899802070?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/7660794929899802070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=7660794929899802070&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7660794929899802070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7660794929899802070'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_14.html' title='தீமைகளை கொளுத்துவோம்.....!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-LX_pLwC8e84/TxEclNO5RCI/AAAAAAAADdA/SAm42LfvzyA/s72-c/p92a.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8393616196591180409</id><published>2012-01-12T13:22:00.010+05:30</published><updated>2012-01-12T14:40:57.333+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவேகானந்தர்'/><title type='text'>விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-EODBOmYJDiQ/Tw6RnPvuysI/AAAAAAAADc4/g6wF39U98m0/s1600/479px-Swami_Vivekananda_Jaipur.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-EODBOmYJDiQ/Tw6RnPvuysI/AAAAAAAADc4/g6wF39U98m0/s400/479px-Swami_Vivekananda_Jaipur.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696650682097912514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;நரேந்திரன் ஒரு விழிப்புணர்வு பெற்ற இளைஞனாக இருந்ததால்தான் தன்னைக் கடந்து மானுடநலம் சார்ந்து அவனால் சிந்திக்க முடிந்தது. வாழ்வியல் பிரச்சினைகளின் தீர்வுகளை கையில் சுமந்து கொண்டிருந்த பட்டங்களையும், வாசித்த புத்தகங்களையும் கடந்தும் அவன் தேடியதன் விளைவாகத்தான் அவனுக்குள் ஞானம் குடிகொண்டது. நரேந்திர தத்தா என்னும் சராசரி மனிதன் விவேகாந்தர் ஆனார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;br /&gt;வாழ்வியல் தேடலின் பிரதிபலிப்பாய் ஆன்மீகம் இருப்பதை அறிந்திருக்கும் உலகத்தீர், ஆன்மீகம் என்பதற்கு யார் யாரோ பின்பற்றும் மூடநம்பிக்கைகளை மட்டும் உதாரணமாகக் காண்பித்து விட்டு தங்களை அறிவு ஜீவிகள் என்ற உறைக்குள் புதைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த தேடல் உடையவர்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை நம்புவனுக்கும் கடவுளைத் தேடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுளைத் நம்புபவன் யாரோ ஒருவரிடம் கோரிக்கைகளை வைத்து விட்டு ஆட்டு மந்தையைப் போல எதையையோ பின்பற்றுகிறான், ஆனால் கடவுளைத் தேடுபவன், படைப்பின் அற்புதத்தை ருசித்து விட்டு இதன் மூலமும் எப்படி வந்து இருக்கும் என்ற ஆர்வ மிகுதியால் வாழ்க்கை என்னும் அற்புதத்திற்கு பின்னாலிருக்கும் அதிசயத்தை தேடி அலைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபம், காமம், தூக்கம், காமம், பசி இந்த ஐந்து உணர்வுகளை மட்டும் கொண்டிருந்து அதை மையப்படுத்தியே வாழ முற்படுவாயின் அவன் விலங்கை ஒத்தவனாகிறான். அதனைக் கடந்து இவை எல்லாம் ஏன் தோன்றுகின்றன? எங்கே நகர்கிறது வாழ்க்கை என்று உள்ளுணர்வு விழித்தெழும் போது அவன் ஆன்ம விசாரத்தை தொடங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறந்திருக்கிறேன். சிரிக்கிறேன், கதைக்கிறேன், அழுகிறேன், என்னவெல்லாமோ செய்கிறேன் எனது நகர்வு எதை நோக்கி என்று சிந்திக்காமல் இட்டதை உண்டு, கிடைத்ததை குடித்து ஒரு தெரு நாய் சாலையைக் கடக்கையில் மரித்துப் போவது போல மரித்தலில் என்ன சிறப்பு இருக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திரன் தன்னை உணர்ந்ததால் மட்டும்  விவேகானந்தர் ஆகவில்லை. அவர் இயல்பிலேயே தன்னை உணர்ந்தவராய் தியானம் என்ற மன ஒருநிலை கூடியவராய் பிறந்திருந்தார் ஆனால் அவர் வாழ்க்கையையும் சக மனிதர்களையும், தான் சார்ந்திருந்த மண்ணின் மகத்துவங்களையும், கடவுள் என்ற விசயத்தில் பதிந்து கிடந்த விஞ்ஞானத்தையும் உணர்ந்த போதுதான் விவேகானந்தர் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;" எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்” &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தர் உத்வேகம் கொடுத்து இளையர் சக்தியை உசுப்பேற்றி விட்ட ஒப்பற்ற இந்திய தேசத்தின் இளம் தலைவர். தான் சார்ந்து இருந்த மண்ணில் வேறோடு பற்றியிருந்த ஒரு சித்தாந்தத்தை உணர்ந்து வேதாந்தப் பாடங்களின் தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான வடிவங்களை உள்வாங்கிக் கொண்டு அதை செயல்வடிவமாக்கிய சூத்திரதாரி.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் தேடலின் உச்சத்தில் விவேகானந்தருக்கு கிடைத்த தெளிவுதான் இந்திய தேசத்தின் ஆன்மீக வரலாற்றின் மீது விழுந்த ஒரு புதிய பரந்த வெளிச்சம். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தன்னம்பிகையும், சுய சீர்திருத்தமுமே நிரம்பிக் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பது நம்மை விட்டெ எங்கோ அமர்ந்திருக்கும் ஒரு மனிதரல்ல அவர் சிலருக்கு கொடுத்து சிலருக்கு மறுப்பதற்கு....கடவுள் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களே....பண்படுத்தப்பட்டு தன்னை சரியாக வைத்திருக்கும் ஒருவன் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஜெயிக்கிறான். தன்னைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் யாரோ வந்து ஏதோ அதிசயம் செய்வான் என்று நம்பும் சோம்பேறி தோற்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;39 வயதில் விவேகானந்தரின் ஆயுள் முடிவடைந்தது அல்லது முடித்துக் கொண்டர் என்றுதான் சொல்லவேண்டும். பிரம்மத்தின் வலுவான சக்தி விவேகானந்தர் என்னும் உடலுக்குள் சென்று அற்புதமான விளைவுகளை பாரத தேசத்தில் உருவாக்கத்தான் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசத்திலிருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மிகப்பெரிய ரோல் மாடலாய் விவேகானந்தர்தான் இருக்க முடியும். மொழி, இனம், மதம் சாதி என்று எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு விவேகானந்தரின் வாழ்க்கையை வாசிக்கும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையும் சர்வ நிச்சமாய் மாறித்தான் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரின் கருத்துக்களை பற்றியும் நாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.. அவற்றை எல்லாம் இன்றைய இளையர்கள் எடுத்து  வாசிப்பதோடு மட்டுமில்லாமல்....ஆன்ம விசாரணையையும் அறிவுத் தேடலையும், உரம் கொண்ட உறுதியான செயல்களையும், தெளிவான பார்வைகளையும் கைக் கொள்ளத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;" நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே "&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;என்ற விவேகானந்தரின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை அறிவோம்...! உத்வேகம் கொண்ட இளையராய் இந்த தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாய் மாறுவோம்...!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் தேசிய இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா.  S&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8393616196591180409?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8393616196591180409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8393616196591180409&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8393616196591180409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8393616196591180409'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_12.html' title='விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-EODBOmYJDiQ/Tw6RnPvuysI/AAAAAAAADc4/g6wF39U98m0/s72-c/479px-Swami_Vivekananda_Jaipur.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5596447029952574078</id><published>2012-01-10T12:36:00.005+05:30</published><updated>2012-01-10T13:32:49.143+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>ஹாய்....10.01.2012!</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BLwuIiJUm74/TwvsLjjfsbI/AAAAAAAADcs/NDxGXT2YxJ4/s1600/ws_Dashing_Colors_1024x768%2B%25281%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-BLwuIiJUm74/TwvsLjjfsbI/AAAAAAAADcs/NDxGXT2YxJ4/s400/ws_Dashing_Colors_1024x768%2B%25281%2529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695905837006959026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span&gt;அயற்சி வருவதற்கு காரணம் தொடர் வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகள். எழுதுவதற்கு காரணமாய் புறத்தாக்கமோ அல்லது அகத்தாக்கமோ இல்லாமல் போய் விட்டால் எழுத்து நீர்த்துதான் போய் விடுகிறது. அனுபவத்தை, லயிப்பின் சுகத்தை அல்லது வலியை எழுதும் போது அதன் சுவாரஸ்யம் எப்போதுமே அலாதியானதுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பதிவுகள், அல்லது பதிவுலகம் என்ற ஒரு வட்டத்திற்குள் வந்து ஒரு வாரம் அல்லது மாததிற்கு இத்தனை பதிவுகள் இடவேண்டும் என்ற ஒரு மாயா இலக்குக்குள் சிக்கி அதை நோக்கி ஓடும் போது ஒரு படைப்பாளி மரித்துதான் போய் விடுகிறான். இதற்கு மாறாக இன்னொரு விசயம் ஒன்றும் இருக்கிறது, எழுதுவது தனது ஆத்ம திருப்திக்காக என்ற ஒரு வரையறை தாண்டி  வாசகர்கள் பொழுது போக்கும் விதமாக எழுதுவதுதான் அது....