Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம் உலகம்

தக்க்ஷின் குட் ஈவினிங் - 3

இதுவரை ஒன்று இரண்டு இனி... 12 வருடம் என்பது ஒரு சிறு காலச் சுழற்சி. அந்த சுழற்சிக்குள் எதுவுமே நடந்து விடாதது மாதிரி தோன்றினாலும் காலம் மிகையானவற்றை விழுங்கியபடியே வேகமாய் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பனைகளும் கனவுகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில் இன்பம் துய்க்க வேண்டிய ஆசையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுக்காமல் காலம் கொடுக்கும் பரிசுதான் மரணம். ஆனந்த்குமார் சார் இறந்து போய்விட்டார் என்பதை கேட்ட நான் நிஜமாய் ஸ்தம்பித்துப் போனேன். இதே போலத்தான் என்னுடைய அப்பா எப்போதும் துணி தைக்க என்னை அழைத்துச் செல்லும் பியூட்டி டெய்லர்ஸ்க்கு நான் கடந்த முறை சென்ற போது எப்போதும் அப்பாவுக்கு அளவெடுக்கும் சிவதாசன் சார் போட்டோவிற்கு மாலையிடப்பட்டிருந்தது. அவரின் மகன்கள் இப்போது அந்த தொழிலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னை கடைக்கு சிறுவயதில் அழைத்துச் சென்று ஒரு அறிமுகத்தைக் கொடுத்த என் அப்பாவும் இன்று இல்லை அப்பாவுக்கு துணி தைத்த சிவதாசன் சாரும் இல்லை. எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மாறாமல் ஒரு பேரியக்கம் மட்டும் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன தேவ்......

தக்க்ஷின் குட் ஈவினிங்...!

தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ..... தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும். என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற  பாரதத்து கிர...

பந்தயக் குதிரை...!

அது நடந்து கொண்டிருக்கிறது இப்போது. தொகுத்தெழுதிய உணர்வுகளை ஒரு புத்தக வடிவில் காணும் ஒரு பெருங்காதலில் வாரியர் என்னும் வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளை வகை பிரித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே தனிமையில் என்னை வாழ்க்கை விட்டதில்லை. இப்போதும் அப்படித்தான் நண்பர்களின் உதவியோடு கட்டுரைகள் தொகுப்பு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. 2014ஆம் வருடத்தின் மத்தியில் இந்த உழைப்பு புத்தகமாய் மாறலாம். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த 2010 ஆரம்ப நாட்களில் பின்னாளில் புத்தகமெல்லாம் போடுவோம் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ எனக்கு இருந்ததில்லை. நகர்தலும் நகர்தலின் பொருட்டு நிகழும் சூழலுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.  தொடர்ச்சியாக என்னை வலைப்பூவிலும், பேஸ்புக்கிலும் வாசித்து வரும் நண்பர்கள் எப்போதும் கொடுக்கும் உத்வேகமும், அன்பும் எதிர்பார்ப்புமே என்னை மீண்டும்மீண்டும் எழுதத் தூண்டுகிறது. இலக்கிய வட்டத்திலிருக்கும் யாருடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. என்னை முன்னிலைப்படுத்தி ஒரு வியாபராப் பொருளாக்கிக் காட்டிக் கொள்ளும் ஒரு வெறித்தனமான மார்க்கெட்டிங் உத்திகள் என்னிடம் அறவே இல்லை. எ...

வெந்து தணிந்தது காடு...!

சேதுக்கரையிலிருந்துதான் இராமர் ஈழத்துக்குப் பாலம் கட்டியதாகச் சொன்னார்கள். பிரம்மாண்டமான வங்காள விரிகுடா என் முன் விரிந்து கிடந்தது. சேதுக்கரையின் கடல் நீல நிறம் கிடையாது. கருமையும் நீலமும் நிறைந்த ஒரு ரகசியங்கள் நிறைந்த நிறம் அது. நெரிசல் அதிகம் இல்லாமல் ஓரளவு அமைதியைக் தாங்கிக் கிடந்த அந்த இடத்தில் திவசம் கொடுப்பதில் இருந்து கருமாதி காரியங்கள் வரை எல்லாம் ஏதோ ஒரு அவசர கதியில் நடந்து கொண்டிருந்தன. ஈர வேட்டியுடன் வெற்றுடம்புடன் முழுதும் மழிக்கப்பட்ட தலையோடு கடற்கரை மண்ணில் நானும் என் இரு தம்பிகளும் அமர்ந்திர்ந்தோம். காலை பத்து மணி வெயிலை கட்டுப்படுத்தி கொண்டிருந்த மேகக்கூட்டங்களை நிமிர்ந்து பார்த்தேன். கடற்காற்று ஈர உடம்பில் பட்டு சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது. பிரபஞ்ச ரகசியங்களைத் தன்னுள் தேக்கிக் கொண்டு ஆழ் கடலும் நீலவானமும் எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆமாம்.. அது சேதுக்கரை என்னும் கடற்கரை கிராமம். அங்கிருந்த்துதான் இராமர் ஈழத்துக்கு சென்று இராவணனோடு போரிட பாலம் கட்டினாராம். நாங்கள் எங்கள் தந்தையின் 16 ஆம் நாள் காரியத்துக்காக கடந்த ஜூ...

