Skip to main content

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் II















கண்ணா வாழ்கையில ஒரு விசியத்த..கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் எப்பவுமே ஒரே ரூட்ல நாம போனா ரெடிமேடா நமக்கு ஒரு பேர வச்சி....ஓரங்கட்டிடுவாங்க...லைஃப்ப எப்பவுமே...லைவா வச்சிக்கணும்....சரி...இப்போ...ஸ்ட்ரெய்ட்டா..மேட்ட்ருக்கு வர்ர்ட்டா....

இதுவரை....

பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html

இனி...

என் வீட்டுக்கு ரெண்டு வீடு முன்னாலயே...பாபுவோட வீடு இருக்கு... வந்த போஸ்ட் மேன் முதல்ல பாபுகிட்ட போய் அவனுக்கு கார்டு எல்லாம் கொடுத்துட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்து என் கையில ஒரு 21 கார்டு கொடுத்தாரு....5 ரஜினி படம்...ஒரு பிள்ளையார் படம்..3 முருகன் பாக்கி எல்லம் இயற்கை காட்சிகல், பொங்கல் ..பானைன்னு...கொடுமையா...! அடப்பாவிகளா....இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு....மனசுல நினைச்சிகிட்டு..பாபு கிட்ட போயி மெல்ல கேட்டேன் ..உனக்கு பொங்கல் வாழ்த்து என்ன படம்டா வந்து இருக்குன்னு....அவ்ளோதான்...

அவன்...டொட்டடாயியியியியியியிங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு மியூசிக் கோட எடுத்து ஒண்ணு ஒண்ணா என் முன்னால போடுறான் ஒண்ணு..ரெண்டு...மூணு......மொத்தமா 17 ரஜினி படம்...ஒண்ணு ஒன்ணும் ஒரு ஸ்டைலா....என்னோடா...ரஜினி அவன் கையில நிறைய நிறைய இருந்தத பாத்துட்டு அழுகையே வந்துடுச்சு...அதவிட இந்த பாபு காட்டின பிலிம் இப்போ நினைச்சாலும் எனக்கு அழுகையும் ஆத்திரமுமா இருக்கு...ஓட்டப்பந்தயத்துல கடைசில ஓடிவந்த பையன் மாதிரி நின்னேன்....!

நேரே அனுப்பிச்ச ஓவ்வொருத்தரா போய் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன்...மணிரத்தனம் படம் மாதிரி...ஏன்க்கா...ஏண்ணே... ஏன்...ஏன்..ஏன்?எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனைனு கேட்டேன்...எல்லோரும் சிரிச்சுட்டு சொன்ன பதில் எங்க அப்பாவ எனக்கு வில்லனா ரெண்டு செகன்ட்ல மாத்திடுச்சு....ஏன் தெரியுமா...ரஜினி வாழ்த்து அட்டையை அனுப்பிச்சா எங்க அப்பாவிற்கு பிடிக்காதாம்.....! இன்னைக்கு ராத்திரி...அப்பா வரட்டும்.. நேருக்கு நேரா...அவர்கிட்ட...கேட்டுட வேண்டியதுதான்...ஆஃபிஸ் முடிஞ்சு வரட்டும்....யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....

வீட்டுக்குள்ள நுழையும் போதே ஸ்டைலா ரஜினி மாதிரி ஸ்பீடா போனேன்(அப்படீன்னுதான்... நானா நினைச்சுக்கிறேன்....விட்டுறங்களேப்பா..)அம்மாகிட்ட...போய் அப்பா எப்போமா வருவர்னு கேட்டேன்...அம்மா முறைச்சு பாத்து...என்ன இது அதட்டலா கேக்குற..எப்பவும் வர்ற மாதிரிதான் வருவாரு...ஏண்டா....?அப்படின்னு கேட்டாங்க... நான் அம்மாவோட...செல்லம்..அதனால அதே திமிரோட.....சொன்னேன்...அத எல்லம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஹாலுக்கு போனேன் அங்க என் அக்கா வேற எப்ப பாத்தாலும் புக்க எடுத்து வச்சுட்டு படிச்சிட்டே இருக்கறதால.... நானும் படிச்சே ஆகணும் (என்ன கொடுமை சார்....இது ஒரு ரஜினி ரசிகனப் போய் படி படின்னு சொல்றாங்களே....)ஒப்புக்கு நானும் ஒரு புக்க (வரலாறுன்னு நினைக்கிறேன்...அதுலதான கதை இருக்கும்) எடுத்து வச்சு படிச்சேன்...இல்ல... இல்ல படிக்கிற மாதிரி நடிச்சேன்....!

