
எல்லோருக்குமே...டி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் ரொம்பவே பிடிக்கும், வயது வித்யாசம் இல்லாமல் அனைவருமே இதில் லயித்து விட காரணம் ....சில நிடங்களே வரும் அல்லது ஒரு புகைப்படமாய் இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய உயிரோட்டம் இருப்பதுதான் உண்மை.
புரூக் பாண்ட்....விளம்பரத்தில்....கடைசிவரை தன் மனைவியை திணறடித்து விட்டு....இறுதியில் ஐ லவ் யூ சொல்வது தான் விளம்பரத்தின் அழகு... ஒரு படைப்பாளியின் மூளை எப்போதுமே..புதிது புதிதாகத்தான் சிந்திக்கிறது...அதாவது பழைமையாய் இருந்தாலும் அதில் ஒரு புதுமையைப் புகுத்தி பார்க்கிறது. கிரியேட்டிவிட்டி என்பது இல்லாத வாழ்க்கை வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சலித்துக் கொண்டுதான் வாழ்றார்கள்.....
தோழி சித்ரா தனது பதிவில் சந்திரமுகி பார்க்க வந்தவர் சந்திரமுகி ஆகிப்போன கதையை சொல்லியிருந்தார்....இப்படித்தான்....எக்குத்தப்பாக வாழ்க்கையை வாழ்ந்து மிகைப்பட்ட பேர்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டு சிலபேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்....கடைசிவரை எதுவும் கிடைக்கமல்..அலுத்து சலித்து உட்கார்ந்து விடுகிறார்கள்.
ஒரு பூ பூப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது...அழகு தான் இருக்கிறது...மொட்டு மலர்கிறது....அவ்வளவே...இதில் என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது...மறுபக்கத்தில்....பூ பூப்பதில் எந்த கர்வமும் இல்லை.... அது பூக்கிறது...மடிகிறது... அது நிகழ்வு...அவ்வளவுதான்...! நாம் தான் காணும் எல்லாவற்றுக்கும் அர்த்த கற்பித்துக் கொண்டு......காணும் காட்சியின் உயிர்ப்பை விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.
இராமரும், ஏசுவும் தத்துவங்கள் ....அதை ரசிப்பதை விட்டு விட்டு வேறு எங்கோ சென்று மாட்டிக்கொள்கிறோம்.....! வாழ்க்கை என்று சொல்லும் போதே அது வாழ்வதற்குதானே தவிர....அழுந்தி...அழுந்தி..வருந்தி வருந்தி மடிவதற்கு அல்ல..!
காலையில் இருந்து இரவு உறங்கும் வரை அனுபவித்து மகிழ ஓராயிரம் விசயங்கள் இருந்தாலும் ஏனோ இந்த பாழாய்ப்போன மனம் ஏதோ ஒரு கஸ்டத்தை நினைத்துக் கொண்டு கண்ணெதிரே உள்ள சந்தோசத்தை அனுபவிக்க மறுக்கிறது....இதை விட்டு வெளிவர வேண்டும் இது ஒரு யுத்தி....கஸ்டமாயிருந்தாலும் அதை அனுபவித்து சந்தோசமாய் எதிர்கொள்ளுங்கள்....அது நிச்சயம் பிரச்சினையின் வீரியம் நிச்சயமாய் குறையும்.
எப்போதும்..மிகப்பெரிய விசங்களில் சந்தோசத்தை தேடுகிறேன் பேர்வழி என்று மாட்டிக் கொண்டு முழிக்காதீர்கள்...சந்தோசம் சின்ன சின்ன விசயங்களில் உங்களின் கண்ணெதிரே இருக்கிறது... நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்....கண்ணை திறந்து....பார்ப்பது மட்டுமே.....
என்னடா விளம்பரத்தில் ஆரம்பித்து... எங்கேயோ போய்விட்டானே.. என்றுதானே நினைக்கிறீர்கள்...இல்லை இல்லை...இதோ..கீழே இருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள்...இதை உருவாக்கியவரின் கிரியேட்டிவிட்டியின் மூலம் இந்தப்படங்களின் உயிர்ப்பு...உங்களை நிச்சயமாய்....சிறிதளவேனும் சந்தோசம் கொள்ளச் செய்யும்...
மீண்டும் எச்சரிக்கிறேன்...ஆராயாமல்...அர்த்தங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.
....
....
....
......


2 நிமிசம் கொடுத்துதான் பாப்போமே..ன்னு தோணுதுல்ல....









உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கிகொள்ளுங்கள் நண்பர்களே....உங்களின் மகிழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்!
தேவா. S
Comments
..... நான் சொல்ல வந்ததை, அருமையாக சொல்லி விட்டீர்கள். சுற்றியுள்ள விஷயங்களில் பிரச்சனைகளை மட்டும் focus பண்ணி கொண்டு இருந்தால், வாழ்க்கை சலிக்கத் தான் செய்யும். சிரிக்க, சந்தோஷமாக இருக்க ஆயிரம் இருந்தும், ஒரே ஒரு காரணத்துக்காக கவலையுடன் சோர்ந்து இருப்பவர்களுக்கு உங்கள் இடுகை பயனுள்ளதாக இருக்கும்.
விளம்பரங்களும், எனக்கு பல புதிது. வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.
மரங்கள் எல்லாம் வெட்டபட்டால்......நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.
\மிச்சம் குளோசா அர்த்தம் சொல்றிங்க//
வாழ்த்துக்கள் ...........
அந்த விளம்பரங்கள் வித்யாசமானது மட்டுமல்ல சிந்திக்க வைப்பதும் தான்
தங்களின் சிந்தனையும் வித்யாசமானதுதான்
வாழ்க்கை வித்யாசமாக வாழ்வதற்கே :) ஹா ஹா
செளந்தர்... நல்லா இருக்கியாப்பு...!