&lt;br /&gt;&lt;br /&gt;கமர்சியல் ரைட்டிங் எனப்படும் வெகுஜன ரசனையை மையப்படுத்தி வார்த்தைகளை நகர்த்துவது ஒரு தனித்திறமை. எனக்குத் தெரிந்து இந்த பதிவுலகில் மிகச்சிலரே அதைச் செய்து வருகின்றனர். இன்றைய தேதிக்கு வாசகனின் தேவை என்ன என்று யோசித்து தனது படைப்பாற்றலை கொண்டு பளீச் என்று சொல்வதும் ஒரு திறமை. இலக்கியவாதிகள் என்ற வட்டம் தாண்டிய பாமரனை ஒரு எழுத்து சென்று சேரும் போது அங்கே படைப்பாளி கண்டிப்பாய் வெற்றி பெறத்தான் செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்ம திருப்திக்காக எழுதும் போது எழுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருண்டு கொள்கிறது. பயன்பாடுகளின் விகிதமும் குறிப்பிட்ட எல்லையில் நின்றும் விடுகிறது. மிகச் சிறந்த கருத்துக்களை போகிற போக்கில் விதைத்து பொழுதுபோக்காய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க நான் இதுவரையில் நினைத்தது கிடையாது. இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை என்றாலும் சூழலும், அனுபவமுமே மனிதனின் முதிர்ச்சியை நிர்ணயிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருக்கிறேன் என்றாலும் ஆன்மீகத்தையும் அதன் புரிதலையும் பொட்டலம் போட்டு வியாபாரம் செய்ய முடியாது. அது வாங்கும் தன்மையோடு தொடர்புடையது. சூட்சுமத்தை பேசும் போது உருவத்தை காட்ட முடியாது. உருவத்தை காட்டினால் அது பொய் அல்லது போலி. ஆன்மீகத்தின் சாரங்களும் நுட்பங்களும் விளங்க முடியாதவை அவற்ற உணரத்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய கட்டுரைகளை ஆன்மீகத்தின் மையம் தொட்டு எழுதியிருப்பதால் வெகுஜன தொடர்பற்றுப் போய் தேடுபவனின் பார்வைகளுக்கு மட்டும் பொருளை தெரிவித்து விட்டு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன எனது மிகைப்பட்ட கட்டுரைகள். இது இப்படித்தான்....இதை மாற்றி கூற முடியாது. இதற்கு படம் வரைதல் கடினம், இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்பதை விட எழுதி, எழுதி பார்ப்பதில் ஒரு விதமான சுகம் எனக்கு கிடைத்து விட்டது. எழுதும் போது வந்து விழும் வார்த்தைகளை மீண்டும் வாசித்து வாசித்து ஒரு வாசகனாய் என்னை நெறிப்படுத்திக் கொள்ள முடிந்தது. வாசிக்கையில் எழுத்தினை விட்டு நான் வெகு தூரம் இருப்பதும் எனக்கு புலப்பட்டது. கற்றுக் கொடுக்க என்னிடம் எதுவில்லாமல் கற்றுக் கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆசையிலேயே நிறைய எழுதவேண்டும் என்று ஸ்பூரித்து, எழுதி எழுதி படித்துக் கொண்டிருக்கிறேன். கட்டுரையின் நீளம் கூடுதல் என்றோ அல்லது புரியவில்லை என்று சிலர் என்னிடம் கூறும் போது எனக்கு என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது நிறைய பேர்கள் விரும்பும் வகையில் கரம், மசாலா பொடி தூவி வாசனையாய் எழுத எனக்கு தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம்...,எழுதி எழுதி நான் திருப்தி கொண்டேன் என்பதுதான் உண்மை. இது ஒரு மாதிரியான சுகம். இது அடுத்தவர் சாரா திருப்தி. விளக்க முடியாத ஒரு அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீக அடிப்படையிலான கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் செய்து கொண்டிருக்கையில் காமமும் ஆன்மீகத்தின் மறுக்க முடியாத பாகம்தானே என்ற எண்ணம் தோன்றியது. காமம் பற்றி மருத்துவ ரீதியாக, விஞ்ஞான ரீதியாகத்தான் நிறைய பேர் எழுதுகிறார்கள். சிலர் வக்கிரத்தை தூண்டும் படி படம் போட்டு எழுதி விட்டு காமம் என்றும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் சரியான பார்வைகளை ஆன்ம ரீதியில் எழுதினால் என்ன? என்று ஒரு கேள்வி எழுந்தது. விளைவு காமத்தை சரியான விகிதத்தில் ஆன்மப்புரிதலாய் உடல்கடந்த ஒரு உணர்வாய் எழுதலாம் என்று தீர்மானிக்கவும் செய்தேன். காமத்தை விரசமில்லாமல் வாசிப்பாளன் முகம் சுழிக்காமல் எழுதி அது உள்நோக்கிய பார்வையை கூர்மையாக்கி தெளிவுகளை கொடுக்கும் வகையில் எழுதவேண்டும் என்பது கயிற்றில் நடப்பது.... போல...&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து பார்க்கலாம்..!&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் கடந்து...., மேலே நான் சொன்னது போல பொழுது போக்காய் வாசிப்பாளனின் நாடி பிடித்துப் பார்த்து...என்ன செளக்கியமா? என்று கேட்கும் கமர்சியல் கட்டுரைகளையும் எழுதினால்தான் ஏதோ ஒரு வட்டம் எனக்குள் பூர்த்தியாகும் போல தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!&lt;br /&gt;&lt;br /&gt;வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ........வர்ர்ர்ர்ட்ட்டா...!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-5596447029952574078?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/5596447029952574078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=5596447029952574078&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/5596447029952574078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/5596447029952574078'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/10012012.html' title='ஹாய்....10.01.2012!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-BLwuIiJUm74/TwvsLjjfsbI/AAAAAAAADcs/NDxGXT2YxJ4/s72-c/ws_Dashing_Colors_1024x768%2B%25281%2529.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-8426823446420223317</id><published>2012-01-07T10:51:00.003+05:30</published><updated>2012-01-07T11:13:04.264+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 12</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Cm-YvW6-s0c/TwfY4mJNEKI/AAAAAAAADcU/NsJbCjxzCXs/s1600/Sri_Divya_Cute_12.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://1.bp.blogspot.com/-Cm-YvW6-s0c/TwfY4mJNEKI/AAAAAAAADcU/NsJbCjxzCXs/s400/Sri_Divya_Cute_12.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694758720656707746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தயக்கப் பார்வையை வீசியபடி அவள் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். காதல் பார்வையை வீசிய நான் கலங்கி நின்று கொண்டிருந்தேன் இவள் என்னைக் காதலிப்பாளா என்று....! சொல்லிவிடும் காதல் எப்போதும் திருப்தியடைந்த சுகத்தில் லயித்து லயித்து வலுவிழந்த புயலாய்த்தான் போய் விடுகிறது, ஆனால் சொல்லாத காதல்...?&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாய் அவளை நான் சந்திக்கும் அந்தப் பேருந்து நிறுத்தமும் பேருந்துக்காய் அவள் நிற்கும் அந்த 20 நிமிடங்களும்தான் என் காதலுக்காய் ஒதுக்கப்பட்ட நிமிடங்கள். அவள் செல்லும் பேருந்தில் கூடவே சென்று எங்கு செல்கிறாள்? என்ன வேலை செய்கிறாள் என்றெல்லாம் அறிந்துக் கொள்ளச் சொல்லி உள் மனது என்னை சவுக்கால் அடித்து துன்புறுத்தாத குறையாக சொல்லிக் கொண்டே இருந்தாலும் அதை நான் செய்யாததற்கு காரணம்...&lt;br /&gt;&lt;br /&gt;அது கூடுதல் அழுத்தமாய் போகும் அல்லது அவளுக்கு அந்தப் பின் தொடரல் பிடிக்காமல் போய் அது என் காதலை பதம் பார்த்து விடக்கூடாது என்ற பயத்திலேயே 8 மாதங்களைக் கடத்தி விட்டேன். அவளை முதன் முதலாக பார்த்த சமயத்தில் ஒரு பாறையில் ஓங்கி அறையும் அலைகளைப் போல என்னுள் பரவிப் போனது காதல்...&lt;br /&gt;&lt;br /&gt;எந்தச் செயலைச் செய்ய வேண்டுமெனிலும் நாம் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் காதல் முயற்சிகளின்றி நம் மூளைகளுக்குள் ஏறி அமர்ந்து சிம்மாசனமிட்டுக் கொள்ளும். அப்படித்தான் எனக்கும்...முதல் பார்வையில் காதல் சாத்தியமில்லை என்று கூறுபவர்களின் புலன்கள் மழுங்கிப் போய்தான் இருக்கவேண்டும். முதல் பார்வையில் காதல் சர்வ நிச்சயமாய் சாத்தியமே....&lt;br /&gt;&lt;br /&gt;அழகு என்று சொன்னவுடன் ஒரு சில குறிப்பிட்ட அங்க லட்சணங்களை மனிதர்களின் பொது புத்தி கொண்டு வந்து மனதுக்குள் குவித்து விடும். ஆனால் அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையில் வேறுபட்ட ஒன்று....எனக்கு அழகாய் இவள் தெரிவதற்கு காரணமாய் இவள் போன்ற ஒரு கற்பனா உருவம் என் புத்தியில் ஏற்கனவே இருந்ததுதான் என்று என் நண்பர்களிடம் கூறிய போது நான் ஏளனப்பட்டுதான் போனேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;பல நாட்களாய் என்னுள் நான் காதலை ஒரு கூலியைப் போல சுமந்து சுமந்து அந்த சுமையை அவ்வப்போது என் டைரியில் சில கிறுக்கல் வரிகளாய் செதுக்கி வைப்பதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் அவளிடம் காதலைச் சென்று சொல்ல முடியவில்லை. சொல்லும் அளவிற்கு திராணி இல்லை. சரி தைரியம் இல்லாதவன் ஏன் காதலிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா? தைரியத்துக்கும் காதலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. காதல் விழிகளில் ஏறி மூளையில் குடியிருப்பது அல்ல...அது நேராக இதயத்தில் ஏறி விழிகளின் வழியே ஏக்கமாய் பரவுவது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவளைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மூன்றாவது மாதத்தில் ஒரு நாள் காலையில்தான் அவளின் பெயர் கயல்விழி என்று தெரிந்து கொண்டேன். எப்போதும் தமிழ் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம் என்பது அந்த தினத்திலிருந்து மாறிப் போனது ஆமாம்...கயல் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது அவள் என்னைப் பார்த்துச் செல்வதும் உண்டு. சில மணித்துளிகள் அவள் வீசும் பார்வையை நான் என் மனக்குடுவைக்குள் துளித்துளியாய் சேகரித்து சேகரித்து வைத்து என் தனிமைகளில் அவற்றை மீண்டும் எடுத்து கைகளில் ஏந்திக் கொண்டு விளையாடி இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் காதலை&lt;br /&gt;நீ வைத்துக் கொண்டு&lt;br /&gt;ஏனடி என்னை&lt;br /&gt;அலைக்கழிக்கிறாய்?