Skip to main content

நட்ப கூட கற்பு போல எண்ணுவேன்!




நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

ஓராயிரம் நண்பர்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் மிகைப்பட்ட பேர்கள் நம்மால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் ஆனால்... நம்மை நேசிப்பவர் என்பவர்கள் அதிக பட்சமாக ஒருவர் அல்லது இருவராயிருக்க முடியும். இது அடையாளம் காண்பதற்கரிய ஒரு கடினமான விசயம்தான் என்றாலும் காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் கற்பூரமாய் கரைந்து விட ஏதோ ஒரு சுடர் மட்டும் ஒளி விட்டு வீசிக் கொண்டிருக்கும். அந்க ஒளி மழையிலும், காற்றிலும், புயலிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் வீசிக் கொண்டிருப்பதை சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் உணர முடியும் அப்படிப்பட்ட என்னைச் சுற்றிய வெளிச்சம்தான்..........


சலீம்



இப்போது கூட இப்படி நான் எழுதுவதை அவன் மிகைப்படுத்தி கூறுவதாக கூறி நிராகரித்து விட்டு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சாதாரணமாய் சொல்லக் கூடிய அளவிற்கு நட்புக்கரசன் அவன். நல்ல நண்பனுக்கான அளவீடு என்ன...? நான் சொல்கிறேன்....

1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும்...தனி ஒருவனாய் ஒட்டு மொத்த உலகத்திடமும் தனி ஆளாய் வாதிடுவான் ....அவனைப்பற்றி எனக்குத் தெரியும்...உங்கள் வேலையைப்பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று...!


நட்பு என்பது நம்பிக்கை.... !


கடுமையான சூழல்களிலும் அவனின் செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் எனக்குள் தோன்றிய விசயம் இது!

2) எந்த சூழலிலும் தன்னால் நேசிக்கப்படுபவர் எந்த கஸ்டமும் படக் கூடாது என்று நினைப்பது உண்மையான நேசிப்பு இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நட்பு..காதல்...பாசம்... எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நான் வைத்திருக்கும் பெயர்....சலீம்! என்னை இதுவரை தர்மசங்கடமான சூழ் நிலைக்கு எப்போதுமே அவன் உட்படுத்தியது இல்லை. ஏதாவது தேவை என்றால்... கூட...என்னிடம் கேட்காமல்...என்னுடைய எல்லா தேவைகளையும் நான் கேட்காமலேயே பூர்த்தி செய்வான்....!

நட்பு என்பது நேசித்தல்!

3) ஒரு முறை தூக்கத்தில் எனக்குப் புறையேறி... நான் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த போது....அவசரமாய் எழுந்து தண்ணீர் கொடுத்து, முதுகு தட்டி..என்னை ஆசுவாசப்படுத்திய போது ....எப்போதும் தைரியமான அவனின் கண்களில் கண்ணீரைப் பார்த்த போது அம்மாவின் ஞாபகம் என்னைக் கேட்காமலேயே வந்தது...!


நட்பு என்பது தாய்மை!

4) கொளுத்தும் ஏப்ரல் மாத வெயிலில் வேலை தேடி நான் வெளியே சென்று விட்டு மதியம் மூணு மணி வாக்கில் அறைக்குள் நுழையும் போது எனக்காக உணவு வாங்கி வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி சாப்பிடாம இருக்காத... சாப்பிடு கண்டிப்பாக வேலை கிடைக்கும் அத பத்தி கவலைப்படாத என்று சொல்வான்...!


நட்பு என்பது மனோதைரியம்!

5) ஒரு நாள் அவனுக்கு கையில் சிறிய ஆபரேசன் செய்ததை நேரே பார்த்து நான் ஒரு மயக்க நிலைக்கு வந்த போது தன் வலியை மறைத்துக் கொண்டு நீ போய் வெளியே உட்காருடா....என்று தன்னுடைய தைரியத்தை எனக்கு கொடுத்தான்...!


நட்பு என்பது தியாகம், விட்டுக் கொடுத்தல்., சந்தோசப்படுத்துதல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

இன்றுவரை ....எதையுமே எதிர்பார்க்காமல் வாரத்திற்கு இருமுறை பேசினாலும் அர்த்தம் பொதிந்தவனாய் நிழல் போல தொடர்ந்து கொண்டிருக்கிறான் என் நண்பன்! இன்னும் சொல்லப் போனால் எனக்கான தற்போதைய எல்லாவற்றுக்கும் அவனே...காரணம்! அதிகம் நான் சொல்வதை அவன் விரும்பப் போவதில்லை...ஏனென்றால் புகழ்ந்தால் தொடரும் நட்பல்ல இந்த நட்பு...! என் மீது தவறென்றால் தனியாக கூப்பிட்டு காட்டு காட்டென்று காட்டிவிடுவான்....! எவ்வளவு திட்டினாலும் எதார்த்தமாய் தோளில் கை போட்டு ஆறுதலாய் அந்த விசயத்தை உள்ளே புகட்டி விடுவான்! என் வாழ்வின் சாரதி......என் சலீம்...! இன்னும் ஒரு 7 ஜென்மம் நான் பிறந்தாலும் அவனளவுக்கு நான் இருப்ப்பேனா என்பது சந்தேகம்....!

