
தொலைந்து போன நாட்களை...
நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்....
மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...
வருகிறது மனிதாபிமானம்...
இன்னும் ஒரு நாள் விடியட்டும்...
அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....
மதங்களின் போர்வை...
சுற்றிய மனிதர்கள்....!
சுய நலத்தை போர்வையாக்கிய
அரசியல்வாதிகள்...
காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்...
கெளவரவத்திற்கா ஓட்டுபோடத...
ஒரு படித்த கூட்டம்...
புறக்கணிப்பதாய் சொல்லி...
ஒதுங்கும் ஒரு கூட்டம்....
இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல்
கடைசி வீட்டுத் தாத்தாவின்
துருப்பிடித்த சைக்கிள்...
அடுத்த மழைக்குள்ளாவது
கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....
இரண்டுமே...
இந்திய வல்லரசு கனவு போல...!
உச்சிவெயில்...குண்டும் குழியுமான
என் கிராமத்து தார்ச் சாலை
மந்திரி வருக்கைக்காக
ஏழை வீட்டு மணபெண்ணாய்...
அலங்கரித்துக் கொள்கிறது....!
தெருவோர டீக்கடையில்...
ஒரு குவளை டீ குடித்து
உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...!
பழைய துணிபோட்டு...
பக்கெட் வாங்கும் அம்மணிகள்...
அம்மணமான குழந்தைகள்
துணி இல்லாமல்...
குடிசைகளின் ஓரங்களில்!
சீமான்களின் மீதமான உணவுகள்...
குப்பைத்தொட்டிக்கு போகாமல்...
என்று தான் நேராய்...
ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?
ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...
அடுத்தவேளை...
சோறில்லாமல் ஒரு கூட்டமும்...!
இப்படித்தான் சமத்துவம்...
சமாதியாயிருக்கிறது!
எல்லா முரண்பாடுகளுடன்...
என் மூளை மட்டும்
ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....
புரட்சியாய் என்னுள்...
உதிக்கும் எண்ணங்கள் எல்லஅம்....
பூமியை அடைவதற்கு முன்
அணையும் விண்வெளி கற்கள் போல...
செயலாவதற்கு முன் அழிந்து போகிறது...!
கற்ற கல்வியும்...
படித்த புத்தங்கங்களும்...
மக்களை விழிப்புணர்வு செய்ய...
முயன்று முயன்று...கடைசியில்...
முனை மழுங்கிய கத்தியாய்....!
மனிதர்கள் தங்களின்...
கோபங்களிலாலேயே... கொல்கிறார்கள்...
மனித நேயத்தை....!
நல்ல வீணைகள் எல்லாம்...
இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...
சுடர்மிகு அறிவுகள் எல்லாம்
இன்று முட்டாள்களின்...
கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!
சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!
பணம் உள்ளவர்களுக்கு அந்த பணமே...மேலும் மேலும் பணத்தை சம்பாரித்துக் கொடுப்பதால் ஏழைகளின் முன்னேற்றம் என்பது மிகக்கடினமாகவே இருக்கிறது. வெறும் காலோடு ஓடுபவனுக்கும் ஷு அணிந்து ஓடுபவர்களுகும் வித்தியாசம் இருக்கிறது. நாம் வேண்டுமானால் திரு.அப்துல்கலாமை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அவர் மேலே வரவில்லையா என்று இன்றைய கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவர்களை கேட்கலாம்....ஆனால் இத்தனை காலங்களில் ஒரு அப்துல் கலாமைத்தான் நாம் உதாரணம் காட்ட முடியும்....அவரும் மேல் தளத்திற்கு வர என்ன பாடுப்பட்டார் என்பதை அவரது அக்னி சிறகுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் மலர...இலவசமாய் பொருட்கள் வழங்கி மக்களை...சோம்பேறிகள் ஆக்காமல்... ஆக்கப்பூர்வமான தொழில் செய்யும் வாய்ப்புகள், மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கலாம்...! உழைத்து சம்பாதிக்கும் ஒருவன் அவன் சொந்தக் காசில் டி.வி. வாங்க மாட்டானா? அரசு தயவு செய்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்குவதை நிறுத்தி அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்வாதாரங்களைத் தொலைத்தவர்களுக்கு கடுமையான பரிசீலனக்குப் பின் இலவசமான உதவிகள் செய்யலாம்.
என்று எம்மக்கள் ஓட்டுகளுக்கு காசு வாங்காமல்......வாக்குச்சாவடிக்கு செல்கிறார்களோ அன்றுதான் ஒரு உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகும்....!
தேவா . S
நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்....
மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...
வருகிறது மனிதாபிமானம்...
இன்னும் ஒரு நாள் விடியட்டும்...
அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....
மதங்களின் போர்வை...
சுற்றிய மனிதர்கள்....!
சுய நலத்தை போர்வையாக்கிய
அரசியல்வாதிகள்...
காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்...
கெளவரவத்திற்கா ஓட்டுபோடத...
ஒரு படித்த கூட்டம்...
புறக்கணிப்பதாய் சொல்லி...
ஒதுங்கும் ஒரு கூட்டம்....
இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல்
கடைசி வீட்டுத் தாத்தாவின்
துருப்பிடித்த சைக்கிள்...
அடுத்த மழைக்குள்ளாவது
கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....
இரண்டுமே...
இந்திய வல்லரசு கனவு போல...!
உச்சிவெயில்...குண்டும் குழியுமான
என் கிராமத்து தார்ச் சாலை
மந்திரி வருக்கைக்காக
ஏழை வீட்டு மணபெண்ணாய்...
அலங்கரித்துக் கொள்கிறது....!
தெருவோர டீக்கடையில்...
ஒரு குவளை டீ குடித்து
உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...!
பழைய துணிபோட்டு...
பக்கெட் வாங்கும் அம்மணிகள்...
அம்மணமான குழந்தைகள்
துணி இல்லாமல்...
குடிசைகளின் ஓரங்களில்!
சீமான்களின் மீதமான உணவுகள்...
குப்பைத்தொட்டிக்கு போகாமல்...
என்று தான் நேராய்...
ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?
ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...
அடுத்தவேளை...
சோறில்லாமல் ஒரு கூட்டமும்...!
இப்படித்தான் சமத்துவம்...
சமாதியாயிருக்கிறது!
எல்லா முரண்பாடுகளுடன்...
என் மூளை மட்டும்
ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....
புரட்சியாய் என்னுள்...
உதிக்கும் எண்ணங்கள் எல்லஅம்....
பூமியை அடைவதற்கு முன்
அணையும் விண்வெளி கற்கள் போல...
செயலாவதற்கு முன் அழிந்து போகிறது...!
கற்ற கல்வியும்...
படித்த புத்தங்கங்களும்...
மக்களை விழிப்புணர்வு செய்ய...
முயன்று முயன்று...கடைசியில்...
முனை மழுங்கிய கத்தியாய்....!
மனிதர்கள் தங்களின்...
கோபங்களிலாலேயே... கொல்கிறார்கள்...
மனித நேயத்தை....!
நல்ல வீணைகள் எல்லாம்...
இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...
சுடர்மிகு அறிவுகள் எல்லாம்
இன்று முட்டாள்களின்...
கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!
சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!
பணம் உள்ளவர்களுக்கு அந்த பணமே...மேலும் மேலும் பணத்தை சம்பாரித்துக் கொடுப்பதால் ஏழைகளின் முன்னேற்றம் என்பது மிகக்கடினமாகவே இருக்கிறது. வெறும் காலோடு ஓடுபவனுக்கும் ஷு அணிந்து ஓடுபவர்களுகும் வித்தியாசம் இருக்கிறது. நாம் வேண்டுமானால் திரு.அப்துல்கலாமை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அவர் மேலே வரவில்லையா என்று இன்றைய கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவர்களை கேட்கலாம்....ஆனால் இத்தனை காலங்களில் ஒரு அப்துல் கலாமைத்தான் நாம் உதாரணம் காட்ட முடியும்....அவரும் மேல் தளத்திற்கு வர என்ன பாடுப்பட்டார் என்பதை அவரது அக்னி சிறகுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் மலர...இலவசமாய் பொருட்கள் வழங்கி மக்களை...சோம்பேறிகள் ஆக்காமல்... ஆக்கப்பூர்வமான தொழில் செய்யும் வாய்ப்புகள், மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கலாம்...! உழைத்து சம்பாதிக்கும் ஒருவன் அவன் சொந்தக் காசில் டி.வி. வாங்க மாட்டானா? அரசு தயவு செய்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்குவதை நிறுத்தி அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்வாதாரங்களைத் தொலைத்தவர்களுக்கு கடுமையான பரிசீலனக்குப் பின் இலவசமான உதவிகள் செய்யலாம்.
என்று எம்மக்கள் ஓட்டுகளுக்கு காசு வாங்காமல்......வாக்குச்சாவடிக்கு செல்கிறார்களோ அன்றுதான் ஒரு உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகும்....!
தேவா . S
Comments
...... பலரின் மனங்களில் இதே உணர்வுதான்.