Skip to main content

மறந்தால் நாம் தமிழரில்லை...!


ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள்.

கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது.....

" எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....."

சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை,

மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியாக படிக்காத சர்வதேச சமுதாய்ம்....கொன்றழித்தது.....தமிழனோடு சேர்த்து அவன் படித்துக் கொடுத்த பாடங்களையும். " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி " என்ற பெருமையோடு...கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதையுண்டு போயின நமது உறவுகள்!

தமிழ் பேசினதாலேயே....தமிழன் என்பதாலேயே....அழிக்கப்பட்ட ஒரே இனம் நமது இனம் தான். இந்த பகிங்கர இன அழிப்பை தாய் தேசத்து தமிழன் உணர விடாமல் வேகமாய் காய் நகர்த்தி தமிழ் நாட்டு ஊடகங்களை எல்லாம் தமது கட்டளைகளால் கட்டி வைத்தது ஆளும் அரசு கட்சிகள்....! தன் சொந்த இனத்தை எதிரிகள் சொக்கட்டான் ஆடிய வேளையில் மானாட மயிலாட பார்த்து விட்டு தேசியம் பேசிக் கொண்டிருந்தான் தாய்த்தமிழன்.

அரசியல் கட்சிகள் எல்லாம் வேக வேகமாய்....தமது ஓட்டு வலைக்கு ஈழத்தமிழன் என்று பெயரிட்டு...பகிங்கர பிச்சையை ஆரம்பித்தன. எதிர்கால அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய.... நடிகர் நடிகைகள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்று தமது பிரபல்யம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வியாபர உத்தியின் மூலப்பொருளாக தமிழன் வைக்கப்பட்டான். அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.

இன அழிப்பின் உக்கிரத்தில் தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் எத்தனையோ தமிழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...கையில் பதவி இருந்தவர்கள் எல்லாம்....கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும் கொண்டு உண்ணாவிரத மேடைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது அடி பட்ட தமிழன் தண்ணீர் இல்லாமலும், மருத்துவ உதவி இல்லாமலும் அலறிக் கொண்டிருந்தான்.

போர் நிறுத்தம் என்ற..இந்திய அரசின் அரசியல் உபாயத்தை சரியாக பின்பற்றி....தேர்தல் முடியும் வரை காத்திருந்த......ராஜபக்ஸே.......! தேர்தல் முடிவுகளுக்குப்பின் தற்காலிகமாய் அணிந்திருந்த மனித முகமூடியை கழட்டிவிட்டு மீண்டும் ஒரு உக்கிர தாக்குதல் நடத்தினார்! ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....கண்டிப்பாய் ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் என்று மனப்பால் குடித்த தமிழன் முகத்தில் பூசப்பட்டது கரி. தமிழரைக் கொண்டே...தமிழரை அழிக்கும் உத்தியை அறிந்து வைத்திருந்தது இத்தாலியமும் இந்தியமும் கலந்த மூளை....தமிழன் நொறுக்கப்பட்டான். வரலாற்றில் மருது பாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும், கட்டபொம்மனுக்கும், வீரன் சுந்தரலிங்கத்துக்கும் என்ன நடந்ததோ.... அதை மறுக்காமல் வரலாறு ஈழத்தமிழனுக்கும் வழங்கி தனது வேலையை செவ்வனே முடித்துக்கொண்டது...

காலம் கடந்துவிட்டது ...தோழர்களே.... இதை வெறுமனே....ஒரு நினைவு கூறும் ஒரு கட்டுரையாக நினைக்காமல்....இதை உங்களுக்குள் விதையாக விதைத்து வைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் தனது சந்ததியினருக்கு நம் இனம் வஞ்சிக்கப்பட்டதையும்..... நமது மக்கள் விரட்டப்பட்தையும்....கதையாய் பாடலாய் சொல்லுங்கள்.......முள்ளிவாய்காலில் பலியான பல்லாயிரக்கணக்கான நமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைய.....எல்லம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு......


வரிப்புலியின்....வெஞ்சினத்தை நெஞ்சினில் கொள்வோம்!



தேவா. S

Comments

//அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.//

இங்கதாங்க அவர் தப்பு பண்ணிட்டார்... அரசியல் நாடகாமாடின எவனையாவது கொளுத்தியிருந்தாருன்னா இன்னும் சந்தோஷப்பட்டிருக்கலாம்.... (நான் எனும் வக்கத்தவனுக்குள் ஒலிக்கம் வீரவசனம் இது))

நல்ல கட்டுரை.... விதையாகவே....
Chitra said…
தேவையான நல்ல இடுகை.
அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
ஓயாத அலைகளாய் மீண்டும் எழுவோம் என்று இந்த நாளில் அனைத்து தமிழர்களும் உறுதியேற்போம்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...