Skip to main content

வார்த்தைகளற்ற...வார்த்தைகள்....!
























அலுத்துதான்.. போகிறது...
வார்த்தைகளின்இரைச்சலை
நித்தம்...கேட்டு கேட்டு...
சப்தங்கள் இல்லா...
என் தனியுலகத்திற்குள்...
ஏன் அத்து மீறி.. நுழைகின்றன...?
தத்துவங்களும்..விளக்கங்களும்...

எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?

இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!
விவரிக்கும் ஆசையில்...
நான் மட்டும்...
ஏன் சிக்கவேண்டும்...
சப்தங்களின்... நெரிசலுக்குள்!

எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

எப்படி பார்த்தாலும் எழுத்தாக்கும் முயற்சியும்...சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியும் பயனற்றது. ஓரயிரம் முறை முயன்று...ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தாலும் அது அவ்வளவு எளிதாய் நடந்து விடுவது இல்லை அப்படியே அது நிகழ்ந்தாலும் அது புரிந்து கொள்பவரின் பக்குவ நிலைக்கு ஏற்ப வேறு ஒரு தளத்தில் தான் விளங்கிக் கொள்ளப்படுதிறது.

சென் கதையில் சொல்வது போல ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை..... என் உணர்தலை உங்களிடம் விளக்குவது சாத்தியமில்லை...அல்லது நீங்கள் போய் அந்த ரோஜாவை பார்த்து உணர்தால் சரியான விடயமாக இருக்கும். நீங்கல் நேரே பார்க்கும் போது உங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அது உங்களை வசிகரீக்கமலும் போகலாம்...

இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ.....சரி....சரி..... நான் மேலும் மேலும் ஏதேதொ எழுதி...உங்களை குழப்ப விரும்பவில்லை..உங்களின் அறிவின் நிலைக்கேற்ப விளங்கிகொள்ளுங்கள்...இந்த பதிவில் எந்த வலியுறுத்தலும் இல்லை.....! ஒரு மெல்லிய காற்று வீசியது...போல அவ்வளவே....!


தேவா. S

Comments

///இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!///

;;))) arumai ...!
Dr.Rudhran said…
காதுகளை அடைத்துக் கொள்வதைவிட கண்களை மூடிக் கொள்வது சுலபம்.
வாழ்த்துகள்.
VELU.G said…
//
எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?
//

super
ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை...

இது முட்ரிலும் உண்மை
Unknown said…
சொலுங்க தல.

எவ்ளோ ஒரு நல்ல விசயத்தை சொல்லி இருக்கீங்க
Chitra said…
எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!


.... nice one.

இன்னைக்கு நான் லேட் attendance போட்டுருக்கேன். சாரி.
இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!


அருமை நண்பரே உண்மைதான்.
இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது

அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ


முற்றிலும் உண்மை
இந்த அழமான வரிகள் ஒளிந்து இருந்தது நான் எடுத்து வந்து விட்டேன் உங்களுக்காக
Mohamed Faaique said…
நல்லாயிருக்கு அண்ணா..
ஏன் எப்பொழுதும் விரக்தி அடைந்தது போல் அலுத்கிறீர்கள்..
dheva said…
திரட்டியில் இணைக்கப்படாமலிருந்த பழைய இடுகையை தூசு தட்டி எடுத்து எல்லோர் பார்வைக்கும் கொண்டு வந்த தம்பி செளந்தருக்கு நன்றிகள்...!
Jey said…
பங்காளி நல்லாருக்கு...:)
க ரா said…
என்னத்த சொல்ல... அருமைண்ணே... நீங்க ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க :)
Anonymous said…
ஏதோ ஒரு எண்ணக் கதவு திறந்துகொண்டது அண்ணா!
A Special Thanks to Soundar :)
TH said…
சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

Dear DEVA
NAAM PESIKKONTATHU
Anonymous said…
சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

DEAR DEVA
SUPER.........

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...