Skip to main content

குருக்கத்தி ஐயா..... சித்தர் பூமி பற்றிய தொடர்.....!



சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய கிராமம். இறைவனின் அருகாமையை நேரடியாய் நீங்கள் நிச்சயம் இந்த ஊரில் உணர்வீர்கள்...ஏனென்றால் மனிதர்களை விட இங்கே மரங்கள் அதிகம். ஒவ்வொருமுறையும் நான் விடுமுறைக்கு செல்லும் போதும்..ஏகாந்த வெளியில் நுழையும் ஒரு உணர்வோடு குருக்கத்தி என்னை வரவேற்று இருக்கிறது.

பரபரப்பான துபாய்.....இரவும் பகலும் போட்டி போட்டு நமது வயதை வேகமாய் தள்ளிவிட...விடிவதும் பின்னர் இரவு உறங்குவதும்.... சொடுக்கிடும் வேகத்தில் நடந்து விடும் ஒரு பரபப்பானா பூமி.....மனிதர்கள்...மனிதர்கள்...வாகனங்கள்....செல் போன் அழைப்புகள்...என்று ஒரு நாள் சராசரியாய் 12 மணி நள்ளிரவுக்கு முடிவுக்கு வரும்...மீண்டும்...ஒரு அசுரனாய்..அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும்...

ஆமாம்... இந்த பரப்புக்கு நடுவில் நான் விமான நிலையத்தில் என் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதற்காக.....விமானத்தில்...எல்லா படபடப்பும் சற்றே....குறைய.....விமானம் மேலே செல்ல செல்ல காற்றைப்போல.....மனம் லேசாகிறது...மனம் என்னை குருக்கத்திக்கு இழுத்துச்செல்கிறது....

என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி....
தாயின் கருவறையாயும்...அதுவே..கல்லறையாயும்....
அந்தக்காற்றிலே...என் முந்தைய தலைமுறையின்...மூச்சுக்காற்று....
எப்போது காலில் முள் தைக்கும் என்ற ஆசையில்...
செருப்பு மறந்து சுற்றிய நாட்கள்....
சாணம் மொழுகிய வீடுகள்...
உயிர் உருக்கும்...குயிலின் கீதம்....
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....


விமானம் மேலே செல்ல செல்ல...மனமும் அதற்கேற்ற வேகத்தில் பறக்க தொடங்கியது. தாத்தா...வாழ்ந்த காலத்தில் எனக்கு 5 வயது இருக்கும் அப்போது கோடை விடுமுறைக்கு குருக்கத்திகு செல்வோம், அப்பாவின் வேலை தஞ்சாவூர் மாவட்டம் என்பதால் குருக்கத்திக்கு நாங்கள் பஸ்ஸில் செல்லும் போதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். காரைக்குடி வரும் வரை தஞ்சவூரின் வயல் வெளிகள் எங்களை வழியனுப்பி வைக்கும்.

காரைக்குடியில் இருந்து வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் எங்களை வாரி அணைத்து வரவேற்கும். வேலிகாத்தான் மரங்கள் அதிகமாகவும்... கடலை, எள், மற்றைய தானியங்கள் விளையக்கூடிய.. புன்செய் மண்வெளிகள் தான் அதிகமாக இருக்கும், வானம் பார்த்த பூமி என்பதால்...மிகப்பெரிய கிணறுகள், மோட்டர் செட்டுகள் எல்லம் வயல்கள் தோறூம் காணமுடியும்.

வெகுளியான...மக்கள்...
" அப்பு சுகமாயிருக்கீகளா....
ஆத்தா சும்மாயிருக்காகளா?"
இப்படி...பாசத்தை....
வார்த்தகளைல் நிறைத்து...
நம்மை அரவணைத்து...
நலம் விசாரிப்பார்கள்!

இயற்கையோடு ஒன்றிப்போனதாலேயோ என்னவோ இவர்கள்... இயற்கையான வாழ்வை வாழ்வு வாழ்வதாக எனக்குப்படுகிறது. வானம் பார்ப்பது என்பது...மனதை எப்போதும் நிறைக்கும்...
இவர்கள் அடிக்கடி வானம் பார்ப்பது...
இயற்கை என்று தங்களின் மீது கருணைகாட்டும்....
மழையாய் தங்களை ஆசிர்வதிக்கும் என்றுதான்!
தெரிந்தோ தெரியாமலோ எம் மக்கள் உருவமில்லா இறை என்னும் ஆன்மிகத்திதின் உச்சத்திற்கு தங்கள் ஆன்மாவினை பழக்கபடுத்திக்கொண்டு இருக்குறார்கள். இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால்.,, பொது இடங்களில் ஏதாவது பிரச்சினைகள் என்றால்...மீசை முருக்கிய யாரோ ஒரு ஆணோ அல்லது பெரிய தண்டட்டி(காது வளர்த்டு பெரிய புடம் போட்ட தொடு) போட்ட பெண்ணோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டர்கள்....அவர்கள் தாமகவே இடைப்பட்டு...பொதுவான நியாத்தை கூறி பிரச்சினையை தீர்க்க முற்படுவார்கள்.

வானம் பார்க்கும் மக்கள் அல்லவா....
வாழ்க்கையின் நிலையாமையை....
தங்கள் நெஞ்சுக்குள்...
தங்களுக்கெ தெரியாமல்....
பதுக்கி வைத்திருப்பார்கள்!
மண்ணில்....அடிக்கடி ஈரம் இல்லாவிட்டாலும்...
நெஞ்சில் எப்போதும்...
ஈரம் உள்ளவர்கள்!

இப்படி எல்லா விசயங்கலும் நெஞ்சு நிறைத்து கைப்பிடித்து அழைத்துச்செல்லும் குருக்கத்திக்கு! குருக்கத்தியோ....எல்லா பிரபஞ்ச ரகசியங்களையும் தன்னுள் தேக்கி வைத்து மெளனமாய் காத்திருக்கும்....

எல்லா வார்த்தைகளும்....
அர்த்தங்களை போதித்து விடாது....
சில நேரங்களில்...
மெளனங்களில் தான்....பதில்கள் காத்திருக்கும்...
சில் வண்டின் சப்தத்தோடு...
மெளனமாய்....காத்திருக்கிறது... குருக்கத்தி.....!


(இன்னும் வரும்...)

தேவா. S

Comments

Chitra said…
உயிர் உருக்கும்...குயிலின் கீதம்....
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....

.......... I miss that scene. well-written.
Best wishes!
Balaji.D.R said…
This comment has been removed by the author.
Balaji.D.R said…
वह! वह्!
बहॉथ अछ; बहॉथ अछ
मुझे फ़ख्र हे तुज जैसे एक दोस्थ मिल्नेकेलिये. मेइन रभ को सुक्रिय कर्थहॉन्. आप्को मेर पॉर आशिवाध हे;
लगे रहो लगे रह मेरे भै:
Dhandapani.K said…
ungal pathivil barathiraja therikiraar...
praburam_2007@rediff.com said…
OVVORU VELINATTIL VASIKKUM MANITHANUM INTHA PADAPPAL KANNEER VIDUVAN
சித்தர்கள் தொடர்புடையவர்களுக்கு அவர்கள் பற்றிதகவல்கள் அறிய ஆவல் இதை தந்தமைக்கு நன்றிகள் பல
சித்தர்கள் தொடர்புடையவர்களுக்கு அவர்கள் பற்றிதகவல்கள் அறிய ஆவல் இதை தந்தமைக்கு நன்றிகள் பல

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...