
ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள்.
கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது.....
" எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....."
சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை,
மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியாக படிக்காத சர்வதேச சமுதாய்ம்....கொன்றழித்தது.....தமிழனோடு சேர்த்து அவன் படித்துக் கொடுத்த பாடங்களையும். " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி " என்ற பெருமையோடு...கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதையுண்டு போயின நமது உறவுகள்!
தமிழ் பேசினதாலேயே....தமிழன் என்பதாலேயே....அழிக்கப்பட்ட ஒரே இனம் நமது இனம் தான். இந்த பகிங்கர இன அழிப்பை தாய் தேசத்து தமிழன் உணர விடாமல் வேகமாய் காய் நகர்த்தி தமிழ் நாட்டு ஊடகங்களை எல்லாம் தமது கட்டளைகளால் கட்டி வைத்தது ஆளும் அரசு கட்சிகள்....! தன் சொந்த இனத்தை எதிரிகள் சொக்கட்டான் ஆடிய வேளையில் மானாட மயிலாட பார்த்து விட்டு தேசியம் பேசிக் கொண்டிருந்தான் தாய்த்தமிழன்.
அரசியல் கட்சிகள் எல்லாம் வேக வேகமாய்....தமது ஓட்டு வலைக்கு ஈழத்தமிழன் என்று பெயரிட்டு...பகிங்கர பிச்சையை ஆரம்பித்தன. எதிர்கால அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய.... நடிகர் நடிகைகள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்று தமது பிரபல்யம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வியாபர உத்தியின் மூலப்பொருளாக தமிழன் வைக்கப்பட்டான். அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.
இன அழிப்பின் உக்கிரத்தில் தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் எத்தனையோ தமிழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...கையில் பதவி இருந்தவர்கள் எல்லாம்....கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும் கொண்டு உண்ணாவிரத மேடைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது அடி பட்ட தமிழன் தண்ணீர் இல்லாமலும், மருத்துவ உதவி இல்லாமலும் அலறிக் கொண்டிருந்தான்.
போர் நிறுத்தம் என்ற..இந்திய அரசின் அரசியல் உபாயத்தை சரியாக பின்பற்றி....தேர்தல் முடியும் வரை காத்திருந்த......ராஜபக்ஸே.......! தேர்தல் முடிவுகளுக்குப்பின் தற்காலிகமாய் அணிந்திருந்த மனித முகமூடியை கழட்டிவிட்டு மீண்டும் ஒரு உக்கிர தாக்குதல் நடத்தினார்! ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....கண்டிப்பாய் ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் என்று மனப்பால் குடித்த தமிழன் முகத்தில் பூசப்பட்டது கரி. தமிழரைக் கொண்டே...தமிழரை அழிக்கும் உத்தியை அறிந்து வைத்திருந்தது இத்தாலியமும் இந்தியமும் கலந்த மூளை....தமிழன் நொறுக்கப்பட்டான். வரலாற்றில் மருது பாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும், கட்டபொம்மனுக்கும், வீரன் சுந்தரலிங்கத்துக்கும் என்ன நடந்ததோ.... அதை மறுக்காமல் வரலாறு ஈழத்தமிழனுக்கும் வழங்கி தனது வேலையை செவ்வனே முடித்துக்கொண்டது...
காலம் கடந்துவிட்டது ...தோழர்களே.... இதை வெறுமனே....ஒரு நினைவு கூறும் ஒரு கட்டுரையாக நினைக்காமல்....இதை உங்களுக்குள் விதையாக விதைத்து வைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் தனது சந்ததியினருக்கு நம் இனம் வஞ்சிக்கப்பட்டதையும்..... நமது மக்கள் விரட்டப்பட்தையும்....கதையாய் பாடலாய் சொல்லுங்கள்.......முள்ளிவாய்காலில் பலியான பல்லாயிரக்கணக்கான நமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைய.....எல்லம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு......
கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது.....
" எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....."
சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை,
மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியாக படிக்காத சர்வதேச சமுதாய்ம்....கொன்றழித்தது.....தமிழனோடு சேர்த்து அவன் படித்துக் கொடுத்த பாடங்களையும். " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி " என்ற பெருமையோடு...கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதையுண்டு போயின நமது உறவுகள்!
