Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை சமூகம்

யாரோ....யார் யாரோ...?!

நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது. நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம்  நீதான் மாடு எ...

சப்தத்தின் மெளனம்...!

மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே  மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து  என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்.... ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....? வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு...

திருத்தப்பட்ட பிழைகள்...!

பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும்  தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....? நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல... நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எழுதும் போ...

வாழ்வே தவம்....!

சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த  மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு பிடித்து இழுக்கும் கருவேலஞ் செடிகளுக்கு நடுவே ஊர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, மூன்று குச்சிகளை ஊன்றி வைத்து தடித்த விறகினை மட்டையாக்கி நெருஞ்சி முள் குத்த ஓடி விளையாடிய சலசலக்கும் அந்தப் பனங்காடு, இன்னமும் உச்சி பொழுதினில் ஆங்காங்கே நிழலை விரித்து வைத்தபடி வெறுங்காலோடு சூடு பொறுக்க முடியாமல் வரும் மனிதர்களை நேசமுடன் எதிர் நோக்கும் கருவேல மரங்கள்........ பொட்டல் காட்டில் காய்ந்து போன புல்லினை இழுக்க முடியாமல் ஆங்காங்கே இழுத்து பசி தீர்த்துக் கொள்ள முயலும் ஆடு, மாடுகள், அதை இன்னமும் மேய்த்துக் கொண்டிருக்கும் அரைஞான் கொடியால் டவுசரை இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பையன்கள், பாவாடையை வயிற்றுக்கு மேல் இழுத்து கட்டி சுருங்கிப் போன மேல் சட்டையை மறைக்க முயலும் சிறுமிகள்...., தொள தொள முண்டா பனியனோடு மடித்துக் கட்டிய லுங்கியோடு கண்கள் சுறுக்கி எதிரே வருபவர்களை வெள்ளந்தியாய் ...

இப்படிக்கு... வாசகன்...!

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது எனக்கு. வாரமலரில் அப்போது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அப்போது என்று நான் குறிப்பிட்டுச் செல்வது 1987 அல்லது 1988 ஆயிருக்கும் என்று நினைக்கிறேன். தினமலர் செய்தித்தாளை என் எதிர் வீட்டில்தான் வாங்குவார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று மட்டும் அவர்கள் வீட்டில் என்னைப் போன்ற அரை டிரவுசர்கள் விடுமுறை நாளின் எல்லா அவரச(!!!!!) வேலைகளையும் தெருவிலேயே விட்டு விட்டு போய் வாரமலரைப் படிக்க க்யூவில் நிற...

புத்தாண்டு....!

நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர் 31ன எல்லோரும் கடந்து போக நினைக்கிறோம். நியூ இயர்க்கு என்ன ப்ளான்னு என்கிட்ட எப்பவும் நண்பர்கள் கேட்கும் போதும் எல்லாம் ஒரு புன்னகையோட  நான் கடந்து போயிடுறேன். ஏன்னா என்கிட்ட எப்பவுமே எதுக்குமே ப்ளான்ஸ் இருந்ததே கிடையாது. சரியோ தவறோ  கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையோட ஆதாரமா இருந்து இந்த வாழ்க்கையோட அர்த்தத்தை சூசகமா தெரிவிக்கிறதாதான் நான் கருதுறேன். சுகமோ, துக்கமோ பிடிச்சவங்க பக்கத்துல இருக்கணும். மனசுக்குப் பிடிச்சவங்க இல்லாத சொர்க்கமும் நரகம்தான். மனசுக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா நரகமும் நமக்குச் சொர்க்கம்தான். எல்லா புது வருசத்தையும் விட நான் சென்னையில வேலை தேடிக்கிட்டு இருந்த  1998ம் வருசம் பொறந்த அந்த வருசத்தை மறக்கவே முடியாது. யாருமே இல்லாம தனியா மொட்டை மாடியில பசியோட படுத்துக்கிட்டு நட்சத்திரங்களைப் வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை சுத்தி சென்னை அல்லோ...

சிவகங்கைச் சீமை....!

சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றினை இதுவரையில் ஜனரஞ்சகமாக வெகுஜனம் அறிந்து கொள்ளும் வகையில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்களும், ஒரு சில மிக சுவாரஸ்யமற்ற நடையில் எழுதப்பட்ட புதினங்களும், கார்லே, வேல்ஸ் போன்ற வெள்ளைக்காரர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் சில விபரங்களையும் தாண்டி தொடர்ச்சியான ஒரு நீண்ட நெடிய புதினம் தமிழர்களுக்கு தருவிக்கப்படவே இல்லை. சோழ தேசத்தில் வளர்ந்தவெனினும் அடிப்படையில் நான் பாண்டிய தேசத்தவன். காளையார்கோயிலிலும் மறவமங்கலத்திலும் இன்னபிற சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதிகளுக்குள் சுற்றி திரிந்திருக்கிறேன். கருவேல மரங்களுக்கு நடுவே படுத்துக்கிடக்கும் பிரம்மாண்டமான கண்மாய்களில் கண்கள் சிவக்க குளித்து விளையாடி இருக்கிறேன்... ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் இருக்கும் கணக்கில்லாத ஊருணிகளும், காரைக்கற்களால் கட்டப்பட்டு இடிந்து மண்மேடாய்க் கிடக்கும் கற்குவியல்களுக்கு நடுவே ஒளிந்து பிடித்து விளையாடிய போது இவைகளுக்குளெல்லாம் சிவகங்கைச் சீமையின் வீரமிகு வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் அப்போது கருதியதில்லை. காளை...

