Skip to main content

இரவுகளின் தாரகை...















இரவுகளின் தாரகை நான்...
மாலை வேளைகளில் தான்...
என்....பெண்மைக்கு....
தூரிகையால் அலங்காரங்கள்....
வாசனைகளில் என்னை நிரப்பி...
வரும் வாடிக்கையாளனுக்கு...
காத்திருப்பேன்....வாசலிலே...!

கண் இமைக்கும் நேரத்தில்...
காதல்....
கை சொடுக்கும் நேரத்தில்....
காமம்.. .!
பணப்பையின் கனத்திற்கு...
ஏற்றார் போல கூடிக் குறையும்..
எங்களின் உணர்வுகள்!

எச்சமிட்டு பறக்கும்...
காகம் போல....
உச்சத்திற்கு....பிறகு...
பறக்கும் மனிதர்களுக்கு நடுவே...
வயிற்றுக்காக உடல் விற்கும்...
அவலங்கள் நாங்கள்!

பிரபஞ்ச சுழற்சியின்...
சூட்சுமத்தை.....வர்ணமாக்கி...
விலைக்கு விற்கும்...
தலைமுறை கடந்த வியாபாரிகள் நாங்கள்!
உடல் தொட்ட எந்த விரல்களும்...
எங்கள் உள்ளம் தொட்டதில்லை...!

விரக தாபத்திற்கு...'
விளக்கம் தெரியாமல்...
விரகத்தை விளக்கில் எறிக்கிறோம்...!
எங்களுக்குள்ளும் ...இருக்கிறது...
காதலும் காமமும்...காய்ந்துபோன நிலமாய்...
தேய்ந்து போன நிலாவாய்....!

உழைப்பிருந்தும் உற்பத்தியின்றி..
முடங்கிக் கிடக்கின்றன...
எங்களின் கருவறைகள்...
தெய்வமில்லா…கோவிலின் ...
திருவிழாவாய்....தொடர்கிறது....
எங்களின்...இரவுகள்!

ஒரு சீரியசான தொடர் பதிவுக்கு நடுவே...சட்டென்று.... டர்ண் செய்து.....இந்த கவிதை பதிவினை வெளியிடுகிறேன்.....காரணம் எதுவும் கிடையாது.. என்னைப் பொறுத்த வரையில் எந்த தாக்கத்தையும் உள்ளே வைக்கக் கூடாது....அதே நேரத்தில்...வாழ்க்கை எல்லாவித பரிமாணங்களையும் கொண்டது.. எதையும் மிச்சம் வைக்காமல் அலசி ஆராய வேண்டும்....! ஒரு பயணிக்கு சுற்றுப்புறங்களை வேடிக்கைப்பார்த்து உள்வாங்கிக்கொள்வது தவிர வேறு என்ன வேலை இருக்கிறது..... வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!

விலை மாதுக்கள் என்பவர்கள் நமது கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்....! அந்த காலங்களில் அவர்களிக்கு மரியாதை செய்து தெய்வத்துக்கு சமமாய் மதித்த காலங்களும் அதற்கான கதைகளும் நம் பாரம்பரியத்தில் நிறையவே உண்டு....! தெய்வத்துக்கு தொண்டு செய்து....அவர்கள் மனிதர்களின் இச்சைகளை தேவையின் பொருட்டு தீர்த்து வைத்தார்கள் அதனால்தான் அவர்களை தேவரடியார் என்று அழைத்தனர்.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் விருப்பப்பட்டால் தான் சல்லாபம்....யாருடைய குடியையும் கெடுக்கும் பொருட்டு செயல்படவும் மாட்டர்கள்....வேண்டும் என்றே பொருள் ஈட்டவும் தங்களின் காமத்தை விற்கவும் மாட்டார்கள். இவர்களை மரியாதையாக ஒவ்வொருவரும் நடத்த வேண்டும் என்றுதான்.. இவர்களை இறைவனை மணந்து கணவனாக ஏற்று வாழ்ந்து வந்தார்கள், இறைவனின் மனைவி என்றால் யாரும் தவறாக நடக்க மாட்டர்கள் அல்லவா.... வற்புறுத்த மாட்டார்கள் அல்லவா? அதுதான் லாஜிக்.....இதற்கு நமது இலக்கியங்களில் ஓராயிரம் விளக்கங்கங்களும் உதாரணங்களும் இருக்கின்றன.....!

நாளடைவில் இவர்களை சமுதாயம் அறுவெறுப்பு பொருளாக்கியது......ஆண்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள்.....போகத்துக்காக மோகம் கொள்ள ஆரம்பித்தனர்... ! தொடர்ந்து இன்னலுக்கும் அவமரியாதைக்கும் நடுவே...இவர்கள் நலிவடைந்து நலிவடைந்து....கடைசியில் பொருளீட்டும் பொருட்டு வியாபாரப் பொருளாய்...சந்தைக்கு வந்து விட்டார்கள்....வறுமை தான் இன்றைய விபச்சரத்தின்...மூல காரணமாய்ப் போய் விட்டது. பழைய காலத்து உதாராணங்களை வைத்துக் கொண்டு வரப்போகும் நவீன யுகத்திற்கும் நமக்கு தேவரடியார்கள் தேவையில்லை......



வறுமையைகருவறுப்போம்.....மனிதர்களை....மனிதர்களாய்...வாழச்செய்வோம்.....!


தேவா. S







Comments

Chitra said…
கவிதையில் தெரியும் அனலை சொல்வதா? குறிப்பில் இருக்கும் வரலாற்று உண்மைகளின் தாக்கம் பற்றி சொல்வதா? பின்னணி பாடல் பற்றி கருத்து சொல்வதா? இதையெல்லாம் தாண்டி உங்களை அடையாளம் காட்டி கொடுக்கும் உங்கள் சிந்தனைகளை பாராட்டி சொல்வதா?
Chitra said…
This comment has been removed by the author.
Balaji.D.R said…
வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!

தேவா கலக்கிட்டீங்க

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...