உலகம் அழிந்துதான் போகட்டுமே....!

இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்று நீங்கள் எண்ணுவதற்கு நியாயமாய் ஒரே ஒரு காரணம் என்னிடம் சொல்லுங்கள் போதும். டிசம்பர் 21ல் உலகம் அழியாமலேயே போகட்டும். மாயன் காலண்டர் பொய் என்று கூறி நாம் புளகாங்கிதம் பட்டுக் கொண்டு தெருக்கு தெரு, நின்று பேசவும், இணையத்தில் சவுடாலாய் வாயடிக்கவும் கூட செய்யலாம். ஆனால்... எனது கேள்வி எல்லாம் ஏன் இந்த உலகம் அழிந்து போகக் கூடாது என்பதுதான்...? என்னைப் பொறுத்தவரை மாயன் காலண்டர் உயிர் பெற்று ஏதோ ஒரு சக்திக்கு உயிர் வந்து இந்த பூமியை சிதறடித்து மானுட பிண்டங்களைத் பிரபஞ்ச வெளியில் திக்குகள் எட்டும் பிய்த்து எறியட்டும். ஆழ்கடல் சிறு துளியாய் இந்தப் பெருவெளியில் மிதக்க உயிர்களை உறிஞ்சிக் கொண்ட இந்த பிரபஞ்சம் வெடித்து சிரிக்கட்டும். வாழ்க்கையை இயல்பாய் கட்டியமைத்துக் கொண்ட இயற்கையை சின்னாபின்னப் படுத்திக் கொண்டே.... எல்லைகள் வகுத்துக் கொண்டு நிறம், மொழி, மதம், நாடு, சாதி, பிராந்தியம் என்று பிரிந்து நின்று கொண்டு இந்த பிண்டங்கள் பிண்டங்களை அழித்துக் கொள்வதைக் காட்டிலும் எல்லா வகையிலும் சிறந்தது இயற்கையே எ...

காலப் பெருவெள்ளம்...!

உறக்கமின்றி தவிக்க விட்ட கடந்த வாரத்தின் ஐந்து நாட்களும் அரக்கத்தனமானவையாய் எனக்கு தோன்றின. கடுமையான உடல்வலி, தொடர்ச்சியான தலைவலியோடு டிசம்பர் ஒண்ணாம் தேதியின் இரவு என்னை துரத்திக் கொண்டிருந்தது. கனவுகளும் கற்பனைகளும் எங்கோ ஓடி ஒளிந்து கொள்ள உடல் முழுதும் வலியைச் சுமந்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். மழை எல்லா ஊரிலும் மழையாய் இருப்பதில்லையோ என்ற ஒரு சோகமான கேள்வியை திரும்ப திரும்ப நான் எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த போது காளையார்கோவிலுக்கும் கொல்லங்குடிக்கும் இடையே ஒரு மாலை வேளை பெரு மழையில் சிக்கிக் கொண்டேன். வண்டியை சாலையோரமாய் நிறுத்திவிட்டு எனக்கும் மழைக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாய் அறுந்து போயிருந்த தொடர்பை சமரசம் செய்து சரி செய்து கொள்ளும் வண்ணம்.... நான் மழைக்குள் விழுந்தேன். உடல் தொட்டு, என் உயிர் தொட்டு, ஆன்மாவை நிறைத்த இயற்கையை உடலால் பருகினேன். சாலையோரத்து புளியமரங்களும், சாலையை விட்டு சற்று தொலைவில் கூட்டம், கூட்டமாய் நின்று கொண்டிருந்த பனைமரங்களும் மட்டுமே எனக்கு துணையாய் இருந்தன. அவ்வப்போது ச...

இது எனது முறை....!

