Skip to main content

இரவுகளின் தாரகை...















இரவுகளின் தாரகை நான்...
மாலை வேளைகளில் தான்...
என்....பெண்மைக்கு....
தூரிகையால் அலங்காரங்கள்....
வாசனைகளில் என்னை நிரப்பி...
வரும் வாடிக்கையாளனுக்கு...
காத்திருப்பேன்....வாசலிலே...!

கண் இமைக்கும் நேரத்தில்...
காதல்....
கை சொடுக்கும் நேரத்தில்....
காமம்.. .!
பணப்பையின் கனத்திற்கு...
ஏற்றார் போல கூடிக் குறையும்..
எங்களின் உணர்வுகள்!

எச்சமிட்டு பறக்கும்...
காகம் போல....
உச்சத்திற்கு....பிறகு...
பறக்கும் மனிதர்களுக்கு நடுவே...
வயிற்றுக்காக உடல் விற்கும்...
அவலங்கள் நாங்கள்!

பிரபஞ்ச சுழற்சியின்...
சூட்சுமத்தை.....வர்ணமாக்கி...
விலைக்கு விற்கும்...
தலைமுறை கடந்த வியாபாரிகள் நாங்கள்!
உடல் தொட்ட எந்த விரல்களும்...
எங்கள் உள்ளம் தொட்டதில்லை...!

விரக தாபத்திற்கு...'
விளக்கம் தெரியாமல்...
விரகத்தை விளக்கில் எறிக்கிறோம்...!
எங்களுக்குள்ளும் ...இருக்கிறது...
காதலும் காமமும்...காய்ந்துபோன நிலமாய்...
தேய்ந்து போன நிலாவாய்....!

உழைப்பிருந்தும் உற்பத்தியின்றி..
முடங்கிக் கிடக்கின்றன...
எங்களின் கருவறைகள்...
தெய்வமில்லா…கோவிலின் ...
திருவிழாவாய்....தொடர்கிறது....
எங்களின்...இரவுகள்!

ஒரு சீரியசான தொடர் பதிவுக்கு நடுவே...சட்டென்று.... டர்ண் செய்து.....இந்த கவிதை பதிவினை வெளியிடுகிறேன்.....காரணம் எதுவும் கிடையாது.. என்னைப் பொறுத்த வரையில் எந்த தாக்கத்தையும் உள்ளே வைக்கக் கூடாது....அதே நேரத்தில்...வாழ்க்கை எல்லாவித பரிமாணங்களையும் கொண்டது.. எதையும் மிச்சம் வைக்காமல் அலசி ஆராய வேண்டும்....! ஒரு பயணிக்கு சுற்றுப்புறங்களை வேடிக்கைப்பார்த்து உள்வாங்கிக்கொள்வது தவிர வேறு என்ன வேலை இருக்கிறது..... வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!

விலை மாதுக்கள் என்பவர்கள் நமது கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்....! அந்த காலங்களில் அவர்களிக்கு மரியாதை செய்து தெய்வத்துக்கு சமமாய் மதித்த காலங்களும் அதற்கான கதைகளும் நம் பாரம்பரியத்தில் நிறையவே உண்டு....! தெய்வத்துக்கு தொண்டு செய்து....அவர்கள் மனிதர்களின் இச்சைகளை தேவையின் பொருட்டு தீர்த்து வைத்தார்கள் அதனால்தான் அவர்களை தேவரடியார் என்று அழைத்தனர்.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் விருப்பப்பட்டால் தான் சல்லாபம்....யாருடைய குடியையும் கெடுக்கும் பொருட்டு செயல்படவும் மாட்டர்கள்....வேண்டும் என்றே பொருள் ஈட்டவும் தங்களின் காமத்தை விற்கவும் மாட்டார்கள். இவர்களை மரியாதையாக ஒவ்வொருவரும் நடத்த வேண்டும் என்றுதான்.. இவர்களை இறைவனை மணந்து கணவனாக ஏற்று வாழ்ந்து வந்தார்கள், இறைவனின் மனைவி என்றால் யாரும் தவறாக நடக்க மாட்டர்கள் அல்லவா.... வற்புறுத்த மாட்டார்கள் அல்லவா? அதுதான் லாஜிக்.....இதற்கு நமது இலக்கியங்களில் ஓராயிரம் விளக்கங்கங்களும் உதாரணங்களும் இருக்கின்றன.....!

நாளடைவில் இவர்களை சமுதாயம் அறுவெறுப்பு பொருளாக்கியது......ஆண்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள்.....போகத்துக்காக மோகம் கொள்ள ஆரம்பித்தனர்... ! தொடர்ந்து இன்னலுக்கும் அவமரியாதைக்கும் நடுவே...இவர்கள் நலிவடைந்து நலிவடைந்து....கடைசியில் பொருளீட்டும் பொருட்டு வியாபாரப் பொருளாய்...சந்தைக்கு வந்து விட்டார்கள்....வறுமை தான் இன்றைய விபச்சரத்தின்...மூல காரணமாய்ப் போய் விட்டது. பழைய காலத்து உதாராணங்களை வைத்துக் கொண்டு வரப்போகும் நவீன யுகத்திற்கும் நமக்கு தேவரடியார்கள் தேவையில்லை......



வறுமையைகருவறுப்போம்.....மனிதர்களை....மனிதர்களாய்...வாழச்செய்வோம்.....!


தேவா. S







Comments

Chitra said…
கவிதையில் தெரியும் அனலை சொல்வதா? குறிப்பில் இருக்கும் வரலாற்று உண்மைகளின் தாக்கம் பற்றி சொல்வதா? பின்னணி பாடல் பற்றி கருத்து சொல்வதா? இதையெல்லாம் தாண்டி உங்களை அடையாளம் காட்டி கொடுக்கும் உங்கள் சிந்தனைகளை பாராட்டி சொல்வதா?
Chitra said…
This comment has been removed by the author.
Balaji.D.R said…
வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!

தேவா கலக்கிட்டீங்க

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...