Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I I


ஏதோ... சொந்த கதையை நான் சொல்வதற்காக இந்த பதிவை தொடராக இடவில்லை... அந்த அளவுக்கு பிரபலமானவனுமல்ல...அதானால் மிகைப்பட்டவர்களுக்கு அதீத ஆர்வம் எடுபட வாய்ப்பும் இல்லை....மிக முக்கியமான காரணம் என்னவென்றால்.....இது சமகாலத்தில் நடக்கும் பிரச்சினை அல்ல.. மேலும் முழுக்க முழுக்க....வாழ்வியலும், வாழ்வில் மிகைப்பட்டவர்கள் நினைக்கவே மறுக்கும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி....சரி... நாம் மேற்கொண்டு நகர்வோம்.....

இதுவரை..

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html

பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html


இனி....

இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று அந்த உடல் இருக்கிறது...மீதி எல்லாம் எங்கே...எங்கே....எங்கே? இது ஒரு பக்கம் என்றால்....

உயிரோடு இருந்த போது அந்த மனிதர் பிரச்சினைகளோடு வாழ்ந்த போது வாயளவில் ஆறுதல் கூட வக்கில்லாத...மானுட கூட்டம்...எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று ஓடி ஒளிந்த மனிதர்கள்...இன்று குய்யோ முறையோ என்று அழுது கொண்டு....ஏன் உயிரோடு இருந்த போது ஏன் இந்த பச்சாதாபம் உஙகளிடம் இல்லை?

இந்த இடத்தில் ஒரு முக்கிய மான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!


....இரவு நகர்ந்து செல்ல....மெல்ல மெல்ல சென்னை சோம்பல் முறித்து எழுந்தது..... அதிகாலை சென்னையில் சேவலின் கூவலில்லா குறையை...ஆட்டோ சைரன்கள் போக்கிவிடும். நேரம் நகரத்துவங்கி உச்சியையும் தாண்டிவிட்டது.....12 மணிக்கு சொன்னார்கள்....பரிசோதனை செய்கிறார்கள் என்று.....1:30க்கு சொன்னார்கள் முடிந்து விட்டது என்று....2:30 மணிக்கு வெள்ளை பொட்டலமாய்....மாமவின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் எல்லாம் காரிலும்...ஆட்டோவிலும் வீடு நோக்கி ( நந்தனம் சிக்னல் அருகே....) விரைய... என்னோடு சேர்த்து ஒரு 10 பேர் அங்கே நின்றோம்...! அமரர் ஊர்தியி... மாமாவின் உடல் ஏற்றப்படது....அன்றுதான் அமரர் ஊர்தியின் உள் அமைப்பை பார்த்தேன்..ஒரு பக்கம் மட்டும் நீளவாக்கில் இருக்கை....இருந்தது... மீதி இருந்த ஊர்தியின் தரைப்பகுதியில்.. ..உடல் வைக்கப்படது. 10 பேரில் 6 பேர் ஆட்டோ பிடித்து சென்று விட....

நான் அமரர் ஊர்தியினுள் ஏற எத்தனிக்க.....என் தந்தை ஒரு நிமிடம் என் தோள் தொட்டு மெளனமாய் எனைத்தடுக்க... நானு அதை தடுத்து ஏறியதை பார்த்து...அப்பாவும்.....சித்தப்பாவும் என் கூட ஏறி அமர்ந்தார்கள்....அமரர் ஊர்தி மெல்ல நகர ஆரம்பித்தது....பரபரப்பான சென்னை நகரின் சாலைகள் வழியே.......!


தேவா. S


(தொடரும்.....)

Comments

Chitra said…
உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!


....... வாழ்வே மாயம் என்ற தலைப்புக் கேற்ற கருத்துக்கள். எல்லோரும் இப்படி புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டால், கவலை ஏது? பின்னணி பாட்டும் பொருத்தம்.
யாரும் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. இதை அனைவரும் உணர்ந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்??
இன்று தான் உங்கள் பக்கம் வந்தேன்போலும்.......திறந்ததும் பாடும் பாடல் கனவு காணும் வாழ்க்கை யாவும்........இசையும் கதையும் கேட்பது போன்ற உணர்வு. நன்றாக் வாழ்க்கையை அசை போட்டு எழுதுகிறீர்கள் மீதி ரண்டு பாகமும் வசிக்க வில்லை வாசித்து விட்டு வருகிறேன். பாராடுக்கள் அருமையான் எழுத்தோட்டம்.
dheva said…
நன்றி...சித்ரா...உங்களின் தொடர்ச்சியான வருகையும் கருத்துகளுக்கும் நன்றி....! உங்களோட..பதிவுகள் கூட எல்லாமே...ரொம்ப அருமைங்க.....!
dheva said…
ரொம்ப நன்றி மாப்ஸ்.....வில்சன்!
dheva said…
vaangha.... nilaamathi....unghaLin muthal varukaikku mikka nanRi..! thodarnthu pinnuuttamidunghaL......!
dheva said…
வாங்க.... நிலாமதி....உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி..! தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்......!
Balaji.D.R said…
நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் நிறைய மரணத்தை சந்திக்கிறோம். இருந்தும் மிகச்சிலரே அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள். அச்சிலரில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்
//உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும்//

ரொம்ப சரியான... எல்லாரும் கட்டாயமா செய்ய வேண்டிய விஷயம்..

சில சமயங்கள்ல.. ஆறுதலா சொல்ற ஒரு வார்த்தை எவ்வளவோ.. உதவியா இருக்கும்..
எழுதிய விதம் பிடித்துள்ளது..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...