
சில நேரங்களில் வாழ்வின் சில பகுதிகள் இறுக்கமாய் நம்முள் பதிந்து....ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு கொடுக்கும்...புறத்தில் அது ஏதோ பெரிய.. இழப்பைப் போல் இருந்தாலும் அது புதிய விசயங்களின் பிறப்பாய்த்தான் இருக்கும்...
இதுவரை...
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html
அப்படித்தான் ஆகிப்போனது எனக்கும்...ஒரு இறப்பில் ஓராயிரம் புதிய விசயங்கள் என்னுள் பிறந்தன....சரி....ஊர்தியோடு சேர்ந்து நாமும் ஊர்வோம்.............
இனி....
அமரர் ஊர்தியின் உள்ளே இருந்த எனக்கு தலை மெதுவாக சுற்றத் துவங்கியது.. உள்ளே உடலின் அருகே இருந்த...எனக்கு...அசைவற்ற.. சலனமற்ற... மாமாவின் உடலை பார்க்கும் போது...அந்த உடல் உடுத்தி உண்டு.... சிரித்து... அலங்கரித்து...விளையாடி.... வாழ்வின் எல்லா பூரிப்புகளையும் அனுபவித்து...கவலைகளில் கலங்கி..எத்தனை எத்தனை ஆட்டங்கள்....!
அவரது திருமணம் நடந்த சமயம் என் நினைவில் வந்தது...அத்தனை சிறப்பாய்....அந் நாள் அ.தி.மு.க அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தேறியது.....வாழ்வில் எத்தனை குதுகலங்கள்......இன்று.. அந்த சம்பவங்களுக்கு எல்லாம் எந்த வித சம்பந்தமும் எனக்கில்லை என்னுள் இருந்து அனுபவித்ததது ஏதோ வேறு ஒன்று நாங்கள் வெறும் கருவிதான் என்று உடலின் பாகங்கள் எல்லாம்... வெறும் கட்டையைப் போல கிடந்தன......!
நிலையாமையின் உச்சத்தில் அமர்ந்திருந்த எனக்கு...உலகோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.. எனக்குள் எந்த எண்ணங்களும் ஏற்படவில்லை..சுற்றி இருந்தவர்களை பார்த்த போது அவர்கள் தலைகளை திருப்பி.....வெளிப்புறமாக பார்த்துக்கொண்டு உள்ளிருக்கும் சூழ் நிலையிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வாகனம் இராயப்பேட்டையிலிருந்து டாக்டர். ராதகிருஷ்ணண் சலை வழியே சென்று கொண்டிருந்தது.... நான் வெளி நோக்கி பார்வையை செலுத்தினேன்....
ஆச்சர்யத்திலும் ஆச்சர்யாமாய் வெளியில் உள்ள எந்த நிகழ்ச்சியோடும் என் மனது தொடர்பு கொள்ளவில்லை அதாவது கண்கள் கண்ட காட்சியினை மனம் விவரித்து பார்க்கவில்லை. ஸ்கூட்டரிலும், பைக்கிலும்..பேருந்திலும்.... நடை பாதையிலும் மக்கள் ...மக்கள்...மக்கள்....சுற்றிலும் மனிதர்கள்....ஆனால் அத்தனை பேரும் பொம்மைகளாய் எனது கண்ணுக்கு காட்சியளித்தார்கள்.
அனைவரின் உடலும்..ஏதோ காரியமாக பொம்மைகளாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. இந்த உடலை எல்லாம் உருவமில்லா ஏதோ ஒன்று...ஆட்டுவிப்பது போல தெரிந்தது...எல்லாம் போலியாய் பட்டது. ஏதோ ஒரு மாயையில் தனக்கும் தன்னை சுற்றியும் சில நியாயங்களை உருவாக்கி கொண்டு ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருப்பாதாய் பட்டது.
எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?
எல்லா நியதிகளும் மனிதர்கள் தங்களின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டது....அந்த நியதிகளே மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வாழ்வாதாரங்களையும் தகர்க்கும் என்றால் அப்படிப்பட்ட நியதிகளின் அவசியமே நமக்கு தேவையில்லைதானே? சாதாரணனின் இந்த எண்ணங்கள் சரியா தவறா? என்று கூட மனிதர்கள் வாதிடலாம்....
மிக நீண்ட பயணமாகத்தான் எனது இந்த அமரர் ஊர்தியின் பயணம் இருந்தது....மெளனத்தால் நிரம்பிய அர்த்தங்கள் நிறைந்த ஒரு பயணம்....
வீடு வந்தது......வாகனத்தில் இருந்து கூட்டத்தை பிளந்து... நாங்கள் இறங்கினோம்....!கூட்டம் குய்யோ முறையோ என்று கதறியது......உடல் கீழே இறக்கி வீட்டுக்குள் கொண்டு செல்ல எத்தனிக்கப்படது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு உறவினர் அடித்தொண்டையிலிருந்து கத்தினார்...
" வீட்டுக்குள்ல உடம்ப கொண்டு போகாதீங்கப்பா......" நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்......
தேவா. S
(தொடரும்...)
Comments
........ சரியாக சொல்லி இருக்கிறீங்க. எனக்கு தெரிந்தவர் ஒருவர், வேலை வேலை என்று இருப்பார். " இப்போ சம்பாதிக்கிற வயது. retirement ஆனப்புறம் என்ன செய்ய போறேன்? நல்லா life என்ஜாய் பண்ணிக்கிறேன்" என்பார். இப்பொழுது, blood pressure முதல் பல ஆரோக்கிய பிரச்சினைகள். கவனம் குறைந்தால், heart-attack வரும் அளவுக்கு உள்ள உடல் நலத்துடன் கவலையுடன் வாழ்க்கையில் இருக்கிறார். அவருக்கு வயது ரொம்ப குறைவுதான்.
மனதில் பதிந்த வரிகள்.. எழுத்துப் பணி தொடரட்டும்..