
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய கிராமம். இறைவனின் அருகாமையை நேரடியாய் நீங்கள் நிச்சயம் இந்த ஊரில் உணர்வீர்கள்...ஏனென்றால் மனிதர்களை விட இங்கே மரங்கள் அதிகம். ஒவ்வொருமுறையும் நான் விடுமுறைக்கு செல்லும் போதும்..ஏகாந்த வெளியில் நுழையும் ஒரு உணர்வோடு குருக்கத்தி என்னை வரவேற்று இருக்கிறது.
பரபரப்பான துபாய்.....இரவும் பகலும் போட்டி போட்டு நமது வயதை வேகமாய் தள்ளிவிட...விடிவதும் பின்னர் இரவு உறங்குவதும்.... சொடுக்கிடும் வேகத்தில் நடந்து விடும் ஒரு பரபப்பானா பூமி.....மனிதர்கள்...மனிதர்கள்...வாகனங்கள்....செல் போன் அழைப்புகள்...என்று ஒரு நாள் சராசரியாய் 12 மணி நள்ளிரவுக்கு முடிவுக்கு வரும்...மீண்டும்...ஒரு அசுரனாய்..அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும்...
ஆமாம்... இந்த பரப்புக்கு நடுவில் நான் விமான நிலையத்தில் என் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதற்காக.....விமானத்தில்...எல்லா படபடப்பும் சற்றே....குறைய.....விமானம் மேலே செல்ல செல்ல காற்றைப்போல.....மனம் லேசாகிறது...மனம் என்னை குருக்கத்திக்கு இழுத்துச்செல்கிறது....
என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி....
தாயின் கருவறையாயும்...அதுவே..கல்லறையாயும்....
அந்தக்காற்றிலே...என் முந்தைய தலைமுறையின்...மூச்சுக்காற்று....
எப்போது காலில் முள் தைக்கும் என்ற ஆசையில்...
செருப்பு மறந்து சுற்றிய நாட்கள்....
சாணம் மொழுகிய வீடுகள்...
உயிர் உருக்கும்...குயிலின் கீதம்....
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....
விமானம் மேலே செல்ல செல்ல...மனமும் அதற்கேற்ற வேகத்தில் பறக்க தொடங்கியது. தாத்தா...வாழ்ந்த காலத்தில் எனக்கு 5 வயது இருக்கும் அப்போது கோடை விடுமுறைக்கு குருக்கத்திகு செல்வோம், அப்பாவின் வேலை தஞ்சாவூர் மாவட்டம் என்பதால் குருக்கத்திக்கு நாங்கள் பஸ்ஸில் செல்லும் போதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். காரைக்குடி வரும் வரை தஞ்சவூரின் வயல் வெளிகள் எங்களை வழியனுப்பி வைக்கும்.

காரைக்குடியில் இருந்து வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் எங்களை வாரி அணைத்து வரவேற்கும். வேலிகாத்தான் மரங்கள் அதிகமாகவும்... கடலை, எள், மற்றைய தானியங்கள் விளையக்கூடிய.. புன்செய் மண்வெளிகள் தான் அதிகமாக இருக்கும், வானம் பார்த்த பூமி என்பதால்...மிகப்பெரிய கிணறுகள், மோட்டர் செட்டுகள் எல்லம் வயல்கள் தோறூம் காணமுடியும்.
வெகுளியான...மக்கள்...
" அப்பு சுகமாயிருக்கீகளா....
ஆத்தா சும்மாயிருக்காகளா?"
இப்படி...பாசத்தை....
வார்த்தகளைல் நிறைத்து...
நம்மை அரவணைத்து...
நலம் விசாரிப்பார்கள்!
இயற்கையோடு ஒன்றிப்போனதாலேயோ என்னவோ இவர்கள்... இயற்கையான வாழ்வை வாழ்வு வாழ்வதாக எனக்குப்படுகிறது. வானம் பார்ப்பது என்பது...மனதை எப்போதும் நிறைக்கும்...
இவர்கள் அடிக்கடி வானம் பார்ப்பது...
இயற்கை என்று தங்களின் மீது கருணைகாட்டும்....
மழையாய் தங்களை ஆசிர்வதிக்கும் என்றுதான்!
