Skip to main content

கலைக்கப்படும் கனவுகள்...!














அத்து
மீறி அடுத்தவர் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்பிலும் மூக்கு நுழைத்து கருத்துக்களை திணிப்பது நமது கலாச்சாரமாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்...! பக்கத்து வீட்டுக்காரன் என்ன சம்பாதிக்கிறான்...அவன் பையன் +2 வில் எத்தனை மார்க்? அவரது மகள் யாரையும் காதலிக்கிறாள் என்று எத்தனை எத்தனை அத்துமீறல்கள் நடக்கின்றன நமது சமுதாயத்தில்...!


தன்னைப்பற்றி சிந்திக்க திரணியில்லாமல் தான் தோன்றித்தனமாக அடுத்தவரை பற்றி சிந்திக்கவும் விமர்சனம் செய்யவும் ரொம்ப வசதியாய் பழகிக் கொண்ட ஒரு வக்கிரபுத்திதான் அடுத்தவன் கதை பேசுவது..... அது அலுவலகம் ஆகட்டும் டீக்கடை ஆகட்டும்... வீட்டு வாசலில் அமர்ந்கு பேசும் பெண்களாகட்டும், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் அந்த நேரத்தில் பத்து வீட்டு சமாச்சாரத்தை பலகாரம் செய்யாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராமல் போனது வியாதியா? இல்லை சமுதாயத்தை பிடித்துள்ள பிணியா?


நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி விடுமுறை தினத்தில் ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆடையை...ஒரு ஸ்கர்ட்டும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய கணவனுடன் ரோட்டில் செல்கிறாள்.. கையிலும் இடுப்பிலுமாக இரண்டு குழந்தைகள் ...பக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்கிறார்....ஒரு கேவலமான வார்த்தையை கூறி இவள் கண்டிப்பாய் அப்படி பட்டவள் என்று அடித்து சொல்வேன் என்று...... !

ஏன் அவள் உடுத்தி செல்லும் அவனது கணவனுக்கு ஒத்துக் கொள்கிறது....அவளும் அது பற்றி ஒரு அக்கறை இல்லாமல் சாதரணமாய் அந்த பெண்ணும் சென்று விட்டாள் ஆனால் சமுதாயம் அது பற்றி ஒரு பார்வை வைத்திருக்கிறது....இப்படி உடுத்தினால் இப்படி பட்டவள் ...அப்படி உடுத்தினால் அப்படிபட்டவள் என்று அடுத்தவரின் பிரைவசி என்று சொல்லக்கூடிய தனி உரிமையில் அத்து மீறி நுழைந்து ஆர்ப்பாட்டமாய் சோபா போட்டு உட்கார்ந்து கொள்வது என்று அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பல நேரங்களில் திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் தனது மூக்கை நுழைத்து மீடியாவும் காசு பார்த்து இருக்கிறது. அரசியல்வாதிகள் கூட கருத்துப்போரை மறந்து அடுத்தவரின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கும் போக்கில்தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அடுத்தவன் வாழ்க்கை பற்றி .. ஏன் இவ்வளவு அக்கறை நமது மக்களுக்கு? ஒருவனின் சொந்த விசயங்கள் அடுத்தவனையோ அல்லது சமுதாயத்தையோ பாதிக்காத போது திரை யை விலக்கிப்பார்த்து உள்ளே இருக்கும் விசயங்களை விமர்சிப்பது....அ நாகரீகம் என்று எப்போது இந்த சமுதாயம் உணரும்?


கணவன் மனைவியாய் இருந்தாலும்...அல்லது பெற்றோர் குழந்தைகளாய் இருந்தாலும் சரி... நட்பு வட்டாரமாய் இருந்தாலும் சரி... அவர் அவருக்கு இருக்கும் அந்த வெற்றிடத்தை அவர்களின் சந்தோசத்தை கலைக்க முயலாமல்....அந்த வெற்றிடத்தால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏதும் இல்லை எனும் பட்சத்தில் அதை ரசித்து அல்லது பிடிக்கவில்லையெனில் விலகி வாழ்ந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்!


