Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I V











சில நேரங்களில் வாழ்வின் சில பகுதிகள் இறுக்கமாய் நம்முள் பதிந்து....ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு கொடுக்கும்...புறத்தில் அது ஏதோ பெரிய.. இழப்பைப் போல் இருந்தாலும் அது புதிய விசயங்களின் பிறப்பாய்த்தான் இருக்கும்...

இதுவரை...

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html

அப்படித்தான் ஆகிப்போனது எனக்கும்...ஒரு இறப்பில் ஓராயிரம் புதிய விசயங்கள் என்னுள் பிறந்தன....சரி....ஊர்தியோடு சேர்ந்து நாமும் ஊர்வோம்.............

இனி....

அமரர் ஊர்தியின் உள்ளே இருந்த எனக்கு தலை மெதுவாக சுற்றத் துவங்கியது.. உள்ளே உடலின் அருகே இருந்த...எனக்கு...அசைவற்ற.. சலனமற்ற... மாமாவின் உடலை பார்க்கும் போது...அந்த உடல் உடுத்தி உண்டு.... சிரித்து... அலங்கரித்து...விளையாடி.... வாழ்வின் எல்லா பூரிப்புகளையும் அனுபவித்து...கவலைகளில் கலங்கி..எத்தனை எத்தனை ஆட்டங்கள்....!


அவரது திருமணம் நடந்த சமயம் என் நினைவில் வந்தது...அத்தனை சிறப்பாய்....அந் நாள் அ.தி.மு.க அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தேறியது.....வாழ்வில் எத்தனை குதுகலங்கள்......இன்று.. அந்த சம்பவங்களுக்கு எல்லாம் எந்த வித சம்பந்தமும் எனக்கில்லை என்னுள் இருந்து அனுபவித்ததது ஏதோ வேறு ஒன்று நாங்கள் வெறும் கருவிதான் என்று உடலின் பாகங்கள் எல்லாம்... வெறும் கட்டையைப் போல கிடந்தன......!

நிலையாமையின் உச்சத்தில் அமர்ந்திருந்த எனக்கு...உலகோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.. எனக்குள் எந்த எண்ணங்களும் ஏற்படவில்லை..சுற்றி இருந்தவர்களை பார்த்த போது அவர்கள் தலைகளை திருப்பி.....வெளிப்புறமாக பார்த்துக்கொண்டு உள்ளிருக்கும் சூழ் நிலையிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வாகனம் இராயப்பேட்டையிலிருந்து டாக்டர். ராதகிருஷ்ணண் சலை வழியே சென்று கொண்டிருந்தது.... நான் வெளி நோக்கி பார்வையை செலுத்தினேன்....

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யாமாய் வெளியில் உள்ள எந்த நிகழ்ச்சியோடும் என் மனது தொடர்பு கொள்ளவில்லை அதாவது கண்கள் கண்ட காட்சியினை மனம் விவரித்து பார்க்கவில்லை. ஸ்கூட்டரிலும், பைக்கிலும்..பேருந்திலும்.... நடை பாதையிலும் மக்கள் ...மக்கள்...மக்கள்....சுற்றிலும் மனிதர்கள்....ஆனால் அத்தனை பேரும் பொம்மைகளாய் எனது கண்ணுக்கு காட்சியளித்தார்கள்.


அனைவரின் உடலும்..ஏதோ காரியமாக பொம்மைகளாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. இந்த உடலை எல்லாம் உருவமில்லா ஏதோ ஒன்று...ஆட்டுவிப்பது போல தெரிந்தது...எல்லாம் போலியாய் பட்டது. ஏதோ ஒரு மாயையில் தனக்கும் தன்னை சுற்றியும் சில நியாயங்களை உருவாக்கி கொண்டு ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருப்பாதாய் பட்டது.


எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?

எல்லா நியதிகளும் மனிதர்கள் தங்களின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டது....அந்த நியதிகளே மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வாழ்வாதாரங்களையும் தகர்க்கும் என்றால் அப்படிப்பட்ட நியதிகளின் அவசியமே நமக்கு தேவையில்லைதானே? சாதாரணனின் இந்த எண்ணங்கள் சரியா தவறா? என்று கூட மனிதர்கள் வாதிடலாம்....

மிக நீண்ட பயணமாகத்தான் எனது இந்த அமரர் ஊர்தியின் பயணம் இருந்தது....மெளனத்தால் நிரம்பிய அர்த்தங்கள் நிறைந்த ஒரு பயணம்....

வீடு வந்தது......வாகனத்தில் இருந்து கூட்டத்தை பிளந்து... நாங்கள் இறங்கினோம்....!கூட்டம் குய்யோ முறையோ என்று கதறியது......உடல் கீழே இறக்கி வீட்டுக்குள் கொண்டு செல்ல எத்தனிக்கப்படது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு உறவினர் அடித்தொண்டையிலிருந்து கத்தினார்...

" வீட்டுக்குள்ல உடம்ப கொண்டு போகாதீங்கப்பா......" நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்......


தேவா. S



(தொடரும்...)

Comments

தற்கொலை என்பது கோழைத்தனம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்து மீண்டும் மீண்டும் உற்றாரை காயப்படுத்துகிறார்கள்.
Chitra said…
எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?

........ சரியாக சொல்லி இருக்கிறீங்க. எனக்கு தெரிந்தவர் ஒருவர், வேலை வேலை என்று இருப்பார். " இப்போ சம்பாதிக்கிற வயது. retirement ஆனப்புறம் என்ன செய்ய போறேன்? நல்லா life என்ஜாய் பண்ணிக்கிறேன்" என்பார். இப்பொழுது, blood pressure முதல் பல ஆரோக்கிய பிரச்சினைகள். கவனம் குறைந்தால், heart-attack வரும் அளவுக்கு உள்ள உடல் நலத்துடன் கவலையுடன் வாழ்க்கையில் இருக்கிறார். அவருக்கு வயது ரொம்ப குறைவுதான்.
//தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன்.//

மனதில் பதிந்த வரிகள்.. எழுத்துப் பணி தொடரட்டும்..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...