Skip to main content

யாரோ....யார் யாரோ...?!


நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.

வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது.

நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம்  நீதான் மாடு என்று சொன்னால்தான் புரியுமா? உன்னை பொறுத்தவரை எப்படி நீ இருக்கிறாயோ அதே போல நானும் இருக்கிறேன். நீயும் காலத்தை கழித்து மரணத்தை முத்தமிடுவாய் நானும் அப்படியே. மாட்டின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்ட போது யாரோவாக நின்ற அந்க்ட மாடு என்னை நீ யாரோ என்று சொல்வது போல மெல்ல நகரத் தொடஙியது.

நானும் மெல்ல அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

யாரோவாக வாழ்வெதென்பது
ஆரம்பத்தில் இருட்டில் 
நடப்பது போலத்தான்
கொஞ்சம் கலக்கமாயிருக்கும்
வெளிச்சம் பயின்ற விழிகள்
இருள் கண்டு மிரளும்
விழிகள் என்பதே காட்சிகளைக்
காணும் கருவிதானே..
இருளில் எதற்கு விழிகள்
என்ற உண்மை செவுட்டில் அறையும் போது
இருள் நிஜமான 
வெளிச்சமாய் மாறும்...

இருள்தான் சுதந்திரம்
கருமைதான் பொருளற்றது
யாதுமற்றதுதான்
யாரோவாக ஆகமுடியும்
சிவனுக்கு கருப்பு பிடிக்குமாம் என்று சொல்லும் போதே சிவன் வேறு கருப்பு வேறு என்றுதானே பொருள்வருகிறது. சிவனே கருப்பு, கருப்பே சிவன். ஆழ்ந்த பொருள் கொண்ட இல்லாமைதான் அவன். இல்லாமல் இருப்பவன். 

நானும் கூட யாரோதான்....இல்லாமையில் வீழ்ந்தவன் என்று எழுதலாம் இல்லை விழுந்தவன் என்றும் கொள்ளலாம். விழுவதை விட வீழ்வதுதான் சிறப்பாய் எனக்கு படுகிறது. விழும் போது அங்கே இன்னும் சக்தி மிஞ்சி நிற்கிறது...வீழும் போது மொத்தமாய் எல்லாம் அழிந்தொழிந்து போகிறது.

யாரோவானவனுக்கு எழுதுவது என்னும் தேவை இருக்கிறதா என்ன? அப்படி ஒன்றும் கிடையாது... முன்பே சொன்னது போல இது நடந்து பழகிய வீதி...ஆடிய காலும், பாடிய வாயும் மட்டும்தான் சும்மா இருக்காதா என்ன...

கையும் கூடத்தான்....




-தேவா சுப்பையா...





Comments

அருமை அண்ணா...
அருமையான எழுத்து...
mohan baroda said…
Today I read some of the posts in your blog. I came to this blog through subadhraspeaks. While going through some of the posts randomly, I came across a person named Karvannan director of tamil cinema in one of your posts. This Karvannan has studied with me rather I studied with him at Vivekananda college during 1976-77 and after that he joined Nandanam Arts College to study degree course in Public Relations.
Your posts are very nice to read and quite enjoyable.
I would like to have a word with you. Kindly let me know your mobile number so as to enable me to talk to you through whatsapp.
My mobile number is : 9724339797.

Mohan Baroda

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த