Skip to main content

நான் அவன் இல்லை....!





















என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

என்றெல்லாம் சொன்னால்...
மீண்டும் என்னிடமே நீங்கள்
கேள்விகள் கேட்பீர்கள்...

அதனால்...

என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!


தேவா. S


Comments

நல்லாவே புரியுது... :)))
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

EXCELLENT!
நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

திமிர்ர்ர்ர்ரூ :)
என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

Beyond Imagination..
என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

அதுவும் இல்ல.. இதுவும் இல்லன்னா எப்படி?
என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

‘காதல்களில்’னு இருக்கனுமோ? :)
என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

சபாஷ்!
நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

அருமை..
முடிவு செம :))

சரி உங்க கிட்ட ஒரு கேள்வி.. உங்களப் பாத்து யாரு என்ன கேள்வி கேட்டா?
எல்லாத்தையும் விட சூப்பர்.. அந்தப் படம் தான் :))))
/என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம் முடியுது?

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...