Skip to main content

தெரு முனை




எதிர் பாரமல் உன்னை
சந்தித்த தெரு முனை...
சரித்திர புகழ் வாய்ந்த...இடமானது!

உன் கண்களால் என்
உயிர் உறிஞ்சிய ...
அந்த நிமிடத்தை
இது வரை நான் நகர விடவே இல்லை!
***
தாவணியை இடுப்பில்
சொருகிய அந்த நேரத்தில்...
சமாதி என்றால் என்ன...?
என்று கண நேரம் காட்டினாய்!
***
ஆக்ஸிஜன் கூட நீ...
உன் சுவாசகுழாய்களுக்குள்...
செல்ல விரும்பி மொத்தமாய்..
உன்னிடம் வந்ததால்...
நான் சுவாசத் திணறலால் ஸ்தம்பித்தேன்!
***
உன் கோபம் என்னை...
எரிச்சலூட்ட மறந்து...
மீண்டும் மீண்டும் காதலை அல்லவா..வளர்க்கிறது!
காதலோ....
அன்னம் புசிக்கும் பால் போல..
காமம் களைந்து
உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது!
***
வழியோராம் உனைப் பார்த்து..
என் விழியோரம் உனைத் தேக்கி...
மீண்டும் மீண்டும் செல்கிறேன்...
உனை சந்தித்த தெரு முனைக்கு...
நீ இல்லாமல் போனாலும்...
காதாலால் எனை நிரப்ப...
***
உன்னை சந்தித்த அந்த நொடி போதும்!
அந்த அனுபவத்தின் சாயங்களை...
என் வார்த்தைகளில் நனைத்தெடுக்க..
வந்ததெல்லாம்..கவிதைதான்!
கவிதை எல்லாம் காதல்தான்!

***

காதல் என்பது எல்லா காலத்திலும் உணர்வாய்த்தான் இருந்திருக்கிறது. பிரபஞ்ச சுழற்சியின் மிகப்பெரிய ஒரு உந்து சக்தியாய் பெண் இருக்கிறாள்....அதுவே... நித்தம் சுகமான அலைகளை எப்போதும் வீசிக் கொண்டிருக்கிறது. எந்த கருத்தையும் தேடாமல்...எந்த கருத்தையும் கொள்லாமல்...காதலை...அனுபவியுங்கள்..இந்த கவிதை மூலமாக.....!


தேவா. S

Comments

///அன்னம் புசிக்கும் பால் போல..
காமம் களைந்து
உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது!//

அருமை ..!
dheva said…
thanks jeevan (amuthan)
Hi Dheva,
Very Nice and Excellent da. Keep it up.
priyamudanprabu said…
தாவணியை இடுப்பில்
சொருகிய அந்த நேரத்தில்...
சமாதி என்றால் என்ன...?
என்று கண நேரம் காட்டினாய்!
////

அண்ணே கலக்கல்

சில கவிதைகள் படிச்சா நமக்கும் கவிதை எழுததோனும்
அப்படி யிருந்தது உங்கள் கவிதை
Chitra said…
அழகாய் காதலித்து, அழகாய் ரசித்து, அழகாய் உணர்ந்து - அழகாய் ஒரு கவிதை. :-)
dheva said…
ரொம்ப நன்றி....சித்ரா....!
ISR Selvakumar said…
பிரியமுடன் பிரபு மற்றும் தங்கை சித்ரா ஆகியோர் கூறியவற்றை ஒன்றிணைத்து என் கருத்தாக ஏற்றுக் கொள்ளவும்.
Anonymous said…
//Very Nice and Excellent da. Keep it up.//

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...