தெரிந்தோ தெரியாமலோ எம் மக்கள் உருவமில்லா இறை என்னும் ஆன்மிகத்திதின் உச்சத்திற்கு தங்கள் ஆன்மாவினை பழக்கபடுத்திக்கொண்டு இருக்குறார்கள். இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால்.,, பொது இடங்களில் ஏதாவது பிரச்சினைகள் என்றால்...மீசை முருக்கிய யாரோ ஒரு ஆணோ அல்லது பெரிய தண்டட்டி(காது வளர்த்டு பெரிய புடம் போட்ட தொடு) போட்ட பெண்ணோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டர்கள்....அவர்கள் தாமகவே இடைப்பட்டு...பொதுவான நியாத்தை கூறி பிரச்சினையை தீர்க்க முற்படுவார்கள்.
வானம் பார்க்கும் மக்கள் அல்லவா....
வாழ்க்கையின் நிலையாமையை....
தங்கள் நெஞ்சுக்குள்...
தங்களுக்கெ தெரியாமல்....
பதுக்கி வைத்திருப்பார்கள்!
மண்ணில்....அடிக்கடி ஈரம் இல்லாவிட்டாலும்...
நெஞ்சில் எப்போதும்...
ஈரம் உள்ளவர்கள்!
இப்படி எல்லா விசயங்கலும் நெஞ்சு நிறைத்து கைப்பிடித்து அழைத்துச்செல்லும் குருக்கத்திக்கு! குருக்கத்தியோ....எல்லா பிரபஞ்ச ரகசியங்களையும் தன்னுள் தேக்கி வைத்து மெளனமாய் காத்திருக்கும்....
எல்லா வார்த்தைகளும்....
அர்த்தங்களை போதித்து விடாது....
சில நேரங்களில்...
மெளனங்களில் தான்....பதில்கள் காத்திருக்கும்...
சில் வண்டின் சப்தத்தோடு...
மெளனமாய்....காத்திருக்கிறது... குருக்கத்தி.....!
(இன்னும் வரும்...)
தேவா. S
பரபரப்பான துபாய்.....இரவும் பகலும் போட்டி போட்டு நமது வயதை வேகமாய் தள்ளிவிட...விடிவதும் பின்னர் இரவு உறங்குவதும்.... சொடுக்கிடும் வேகத்தில் நடந்து விடும் ஒரு பரபப்பானா பூமி.....மனிதர்கள்...மனிதர்கள்...வாகனங்கள்....செல் போன் அழைப்புகள்...என்று ஒரு நாள் சராசரியாய் 12 மணி நள்ளிரவுக்கு முடிவுக்கு வரும்...மீண்டும்...ஒரு அசுரனாய்..அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும்...
ஆமாம்... இந்த பரப்புக்கு நடுவில் நான் விமான நிலையத்தில் என் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதற்காக.....விமானத்தில்...எல்லா படபடப்பும் சற்றே....குறைய.....விமானம் மேலே செல்ல செல்ல காற்றைப்போல.....மனம் லேசாகிறது...மனம் என்னை குருக்கத்திக்கு இழுத்துச்செல்கிறது....
என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி....
தாயின் கருவறையாயும்...அதுவே..கல்லறையாயும்....
அந்தக்காற்றிலே...என் முந்தைய தலைமுறையின்...மூச்சுக்காற்று....
எப்போது காலில் முள் தைக்கும் என்ற ஆசையில்...
செருப்பு மறந்து சுற்றிய நாட்கள்....
சாணம் மொழுகிய வீடுகள்...
உயிர் உருக்கும்...குயிலின் கீதம்....
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....
விமானம் மேலே செல்ல செல்ல...மனமும் அதற்கேற்ற வேகத்தில் பறக்க தொடங்கியது. தாத்தா...வாழ்ந்த காலத்தில் எனக்கு 5 வயது இருக்கும் அப்போது கோடை விடுமுறைக்கு குருக்கத்திகு செல்வோம், அப்பாவின் வேலை தஞ்சாவூர் மாவட்டம் என்பதால் குருக்கத்திக்கு நாங்கள் பஸ்ஸில் செல்லும் போதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். காரைக்குடி வரும் வரை தஞ்சவூரின் வயல் வெளிகள் எங்களை வழியனுப்பி வைக்கும்.

