Skip to main content

வன்முறை...



கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?

***

திறந்த வீட்டினுள்...
நுழையும் எதோ...போல...
செடியின் அனுமதியின்றி....
மலர்கொய்யும் போது...
மனம் சொல்லவில்லையா...
இது அத்துமீறல் என்று?

***

மனம் திறந்து ...
பேசிடும் பேச்சாய்....
வானம் மேகமுடைத்து...
பெய்யும் மழை மறுத்து..
கதவடைக்கும் கணங்களில்...
தோன்றவில்லையா...
உங்களின் சுய நலம்!

***
ஒவ்வொரு முறை....
மரம் களையும் போதும்...
புரிந்ததில்லையா.....
உங்களுக்கு....பூமித்தாயின்
கையிலிருக்கு குழந்தையைத்தான்...
கொல்கிறீர்களென்று!

***

நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!

***

குருடர்களாய்...
கவனிப்பதில்லை...
நம் அன்றாட அத்துமீறல்களை...
என்றுதான் நிறுத்தப்போகிறோம்...
வசதியாய் நாம் மறந்திருக்கும்..
இந்த வன்முறைகளை......!


பொதுப்புத்தி என்ன கற்பித்திருக்கிறது...வன்முறை என்றால் வெடிகுண்டு வைப்பதும்...உயிர்ச்சேதம் விளைவிப்பதும்...பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுதான் வன்முறை என்பது...இவை எல்லாம் நாம் உணர்ந்த வன்முறைகள் அறிந்த வன்முறைகள். அறியாமல் இவை எல்லாம் வன்முறை அல்ல என்று நாம் உணராமல் செய்யும் ஏராளமான செயல்களில் வன்முறை இருப்பதை மிகைப்பட்ட மனிதர்கள் உணருவதில்லை.

கொஞ்சம் பைத்தியகாரத்தனமாய்த்தான் சராசரி ஓட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த கவிதையும், விளக்கங்களும் இருக்கும்...ஏளனம் செய்ய... நிறைய காரணஙக்ள் கூட இருக்கலாம்..... நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம்....கண்களால் இந்த பதிவை படிக்காமல் மனதால் படித்துப்பாருங்கள்... ஒரு வேளை... நான் சொல்ல வரும் உண்மையை நீங்கள் உணரலாம்!


தேவா. S

Comments

அடடா... அருமை தேவா

மனதால் படிப்பது அவ்வளவு எளிதா என்ன?
Chitra said…
நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!


......தேவா ........ கவிதையில் கருத்து அனல் பறக்கிறது. பாராட்டுக்கள்!
//கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?
//
தேவா.. ஆரம்பமே அமர்க்களம்.. வன்முறை அத்துமீறல்களை... அழகா எடுத்து காத்திருக்கீங்க..
வாழத்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...