அத்துமீறலும் அனுமதியின்றி நமக்கு எது தேவையென அடுத்தவர் கூறுவது...... நமக்கு பிடித்ததை விமர்சிப்பது..மற்றவருக்கு பிடித்ததை நம் மீது திணிப்பதும் வலியுறுத்துவது....உடனடியாக யாரும் நிறுத்தப் போவதில்லை...இருந்தாலும்...இந்த கவிதையின் மூலம் எனது ஏக்கத்தை கோபமாக்கியிருக்கிறேன்....

எமது எல்லைகளுக்குள்...
அத்துமீறும்...அதிகாரம்
கொடுத்தது யார் தோழர்களே...
எமக்கான மைதானத்தில்...
உங்களின் விளையாட்டை...
எப்படி நான் அனுமதிப்பது?

என் கனவுகளுக்கு...
கலர் கொடுக்கவும்...
கருப்புவெள்ளையாக்கவும்..
உங்களை தூரிகை...
தூக்கச் சொன்னது யார்?

உங்களின் அனுமதி....
எமது தோட்டத்தினை....
பார்வையிடவும் ....
பார்த்து ரசிக்கவும் மட்டுமே...
எமது தோட்டத்திற்கு...
வெளியே இருத்திக் கொள்ளுங்கள்..
உங்களின் திருத்தங்களை!


ஒரு நாள் எமது சபை...
ஞானத்தை....பேசும்...
ஒரு நாள் காமத்தை பேசும்...
பல நாள் காதலில்...கிடக்கும்...
ஒரு சில நாள்....
வார்த்தைகளின்றியே நகரும்..
அது பற்றி உங்களுக்கு...
என்ன ஆராய்ச்சி?

எமது வெற்றிடத்தில்....
உங்களுக்கான..அனுமதி....
நிரந்தரமாய் மறுக்கப்பட்டது....!
சந்தோசங்களை... நீட்டித்தும்...
துக்ககங்களை...அறுத்தெரிந்தும்....
தொடரும் எமது தினசரிகளில்...
உங்களின் கருத்து குப்பைகளை...
களைவதிலேயே....
கலைந்து போகின்றன...
என்னின் கனவுகள்!


தேவா. S

Comments

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வை மட்டுமே பற்றி சிந்திக்கனும் அதுவே அடுத்தவருக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் இல்லை. அடுத்தவர்களின் அனுமதியின்றி அவர்களின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது அநாகரீகம். அதை மிக சிறப்பான உதராணத்துடன் விளக்கி இருப்பது பாராட்டுதலுக்குறியது... தொடரட்டும்
அவசியமான இடுகை தேவா
Paleo God said…
திணிப்புகளும், விமர்சனங்களுமாகவே போய்விட்டது மனித வாழ்க்கை!! :(
dheva said…
நன்றி....@ வீரா
கதிர்
சங்கர்
Sappppahhhh. Oh My god.. enakku mattum yen unga blog la comment poda ivlo issues therial deva...

My laptop was down, adhaan vara mudiyala..

after that i have been trying to comment on ur postings for the past two days.. ippa thaan mudinchathu..

I saved my comment in my email and trying it every time i come online.. finally...here u goo..

Ananthi S
show details 12:40 am (1 day ago)


//உங்களின் அனுமதி....
எமது தோட்டத்தினை....
பார்வையிடவும் ....
பார்த்து ரசிக்கவும் மட்டுமே...
எமது தோட்டத்திற்கு...
வெளியே இருத்திக் கொள்ளுங்கள்..
உங்களின் திருத்தங்களை! //

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. அழகான வரிகள்..
சூப்பர்.. வாழ்த்துக்கள்..

(பி.கு: தேவா.. என் லேப்டாப்-ல் ஏதோ பிரச்சினை.. அதன் ப்ளாக் வர முடியல.. இப்போ டெஸ்க்டாப்பில் இருந்து கமென்ட் பண்றேன் )

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...