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது&lt;br /&gt;சொல்லிவிடத்தான்&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;காத்துக் கிடக்கிறது&lt;br /&gt;உன் மீதான காதல்..!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அவள் எப்போதும் இப்படித்தான்&lt;br /&gt;என் கனவுகளில் உலா வருவாள்&lt;br /&gt;கவிதைகளுக்கு எப்போதும் கரு கொடுப்பாள்&lt;br /&gt;உறங்கிக் கொண்டிருக்கையில்&lt;br /&gt;நினைவில்.. சில்மிஷங்கள் செய்து&lt;br /&gt;தூக்கங்களை கலைத்தெறிவாள்..&lt;br /&gt;ஓராயிரம் முறை கண்ணாடி பார்க்கையில்&lt;br /&gt;என் பிம்பம் தாண்டி வந்து நின்று&lt;br /&gt;புத்திக்குள் கல கலவென்று சிரிப்பாள்&lt;br /&gt;ஆமாம்...&lt;br /&gt;அவள் எப்போதும் இப்படித்தான்;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;அன்றாடம் காணும் எங்கள் தினசரிகளில்...&lt;br /&gt;அவள் யாரோ...நான் யாரோ..!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண். அவளைக் கண்டேன். கண்டவுடன் உள்ளுக்குள் ஏற்பட்ட உணர்வினை நான் காதலென்று கணித்து என் தினசரிகளை அவள் நினைவுகளோடு கழித்துக் கொண்டிருக்கிறேன். நான் வாங்கி வைத்திருக்கும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கைகளும் அவற்றில் நான் அவளுக்காய் தானியம் பொறுக்கும் ஒரு குருவியின் லாவகத்தோடு சிற்பியாய் செதுக்கி வைத்திருக்கும் வார்த்தைகளும் எப்போது அவளின் விழி சேர்ந்து கவிதைகளாய் தகுதி பெறும் என்று எனக்குத் தெரியாது...&lt;br /&gt;&lt;br /&gt;பல நாட்களாக சொல்லி விட முயன்று, முயன்று என் இயலாமையில் கொஞ்சம் கொஞ்சமாய்,செத்துக் கொண்ருக்கும் காதல் எந்த அளவு சுகமானதோ அந்த அளவு வலியானதும் கூட.....! அவளின் அருகாமையில் நின்று ஒரு நாளின் சில நிமிடங்கள் அவளை முழுதுமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதுவே போதும் என்று தோன்றியது....விழிகளுக்குள் ஒரு ஓவியமாய் ஏறிக் கொண்டவள் என்னுள் முழுதுமாய் நிறைந்து விட்டாள்....&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகளால் அவளை வாங்கிக் கொண்டே நான் திணறிப் போகிறேன்..எப்படி இவளிடம் பேசுவது...? எப்படி இவளை எதிர் கொள்வது. அவ்வப்போது என்னை வந்து மோதிப்பார்க்கும் விழிகளே என் சுவாசத்தின் தாளகதியை மாற்றிப் போடுகின்றன....! விழிகளில் விழுந்த அவளின் பிம்பம் இதயத்தின் சுவர்களில் மோதி அதன் துடிப்பினை அதிகரிக்க வைத்து, உடலை உஷ்ணமாக்கி....இது அவஸ்தையா..? சுகமா? கணிக்க முடியாமல்...என்னுள் நான் திணறிக் கொண்டிருக்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;சில மணித்துளிகள் பல மணி நேரங்களாய் எனக்கு நீண்டு கொடுத்து என் காதல் அவஸ்தையை இன்னும் அதிகப்படுத்த  அவளுக்கான பேருந்திலேறி அவள் சென்று விடுவாள். அவளோடு நகர்ந்து செல்லும் அந்தப் பேருந்து கூட அழகுதான்...! அவள் நகர்ந்து சென்றவுடன் ஒளிந்து நின்ற திருடர்களாய் என்னுள் இருந்து நினைவுகள் மெல்ல எட்டிப்பார்த்து மனம் என்ற ஒன்று மெல்ல இயங்க ஆரம்பிக்கும்....., அப்போது தோன்றும் அடடா... அவளிடம் காதலிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே..., விரக்தியுடன் கையிலிருக்கும் வியர்வையில் ஊறிப்போன கடிதத்தை கசக்கி எறிந்து விட்டு ஒட்டு மொத்த இயலாமையும் ஒரு வீர வேசம் போட்டு நாளை கொடுத்து விடாலமென்று தைரியம் சொல்லும்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் அருகாமையில் பள்ளியில் ஆசிரியருக்குப் பயந்து கை கட்டி வாய் பொத்தி அமரும் ஒரு சிறுவனாய் ஒளிந்து கொள்ளும் என் தைரியம் அவள் இல்லாத போது இராட்சசனாய் என் மீதமுள்ள நாளின் நேரத்தை எல்லாம் அவள் நினைவுகளை கொண்டு துவம்சம் செய்யும். வலியோடு என் அலுவலகம் செல்தலும் மீண்டும் மறுநாள் காலையை வீரனாய் அவளை எதிர் கொண்டு கோழையாய் திரும்புவதும் தொடர்ந்து கொண்டே இருப்பது வழமையாகி போனது...!&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பவர்களில் முதலில் தன் காதலைச் சொல்பவள் அல்லது சொல்பவன் என்னைப் பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய பராக்கிரமசாலிதான். அவள் என்னை அவ்வப்போது பார்ப்பதிலும், கடைவாயின் ஓரத்தில் தேக்கி வைத்திருக்குமொரு புன்னகையின் நீட்சியிலும் காதல் கண்டிப்பாய் இருக்கும் என்ற கற்பனையிலும்....நான் அவளை என்னவளாகவே ஆக்கிக் கொண்டேன். என்னைத் தெரியாமல் எப்படி இருக்கும்...? தினமும் வருகிறேன்..தினமும் பார்க்கிறாள்....., நிஜமாய் என்னை ஏற்றுக் கொள்வாள்..! என்ன இருந்தாலும் பெண் என்பவள் நமது சமுதாயத்தில் வளரும் சூழல் வேறு....நாம்தான் காதலைச் சொல்லவேண்டும் என்று என் இரவுகள் என்னை சம்மட்டியால் அடித்து உறங்கவிடாமல் செய்ய....&lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் வழக்கம் போல ஆனால் தீர்மானமாக பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டேன்...! அவள் பேருந்தில் ஏறும் முன் நான் பேச வேண்டும் என்று நினைத்து நினைத்து,.....பக்கத்திலிருக்கும் பூக்காரி போகட்டும் சொல்லலாம்...., கட்டம் போட்ட சட்டை போட்டவர் போகட்டும் சொல்லலாம், அந்த மீசைக்காரர் போகட்டும் சொல்லலாம்..., இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் சொல்லலாம், அவள் என்னை பார்க்கும் போது அருகில் போய் சொல்லலாம்...., யாரோ ஒரு ஆட்டோக்காரன் அந்த பேருந்து நிறுத்தத்தில்...யாரையாவது ஏற்றிச் செல்லலாம் என்று...மெல்ல நகர்ந்தது எனக்கு எரிச்சல் ஊட்டியது...சரி அவன் போகட்டும் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டே...&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கான பேருந்து வந்து விடக்கூடாது ஆண்டவா என்று வேண்டிக் கொண்டு நான் மணி பார்த்த போது....என் அவஸ்தையையும்...அவளை நான் பார்த்துக் கொண்டே இருந்ததையும் அவள் கவனித்து விட்டாள்...!&lt;br /&gt;&lt;br /&gt;கயல் என் கண்களைப் பார்த்து விழிகளால் மெல்ல புன்னகைத்தாள்....! என்னுள் மின்சாரம் பாய்ந்தது.....இதயத்தின் துடிப்பு அதிகமாகி வெளியே வந்து விழுந்து விடுவேன் என்று மிரட்டியது...! கயல்... மெல்ல நகர்ந்து என்னருகில் வந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;என் எட்டு மாத காதல் குட்டிக் குழந்தையாய் உள்ளுக்குள் நின்று கொண்டு உதைத்துக் கொண்டு இருந்தது....! அவள் மீதான ப்ரியங்களைத்தான் நான் சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று அவளுக்குத் தெரியுமா? கயல் என் அருகில் வந்து நின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;சட் சட் என்று என் உணர்வுகள் எல்லாம் மண்டியிட்டன..... தொண்டையைக் கடந்து நான் விழுங்க நினைக்கும் எச்சில் நகராமல் கொடுத்த அவஸ்தையும், காற்றில் கலைந்து கொண்டிருந்த அவள் கேசம் அவளுக்கு கொடுத்திருந்த கூடுதல் அழகும் சேர்ந்து நான் மூர்ச்சையாகி விடுவேனோ என்று பயந்து கொண்டிருந்த போது...&lt;br /&gt;&lt;br /&gt;" என்கிட்ட எதுவும் சொல்லணுமாங்க..நீங்க....? " கயல் கேட்டது....! இசையாய் என் செவி நுழைந்த வார்த்தைகளை மூளை பொய் இது கயலாய் இருக்காது என்று நிராகரித்து திருப்பி அனுப்பிவிட புத்தி தடுமாற்றத்தில் ......எ.....என்...என்னங்க....இல்லை....இல்லை..ஆமாம்....இல்லை... என்று ஏதோ நான் சொன்னதைக் கேட்டு கயல் கண்டிப்பாய் சிரித்திருக்கக் கூடாது....ஆமாம் என் இதயம் ஏற்கெனவே எவ்வளவு பலவீனப்பட்டுக் கிடக்கிறது என்று அவளுக்கு எப்படி தெரியும்....?&lt;br /&gt;&lt;br /&gt;கயல் என்னிடம் இசைத்துக் கொண்டிருக்கையில் கயலுக்கான பேருந்து வந்தே விட்டதில் கயல் பதற்றமாய் மீண்டும் கேட்டது...யூ வான்ட் டூ சே சம்திங் டு மீ....?.....மீண்டும் நான் திணற...பேருந்து நோக்கி வேகமாய் கயல் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே...நத்திங்...ஆ....என்று கையை அசைத்துக் கொண்டே....ஓ.கே பாய்...என்று சொல்லி விட்டு பேருந்திற்குள் ஏறியே விட்டது.....&lt;br /&gt;&lt;br /&gt;கணத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை மனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில், பேருந்து மெல்ல நகர.... நான் ஆமாம்.......ஐ நீட் டு சே சம்திங் டு யூ என்று கத்திச் சொன்னதை பேருந்தின் சப்தமும் சுற்றி இருந்த போக்குவரத்து நெரிசலும் கவனமாய் விழுங்கிக் கொள்ள......&lt;br /&gt;&lt;br /&gt;கயலோடு நகர்ந்தே விட்டது பேருந்து......! மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்த வெற்றியோடு கவனமாய் என் காதலை மனதில் எடுத்துக் கொண்டு....என் அலுவலகத்தை நோக்கி நான் நகர்ந்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;கயல் போய் விட்டாள்....&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பாய் நாளை நான் கயலிடம் என் காதலைச் சொல்லியே ஆகவேண்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;...காதலை விட ....காதலைச் சொல்லாமல் தேக்கி வைத்திருப்பது நிஜமாகவே சுகம்தான்......&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள்ளேயே பேசிக் கொண்டு அன்றாட அலுவலக நிகழ்வுகளில் கரையத் தொடங்கினேன்..கயலின் நினைவோடு...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-8426823446420223317?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/8426823446420223317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=8426823446420223317&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8426823446420223317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/8426823446420223317'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/12.html' title='சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 12'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Cm-YvW6-s0c/TwfY4mJNEKI/AAAAAAAADcU/NsJbCjxzCXs/s72-c/Sri_Divya_Cute_12.