Skip to main content

எச்சில் பொழுதுகள்...!
















எச்சில் பொழுதுகளாய்...
விடிகிறது...எமது
இலவச வாழ்க்கை!
வாக்களிக்கும்...
பொழுதுகளிலாவது..
மூன்று வேளை
உண்ண..எண்ணி..
கை நீட்டச்...சொல்கிறது மனம்!

கும்பிட்டு...கும்பிட்டு...
அழிந்து போனது..
எமது ரேகைகள்.....
'வாழ்க' விற்கும்...
'ஒழிக' விற்கும்...
இடையில்...ஒளிந்து
விளையாடிகொண்டிருக்கிறது...
எமது வாழ்க்கை!

கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!

கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?
கறை வேஷ்டிகளால்....
கரை தட்டி...நிற்கிறது...
எம் வாழ்க்கை...!
எங்கே இருக்கிறாய்? மகாத்மா....
மீண்டும் வா...
தொடங்கி....வை...
இரண்டாவது சுதந்திர போரை!


எம்மக்கள் பிரச்சினைகள் எப்போதுமே வீரியம் கொண்டு வெளி வந்ததே இல்லை! கோடை ஆரம்பம் ஆகி விட்டது....மின்சாரம் இல்லாமல் எத்தனை வீடுகளில் கைக்குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு ஆளாகிப் போயிருக்கிறார்கள்! வெயிலின் உச்சத்தில் இருக்கும் வேலூர் போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் மின்சாரத்தடை இருக்கிறது என்று அம்மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

நிரந்தரமாய் எம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல ஏன் அரசாங்கம் முன் வருவதில்லை. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி கொடுத்தாயிற்று என்று சொல்கிறீர்களா...? அடிப்படை வசதிகளான உண்ண உணவு ... உடுக்க உடை...இருக்க இடம் இதிலேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இலவச தொலைக்காட்சி திட்டங்கள் என்ன பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடப் போகிறது... BBC யையும் CNNனையுமா பார்க்கப் போகிறார்கள் மக்கள்......மானட மயிலாடவும்...சாமியார்களின்....வீடியோக்களையும் பார்த்து இன்னும் சீரழியப் போகிறார்கள்.

தயவுசெய்து இலவசங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டு.... பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுங்கள். வேலை இல்லை என்று சொல்வதை விட... வேலை வாய்ப்பினை உருவாக்கலாமே..! அரசு அமைப்புகள் எல்லாம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்து விடுகின்றன..... இதை மாற்றி...சிப்ட் முறையில் இயக்கலாமே? ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களையும்....வருமான வரித்துறையும்.. இன்ன பிற நிறுவனங்களையும் பகல் மற்றும் இரவு நேர சிப்ட் ஆக்கினால்.. வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும் தேங்கி நிற்கும் வேலைகளும் விரைந்து நடக்குமே? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளே...எத்தனையோ லட்சம் என்கிறார்களே...இரவு பகலாய் நீதிமன்றங்களை இயங்க விட்டால் எத்தனை வழக்கறிஞர்கள் வேலை பெறுவார்கள் எத்தனை வழக்குகள் தீரும்? கணக்கிட்டுப் பாருங்கள்....

காவலர்கள் எப்படி பணி செய்கிறார்களோ அதே முறையில் அரசு இயந்திரம் தனது எல்லா பணிகளையும் முடுக்கிவிட்டல் உற்பத்தி திறனும் கூடும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கு....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....ஏதோ என் அறிவுக்கு எட்டியதை ஒரு ஆதங்கத்தில் சொல்லி விட்டேன் ...இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது... எப்படி செயல் படுத்தலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.. எம் மக்களே!


இலவசமாய் ஏதாவது அரசாங்கம் கொடுக்கிறது என்றால்.. உங்களுக்குத் தெரியாமலேயே வேறு வகையில் உங்கள் குரல்வளை கடி படப் போகிறது என்று அர்த்தம்.....பொருளாதாய இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை நண்பர்களே.....வேறு வகையில் நாம் தான் அதை ஈடு செய்யவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

இலவசங்களை புறக்கணிப்போம்! வாழ்வின் அடிப்படி உரிமைகளை பெறுவோம்!


தேவா. S

Comments

//கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//
good thought.
Chitra said…
///கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?////


..... good question. It is a sad situation. :-(
//என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//

நம்மாள பலகாரம் கூட செய்ய முடியறதில்லீங்க... அதக்கூட ரெடிமேடா வாங்குறோம்
lcnathan said…
INGKE AALUKKU ORU BOTTLE VISHAM INAAM YENTRAAL ''ANNE!!NAMMALAI MARANTHDAATHEENGKA !RENDU BOTTLE YENAKKU VENUMNEYY !! YENDRU ILVASA PITCHAIKKU NAMMALAI THAYAAR PANNI VITTATHU YAAR??? VOTTU PORUKKIKAL THAANE??!!!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...