Skip to main content

அந்த ஒருவர்... யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம்......


வானவில் போலத்தான் வாழ்க்கையின் நிகழ்வுகளும் கண நேரத்தில் கண் முன் தோன்றி மறைவது போல எத்தனை எத்தனை நிகழ்வுகள் நம் கண் முன்னே தொன்றி மறைந்து விடுகின்றன சில நிகழ்வுகள் எத்தனை காலம் ஆனாலும் ஆறாத வடுவாய் நம் நெஞ்சில் சில ஞாபங்ககளை விட்டுச் செல்கின்றன. அவற்றின் படிப்பினைகளும் எப்போதும் சேர்ந்தே நம்முடன் பயணிக்கின்றன....

சென்னையில் ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலின் ரிசப்ஷனிஸ்டாக நான் வேலை செய்து கொண்டிருந்தேன்....! பலதரப் பட்ட மனிதர்கள் ....ஆடம்பரமான உலகம் "கெஸ்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் ரைட் " என்ற மனதில் பதிவு செய்யப்பட்ட வாசங்களுடன் பணியாற்ற வேண்டியது எமது கடமை.

அறையில் ஹாட் வாட்டர் (hot water) vaரவில்லையென்றாலும் சரி, ரூம் சர்வீஸின் காஃபியில் சர்கரை அளவு குறைந்தாலும் சரி...அறையில் ஏசி க்காற்றின் குளுமை குறைஞ்சாலும் சரி.... முதலில் பந்தாடப்படும் இடம் ப்ரண்ட் ஆபீஸ் (FRONT OFFICE). கோபமாய், குளுமையாய், எரிச்சலாய், சோகமாய், பதட்டமாய், ஆடம்பரமாய், பகட்டாய், சந்ஷோசமாய் என்று எல்லா தரப்பினருடனும்.. .புன்னகை புரிந்து நடந்து கொள்ளும் ஒரு இடம்.

பார் க்கு ரெகுலராய் வரும் ஒருவர் வெளியில் சென்று இரவு பத்து மணிக்கு மேல் ஆட்டோ ஓட்டுபவர் அவர் இருக்கும் பகுதிக்கு வரமறுத்ததால் .....ரிஸப்சனுக்கு வந்து ஹோட்டலின் செலவிலேயே.. சைதாப்பேட்டை போலிஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து என்னைப்பற்றி கம்ப்ளெய்ன் செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. அவரது கோபத்துக்கு காரணம் ஆட்டோகாரர் வரமறுத்த பின் ஏற்பட்ட அவமானத்திற்கு நாங்கள் (ஹோட்டல்)தான் காரணம் என்ரு குடிகார மூளை சொல்லியிருக்கலாம். அப்போது கூட அவரிடம் சிரித்த முகத்தோடுதான் பேச வேண்டும் (என்ன கொடுமை சார் இது)

அன்று இரவு நேர பணியில் இருந்த எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது.... நள்ளிரவு (அது அதிகாலைதான்) 1 மணிக்கு காலையில் வரக்கூடிய எக்ஸ்பெட்டட் அரைவல் லிஸ்ட் பாத்துட்டு ரூம்ஸ் எல்லாம் ரெடி பண்ணச்சொல்லிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்று டெலிபோன் ஆப்பரேட்டர் கேபினுக்குள் நுழைய சென்ற சமயம் 1 கார் வேகமாய் எங்களின் வளாகத்துக்குள் வந்தது....

ஓ....இப்போ போய் கெஸ்ட் வர்றாங்களே தூக்கம் போச்சேன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் ரிஷப்ஸன் கவுண்டர் உள் வந்தேன்...4 ஆண்கள் நல்ல உயரம்... கழுத்தில் தடிமனான தங்க செயின் ப்ரேஸ்லெட் என்று...வாக்கின் கெஸ்ட்ஸ் (walkin guests) அவர்களுக்கு விஷ் பண்ணி விட்டு ஜி ஆர் சி (guest registration card)புக்கை எடுத்து கொடுத்தேன் பூர்த்தி செய்வதற்காக ...............பூர்த்தி செய்து முடித்தவுடன்...சார்...கேன் ஐ ஹேவ் சம் அட்வான்ஸ் சார் (வாக்கின் கெஸ்ட் ......கட்டாயம் வாங்க வேண்டும் - நிர்வாகம்)....கேட்டவுடன் கருப்பாய் இருந்தவர் முகம் சிவந்து அவரது மலேசியன் பாஸ்போர்ட்டை எடுத்து தூக்கி வீசினார்... நான் யார் தெரியுமா....ஐயம் ய மலேசியன் சிட்டிசன் சில்லித்தனமாய்....என்னிடம் அட்வான்ஸ் கேக்கிறியா....என்று..அந்த நள்ளிரவில் ஹொட்டலே அதிரும் படி கத்தினார்.....யூ....ப்ளடி.. ... (சொல்ல கூடாத வார்தை....)


நான் ஸ்மைல் பண்ணிகிட்டே....சாரி சார் ...என்னோட நிர்வாகத்தின் விதிமுறைகள் அப்படி.....என்று சொல்லி முடிவதற்குள் மறுபடியும் வாட்..ப்ளடி....(சொல்ல முடியாத வார்தை..) ஹோட்டல் என்று சராமரியாய் மலேசிய ஆங்கிலத்தை என் முகத்தில் காரி உமிழ்ந்தார்....எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....ஏன் என்மீது கோபப்படவேண்டும்...அப்படி தனிப்பட்ட முறையில் நாம் ஒன்றும் செய்யவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது....கெஸ்ட் ரிஜிஸ்ட்ரேசன் கார்டு என்று சொல்லக்கூடிய.... ஜி.ஆர்.சி. புத்தகத்கை எடுத்து கிழித்து என்மீது வீசிவிட்டு மூன்றாம் முறையாக...அம்மாவை தொடர்பு படுத்தக்கூடிய அந்த ஆங்கில கெட்டவார்த்தையை என்மீது வீசிவிட்டு....கூட வந்தவர்களோடு திரும்பி போய்விட்டார்.....


அப்படியே நின்னு அவர பாத்துட்டே இருக்கேன்...என் தூக்கம் முற்றிலும் கலைந்து போய்விட்டது....ஏன் ஏன் ஏன்...இப்படி எனக்குள் கேட்கும் போதே...அவர்கள் வந்த கார் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்கிறது.......அந்த நொடி....................டமால்......என்ற சத்தம்.....வெங்கட் நாராயணா சாலையில் அதிவேகமாக வந்த அதிகாலை தண்ணீர் லாரி.....அந்த காரில் மோதி......வேகமாய் ஹோட்டலை விட்டு வெளியே வந்து செக்கியிரிட்டியோடு நொறுங்கிப் போன மாருதி எஸ்டீம் ஐ பார்க்கிறேன்...காரினுள் டார்ச் அடித்துப் பார்த்தால் சற்று முன் என்னிடம் சண்டையிட்டு சென்ற மனிதர் ரத்த வெள்ளத்தில்....ஓ......கடவுளே என்று பதறியடித்துக் கொண்டு ஆம்புலன்சுக்கு சொல்லி....போலீசுக்கு சொல்லி..என் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சொல்லி....என்கொயரி அது இது என்று.....விடியல் காலை 7 மணிக்கு தகவல் கேள்விபட்டேன் என்னிடம் சண்டையிட்ட நபரும்...பின்னால் இருந்த மற்றொருவரும் ஸ்பாட்லேயே..இறந்து விட்டதாக்.....எனக்குள் இரத்தம் உறைந்து போனது இப்போது இந்த வரிகளை டைப் பண்ணும் போது ஞாபகம் வருகிறது....மனம் சலனமின்றி....கடந்த இரவு நடந்த விசயங்களை விவரித்துப் பார்க்கிறது...

ஏன் என்னிடம் கோபத்தோடு போய் இறந்து போனாய் மனிதா? எந்த பிறவியில் உன்னிடம் மீதி வைத்திருந்தேன்.... இன்று வந்து....என்னிடம் தீர்த்து விட்டு இறந்து போனாய்? இன்று வரை எந்த கணமும் ஒரு மனிதரை விட்டு நீங்கும் முன் சந்தோசமாய் நீங்குவது என்று நினைத்துக் கொண்டேன்...மிகைப்பட்ட பேரை நான் பார்க்கும் போது எல்லாம் வலியுறுத்துவேன்...விடை பெறும் போது அழகாக...அன்பாக விடைபெறுங்கள்...அது எதிரியாய் இருந்தாலும் கூட....அடுத்த கணம் என்ன வென்று அறியாமுடியாத வாழ்வில் எதுவும் நடக்கலாம்.....!