அப்போது யாருமற்று நான் நின்றேன். வலித்த போது என் கண்களே கலங்கியது. உலகம் தள்ளி நின்று கொண்ட போது நான் தனித்து நிற்க கற்றுக் கொண்டேன். தொடர்ச்சியான துரோகங்கள் எனக்கு இரணங்களைக் கொடுத்தாலும் அவை தழும்புகளாய் மாறி எனக்கு அனுபவமாகிப் போனது. அழுது, அழுது கண்ணீர் வற்றிப்போன போது என் கண்கள் பள பளக்கத் தொடங்கி இருந்தன. எல்லோரையும் காப்பாற்றும் கடவுளைப் போன்றவன் நான். கொடுக்கும் வரை கொண்டாடி, கொடுக்க முடியாவிட்டால் நீ எல்லாம் என்ன மானங்கெட்ட கடவுள் என்று  சீண்டிப்பார்க்கும்  உன்னத நிலையை எனக்கும் கொடுத்துப் பார்த்தான் சக மானுடன். நான் தனித்து இருந்தேன். அப்போது என் கவலைகள் எனக்குத் துணையாயிருந்தது. என் உணர்வுகளும், கொஞ்சம் வார்த்தைகளும் எனக்கு உற்சாகத்தை அவ்வப்போது கொடுக்க ஏதேதோ எழுதத் தொடங்கி இருந்தேன். நடை பயிலும் பிள்ளையாய் தத்தித் தத்தி எழுத்துக்களில் நான் நடக்க, நடக்க அந்த நடை எனக்குப் பிடித்துப்  போனது. எழுதவேண்டும் என்று நினைத்த போதெல்லாம் ஏதோ ஒரு வலி என்னிடம் இருந்தது. எனக்கு வலித்த போது எல்லாம் எழுதினேன். மேய்ப்பனாய் மாறிவிடுவேன் என்ற கனவிலேயே நான் ஆட்டுக்குட்டிய...

நானும் ஓர் கனவோ....?!

பேனாவைத் திறந்து காகிதத்தை நெருங்கும் வரையில் எந்த தளத்திற்குள் எண்ணங்கள் சீறிப்பாயும் என்ற ஒரு  உறுதியில்லை. எப்படிப் பார்த்தாலும் எழுத்துக்கள் எல்லாம் ஏதோ ஒரு அவஸ்தையின் வெளிப்பாடுகள்தான். அவஸ்தைகளை வலிகளுக்கும், சோகத்துக்கும் கொடுத்துப்பார்க்கும் பொது புத்திகள் சந்தோசமும் ஒரு அவஸ்தைதான் என்பதை நம்ப மறுக்கும். எழுதுவதற்கு எப்போதும் கட்டுப்பாடுகளை நான் வைத்துக் கொள்வது இல்லை. வெறுமையான வானத்தின் கட்டற்ற சுதந்திரத்தை திட உடம்பிற்குள் நின்று பொறாமையாய் எதிர்கொள்கையில் புத்திக்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓராயிரம் இனிய பொன் நிலாக்கள் உதயமாகவும் செய்யும். ஒரு கடற்கரை ஓரத்து மாலை வேளையை உடை கலைத்து, உடல் தழுவி, உள்ளம் நிறைத்துவிளையாடும் காற்றாகவும், கால்கள் பதிய நடந்து பார்க்கும் விரிந்து பரந்த மணலாயும், கடலென்னும் கவிதை மேலெழும்பி பின் கீழ் சென்று கரை மோதி மோதி விளையாடும் காம விளையாட்டை கண்களால் பருகியும்தான் அனுபவிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் கவலையுற்ற புத்திகள் செரித்துப் போட்ட அபத்த  அனர்த்தங்கள்.  அ ன ர்த்தங்களே அபத்தமா...

வானமகள், நாணுகிறாள்....!

அமீரகத்தின் கோடைக்காலம் கொஞ்சம் பலவீனப்பட ஆரம்பித்திருக்கிறது. கனத்து அடர்ந்து வீசிய கந்தகக் காற்று கொஞ்சம் தடிமன் குறைந்து மெலிதாய் சிலிர்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. கோடையை கொடையாய்க் கொடுத்த காலம் கடும் குளிருக்கு முந்தைய வசந்தகாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் அடி எடுத்து வைத்து விடும். துபாய் முழுவதும் சாலையோரங்களில் கோடையிலும் பசுமையாய்ச் சிரித்த பசும் புற்களைத் தாலாட்ட தென்றல் தாய் வந்துவிடுவாள். இனி என்ன... குதூகலம்தான் கொண்டாட்டம்தான்... விதவிதமான பூக்களை சொரிந்த படியே சாலையோரத்துச் செடிகள் தலையசைத்துச் சிரிக்கப் போகின்றன. சோகமாய் கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த சீகல் பறவைகள் கூட்டத்தோடு கூட்டணி சேர, கடற்கடந்து இன்னமும் பறவைகள் கூட்டம் வந்து சேரும்... புறாக்கள் எல்லாம் பேசிச் சிரித்தபடி சாலைகளைக் கடந்து சென்று புல்வெளியில் படுத்துறங்கும்.... கோடையினைக் கடந்து அமீரகம் குளிர் காலத்துக்குள் நுழையும் அழகே தனிதான்...!  நாட்கள் செல்ல செல்ல சாலைகளை அடைத்து நிற்கும் பனிக்கூட்டமும், அதை விரட்ட வாகனங்கள் காலை எட்டு மணிக்கும் விளக்கிட்டு செல்லும் வேகமும், மழையை இப்ப...

வெற்றிச் சிறகுகள்...!

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன. மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்? இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய ...