Skip to main content

நான் அவன் இல்லை....!





















என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

என்றெல்லாம் சொன்னால்...
மீண்டும் என்னிடமே நீங்கள்
கேள்விகள் கேட்பீர்கள்...

அதனால்...

என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!


தேவா. S


Comments

நல்லாவே புரியுது... :)))
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!

EXCELLENT!
நான் யாரென்று...
இனியும் என்னிடம் கேட்காதீர்கள்
ஒற்றை வார்த்தையில்
நான் உங்களுக்கான...
பதிலானவன் அல்ல...!

திமிர்ர்ர்ர்ரூ :)
என் கனவுகளின்
எல்லை எதுவென்று
கணக்குக் கூட்டி கூட்டி
நீங்கள் தொலைந்து போகாதீர்கள்;
நான் எல்லைகளுக்குள்
ஏதோ ஒரு திசையை நோக்கி
எப்போதும் பயணிப்பவன் அல்ல..!

Beyond Imagination..
என் சித்தாந்த வேர்களை
தேடிப் பிடித்து..
என்னைக் கணிக்க...
கனவிலும் முயன்று தோற்காதீர்;
நான் சித்தாந்தங்களை எல்லாம்
செதுக்கி எறிந்து
வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்!

அதுவும் இல்ல.. இதுவும் இல்லன்னா எப்படி?
என் காதல்கள் எல்லாம்
யாருக்காயிருக்கும் என்று
உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு
பொழுதுகளை வீணடிக்காதீர்கள்;
நான் தேகம் கடந்த வெளியில்
தேவைகளற்ற காதலில்
லயித்துக் கிடப்பவன்...!

‘காதல்களில்’னு இருக்கனுமோ? :)
என் இறுதி என்னவாயிருக்கும்
என்று கூடிக் கூடி பேசி
ஓய்ந்து போகாதீர்கள்
நான் நெருப்பில் சுடப்பட்டாலும்
மண்ணில் புதைபட்டாலும்
மரித்துப் போய்விடுபவன் அல்ல...!

சபாஷ்!
நெருப்புக்குள் நான் குளிரானவன்
குளிருக்குள் சூடானவன்
தேனினுள் கிடக்கும் கசப்பானவன்
நீரற்ற ஒரு பாலையின்
வற்றிப் போன சுனையின் தடமானவன்
எல்லாவற்றுக்கும் இடமானவன்,
பிரபஞ்ச வெளியினில் வெளிப்படாத
புள்ளியில் நின்று வெளிப்பட்ட
யாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
நிறையானவன்...;

அருமை..
முடிவு செம :))

சரி உங்க கிட்ட ஒரு கேள்வி.. உங்களப் பாத்து யாரு என்ன கேள்வி கேட்டா?
எல்லாத்தையும் விட சூப்பர்.. அந்தப் படம் தான் :))))
/என்னிடம் கேள்விகள்
எதுவும் கேட்காதீர்கள்...
உங்களுக்கான பதில்களை
கொடுக்கிறேன் என்று
என்னால் நடிக்க முடியாது
ஏனென்றால்
உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யை
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கிறேன்.எப்பிடி உங்களால இப்பிடியெல்லாம் முடியுது?

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...