என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான இந்த பிறந்த தினத்தில்.....!


30.05.2010



தேவா. S

Comments

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... சலீம்
AltF9 Admin said…
கொளுத்தும் ஏப்ரல் மாத வெயிலில் வேலை தேடி நான் வெளியே சென்று விட்டு மதியம் மூணு மணி வாக்கில் அறைக்குள் நுழையும் போது எனக்காக உணவு வாங்கி வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி சாப்பிடாம இருக்காத..

- velai ellam kedaikkum vidu , sappadu nalla irunthucha ,

Valthukkal anna, ippadi ethavathu eluthunana padichuddu vote poduven illana vote maddum than poduven ok....
இத்தகைய நண்பர் இந்த காலத்தில் கிடைப்பது மிக அரிது. உங்கள் நண்பருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அண்ணா நண்பர் சலீம் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவியுங்கள். தாய் தந்தைக்கு அடுத்த நிலையில் அந்த அன்பையும், அக்கரையினையும் கொடுப்பவர்கள் வாழ்க்கைத்துணையும், நண்பர்களுமே.
Anonymous said…
உங்க நண்பர் சலீம் அவர்களக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
S Maharajan said…
"நீ என்னிடம் பேசியதை விட
எனக்காக பேசியதில் உணர்ந்தேன்
நம்ம நட்பை."

"நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

நம் (தேவா)நண்பருக்கு என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே"
Kousalya Raj said…
உங்கள் நட்பும், உங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ என் அன்பான வாழ்த்துகள்
Riyas said…
Happy birth day for ur friend Saleem
தாங்களும், தங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@@@Kousalya// உங்கள் நட்பும், உங்கள் நண்பரும் பல்லாண்டு வாழ என் அன்பான வாழ்த்துகள் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
dheva said…
ஜீவன் பென்னி
தம்பி சிவராசு
நண்பர் கார்த்திக்(LK)
தம்பி சவுந்தர்
தோழி சந்தியா
நண்பர் மகராஜன்
தோழி கெளசல்யா நண்பர் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி
நண்பர் ஜெய்லானி...(பக்கதுல சார்ஜாவுல இருந்து கிட்டு துபாய்ல இருக்க எனக்கு ஒரு கால் பண்ண மாட்டேன்கிறீங்க பாஸ்)
தம்பி ரியாஸ்



என்னொடு சேர்ந்து என் நண்பனை வாழ்த்திய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
நண்பர் சலீமுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

கடந்த மூன்று நாட்களாக மலேசியாவிற்கு பறந்துவிட்டபடியால், இணையத்தில் உலவ இயலவில்லை.. நண்பர் சலீமின் பிறந்தநாள் பற்றி அறியும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது....

நான்தான் கடைசியாக வாழ்த்து சொல்லும் ந(ண்)பர்... அதனால் என்ன!! இது அடுத்து வரும் பிறந்தநாளுக்காகவும் சொன்னது போலாயிற்றே... இப்போது நான்தான் முதல் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது... எப்பூடி!!!
///நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.///

ரொம்ப நன்றி மாப்ள!!

"நட்புன்னா இப்படிதாண்டா இருக்கணும்....!" அப்படின்னு சொல்றமாதிரி நட்பு உங்களோடதுன்னு புரிஞ்சுகிட்டேன்.... எனக்கே ரொம்ப பொறாமையா இருக்குடா.... மனசு கலங்குதுடா, ஆனந்தத்துல...
VELU.G said…
உங்கள் நன்பருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நல்ல பகிர்வு தேவா
எனது வாழ்த்துக்களும் சலீம் ...
நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றோர் பேரு பெற்றவர்கள் ...
சற்று பொறாமை தான் ...
வருகிறேன் தேவா ...
Chitra said…
1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும்...தனி ஒருவனாய் ஒட்டு மொத்த உலகத்திடமும் தனி ஆளாய் வாதிடுவான் ....அவனைப்பற்றி எனக்குத் தெரியும்...உங்கள் வேலையைப்பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று...!



..... It is a blessing to have friend like this!
Chitra said…
.ஏனென்றால் புகழ்ந்தால் தொடரும் நட்பல்ல இந்த நட்பு...! என் மீது தவறென்றால் தனியாக கூப்பிட்டு காட்டு காட்டென்று காட்டிவிடுவான்....! எவ்வளவு திட்டினாலும் எதார்த்தமாய் தோளில் கை போட்டு ஆறுதலாய் அந்த விசயத்தை உள்ளே புகட்டி விடுவான்! என் வாழ்வின் சாரதி


...... Ultimate! May the Lord continue to bless this friendship! :-)

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...