Skip to main content

நான் அவன் இல்லை....!





















என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

என்றெல்லாம் சொன்னால்...
மீண்டும் என்னிடமே நீங்கள்
கேள்விகள் கேட்பீர்கள்...

அதனால்...

என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!


தேவா. S


Comments

நல்லாவே புரியுது... :)))
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

EXCELLENT!
நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

திமிர்ர்ர்ர்ரூ :)
என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

Beyond Imagination..
என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

அதுவும் இல்ல.. இதுவும் இல்லன்னா எப்படி?
என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

‘காதல்களில்’னு இருக்கனுமோ? :)
என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

சபாஷ்!
நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

அருமை..
முடிவு செம :))

சரி உங்க கிட்ட ஒரு கேள்வி.. உங்களப் பாத்து யாரு என்ன கேள்வி கேட்டா?
எல்லாத்தையும் விட சூப்பர்.. அந்தப் படம் தான் :))))
/என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம் முடியுது?

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...