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6784855114055856685</id><published>2012-01-06T15:23:00.008+05:30</published><updated>2012-01-06T16:10:52.521+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை சமூகம்'/><title type='text'>யாமிருக்க பயம் ஏன்?</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-10Lyk5i-PTc/TwbKjib1TRI/AAAAAAAADcI/-C5GkLdvWpA/s1600/dark_colors_abstract-wide.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/-10Lyk5i-PTc/TwbKjib1TRI/AAAAAAAADcI/-C5GkLdvWpA/s400/dark_colors_abstract-wide.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694461490744347922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில பயம் இருக்கலாம், ஆனா வாழ்க்கையே பயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது....(கொஞ்சம் சிவாஜி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க..)!  எல்லாத்துக்கும் பயம், எல்லோருக்கும் பயம், எதைப்பத்தியாச்சும் பயம்...ஏன்? ஏன்? ஏன்?  இம்புட்டு பயம்...(தளபதி ரஜினி ஸ்டைல்ல படிச்சுக்கோங்க...)?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை மேல பயம், அவன் என்ன சொல்லுவானோ இவன் என்ன சொல்லுவானோ பக்கத்து வீட்டுக்காரன், எதித்த வீட்டுக்காரன்னு  இப்டி மாத்தி, மாத்தி பயந்து எல்லோருக்கும் நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்ணி நடிச்சு, கோபப்பட்டு, அலைஞ்சு திரிஞ்சு ஓடிக்கிட்டு இருக்க வாழ்க்கைய ஒரு நிமிசம் நிறுத்தி கொஞ்சம் அதை முறைச்சுப் பாருங்களேன்...ஹா ஹாஹா! நம்மள பாத்தா நமக்கே காமடியா இருக்குல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இப்டி முறைச்சுப் பார்க்கும் போதே கொஞ்சம் சிரிச்சுகிட்டே பாத்தீங்கன்னா, வாழ்க்கையும் நம்மளையும் பாத்து கொஞ்சம் புன்னகை செய்ய ஆரம்பிக்கும். நிறைய தேவையில்லாத  பயங்களை நமக்குள்ள மனுசங்க கால காலமா திணிச்சு வச்சு இருக்காங்க அதை விடாம கெட்டியா பிடிச்சுக்கிட்டு நாமளும் பயந்து பயந்து வாழவும் செய்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா நம்ம சமுதாயத்துலன்னு இல்லை உலகத்துலயே அதிகமான பேரு ஒரு விசயத்தை செஞ்சாலோ அல்லது நம்பினாலோ அதை நாமளும் ஒரு வார்த்தை கூட கேக்காம அது சரியாத்தாண்டா இருக்கும்னு நினைச்சுக்குவோம்...மனசோட மயக்கம் அதுன்னு கடைசி வரைக்கும் நமக்கு தெரியாமலேயே போய்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டாண்டான்ற ரேஞ்ச்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பிக்கைய வச்சுகிட்டு இது இப்டித்தான், அது அப்டிதான்னு எல்லாத்தையும் லிமிட் பண்ணிக்கிற காமெடியும் அடிக்கடி நடந்து தொலைக்கும். இன்னும் சில பேர் நான் இப்டித்தான் இருப்பேன்...இது என்னோட பிரின்ஸிப்பிள்னு சொல்லுவாங்க ஒரு பிரஸ்டிஜ் பத்மநாபனா ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க..கேட்டா கொள்கை, மண்ணாங்கட்டின்னு....ஏதாச்சும் சொல்லுவாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசயத்தை செஞ்சு அந்த விசயம் மனசுக்கு நிறைவு கொடுக்காம இருந்துச்சுன்னா யோசிக்காம அதை விட்டு வெளில வந்துடணும். மனசுக்கு சந்தோசம் கொடுக்குற மாதிரி நிறைய விசயம் தேவைப்படும். நம்ம சந்தோசத்தை திருப்தி கூட சேர்த்து கொழப்பிக்காதீங்க..திருப்தி என்பது வேறு சந்தோசம் என்பது வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியின் மூலமா பல நேரங்கள்ள திருப்தியை நோக்கி நாம நகர முடியும் ஆனா  சில நேரங்கள்ள மகிழ்ச்சின்னு நாம செய்ற விசயங்கள் திருப்தின்ற ஊருக்குப் போகாம யு டர்ன் பண்ணி துன்பம்ன்ற ஊருக்கு கூட்டிட்டுப் போய்டும்....அப்போ என்ன செய்வீங்க...? அச்சச்சோ நான் ஏதாச்சும் சொல்லி பயமுறுத்திட்டு இருக்கேனோ என்ன....?! எல்லா கட்டுரையும் படிங்க.... இந்த உலகத்தில் எழுதப்படும் எல்லா கட்டுரைகளும் கருத்து கந்தசாமிகள்தான்...., (ஹி ஹி இந்தக் கட்டுரை உள்பட...)&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையோ கதையோ படிச்சு முடிச்சுட்டு அதையே மொத்த வாழ்க்கைக்கும் கெய்டா வச்சுக்கிடாதீங்க....படிச்ச விசயத்தோட சாரத்தை எடுத்துகிட்டு  அது நமக்கு யூஸ் ஆகுமா ஆகாதான்னு யோசிச்சு நம்ம ரூட்ல பைக்கை விரட்றதுதான் புத்திசாலித்தனம். இதை ஏன் சொல்றேன்னு கேக்குறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர்லனு இல்ல, இந்த உலகம் பூராவே வெளியிடப்பட்டிருக்க நல்ல கருத்துக்கள் எல்லாத்தையும் எல்லோரும் கேட்டு இருந்தாலோ அல்லது அப்டி எழுதுறவங்க முழுசா பின்பற்றி இருந்தாலோ உலகத்துல நல்லவங்க மட்டும்தான் இருப்பாங்க இல்லையா...? இந்த உலகத்துல 99.99% எல்லோருமே ஹிப்போகிரேட்தான்..., மிச்ச இருக்குற 0.001% ஹிப்போகிரேட்டா இல்லாம எப்டி இருக்கறதுன்னு முயற்சி பண்ணிகிட்டு இருக்கவங்கன்னும் புரிஞ்சுக்கணும்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் 100 சதவீதமும்....மேடை நாடகம்தான்..! இல்லேன்னு சொல்லி என்கிட்ட ஆர்க்யூ எல்லாம் பண்ண வேணாங்க....இல்லேன்னு நீங்க நினைச்சா சரி இல்லேன்னுச் சொல்லிட்டு போய்கிட்டே இருங்க...(க்ரேட் எஸ்கேப்...ஹா! ஹா!)&lt;br /&gt;&lt;br /&gt;என்னிக்கு டி.வில போடுற பேரண்ட் லவ்லி விளம்பரம் பாத்து நாம செகப்பாயிடுவோம்னு நினைச்சு அதை வாங்க வச்சு,  கருப்பா இருப்பதை விட சிவப்புதான் பெஸ்ட்ட்னு நம்மள நம்ப வச்சானோ அன்னிக்கு ஆரம்பிச்ச பொது புத்தி இன்னிக்கு பல கோணத்துல நம்ம வாழ்க்கைய சீரழிச்சுகிட்டு போய்கிட்டேதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொண்ண பாத்துட்டு எல்லாமே ஓ.கே .. கலர் மட்டும் கொஞ்சம் தூக்கலா இருந்தா பரவாயில்லைன்னு சொன்ன உடனேயே அந்த பொண்ணுக்கு நாம அழகாயில்லன்னு ஒரு பயம் வந்து உடனே அம்மாகிட்ட ஓடிப் போயி அம்மா ஏன் நீங்க நான் வயித்துல இருக்கும் போதே குங்குமப்பூ சாப்பிடலை....? இப்போ பாத்தீங்களான்னு சொல்லிக்கிட்டே சிணுங்கும்....உடனே ஒரு பேர்னஸ் க்ரீம்..ப்ளாஸ் ஆக அதை போட்டுகிட்டு...அந்த பொண்ணு கலர் ஆகி மறுபடி காதலன் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போவான்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இது...?விளம்பரமா...? உண்மையச் சொல்லி வர்த்தகம் பண்ணுங்கய்யா...? ஒரு பொய்யைச் சொல்லி அந்த பொய்யை பொது புத்தியாக்கி, ஒரு பெண்ணுக்கு தான் அழகா இல்லைன்ற பயம் வர்ற மாதிரி காட்டி டி.வி பாக்குற அம்புட்டு பொண்ணுகளுக்கும் ஒரு பயத்தை உண்டு பண்ணி...போலியான பயத்தை வியாபரம் ஆக்குற தந்திரம் என்பது சுத்த மொள்ள மாறித்தனம்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேவையில்லாத பயம்னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா இது ஒரு உதாரணம் அதுக்கு. அதே மாதிரிதான் நாட்டமைகள் எல்லாம் நல்லவன் வேசம் போட்டு போட்டு மிச்ச இருக்கவனை எல்லாம் கெட்டவனாக்கி காட்டுறதும்....! ங்கொய்யாலா நான் நல்லவனா எல்லோர்கிட்டயும் காட்டிக்க ஒட்டு மொத்த ஊரையும் கேவலமா காட்டுறது ஒரு மாதிரியான சைக்கோ மனோபாவம்தானே....&lt;br /&gt;&lt;br /&gt;எங்க மாமா ஒருத்தர் இருக்காரு..செல்வமணின்னு அவர் கேட்டாரு எங்கிட்ட..., ஏன் மாப்புள ஊர்ல இருக்க அம்புட்டு பயலுவளும் நல்லவனா பேசுறாய்ங்களே...அப்புறம் யாருதான் மாப்புள கெட்டவன்னு... ...? நெசம்தானுங்களே...! இன்னமும் சொல்லப்போனா நான் நல்லவன்னு காட்டிக்க நாலு பய தப்பு பண்ணியே ஆகணும்டா சாமின்னு வேண்டிகிட்டு பழனிக்கு பாத யாத்திரையாகவே  போயி அலகு குத்தி காவடி எடுக்க கூட ஆளுக ரெடி....&lt;br /&gt;&lt;br /&gt;மொத்ததுல அப்டி, இருக்கக் கூடது இப்டி இருக்கக் கூடாதுன்னு  நாம சொல்லிக்கிறதுக்காகவாச்சும் நாலு பேரு இங்க தப்பு பண்ணியே ஆகணும் போல...!!!!&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்துல தனி மனுசன் அவன் அவன் வாழ்க்கைய ஒழுங்கா பாத்து வாழ ஆரம்பிச்சுட்ட நிறைய பேருக்கு இங்க வேலை இல்லாம போய்டும். என்னை பொறுத்த வரைக்கும் அதுதான் என்னோட ஆசை...! தேவையில்லாத பயங்களை எல்லாம் தூக்கிக் குப்பையில போட்டுட்டு.....&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கும் அடுத்தவங்களுக்கும் உதவுற மாதிரி ஒரு சுமூகமான மனிதநேயத்தோட வாழும் போது கிடைக்குற திருப்தியும் புரிதலும் மரணத்தைக் கூட பெரிய பயமா காட்டாது. இதுதான் வாழ்க்கை....இப்டி என்ட்ரி ஆகி...இப்டி எக்ஸிட் ஆகப் போறோம்ன்ற புரிதல் வந்துடுச்சுன்னா....&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் உபதேசங்களும், கொள்கை முழக்கங்களும், அறிவுரைகளும்...இந்த மாதிரி வெட்டிக் கட்டுரைகளும் தேவையே இல்லை...! சுமூகமான இயங்கு தன்மைக்கு தன்னையறிதல்ன்ற மந்திரமும், மனிதநேயமும் மட்டுமே போதும்ன்றது என்னோட....கருத்து..(அவ்வ்வ்வ்வ்வ்வ் கருத்து சொல்லாம முடிக்க முடியலையே.....! கண்டுக்காதீங்க பாஸ்....பொது புத்தி...)&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கூட நம்ம உணர்வு நிலை விழிப்பா இருக்கும் போது பயம் எதுக்கு பாஸ்...?&lt;br /&gt;&lt;br /&gt;யாமிருக்கப் பயம் ஏன்..?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-6784855114055856685?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/6784855114055856685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=6784855114055856685&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6784855114055856685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6784855114055856685'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post_06.html' title='யாமிருக்க பயம் ஏன்?'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-10Lyk5i-PTc/TwbKjib1TRI/AAAAAAAADcI/-C5GkLdvWpA/s72-c/dark_colors_abstract-wide.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5193061333316045368</id><published>2012-01-05T18:41:00.011+05:30</published><updated>2012-01-05T20:26:01.853+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம் தேடல்'/><title type='text'>தேடல்.....05.01.2012!</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Rc4vbnxOK7I/TwWtljuklCI/AAAAAAAADbw/q8T1z3QyUE4/s1600/thiruvannamalai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-Rc4vbnxOK7I/TwWtljuklCI/AAAAAAAADbw/q8T1z3QyUE4/s400/thiruvannamalai.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694148164637201442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிக தொடர்புகளால் புத்தி புறம் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கையில் உணர்தல் என்பது நிகழ்தல் மிகக் கடினமாகவே இருக்கிறது. இரைச்சலான சூழல்களும் இரைச்சலான மனிதர்களும் சேர்ந்து நமது தடிமனைக் கூட்டி விட்டு ரத்தமும் சதையுமான பிண்டமாய் நம்மை நாமே மட்டுப்படுத்தி நினைக்க வைத்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் எல்லாம் கடவுளை கற்பனை கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டு முட்டி முட்டி வணங்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுளை மறுக்கும் ஒரு நாத்திகனை விட கடவுளை வணங்கும் ஆத்திகனுக்குத் தெளிவாகத் தெரியும் தான் வணங்கும் கடவுள் இல்லவே இல்லையென்று. புறத்தில் எதுவும் கூறாவிட்டாலும் ஆழ்நிலை மனம் அதை நம்பத்தான் செய்யாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மழை பெய்த மாலை நேரம், அது ஒரு மிகப்பெரிய சிவன் கோயில். முன்னூறு வருடங்களுக்கு முந்தைய கோயில் அது என்று அந்தக் கோயிலின் கல்வெட்டு செய்தி பகின்றது. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய தெப்பக்குளம் ஒன்று மழையால் நிறைந்து கிடந்தது. தெப்பக்குளம் நிறைந்தால் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு தண்ணீர் வந்து விடுமாம். தெப்பக்குளம் நிறைந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜகோபுரத்திலிருந்து கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நேராய் கர்ப்பகிரகம் இருக்கும். ராஜகோபுரம், அதற்குப் பிறகு வெட்டவெளிப்பாதை, பின் கோயில் வெளிச்சுற்று உள்சுற்று என்று நீண்டு கொண்டே செல்லும் பாதை கர்ப்பகிரகத்துக்கு முன்பிருந்த நந்திக்கு அருகில் என்னைக் கொண்டு நிறுத்திய போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். அவரும் எனக்காக தீபாரதனை காட்டிவிட்டு வெறெங்கோ சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அடர்த்தியான இருளை அந்த கர்ப்பக்கிரக வெளிச்சுற்றில் இருந்த மஞ்சள் குண்டு பல்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருளின் மிகுதியால் மங்கலாய் ஒரு வித சோம்பலோடு இருந்த அந்த சூழலும் சில்வண்டுகளின் சப்தமும் என் முட்டிக்கும் ஒரு இரண்டு அல்லது மூன்று இஞ்ச் குறைவான அளவு நிறைந்திருந்த மழை நீருமாய்.....நான் சிவபுராணம் சொல்லிக் கொண்டிருந்தேன்....&lt;br /&gt;&lt;br /&gt;சொர்ண காளீஸ்வரார் எண்ணெய் விளக்குகளின் வெளிச்சத்தில் மெளனமாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவபுராணம் சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் சூழலை மறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லையுள் கூத்தனே....தென்பாண்டி நாட்டனே...என்று வார்த்தைகளில் மனம் கரைந்து அல்லல் பிறவி அறுப்பானே...என்று வெறுமனே சப்த வடிவங்களில் நகர்ந்து கொண்டிருந்தேன். சிவபுராணம் ஒரு சிறந்த மந்திரம் என்று சிறுவயதில் என் தாத்தா கூறிய போது எனக்கு ஜீ பூம்பா போன்ற ஒரு மந்திரமாய் இருக்குமோ என்றுதான் தோன்றியிருக்கிறது. சூ......மந்திரக் காளி.. என்று சொல்லி... அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பார்களே அப்படி நினைத்துக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரம் என்பது வெற்று வார்த்தைகளோ அல்லது மிகப்பெரிய மேஜிக்கை நம் கண் முன் காட்டும் விடயமோ அல்ல..! பெரும்பாலும் சப்தங்களின் ஏற்ற, இறக்கங்களில் அர்த்தங்களே அறியாமல் மனம் நிதானப்பட்டுப் போகும். சிவபுராணம் போன்ற மந்திரங்கள் சப்தங்களால் மனதை சாந்தப்படுத்துபவை அல்ல மாறாக பொருளால் அவை நம்மை கரைத்துப் போட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்பமும் துன்பமும் உள்ளானே...இல்லானே..... என்று சொல்லும் போது கூர்மையான புத்திகள் அது என்ன உள்ளானே ....பிறகு இல்லானே என்று யோசிக்கத்தான் செய்யும். ஸ்தூல, சூட்சும பிரபஞ்ச நிகழ்வுகளை இரண்டு வார்த்தைகளும் சம்மட்டியால் அடித்து சொல்லிக் கொடுக்கும். கூத்தன் என்று தமிழ் சைவ சித்தாந்த நூல்கள் சிவனை விவரிக்கும் இடமெல்லாம் அற்புதமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;நாளும் இங்கே நடந்து கொண்டிருப்பது கூத்து. இந்தக் கூத்தை எல்லாமாய் இருந்து ஒரு சக்தி அரங்கேற்றிக் கோன்டிருக்கிறது. அந்த சக்தி, (எனர்ஜி)தான் கூத்தன்...!&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் எப்படி பிறப்பை அறுப்பான்? பிஞ்ஞகன் என்றால் பிறை, பாம்பு, கங்கா நீர் என்றெல்லாம்  கண்ணில் காணக்கூடிய யாவையும், காணாதவைகள் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டவன் என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச இயக்கமே பிஞ்ஞகன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்ச இயக்கம் எப்படி பிறப்பை அறுக்கும். பிறப்பு என்பது உடலுக்கு மட்டுமே ஏற்படுவது என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு மறுபிறப்பு இல்லை என்று  கூறுபவர்கள் உண்டு. இது உண்மைதான். புலன்வயப்பட்ட வாழ்க்கையில் புலன்களின் அனுபவமே நாம் என்று ஆகிறோம். புலன்கள் அழிந்த பின் பிறகு எப்படி கடந்த பிறவி நினைவு வரும். முன் ஜென்மத்தில் நான் இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன் என்று கூறுவது எல்லாம் அனுமானங்களே....&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மறு பிறப்பு உண்டு என்று நான் கூறுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபிறப்பு என்று இங்கே நான் கூறுவது உடலினைச் சார்ந்த நினைவுகளின் பிறப்பல்ல உடலைச்சார்ந்த அனுபவங்களைத் தாங்கிய சக்தியின் பிறப்பு. உள்ளது அழியாதுதானே? இல்லாதது தோன்றாதுதானே..? இருக்கும் பிரபஞ்சத்தின் நிறை கூடவோ குறையவோ செய்யாமல் அது அப்படியேதான் இருக்கிறது. புதிதாய் பிறக்கும் குழந்தைக்கு உடலைக் கொடுப்பது இரண்டு உடல்களில் தேங்கிக் கிடக்கும் சத்துக்களின் கூட்டு...உயிரைக் கொடுப்பது...எது?அந்த சக்தி எங்கே இருந்து வருகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் யோசித்துப் பார்க்கையில் அது பிரபஞ்சச் சுழற்சி மற்றும் ஏதோ ஒரு செயலின் விளைவு என்றுதானே கொள்ளவேண்டும். இந்தப் பிறப்பின் விளைவு மறு சக்தியாய் பரிணமிக்கிறது. அதாவது இந்த பிறப்பின் செயலின் விளைவுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க....!&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் நமது அத்தனை செயல்களின் விளைவையும் நமது இறப்புக்குள் கொடுத்து விடமுடியாது அது சக்திப்பரிமாற்றமாய் அதிர்வுகளாய் வேறு ஒரு உடலுக்குள் சென்று தொடர்கிறது. இப்படி தொடராது இருக்க என்ன செய்யவேண்டும்...?&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பிறப்பழிக்க வேண்டுமெனில் பிஞ்ஞகனாகிய இந்த பிரபஞ்ச சக்தியை புத்தியில் தேக்கி செய்யும் செயல்கள் எல்லாம் நான் என்னும் உடலோ மனமோ மட்டும் செய்வது இல்லை. இது ஒரு கூட்டு நிகழ்வு நான் என்னும் உடலும் மனமும் ஒரு கருவி என்று உணரும் போது பிஞ்ஞகனாகிய பிரபஞ்சத்தின் செயலாகத்தானே எல்லாம் போய்விடுகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவுகள் பிரபஞ்சத்தோடு கரைந்து வேறு பரிணாமத்திற்கு புரிதலாய் பயணப்படுமே அன்றி மறுபடியும் உடல் என்னும் வடிவம் கொண்டு இங்கே அனுபவப்பட வேறு ஏதும் இல்லைதானே....? இந்த பிறப்பு அறுந்து போய் விடும்தானே...கூட்டாய் நின்ற சக்திதுகள்கள் நான் என்ற மட்டுப்பட்ட நிலை கடந்து யாம் என்ற பேரியக்கத்தின் துகள்களாய் சிதறிப் போகும்தானே...உடலாய் இருக்கும் பிறப்பு நிகழாது நின்றுதானே போய்விடும்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்....!!!!&lt;br /&gt;&lt;br /&gt;சிவபுராணத்தின் இடையில் வரும் இரண்டே வார்த்தைகள்தான் இவை....! இவற்றின் ஆழம் எவ்வளவு பெரியது...! கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்தானே...?!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;சிவபுராணம் சொல்லி முடித்து நான் கோபுர வாசலைப் பார்க்கிறேன். அது வெகு தொலைவில் இருக்கிறது. சுற்றிலும் யாரும் இல்லை. கர்ப்பக்கிரகம், சிவலிங்கம், மங்கலான ஒளி, சுவர்க்கோழிகளின் சப்தம், காலுக்கடியில் தண்ணீர்....&lt;br /&gt;&lt;br /&gt;பயம் மனதைக் கவ்வியது. மறுபடியும் மனமே ஒரு கேள்வி கேட்டது....இது கோவில்தானே...? பிறகு என்ன பயம்....? என்று....ஆமாம் கோவில்தானே...எதுக்கு பயம்? நானே கேட்டுக் கொண்டேன். இருந்தாலும் பயம் என்னை விடவில்லை. சத்தியத்தில் கடவுள் என்று மனிதரைப் போல ஒருவர் இருக்கிறார். அவர் என்னைக் காப்பார் என்றால் இங்கே எனக்குப் பாதுகாப்பு உணர்வு வரவேண்டும். எதைப் பற்றியும் பயம் வரக் கூடாது ஆனால் பயம் வருகிறது என்ற கேள்விக்கு...பயம் என்பது தெளிவின்மை என்று பதில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தெளிவின்மையை குரூர புத்திகள் உள்ள மனிதர்கள் பல தரப்பட்ட துறைகளில் இருந்து கொண்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தெளிவு வர என்ன செய்யவேண்டும்? உண்மையை அறிய வேண்டும். உண்மையை அறிதல் என்றால்....? நான் என்ற எண்ணம் விட்டு வெளியே நின்று எல்லாவற்றையும் பார்த்தல்...