Skip to main content

இலக்கில்லாத பயணம்...!
















கட்டாய நகர்த்தலாய்....
நகர்ந்து கொண்டிருக்கிறது....காலம்
இந்தக் கணத்திலேயே....
இழுத்து பிடித்து நிறுத்திவிட...
ஓராயிரம் முறை முயன்று.....
தோல்வியின் வெட்கத்தில்...
துவண்டு போய் கிடக்கிறது மனது!

கடந்ததெல்லாம்...
மரத்தில் அடித்த ஆணியாய்...
பிடிங்கிய பின்னும் வடுக்களை...
சுமந்து கொண்டு நினைவுகளாய்..
ஏதேதோ நினைத்தும் ....
மறக்காமல் வேறு
எங்கேயோ கொண்டுபோய்...
நிறுத்தி விடுகிறது எதிர்காலம்!

இரவும் பகலும்..போட்டி போட்டு
நாட்களை பின் தள்ளிவிட...
கடலில் மிதக்கும் கட்டை போல
இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!

எந்த ஒரு அர்த்தமும் இல்லாவிட்டாலும் கற்பனைகளில் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. ஆத்மார்த்த கேள்விகளும் பதில்களும் தனக்குள்ளேயே இருக்கும் போது புறத்தில் கடவுள் என்று விசயம் தேவைப்படுகிறது. டண் கணக்கில் காதல் அவனுக்குள்ளேயே இருக்கிறது இருந்தாலும் புறத்தில் ஒரு சக்தி ஆண் என்றும் பெண் என்றும் ஒரு தூண்டுதலுக்காய் தேவைப்படுகிறது.

வினையூக்கிகளே இப்போது மொத்த வினையாய் பார்க்கப்படுவதால் செயலின் விளைவுகள் மறக்கப்படுகின்றன. ஒரு அனுபவம்தான் கடவுளும் காதலும் இன்ன பிற விசயங்களும்...தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்...அதவாது புறத்தில் இருக்கும் விசயங்களின் இனிமை ஒரு மிட்டாய் சாப்பிடுவது போல இனிப்பு மிட்டாய் முடிந்தவுடன்...போய்விடும். அகத்தில் ஏற்படும் இனிப்பு தீரவே தீராது அது இனித்துக்கொண்டே இருக்கும் ஒரு பேரின்பம். நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும். இதை தெரிந்தவன் கடமைக்காக மிட்டாய் சாப்பிடுவானே அன்றி ஆவலில் அல்ல!

சூரியனும் நிலவும் காலங்கள் கடந்து பல மனிதர்களைப் பார்த்தது... தன்னில் இருந்து பிய்த்தெரிந்த பிச்சைதான் பூமியும் இன்ன பிற கோள்களும் அதுவும் கூட சூரிய குடும்ப அளவில்....சூரியன் எங்கே இருந்து வந்த பிச்சை என்று தெரியவில்லை. ஆனால் நமது ஆட்டமும் பாட்டமும் கெளரவமும், அகங்காரமும் சூரியனையும் நிலவையும் ஒரு அம்புலியாய் எண்ணி விடுவதில்லையா? என்றாவது இவற்றின் பிரமாண்டத்தை நாம் சிந்தித்திருக்கிறோமா? கோடாணு கோடி இனங்களையும், போர்களையும், சக்கரவர்த்திகளையும், சாம்ராஜ்யங்களையும்...மனிதன் காடுமேடுகளில் உடையில்லாமல் அலைந்த காலம் முதல்.....கண்டிருக்கின்றன இந்த சூரியனும் சந்திரனும் ஆனால் அவை நமக்கு அம்புலிகள்!

நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!


தேவா. S

Comments

உண்மை நண்பரே...வாழ்த்துக்கள்
Chitra said…
நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!



....... interesting.....

Finally, the page loaded up without any delay and problem. :-)
வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும். இந்த வாழ்கை குழந்தைகள் படிப்பு வேலை திருமணம் இப்படி தொடரும் ஒரு சுழற்சி போல்
dheva said…
நன்றி சரவணன்....!
dheva said…
சித்ரா @ பெரும்பாலும் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகுதான் படைப்பு முழுமை அடைகிறது. நன்றிகள்!
dheva said…
சவுந்தர் @ நன்றி நண்பரே!
VELU.G said…
//
ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!
//

சரியாகச் சொன்னீர்கள் நன்பரே, பயணம் தான் வாழ்க்கையே. ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி செல்வது போல் ஒரு மாயையிலேயே உழல்கிறோம்
ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு கடமைகளை நிறைவேற்றுவதே..! இலக்காகி விடுகிறது ...!

அப்போது சில சமயங்களில் பயணத்தில் சந்தோஷங்கள்
குறுக்கிடும் ..! கடமையின் பொருட்டு அதை கூட முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை..!
G.Ganapathi said…
உலகில் எந்த மொழியில் கேட்டாலும் இனிமையான வார்த்தை பயணம் எப்படி வேண்டுமாலும் சொல்லி பாருங்களேன் . இழவுக்கு போகும் பயணத்தில் கூட ஒரு சிறு சந்தோசத்தை அந்த பயணம் தறும் எத்தனை துக்கம் இருந்தாலும்
//இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!//

உண்மைங்க... என்னதான் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தாலும் காற்றின் விசை சற்றேனும் கூடுதலாகிவிடின் மீண்டும் திசைமாறும் நம் இலக்கு...

//தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்... //

//நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும்//

//இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! //

நல்லாவே அழுத்தமா சொல்லியிருக்கீங்க... ஒரு மிடுக்கான எழுத்து நடை.. ரசிக்கவைக்கிறது..

பயணத்தினை ரசித்தோமாயின் இலக்காகும் பயணமே... மிக அழகாக சொல்லியிருக்கீங்க...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...