என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காதீர்கள்... உங்களுக்கான பதில்களை கொடுக்கிறேன் என்று என்னால் நடிக்க முடியாது ஏனென்றால் உங்கள் கேள்விகள் எல்லாம் பதில்கள் என்ற பொய்யை பெற எழுப்பப்பட்ட பொய்கள் என்று நானறிவேன்..! நான் யாரென்று... இனியும் என்னிடம் கேட்காதீர்கள் ஒற்றை வார்த்தையில் நான் உங்களுக்கான... பதிலானவன் அல்ல...! என் கனவுகளின் எல்லை எதுவென்று கணக்குக் கூட்டி கூட்டி நீங்கள் தொலைந்து போகாதீர்கள்; நான் எல்லைகளுக்குள் ஏதோ ஒரு திசையை நோக்கி எப்போதும் பயணிப்பவன் அல்ல..! என் சித்தாந்த வேர்களை தேடிப் பிடித்து.. என்னைக் கணிக்க... கனவிலும் முயன்று தோற்காதீர்; நான் சித்தாந்தங்களை எல்லாம் செதுக்கி எறிந்து வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்! என் காதல்கள் எல்லாம் யாருக்காயிருக்கும் என்று உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு பொழுதுகளை வீணடிக்காதீர்கள்; நான் தேகம் கடந்த வெளியில் தேவைகளற்ற காதலில் லயித்துக் கிடப்பவன்...! என் இறுதி என்னவாயிருக்கும் என்று கூடிக் கூடி பேசி ஓய்ந்து போகாதீர்கள் நான் நெருப்பில் சுடப்பட்டாலும் மண்ணில் புதைபட்டாலும் மரித்துப் போய்விடுபவன் அல்ல...! நெருப்புக்குள் நான் குளிரானவன் குளிருக்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....