Skip to main content

சமத்துவ கனவு!

தொலைந்து போன நாட்களை...
நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்....
மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...
வருகிறது மனிதாபிமானம்...
இன்னும் ஒரு நாள் விடியட்டும்...
அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....

மதங்களின் போர்வை...
சுற்றிய மனிதர்கள்....!
சுய நலத்தை போர்வையாக்கிய
அரசியல்வாதிகள்...
காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்...
கெளவரவத்திற்கா ஓட்டுபோடத...
ஒரு படித்த கூட்டம்...
புறக்கணிப்பதாய் சொல்லி...
ஒதுங்கும் ஒரு கூட்டம்....
இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல்

கடைசி வீட்டுத் தாத்தாவின்
துருப்பிடித்த சைக்கிள்...
அடுத்த மழைக்குள்ளாவது
கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....
இரண்டுமே...
இந்திய வல்லரசு கனவு போல...!

உச்சிவெயில்...குண்டும் குழியுமான
என் கிராமத்து தார்ச் சாலை
மந்திரி வருக்கைக்காக
ஏழை வீட்டு மணபெண்ணாய்...
அலங்கரித்துக் கொள்கிறது....!
தெருவோர டீக்கடையில்...
ஒரு குவளை டீ குடித்து
உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...!

பழைய துணிபோட்டு...
பக்கெட் வாங்கும் அம்மணிகள்...
அம்மணமான குழந்தைகள்
துணி இல்லாமல்...
குடிசைகளின் ஓரங்களில்!
சீமான்களின் மீதமான உணவுகள்...
குப்பைத்தொட்டிக்கு போகாமல்...
என்று தான் நேராய்...
ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?
ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...
அடுத்தவேளை...
சோறில்லாமல் ஒரு கூட்டமும்...!
இப்படித்தான் சமத்துவம்...
சமாதியாயிருக்கிறது!

எல்லா முரண்பாடுகளுடன்...
என் மூளை மட்டும்
ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....
புரட்சியாய் என்னுள்...
உதிக்கும் எண்ணங்கள் எல்லஅம்....
பூமியை அடைவதற்கு முன்
அணையும் விண்வெளி கற்கள் போல...
செயலாவதற்கு முன் அழிந்து போகிறது...!

கற்ற கல்வியும்...
படித்த புத்தங்கங்களும்...
மக்களை விழிப்புணர்வு செய்ய...
முயன்று முயன்று...கடைசியில்...
முனை மழுங்கிய கத்தியாய்....!
மனிதர்கள் தங்களின்...
கோபங்களிலாலேயே... கொல்கிறார்கள்...
மனித நேயத்தை....!
நல்ல வீணைகள் எல்லாம்...
இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...
சுடர்மிகு அறிவுகள் எல்லாம்
இன்று முட்டாள்களின்...
கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!



சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!

பணம் உள்ளவர்களுக்கு அந்த பணமே...மேலும் மேலும் பணத்தை சம்பாரித்துக் கொடுப்பதால் ஏழைகளின் முன்னேற்றம் என்பது மிகக்கடினமாகவே இருக்கிறது. வெறும் காலோடு ஓடுபவனுக்கும் ஷு அணிந்து ஓடுபவர்களுகும் வித்தியாசம் இருக்கிறது. நாம் வேண்டுமானால் திரு.அப்துல்கலாமை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அவர் மேலே வரவில்லையா என்று இன்றைய கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவர்களை கேட்கலாம்....ஆனால் இத்தனை காலங்களில் ஒரு அப்துல் கலாமைத்தான் நாம் உதாரணம் காட்ட முடியும்....அவரும் மேல் தளத்திற்கு வர என்ன பாடுப்பட்டார் என்பதை அவரது அக்னி சிறகுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் மலர...இலவசமாய் பொருட்கள் வழங்கி மக்களை...சோம்பேறிகள் ஆக்காமல்... ஆக்கப்பூர்வமான தொழில் செய்யும் வாய்ப்புகள், மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கலாம்...! உழைத்து சம்பாதிக்கும் ஒருவன் அவன் சொந்தக் காசில் டி.வி. வாங்க மாட்டானா? அரசு தயவு செய்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்குவதை நிறுத்தி அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்வாதாரங்களைத் தொலைத்தவர்களுக்கு கடுமையான பரிசீலனக்குப் பின் இலவசமான உதவிகள் செய்யலாம்.

என்று எம்மக்கள் ஓட்டுகளுக்கு காசு வாங்காமல்......வாக்குச்சாவடிக்கு செல்கிறார்களோ அன்றுதான் ஒரு உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகும்....!


தேவா . S

Comments

Chitra said…
சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!

...... பலரின் மனங்களில் இதே உணர்வுதான்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...