காரைக்குடியில் இருந்து வீரம் விளைந்த சிவகங்கை செம்மண் எங்களை வாரி அணைத்து வரவேற்கும். வேலிகாத்தான் மரங்கள் அதிகமாகவும்... கடலை, எள், மற்றைய தானியங்கள் விளையக்கூடிய.. புன்செய் மண்வெளிகள் தான் அதிகமாக இருக்கும், வானம் பார்த்த பூமி என்பதால்...மிகப்பெரிய கிணறுகள், மோட்டர் செட்டுகள் எல்லம் வயல்கள் தோறூம் காணமுடியும்.
வெகுளியான...மக்கள்...
" அப்பு சுகமாயிருக்கீகளா....
ஆத்தா சும்மாயிருக்காகளா?"
இப்படி...பாசத்தை....
வார்த்தகளைல் நிறைத்து...
நம்மை அரவணைத்து...
நலம் விசாரிப்பார்கள்!
இயற்கையோடு ஒன்றிப்போனதாலேயோ என்னவோ இவர்கள்... இயற்கையான வாழ்வை வாழ்வு வாழ்வதாக எனக்குப்படுகிறது. வானம் பார்ப்பது என்பது...மனதை எப்போதும் நிறைக்கும்...
இவர்கள் அடிக்கடி வானம் பார்ப்பது...
இயற்கை என்று தங்களின் மீது கருணைகாட்டும்....
மழையாய் தங்களை ஆசிர்வதிக்கும் என்றுதான்!
தெரிந்தோ தெரியாமலோ எம் மக்கள் உருவமில்லா இறை என்னும் ஆன்மிகத்திதின் உச்சத்திற்கு தங்கள் ஆன்மாவினை பழக்கபடுத்திக்கொண்டு இருக்குறார்கள். இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால்.,, பொது இடங்களில் ஏதாவது பிரச்சினைகள் என்றால்...மீசை முருக்கிய யாரோ ஒரு ஆணோ அல்லது பெரிய தண்டட்டி(காது வளர்த்டு பெரிய புடம் போட்ட தொடு) போட்ட பெண்ணோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டர்கள்....அவர்கள் தாமகவே இடைப்பட்டு...பொதுவான நியாத்தை கூறி பிரச்சினையை தீர்க்க முற்படுவார்கள்.
வானம் பார்க்கும் மக்கள் அல்லவா....
வாழ்க்கையின் நிலையாமையை....
தங்கள் நெஞ்சுக்குள்...
தங்களுக்கெ தெரியாமல்....
பதுக்கி வைத்திருப்பார்கள்!
மண்ணில்....அடிக்கடி ஈரம் இல்லாவிட்டாலும்...
நெஞ்சில் எப்போதும்...
ஈரம் உள்ளவர்கள்!
இப்படி எல்லா விசயங்கலும் நெஞ்சு நிறைத்து கைப்பிடித்து அழைத்துச்செல்லும் குருக்கத்திக்கு! குருக்கத்தியோ....எல்லா பிரபஞ்ச ரகசியங்களையும் தன்னுள் தேக்கி வைத்து மெளனமாய் காத்திருக்கும்....
எல்லா வார்த்தைகளும்....
அர்த்தங்களை போதித்து விடாது....
சில நேரங்களில்...
மெளனங்களில் தான்....பதில்கள் காத்திருக்கும்...
சில் வண்டின் சப்தத்தோடு...
மெளனமாய்....காத்திருக்கிறது... குருக்கத்தி.....!
(இன்னும் வரும்...)
தேவா. S
Comments
வேலிகாத்தான் மரங்களின் வெகுளியான பார்வை....
குருக்கத்தி... என்னை....வரவேற்க காத்திருக்குறது....
மகனுக்காக காத்திருக்கும் தாய் போல.....
.......... I miss that scene. well-written.
Best wishes!
बहॉथ अछ; बहॉथ अछ
मुझे फ़ख्र हे तुज जैसे एक दोस्थ मिल्नेकेलिये. मेइन रभ को सुक्रिय कर्थहॉन्. आप्को मेर पॉर आशिवाध हे;
लगे रहो लगे रह मेरे भै: