
நினைவது தப்பி....செயலது நின்று
சுவாசிக்க மறந்து.....உறவுகள் கலைந்து..
உண்மைக்குள் நான் போவேனோ....?
இல்லை...மனதினில் மயங்கி..
உடலுக்குள் அலைந்து...
மாயையில் விழுந்து...மீண்டும்
உயிராய் ஜனிப்பேனோ?
நிலையது மாறி .. நிலையது மாறி...
பொய்யாய் வேடங்கள் புரிவேனோ....
இல்லை...சத்தியம் நோக்கிய பயணத்தில்...
என்னை நானே கரைப்பேனோ
விலை அது விலை அது இல்லா...
சூன்யத்தில்...சுகமாய்...ஒருமித்து இருப்பேனோ?
இல்லை....உடலாய் தனி என தனி என...
பிரிந்து நரக நெருப்பில் வீழ்வேனோ?
சிலை அது....மரமது... மலையது...
என்று இறையை மட்டுப்படுத்தி அறிவேனோ?
இல்லை....அது இது என்றுணரா...
ஏக நித்தியானய் உணர்ந்து மறுமையில் இன்பம் துய்பேனோ?
சத்தியம் சொல்கிற... நித்ய இறைவா
என்னை பொய்யில் இருந்து காப்பாயோ..
இல்லை இந்த மெய்யினில் இருந்து...
கேள்விகள் கேட்டு...உய்யவேண்டும் என்பாயோ?
ஆரம்பிக்கத் தெரிந்த இந்தக் கவிதையை முடிக்க எனக்கு இதை முடிக்கத் தெரிவதில்லை எனபதை விட முடிக்க ஏக இறை அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை........ நிலையில்லாத இந்த வாழ்வின் நிகழ்வுகள் ஏதோ ஒரு தாக்கத்தைக் கொடுக்க அந்த வீரியத்தின் வீச்சில் வந்து விழுந்த வார்த்தைகள் தான் இவை. எனக்கும் இந்தக் கவிதைக்கும் எந்த தொடர்பு இல்லை... அருகதையும் இல்லை...
இது ஜென்மாந்திரப் பயணம்.....
தேவா. S
சுவாசிக்க மறந்து.....உறவுகள் கலைந்து..
உண்மைக்குள் நான் போவேனோ....?
இல்லை...மனதினில் மயங்கி..
உடலுக்குள் அலைந்து...
மாயையில் விழுந்து...மீண்டும்
உயிராய் ஜனிப்பேனோ?
நிலையது மாறி .. நிலையது மாறி...
பொய்யாய் வேடங்கள் புரிவேனோ....
இல்லை...சத்தியம் நோக்கிய பயணத்தில்...
என்னை நானே கரைப்பேனோ
விலை அது விலை அது இல்லா...
சூன்யத்தில்...சுகமாய்...ஒருமித்து இருப்பேனோ?
இல்லை....உடலாய் தனி என தனி என...
பிரிந்து நரக நெருப்பில் வீழ்வேனோ?
சிலை அது....மரமது... மலையது...
என்று இறையை மட்டுப்படுத்தி அறிவேனோ?
இல்லை....அது இது என்றுணரா...
ஏக நித்தியானய் உணர்ந்து மறுமையில் இன்பம் துய்பேனோ?
சத்தியம் சொல்கிற... நித்ய இறைவா
என்னை பொய்யில் இருந்து காப்பாயோ..
இல்லை இந்த மெய்யினில் இருந்து...
கேள்விகள் கேட்டு...உய்யவேண்டும் என்பாயோ?
ஆரம்பிக்கத் தெரிந்த இந்தக் கவிதையை முடிக்க எனக்கு இதை முடிக்கத் தெரிவதில்லை எனபதை விட முடிக்க ஏக இறை அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை........ நிலையில்லாத இந்த வாழ்வின் நிகழ்வுகள் ஏதோ ஒரு தாக்கத்தைக் கொடுக்க அந்த வீரியத்தின் வீச்சில் வந்து விழுந்த வார்த்தைகள் தான் இவை. எனக்கும் இந்தக் கவிதைக்கும் எந்த தொடர்பு இல்லை... அருகதையும் இல்லை...
இது ஜென்மாந்திரப் பயணம்.....
தேவா. S
Comments