பூங்காற்று புதிரானது...!

மூன்றாம் பிறை படத்தை எத்தனையாவது தடவை பார்த்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த முறை பார்த்து முடித்த பின்புதான் எனக்கு அந்த விசயம் விளங்கியது. ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்த போது எழுந்து ஓடிய  அதே பரவசத்திற்குள் விழுந்திருந்தேன். அந்தப் படம் பார்த்து இதற்கு முன்பெல்லாம்  முடிக்கும் போது அந்தப் படம் அதோடு முடிந்து போய்விடும். இப்போது மூன்றாம் பிறை பார்த்து முடித்த போதுதான் நிஜத்தில் அந்தப்படம் ஆரம்பிப்பது போலத் தோன்றியது எனக்கு. என்ன யோசித்திருப்பார் இந்த பாலுமகேந்திரா அல்லது என்ன சொல்ல முயன்றிருப்பார் என்று லேசாக எனக்குப் பிடிபட ஒரு வழுக்கு நிலத்தில் நிற்க முடியாமல் சறுக்கிச் செல்வதைப் போல எங்கோ இழுத்துச் சென்றது அந்த உணர்வுகள் என்னை. இப்படியெல்லாம் ஒரு பெண்ணிடம் ஆத்மார்த்தமாய் இருந்து விட்டு  திடீரென்று அவளுக்கு குணமாகிவிட்டது என்று இவனை மறந்து போய் யார் என்றே தெரியாமல் போய்விட்டால் என்ன ஆவான் அந்த மனிதன்? அதுவும் காதலை காதலாகவே நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருந்த ஒரு காதலன் அவன். அவன் மகளின் மீது வாஞ்சையோடு இருக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை அல...

வண்ணக் கனவுகள்...!

எப்போதெல்லாம் உடம்பு கொஞ்சம் எடை கூடுகிறதோ அப்போதெல்லாம் உடனே உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். தினசரி ஓடுவது வழக்கம்தான் என்றாலும் டேஸ்ட் டங்க் எனப்படும் சுவைக்கு உண்ணும் பழக்கம் மட்டும் என்னை விட்டு போவேனா என்கிறது. ஒரு டின் முறுக்கை என் முன்னால் வைத்தாலும் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் முடித்து விடுவேன். முறுக்கு என்று சொன்ன உடனேயே தீபாவளி நினைவுக்கு வருகிறது எனக்கு. தீபாவளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே முறுக்கு சுடுவதற்கான எல்லா வேலைகளும் வீட்டில் ஆரம்பித்திருக்கும். மாவு அரைத்து வருவது, எண்ணெய் வாங்கி வைப்பது என்று அம்மா பம்பரமாய் இயங்க ஆரம்பித்திருப்பாள். அம்மாவுக்குத் தெரியும் எனக்கும் என் தம்பிகளுக்கும் சும்மா ஐம்பது முறுக்கோ அல்லது நூறு முறுக்கோ சுட்டால் பத்தாது என்று....! மளிகைக்கடையில் இருந்து பிரிட்டானியா பிஸ்கெட் காலி டின் ஆறு ஏழு வாங்கி வந்து உள்ளே பேப்பர் போட்டு சுட்ட முறுக்கை எல்லாம் அதில் ஸ்டோர் செய்து வைத்து விடுவோம். முறுக்கு, சீடை, லட்டு, சமோசோ, ரவா உருண்டை, அதிரசம் எல்லாம் தீபாவளி முடிந்தும் பல மாதங்கள் வீட்டில் இருக்கும். டிவி பார்க்கும் போதும், புத்...

பிரதோஷம்...!

எப்போது இருந்து பிரதோஷம் அன்று விரதம் இருக்கத் தொடங்கினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. சிவபக்தன் என்று என்னை சொல்லிக் கொள்வதிலும் சிவபூஜை செய்வதிலும் எனக்கு ஏன் அதிக ஆர்வம் உண்டானது என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. சிவன் என்று சொன்ன உடனேயே எனக்குள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போகும். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் மனது ஒடுங்கிக் கொள்ளும், நெஞ்சு அடைக்கும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் மட மடவென்று உடையும். அப்படி உடைந்து எல்லாம் நொறுங்கி விழுந்த பின்பு.... என்னப்பன் அல்லவா... என் தாயுமல்லவா... பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா... என்று உள்ளுக்குள் புலம்பத் தொடங்கி விடுவேன். புலம்பல் நின்று போன பின்பு நினைக்க எதுவுமின்றி ஒரு புள்ளியில் மனம் ஸ்தம்பித்து நிற்க பீறிட்டு அழுகை வரும். அழுகையை கட்டுப்படுத்தாமல் கேவிக் கேவி அழுதிருக்கிறேன். அழுகையோடு சேர்ந்து ஏன் இப்டி எல்லாம்? ஏன்? ஏன்? ஏன் என்று ஒரு கேள்வி அடி நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும். எதற்காக ஏன் என்று கேட்கிறேன் என்றும் எனக்குப் பிடிபடாது, ஆனால் மானசீகமாய் சிவனை ஒரு உருவாய் நினைத்து பாதங்களைப் பிடித்து ஏன்...? ஏன்...