அதிர்வு I
உடையாரை தொட்டு வாசித்து அதில் நுழைந்ததற்கு பின் மனதினுள் சென்று உட்கார்ந்து கொண்ட சொல் " கற்றளி ".
தஞ்சாவூருக்கு அடிக்கடி செல்லும் நான் காளையார்கோவிலுக்கும் செல்வேன். காளையார்கோவில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. அந்த கோவிலின் ராஜ கோபுரம் கூட மிகப்பெரியதாய்தான் இருக்கும். கோபுரத்தின் கீழ் நின்று அண்ணாந்து பார்க்கும் போது மேகங்களின் நகர்வில் கோபுரம் கீழே விழுவது போல ஒரு பிரமை தோன்றும்.
காளையார் கோவிலுனுள் அங்குலம் அங்குலமாக சுற்றியிருக்கிறேன். தூண் தூணாக, சுவர் சுவராக தடவித் தடவி அந்தக் கோவிலின் பழைமை நிறைந்த வாசனைகளை என்னுள் ஆழ சுவாசித்து செலுத்தியபடி மருதிருவர் சிலைகளையும் வியந்து போய் பார்த்திருக்கிறேன். அவர்களின் புஜத்தில் அணியக்கூடிய தண்டை போன்ற இரும்பாலான ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.
அதன் தடிமனும் அகலமும் பார்த்து அதை எடையை அனுமானத்தில் கொண்டு வந்து நிறுத்தி இத்தனை உறுதியான வலுவான ஒரு அணிகலனைத் தம்மின் புஜத்தில் அணிந்திருப்பார்களெனில் அவர்களின் உடல் உறுதி எப்படி இருந்திருக்கும் என்று வியந்திருக்கிறேன்.
...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....