நான் என்ற எண்ணம் அகற்ற என்ன செய்ய? மனிதர்களை நேசி; அடுத்த மனிதர்களின் வலியை  உணர்; யாரையும் ஏமாற்றாதே...; புறம் சொல்லாதே; ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அவதூறு பேசாதே; சேவையை விளம்பரம் செய்யாதே; மற்றவர் புகழ செயல்கள் செய்யாதே....என்று ஏதேதோ புத்தியில் உறைக்க....அதன் தொடர்ச்சியாய்...&lt;br /&gt;&lt;br /&gt;கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காதே...! அதாவது நீ எதிர்பார்த்து காய் நகர்த்தாதே....கடமையின் விளைவு பலன் என்பது பிரபஞ்ச நியதி....! சரி இப்படி இருந்தால் என்ன ஆகும்....? பிறப்பறுக்கலாம்...., பிஞ்ஞகன் ஆகலாம்...!&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பகிரகத்தை முழுதாய் சுற்றி வரும் வரையில் ஓம் நமசிவாயா என்று ஓங்கி கத்தி பயத்தை வெளியேற்றினேன்...! இப்போது மட்டும் சிவன் என்று படத்தில் காட்டப்படும் ஒருவர் புல் மேக் அப்போடு ஜடாமுடி, புலித்தோல், தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, நெற்றிக் கண்,  என்று உருட்டும் விழிகளோடு என் எதிரில் வந்து நின்று ....என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டால் நான் ஏதாவது கேட்கும் நிலையில் இருப்பேனா....? அல்லது எதாவது கேட்பேனா....?&lt;br /&gt;&lt;br /&gt;ஹா...ஹா...ஹா சத்தியமாய் மயக்கம் போட்டு விழுந்து மூர்ச்சையாகித்தான் போவேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலை விட்டு வெளியில் வந்து விட்டேன்.....நன்றாக இருட்டி  இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு கையேந்தி பவனில் போய் கை கழுவி விட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;நாலு இட்லி கொடுங்கண்ணே ....என்றேன்...! என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் வேகமாய் உணவருந்திக் கொண்டிருந்தனர்....!&lt;br /&gt;&lt;br /&gt;சிவம் என்பது உருவமல்ல, மனிதனல்ல, சிவம் என்பது தெளிவு என்று உள்ளுக்குள் சப்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பயமற்று இருந்தேன்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-5193061333316045368?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/5193061333316045368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=5193061333316045368&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/5193061333316045368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/5193061333316045368'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/05122012.html' title='தேடல்.....05.01.2012!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Rc4vbnxOK7I/TwWtljuklCI/AAAAAAAADbw/q8T1z3QyUE4/s72-c/thiruvannamalai.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7689371256306516424</id><published>2012-01-01T19:54:00.008+05:30</published><updated>2012-01-01T21:13:50.977+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை சமூகம்'/><title type='text'>பதிவுலகம்.....?!</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-K38blbAKWlI/TwBvJA_zXGI/AAAAAAAADbY/f6u7VqfBADM/s1600/pic.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/-K38blbAKWlI/TwBvJA_zXGI/AAAAAAAADbY/f6u7VqfBADM/s400/pic.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692672129673419874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை வருடம் பிறந்திருக்கிறது. வழக்கம் போலவே நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு 2012 வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். கடந்த வருடத்தின் தெளிவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து செம்மையான அடுத்த வருடத்திற்கு நம்மை இட்டுச் செல்லட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் மிகப்பெரிய ஆசான். காலம் மிகப் பெரிய தோழன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கடவுளரும் மனிதர்களும் சொல்லிக் கொடுக்காத பாடத்தை காலம் குறைவில்லாமல் எப்போதும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சூழலையும் கடந்து வந்தவுடன் பெரும்பாலும் மனிதர்கள் அதை மறந்து போய் விடுகிறார்கள். அதை நின்று நிதானித்து குறை, நிறைகளை சீர் தூக்கிப் பார்ப்பவர்கள் பொறுமையை தனது குணமாக்கிக் கொன்டு தேவையின் அடிப்படையில் செயலாற்றி வெற்றியைப் பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் காலம் என்ற ஒன்றே கிடையாது. காலம் என்பது மட்டுப்பட்ட மனோநிலையின் விரிவாக்கம். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது அப்படி முழுதாய் சுற்றிக் கொள்ள இருபத்தி நாலு மணி நேரம் ஆகிறது என்று கணக்கிட்டு முதலில் சொன்னவருக்கு ஒரு மணி நேரம் என்பது ஒரு அனுமானமாகத்தான் இருந்திருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பூமி சூரியனை முழுதாய் சுற்றி வர முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாள் ஆகிறது. இந்த முழுச் சுற்றே வருடமாகிறது. சரி...சுற்றாமல் இருக்கும் சூரியனின் வயதை எப்படி கணக்கிடுவது...? அங்கேதான் இயக்கமே இல்லையே...காலமற்றுப் போயிருக்கிறதே? காலம்தானே வயது என்றெல்லாம் நான் யோசித்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் சொல்லப் போனால் பூமிக்கும், பூமியில் இருக்கும் மனிதர்களுக்குமே காலமும் வயதும் கிடையாது. சுற்றிச் சுற்றிப் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பேரியக்க நிகழ்வின் தொடர் நிகழ்ச்சியின் சிறு மாறுபாட்டைத்தான் நாம் வயது என்று கூறுகிறோம். இல்லாத ஒன்றை இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வருடமாய் கடந்து எங்கோ செல்வதாக ஒரு மாயா உணர்வில் நகர்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் எங்கும் நாம் செல்வது இல்லை. இருக்கிறோம். இறப்போம். அப்போதும் இருப்போம் ஆனால் வேறு வடிவத்தில். ஒரு காகிதத்தை எரித்து காற்றில் பறக்க விட்டால் காகிதம் என்ற ஒன்று தனித்து இருக்காது ஆனால் அதன் மூலக்கூறுகள் காற்றில் விரவி, பரவி வேறு பரிணாமத்திற்கு சென்று விடும். மனித வாழ்க்கையும் இப்படித்தான். மிகப்பெரிய அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்விலும் குறிப்பாக மானுட வாழ்க்கையின் இரண்டு தலையாய தேவைகளாய் பிரபஞ்சம் நியமித்திருப்பது இரண்டு. ஒன்று காமம் ...இன்னொன்று பசி....! எப்படிப் பார்த்தாலும் இதன் விரிவாக்கமாகவே எல்லாப் பிரச்சினைகளும் இங்கு பரந்து விரிந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்கள்  என்று மிகைப்பட்ட பேர்கள் வாழ்த்துச் சொன்ன வருடமாக 2012 அமைந்து விட்டது. வாழ்க்கையின் மிச்சமாக நாம் எதுவும் கொண்டு செல்லப் போவது இல்லை. சுகமான அனுபவங்களும், நல்ல நினைவுகளுமே நிறைவான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஒரு பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தில் ஏதேதோ சூழல்கள் மற்றும் புரிதலின்மைகளால் பல உறவுகளை நாம் பிரிந்திருந்திருக்கலாம். இந்த வருடத் துவக்கத்தில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து அவற்றை நாம் புதுப்பித்துக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் இது போன்ற பண்டிகைகளும் விழாக்களும் மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவே ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்து அதனால் எனக்கு கிடைத்த உறவுகளின் எண்ணிக்கை அதிகம். நேருக்கு நேராய் சந்திக்காமல் இருந்தாலும் மனதளவில் அவர்கள் கொடுத்திருக்கும் ஆதரவு அளப்பரியது. இணைய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களே...! இங்கே நான் பெரியவனா இல்லை நீ பெரியவனா என்று ஒரு போட்டி வரும் போது அது தேவையில்லாத முரண்பட்ட சூழல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் போல இன்னொருவர் சிந்திக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒரு தனி விதம். என்னைப் போல இன்னொருவன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய புரிதலின்மையால் ஏற்படுவது. வலைப்பதிவில் எழுத வந்த காலத்தில் எனது பதிவுகளுக்கு வரும் ஒவ்வொரு பின்னூட்டமும், வாக்குகளும் எவ்வளவு அவசியமானது என்பதை நான் அறிவேன். புதிதாய் எழுதுபவர்கள் அந்த பின்னூட்டம் மற்றும் வாக்குகளின் உந்துதலால் மேலும் சிறப்பாக எழுதக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் நல்ல கட்டுரைகளை வாசித்து அவற்றுக்கு பின்னூட்டமும் வாக்குகளும் இட்டு விடுகிறேன். ஆனால் பெரும்பாலும் நல்ல கட்டுரைகள் சமீபகாலமாக எந்த ஒரு திரட்டியிலும் மேலே வருவதே இல்லை. இதற்கு காரணமாய் குழுவினராய் சேர்ந்து கொண்டு பதிவுகளுக்கு வாக்குள் அளித்து தங்களின் நட்புக்களை நிறைய பேர் நிறுவும் இடமாக திரட்டிகளைக் கொண்டு வந்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பதிவுகள் திரட்டிகளில் இணைக்கப்படும் போது அவற்றை நெறிப்படுத்தி சிறந்த கட்டுரைகளை மேலே கொண்டு வருவது திரட்டிகளால் இயலாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முழுக்க முழுக்க தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தனிமனித ஒழுக்கமும், பொறுப்புணர்ச்சியும் நிறைந்த மனிதர்கள் சேர்ந்ததுதான் ஒரு நல்ல சமுதாயமாய் இருக்க முடியும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், தமிழ் வாசிக்கத் தெரிந்த மக்களும் வாசிக்கும் ஒரு களமாக தமிழ் வலைப்பதிவுலகம் இருக்கிறது. இதன் தரத்தை நிர்ணயம் செய்வதும் நல்ல கட்டுரைகளை ஆதரிக்க வேண்டியதும் ஒவ்வொரு தமிழனின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கட்டுரை என்று நான் சொல்வது புரட்சியான விழிப்புணர்வு கட்டுரைகளையும் சீரியஸ்  கட்டுரைகளையும் மட்டுமல்ல....! நகைச்சுவையுடன், வாசிக்க ஆரம்பித்த உடனேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் பதிவுகளும், செய்திகள், படங்கள் என்று புதிய செய்திகளைப் பகிரும் பதிவுகளும் நல்ல பதிவுகளே.....