அந்த ஒருவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம்......அலுவலக ப்யூனாய் இருக்கலாம் பூ விற்கும் அம்மாவாக இருக்கலாம்....டீ கொடுக்கும் பையனாய் இருக்கலாம்....பேருந்தில் முறுக்கு வியாபாரம் செய்பவராக இருக்கலாம்..... நம்மால் முடியவில்லை என்றால் அன்பாய் மறுத்து விடுங்கள்...... நட்பாய், உறவாய் .....யாராய் வேண்டுமானலும் இருக்கலாம்...விலகும் நேரம்....அன்பாய் விலகுங்கள்!

அன்பும் சிவமும்
இரண்டென்பர் அறிவிலர்
அன்பும் சிவமும்
ஒன்றாவதை யாரும் அறிகிலர்
அன்பும் சிவமும் ஒன்றாய்
அறிந்த பின்....அன்பே சிவமாய்
அமர்ந்திருந்தாரே!



- தேவா

Comments

Chitra said…
ஏன் என்னிடம் கோபத்தோடு போய் இறந்து போனாய் மனிதா? எந்த பிறவியில் உன்னிடம் மீதி வைத்திருந்தேன்.... இன்று வந்து....என்னிடம் தீர்த்து விட்டு இறந்து போனாய்? இன்று வரை எந்த கணமும் ஒரு மனிதரை விட்டு நீங்கும் முன் சந்தோசமாய் நீங்குவது என்று நினைத்துக் கொண்டேன்...மிகைப்பட்ட பேரை நான் பார்க்கும் போது எல்லாம் வலியுறுத்துவேன்...விடை பெறும் போது அழகாக...அன்பாக விடைபெறுங்கள்...அது எதிரியாய் இருந்தாலும் கூட....அடுத்த கணம் என்ன வென்று அறியாமுடியாத வாழ்வில் எதுவும் நடக்கலாம்.....!


....... No one wants to leave this world, saying such nasty last words. I could visualize the last moments of those unfortunate people.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்...

இதுதான் ஞாபகம் வருகிறது.. உங்களின் செயல் கண்டு... மனிதாபிமானத்தை உங்களின் பார்க்கிறேன்...

அன்பிற்கேது இங்கே ஈடுஇணை.... அனுபவமும் அதன்மூலம் தாங்கள் கற்றுக்கொடுக்கும் விடயமும் வாழ்நிலை ஆதாரம்.....
அன்பு தன்னலமின்றி தருவதற்கே அன்பு உணர்ந்து குதிப்பதற்கே அன்பு அனைவருடன் பகிர்வதற்கே அன்பு என்றும் தூய்மையானதே ...
dheva said…
சித்ரா...@ நான் கூட எதிர்பார்க்கவே இல்ல சித்ரா....என்னை திட்டினாருன்னு கோபம் வரல.....இப்படி...தேவையில்லாம கோபப்பட்டு....கோபத்தோடே போய் சேர்ந்துட்டாரேன்னு ரொம்ப கவலைப்பட்டு அழக் கூடச்செய்தேன்...! கிட்டதட ஒரு மாசம்...என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது!
dheva said…
பாலாசி.....@ உண்மைதாங்க...பாலாசி!
dheva said…
வீரா @ கண்டிப்பாய் வீரா...அன்புதானே எல்லாவற்றையும் வளைக்கும் மிகப்பெரிய ஆயுதம்!
அன்பின் தேவா

மறக்க இயலாத நிகழ்வு - விதியின் சதி

இருப்பினும் கடமையைச் செய்த தேவா - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வலைச்சரம் மூலமாக வந்தேன்..அன்பு..நம்ம வழியும் இதேதான்ங்க.
Butter_cutter said…
nalla iruuku deva
irappai nammal thaduthu nirutha mudiathu

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...