தமிழ் பேசினதாலேயே....தமிழன் என்பதாலேயே....அழிக்கப்பட்ட ஒரே இனம் நமது இனம் தான். இந்த பகிங்கர இன அழிப்பை தாய் தேசத்து தமிழன் உணர விடாமல் வேகமாய் காய் நகர்த்தி தமிழ் நாட்டு ஊடகங்களை எல்லாம் தமது கட்டளைகளால் கட்டி வைத்தது ஆளும் அரசு கட்சிகள்....! தன் சொந்த இனத்தை எதிரிகள் சொக்கட்டான் ஆடிய வேளையில் மானாட மயிலாட பார்த்து விட்டு தேசியம் பேசிக் கொண்டிருந்தான் தாய்த்தமிழன்.
அரசியல் கட்சிகள் எல்லாம் வேக வேகமாய்....தமது ஓட்டு வலைக்கு ஈழத்தமிழன் என்று பெயரிட்டு...பகிங்கர பிச்சையை ஆரம்பித்தன. எதிர்கால அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய.... நடிகர் நடிகைகள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்று தமது பிரபல்யம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வியாபர உத்தியின் மூலப்பொருளாக தமிழன் வைக்கப்பட்டான். அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.
இன அழிப்பின் உக்கிரத்தில் தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் எத்தனையோ தமிழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...கையில் பதவி இருந்தவர்கள் எல்லாம்....கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும் கொண்டு உண்ணாவிரத மேடைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது அடி பட்ட தமிழன் தண்ணீர் இல்லாமலும், மருத்துவ உதவி இல்லாமலும் அலறிக் கொண்டிருந்தான்.
போர் நிறுத்தம் என்ற..இந்திய அரசின் அரசியல் உபாயத்தை சரியாக பின்பற்றி....தேர்தல் முடியும் வரை காத்திருந்த......ராஜபக்ஸே.......! தேர்தல் முடிவுகளுக்குப்பின் தற்காலிகமாய் அணிந்திருந்த மனித முகமூடியை கழட்டிவிட்டு மீண்டும் ஒரு உக்கிர தாக்குதல் நடத்தினார்! ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....கண்டிப்பாய் ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் என்று மனப்பால் குடித்த தமிழன் முகத்தில் பூசப்பட்டது கரி. தமிழரைக் கொண்டே...தமிழரை அழிக்கும் உத்தியை அறிந்து வைத்திருந்தது இத்தாலியமும் இந்தியமும் கலந்த மூளை....தமிழன் நொறுக்கப்பட்டான். வரலாற்றில் மருது பாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும், கட்டபொம்மனுக்கும், வீரன் சுந்தரலிங்கத்துக்கும் என்ன நடந்ததோ.... அதை மறுக்காமல் வரலாறு ஈழத்தமிழனுக்கும் வழங்கி தனது வேலையை செவ்வனே முடித்துக்கொண்டது...
காலம் கடந்துவிட்டது ...தோழர்களே.... இதை வெறுமனே....ஒரு நினைவு கூறும் ஒரு கட்டுரையாக நினைக்காமல்....இதை உங்களுக்குள் விதையாக விதைத்து வைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் தனது சந்ததியினருக்கு நம் இனம் வஞ்சிக்கப்பட்டதையும்..... நமது மக்கள் விரட்டப்பட்தையும்....கதையாய் பாடலாய் சொல்லுங்கள்.......முள்ளிவாய்காலில் பலியான பல்லாயிரக்கணக்கான நமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைய.....எல்லம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு......
வரிப்புலியின்....வெஞ்சினத்தை நெஞ்சினில் கொள்வோம்!
தேவா. S
Comments
இங்கதாங்க அவர் தப்பு பண்ணிட்டார்... அரசியல் நாடகாமாடின எவனையாவது கொளுத்தியிருந்தாருன்னா இன்னும் சந்தோஷப்பட்டிருக்கலாம்.... (நான் எனும் வக்கத்தவனுக்குள் ஒலிக்கம் வீரவசனம் இது))
நல்ல கட்டுரை.... விதையாகவே....
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.