&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக மொழியில் நல்ல கட்டுரை என்றால் சீரியஸ் கட்டுரைகள்தான் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லிச் சொல்லி நிறையப் பேர் அதையே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் முழுதும் அலுவலக அயற்சியும் அழுத்தமும் நிறைந்து கிடைக்கையில் சில வலைப்பூக்களை எடுத்து வாசித்து விட்டு வாய் விட்டு சிரித்திருக்கிறேன். ஒரு நாளின் அத்தனை மன வலியையும் அந்த நகைச்சுவைகள் தூக்கி தூர எறிந்து உற்சாக மூட்டியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை என்பது ஒரு வரம். ஹாஸ்யம் என்பது புலன்களைப் பூக்கச் செய்யும் ஒரு வழிமுறை. அது மிகையாக சமகாலத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சில வலைப்பூக்களின் தலைப்புக்களை திரட்டிகளில் பார்த்து விட்டு வேகமாய் வலைப் பக்கங்களுக்குள் சென்று இருக்கிறேன். உள்ளே சென்றால் தலைப்போடு சம்பந்தப்படாத ஏதேதோ எழுதி விட்டு கடைசியில் ஒரு நையாண்டி செய்து முடித்திருப்பார்கள். இது மிகப்பெரிய மோசடி. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மனித மனம் போடும் ஒரு அருவறுப்பு மிகுந்த செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் சமீப காலமாக நல்ல கட்டுரைகளை மேலே காண முடிவதே இல்லை. தமிழில் ஆகச் சிறந்த கலை, இலக்கிய, வரலாற்று, நகைச்சுவை, செய்திகள் நிறைந்த பதிவுகளை எல்லாம் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு நேரே சென்று வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படியான ஆகச் சிறந்த வலைப்பதிவுகளை பின் தொடர்பவர்களும் மிகக் குறைவாக இருப்பது மிகவும் வேதனையான விடயம். பின் தொடர வேண்டுமெனில் அறிமுகம் வேண்டுமல்லவா...? திரட்டிகளில் முன்பக்கத்தில் வராமல் எப்படி அறிமுகமாக முடியும்....&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்களைப் போன்ற வலைப்பதிவுகளை அங்கும் இங்கும் தேடித் தேடி வாசிக்க வேண்டி இருக்கிறது. நிறையப் பேருக்கு இவை சென்று சேர்வதில்லையே என்ற வலியும் ஏற்படுகிறது. இவையெல்லாம் மாற வேண்டும் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி, சாதி, மதம், அரசியல் மற்றும் குழு மனப்பான்மைகள் அற்று ஒவ்வொரு பதிவுகளையும் நாம் வாசித்து நல்ல பதிவுகளுக்கு வாக்குகள் அளிக்கவும் செய்யத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தமிழ் வலைப்பதிவுகளின் தரத்தை உயர நாம் செய்யும் முயற்சி மட்டுமல்ல நமது மொழியின் நிலைப்பாட்டுத் தன்மைக்கும் எதிர்கால சந்ததியினர் வாசிக்கையில் அவர்களுக்கு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க நாம் செய்யும் உதவி. இது தனிமனித முயற்சியால் விளையும் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் ஒரு வாசகன் என்ற கண்ணோட்டத்தில் பதிய வேண்டியதை எனது கடமையாக நினைக்கிறேன்.  தமிழ்பதிவுலகம் அற்புதமான படைப்பாளிகளால் சூழப்பட்டது, அன்பான நண்பர்களால் ஆனது. இது ஒரு குடும்பமாய் தமிழர்களை இணைக்கும் ஒரு மிகப்பெரிய நவீனத்தின் வரம். இதனை சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனும் கடமையாகக் கொள்ளத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வாரமாக தமிழ் மணம் நிர்வாகத்தினர் நட்சத்திர பதிவர் என்ற மேடையினைக் கொடுத்து என்னுடைய கருத்துக்களை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்க்க உதவி செய்தனர். தமிழ் மணம் நிர்வாகத்திற்கு எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்....&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து எனது வலைப்பூவினை வாசித்து வரும் அன்பான நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துதான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் பெரிய போட்டிகளும், அரசியல் விளையாட்டுக்களும் நிறைந்த இந்த பதிவுலகத்தில் வசீகரிக்கும் எந்த விடயத்தையும் கையாளாமல், எந்த வித சந்தைப்படுத்துதலையும் கைக்கொள்ளாத, எனது ஆக்கங்களை தொடர்ந்து நீங்கள் வாசித்து வருவதே எனது அடுத்த அடுத்த கட்டுரைகளை பிறப்பிக்கும் மிகப்பெரிய காரணியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களோடு எனது அன்பான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.....!&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியங்களுடன்....&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-7689371256306516424?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/7689371256306516424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=7689371256306516424&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7689371256306516424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/7689371256306516424'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2012/01/blog-post.html' title='பதிவுலகம்.....?!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-K38blbAKWlI/TwBvJA_zXGI/AAAAAAAADbY/f6u7VqfBADM/s72-c/pic.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6022915708988310951</id><published>2011-12-31T13:30:00.005+05:30</published><updated>2011-12-31T17:17:52.112+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை சமூகம்'/><title type='text'>பாலகுமாரன் என்னுடைய குரு...!</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/--QqgEGKNVBo/Tv7CasMGKdI/AAAAAAAADbM/IwIEF73_FLE/s1600/bala_13.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/--QqgEGKNVBo/Tv7CasMGKdI/AAAAAAAADbM/IwIEF73_FLE/s400/bala_13.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692200742837168594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் தாக்கம் நிறைய இருக்கு நீங்க எழுதுற எழுத்துலன்னு நிறைய பேர் என்கிட்ட சொல்லவும் செய்றாங்க, மின்னஞ்சலும் செய்றாங்க. சில பேர் அதை மாத்திக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்றாங்க...!&lt;br /&gt;&lt;br /&gt;என்கிட்ட கண்டிப்பா பாலகுமாரனோட தாக்கம் இருக்கத்தாங்க செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்து அப்டீன்றதோட ஆழத்தை நான் ருசிச்சு அனுபவிச்சது பாலகுமாரன்கிட்டதான். இன்னிக்கு வரைக்கும் அந்த ருசி மாறாம இருக்கு. ஆனா தயவு செஞ்சு பாலா சார் மாதிரி எழுதுறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பேர் அப்டி தான் எழுதுறதா நம்புறாங்க, வெளிலயும் சொல்லிக்கிறாங்க. ஆனா பாலா சார் மாதிரி ஒருத்தர்தாங்க இருக்க முடியும். அவருடைய தாக்கத்தை நாம நம்ம வழியில நின்னு சொல்லும் போது சில வார்த்தையாடல்களில் நமக்குள் நம்முடைய ஆஸ்தான குரு வந்து உக்காந்துடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு அப்டீன்ற வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை மட்டும் இல்லை இருக்குற அத்தனை வார்த்தைகளிலும் ரொம்ப புனிதமானதும் வலிமையானதும் கூட. ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர் ஒரு தன்னிச்சையான நிகழ்வாத்தான் இருக்கிறார். வெளில இருந்து பேசுறவங்க வார்த்தைகளைப் பற்றி அவருக்கு கவலைகள் எதுவும் எப்போதும் இருப்பது இல்லை. இகழ்ச்சியோ, புகழ்ச்சியோ இந்த இரண்டின் பின்னணியில் என்ன இருக்கும் என்று ஒரு குருவிற்கு நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு என்ற வார்த்தைக்குக் மிகச் சரியான பொருள் வழிகாட்டி. ஆமாம் அவர் வழியைத்தான் காட்டுவார் நாம் தான் செல்ல வேண்டும். நம்மை கை பிடித்து அழைத்துச் சென்று இலக்கில் விட்டு விடுகிறேன் என்று சொல்பவன் மகா மோசடிக்காரன். இப்படி வழிகாட்டும் மனிதர்கள் தன்னைச் சார்ந்து இருப்பவர்களை மட்டுமில்ல சாரதவர்களையும் கூட மிக அதிகமாக நேசிக்கிறார்கள் ஆனால் அதை புறத்தில் காட்டுவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புறத்தில் நேசத்தையும், அன்பையும் எப்போதும் வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. செயல்களே அன்பை வெளிப்படுத்துகின்றன. வார்த்தைகள் பலன்களை எதிர்ப்பார்க்கின்றன. எந்த ஒரு குருவும் முகஸ்துதியை விரும்புவதில்லை மாறக தன் கருத்துக்களால் தாக்கப்பட்டு அவனின் அகத்தில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கவனிப்பு நேரடியான உடல் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் செயல்களை செம்மையாகச் செய்து அதன் விளைவுகளை அறிவுறுத்தலாக்கி உணர்வுகளாலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஒரு குரு அதைக் குறைவில்லாமல் செய்கிறார். என் பாலகுமாரன் எனக்கு மட்டுமல்ல லட்சக்கணக்கான அவரின் வாசகர்களுக்கு அதைச் இடை விடாது செய்து கொண்டே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் படிக்கும் போதே எனது வாழ்க்கைக்குள் வந்து விட்ட பாலகுமாரனின் எழுத்துக்கள், கல்லூரி முடித்து தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இங்கே தான் இந்த வழிகாட்டலை தனது எழுத்தின் மூலமாக புத்தி விழித்தெழும் தீட்சை எனக்குக் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரனை வாசிக்க, வாசிக்க வாழ்க்கைப் பற்றிய பார்வை மாறியது. உறவுகளைப் பற்றிய புரிதல் கூடியது.  கடவுளைப் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் ஒரு வெளிச்சம் விழுந்தது. காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் ஒரு தெளிவு பிறந்தது. காமத்துக்கும் இறைநிலைக்கும் இருக்கும் தொடர்புநிலை விளங்கி அதிலிருக்கும் புனிதம் விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் எனக்கு குரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அவருக்குத் தெரியாது. அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தது கிடையாது. இரண்டிற்கும் காலம் ஒரு அவசியத்தை வைக்கவில்லை. அவரைப் பார்க்கும் போது எழுத்தில் இருந்த படியே அவர் இருக்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கப் போவதுமில்லை. ஏனெனில் சூட்சுமமாய் கதைகளுக்குள்ளும், கட்டுரைகளுக்குள்ளும் நின்று ஓராயிரம் விசயத்தை பாலகுமாரன் பேசியிருக்கிறார். நேரே பார்க்கும் போது அப்படி பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மனிதர்களுக்குள் தோன்றத்தான் செய்யும் ஆனால், அது கொஞ்சம் அல்ல நிறையவே நாடகத்தனமானது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளைப் பற்றி பாலா கூறுகையில் புறம் நோக்கி கடவுளைத் தேடாதே உன்னை உற்று நோக்கு, நீ ஒரு சாட்சியாக நின்று கொள் என்று அடிக்கடி கூறுவார். காமத்தைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று சமகாலத்தில் வக்கிரத்தை தூண்டும் எழுத்துக்கள் மிகுந்து விட்டன. பாலகுமாரனும் காமம் பற்றி பேசுவார். அது சரியான புரிதலைப் புலன்களைக் கடந்து புத்திக்குள் கொண்டு சேர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;" அவளும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அன்பாய் அவனைத் தழுவினாள் " என்று எழுதிவிட்டு அடுத்த வரியில்  " போர் தொடங்கியது. படைகள் இலக்கினை நோக்கி முன்னேறின. தடுக்க முடியாமல் எதிரி படைகள் தடுமாறி நின்றன. தடுக்க, தடுக்க உக்கிரம் கூடிக் கொண்டே சென்றது. எதிரிப் படை இப்போது விட்டுக் கொடுக்க ஆரம்பித்தது....விட்டுக் கொடுத்தலின் உற்சாகத்தில் இன்னும் வேகமாய் முன்னேறியது படை...&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டை கொத்தளங்களை எல்லாம் அடித்து நொறுக்கி உச்ச வெறியில் நகர்வு இருந்தது." என்று கூறிவிட்டு இடையில் ஒரு வரியில் " அவன் அன்பாய் அவளின் இடுப்பு வளைத்து காது மடல்களில் முத்தமிட்டான் " என்று கூறிவிட்டு மீண்டும் " போர் உச்சக்கட்டத்தை தொட்டிருந்தது எதிரிப்படை சரணாகதியில் தன்னை முழுதுமாய் இழந்திருக்க, சரணாகதிக்கு முன்னால் வெற்றி பெற இலக்கின்றி சரணாகதியை அனுமதித்து வெற்றி தோல்வியற்ற ஒரு பூரண அமைதி அங்கே நிலவியது. "&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காமத்தை வகைப்படுத்தி நளினமாய், நாகரீகமாய் எழுத எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலகுமாரன். தியானத்தின் உச்சத்தில் என்ன நிகழும், தியானத்தின் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொக்கட்டான் போட்டு இழுத்துச் சென்றிருக்கிறது அவரின் எழுத்து. அப்பப்பா... ஒரு எழுத்துக்கு இவ்வளவு சக்தியா என்று இறுக அவரை மானசீகமாய் அணைத்து கால்களில் விழுந்து கண்ணீர் சொரிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பை எழுதுகிறேன் என்று கபரே டான்ஸ் ஆடும் எழுத்துக்களை விட்டு தூரமாய் என்னை விலக வைத்தவர் பாலகுமாரன். இளைஞர்களின் வாழ்க்கையில் அவரின் எழுத்துக்கள் ஒரு வழிகாட்டும் சுடர். ஒரு இளைஞன் தன்னுடைய பதின்மத்தில் எல்லாவிதமான தடுமாற்றங்களையும், பதின்மத்தின் ஈர்ப்புகளையும் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும் தருணத்தில் பாலகுமாரனின் எழுத்துக்கள் சர்வ நிச்சயமாய் வழிகாட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலா எழுதுவது போல தன் சொந்த வாழ்க்கையில் இருப்பது இல்லை மேலும் நான் அவர் வீட்டுக்குச் சென்றேன் அவர் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் அபத்தத்தின் உச்சமாய் அவர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார் அதனால் பிடிக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அது அவர் வாழ்க்கை, அவருக்கு ஏற்றார்போல் அவர்  பார்த்துக் கொள்வார். அவர் எழுத்து நம்மை ஏதாவது செய்கிறதாம் நமக்கு உதவுகிறதா என்று பார்க்காமல் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து வைத்து ஏன் நாம் பார்க்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வங்கள் எல்லாம் இரண்டு திருமணம் செய்து கொள்ள அனுமதித்து அதைப் போற்றி வணங்கும் ஒரு தேசத்தின் மக்களும், மனிதர்களும் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டிப் பார்ப்பது மிகப்பெரிய புரிதலின்மை.&lt;br /&gt;&lt;br /&gt;பாலா எனக்கு குருவாய் இருக்கிறார் என்று அவரின் உருவத்தை அடையாளமாக நான் காட்டினாலும், பாலாவின் எழுத்து எனக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. அந்த எழுத்து என்னும் சூட்சுமம் எனது குரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் சூட்சுமமாய் பாலாவை நான் நேசிப்பதும், அவர் தன் எழுத்தின் மூலம் என்னை ஆசிர்வதிப்பதுமென ஒரு ஏகலைவனாய் தூரமாய் ஒதுங்கி நின்று நான் இடைவிடாது கற்றுக் கொண்டிருக்கிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு மானசீக நேசிப்பு...! புரிதல் நிறைந்த புலன்களைக் கடந்த உறவு...!&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரன் ஐயாவுக்கு  எனது நமஸ்காரங்கள்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவா. S&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2552501695591585994-6022915708988310951?l=maruthupaandi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthupaandi.blogspot.com/feeds/6022915708988310951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2552501695591585994&amp;postID=6022915708988310951&amp;isPopup=true' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6022915708988310951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2552501695591585994/posts/default/6022915708988310951'/><link rel='alternate' type='text/html' href='http://maruthupaandi.blogspot.com/2011/12/blog-post_31.html' title='பாலகுமாரன் என்னுடைய குரு...!'/><author><name>dheva</name><uri>http://www.blogger.com/profile/12534706626410612873</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://4.bp.blogspot.com/_YqTFUz-3CS8/TAnuUPLAj_I/AAAAAAAAAsw/P1mHyOkuGQI/S220/P04-06-10_13.55%5B01%5D.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/--QqgEGKNVBo/Tv7CasMGKdI/AAAAAAAADbM/IwIEF73_FLE/s72-c/bala_13.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-3528716789214435255</id><published>2011-12-30T15:12:00.005+05:30</published><updated>2011-12-30T15:37:41.221+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை சமூகம்'/><title type='text'>எழுத்து என்னும் வரம்...!</title><content type='html'>&lt;span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xSYkE_89GWA/Tv2KGOKXrTI/AAAAAAAADbA/JaeXqIVdy8I/s1600/asemic_calligraphy1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://3.bp.blogspot.com/-xSYkE_89GWA/Tv2KGOKXrTI/AAAAAAAADbA/JaeXqIVdy8I/s400/asemic_calligraphy1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691857343551614258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசல் புரசலா எடிட்டரும், சக அலுவலக நண்பர்களும் சொல்லிகிட்டே இருந்ததை இன்னிக்கு வார இதழின் ஆசிரியரே நேரே கூப்பிட்டு சொல்லிட்டாரு...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கதிரவன் நீங்க? நான் நேரா சொல்லக் கூடாதுன்னு பல தடவை நம்ம பத்திரிக்கையில வேலை பாக்குற பல பேர் மூலமா சொல்லிப் பாத்துட்டேன். மறுபடி, மறுபடி நீங்க கட்டுரை எழுதுற ஸ்டைலையும் கதையோட கருக்களையும் ஜனரஞ்சகமா மாத்தவே மட்டேன்னு பிடிவாதமா நிக்குறீங்க? உங்க ஆன்மீக கட்டுரைகளோட வசீகரத்துலதான் உங்கள நம்ம வார இதழ்க்கு எழுத கூப்பிட்டேன்... சரிதான்...! தொடர் முடிஞ்சதுக்கு அப்புறம் கொஞ்சம் அப்டி, இப்டி எழுதினாதானே கதிரவன் மக்கள் ரசிப்பாங்க....&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையும் எதார்த்தமும் யாருக்கும் பிடிக்காது கதிரவன். ஒரு மாதிரி கிளர்ச்சிய உண்டு பண்ற மாதிரி, கற்பனையை தூண்டி விட்டு அந்த கற்பனையில மக்கள் தன்னைக் கரைச்சுக்கிர மாதிரியான எழுத்துக்கள்தான் இப்போ விக்கிது. மக்களை மயக்க நிலையிலயே வச்சிக்கிடணும்...! சும்மா கடவுள், ஆன்மா, ஆன்மீகம், சத்தியம்னு நாம பேசிகிட்டே இருந்தா உங்களுக்கு எப்டியோ தெரியலை...நான் பிரஸை மூடிட்டுப் போயி திருவண்ணாமலையில உக்காந்துட வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடி, உதை, அரிவாள் வெட்டு, பின்னணி என்ன?னு ஒரு கேள்விக்குறிய தூக்கிப் போட்டுட்டு, அது அந்த அமைச்சரோட வேலை, இந்த அமைச்சரோட வைப்பாட்டியோட தம்பியோட வேலைன்னு அடிச்சு புடிச்சு எழுதணும்...! கொலை ஏன் பண்றான்? கொலை பண்ணாம ஒரு மனுசனா எப்டி வாழ்றதுன்னு நீங்க எழுதி முடிக்கிறீங்க....4 பேர் அதை படிப்பான் 400 பேர் அதைக் கிழிச்சு மிச்சரோ இல்லை பக்காடோவோ கட்டி விக்கப் போறான்...&lt;br /&gt;&lt;br /&gt;தீர்வுகள் இந்த சமுதாயத்துக்கு தேவையில்ல கதிரவன்....சம்பவங்கள் தான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால எல்லா மாதிரியும் எழுத முடியும்னு எனக்குத் தெரியும்.....ப்ளீஸ் கதிரவன்