இரவு மணி 7 வாசல்ல பைக் சத்தம் ...ம்ம்ம்ம்....அப்பாதான்...வரட்டும் வரட்டும்.....ரஜினி பிடிக்காதம்ல....உங்களால எனக்கு எவ்ளோ அவமானம்...கேட் திறக்கும் சத்தம்....ம்ம்ம்ம் பயப்படக்கூடாது..... நான் யாரு....ரஜினி...(ரசிகன் இல்ல...ரஜினியேதான்)...சும்மா விடமாட்டேன்...அநியாயத்தை தட்டிக் கேப்பேன்...செருப்பு கழட்டும் சத்தம்...வாங்க....வாங்க....உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் (எவ்ளோ ரஜினி படம் மைன்ட்ல மனப்பாடமா இருக்கு)....


அப்பா வீட்டுக்குள்ள வந்திட்டார்......அப்போ.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S


பின் குறிப்பு: விசில் எல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்குங்க.....

Comments

சூப்பரு தம்பி
///யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....///


ஹா..ஹா.. நல்ல வேளை யூனியன் ஆஃபிஸ் குள்ள புகுந்து ரகளை பண்ணாம விட்டீங்களே...!
Chitra said…
கோபமும், ஆதங்கமும், தத்துவங்களும் நிரம்பி வழியும் உங்கள் இடுகைகளின் (they are good too) நடுவில், உற்சாகமும் குதூகலமும் கலகலப்பும் பொங்கி வழிய செய்யும் இந்த இடுகைகள் - அட, தேவாவுக்குள் ஒரு குட்டி எரிமலை மட்டும் அல்ல - ஒரு குட்டி அண்ணாமலையும் (ரஜினியும்) உண்டு என்று காட்டுகிறது. கூல்!
Chitra said…
இது எப்படி இருக்கு?
dheva said…
சூப்பர்....விசிலோட வெயிட் பண்றீங்க....போல..... சித்ரா....!
dheva said…
தமிழ்.....யூனியன் ஆபிஸ் தப்பிச்சிடுச்சுன்னு சந்தோசப்படுறீங்களா? ஹா.....ஹா....ஹா....!
dheva said…
சுனில் ... ரொம்ப நன்றிங்கண்ணா....!
இருங்க விசில் வாங்கிட்டு வந்துடுறேன்..
dheva said…
என்னது....3வது பாகம் எழுதணுமா...இருங்க சார் புலிகேசி விசில் வாங்கிட்டு வந்துரட்டும்....!
சஸ்பென்ஸ் தாங்க முடியல!!! விசில் வாங்கிக்கிட்டு வந்து வாயிலேயே எவ்ளோ நேரம்தான் வச்சிருக்கிறது.... சீக்கிரமா அடுத்த பதிவ எழுதுங்கோ!!! விசில் சத்தத்துல பக்கத்து வீட்டுக்காரன் காது கிழியனும். ஹிஹிஹி
( அடடா.. இது ஆனாலும் ரொம்பவே லேட்டோ.. நா கொஞ்சம் இப்படி தான்... அட்ஜஸ்ட் ப்ளீஸ்.. :D :D )

சரி சரி.. மேட்டர்க்கு வரேன்.. திரும்பவும் முக்கியமான கட்டத்தில இடைவேளையா?
இப்படியா பிளான் பண்ணி பியூஸ் பிடுங்கி விடறது..

ஆனா, எனக்கு கவலை இல்லையே..
அடுத்த பாகம் போட்டுட்டீங்களே..
அதா போயி இப்ப படிசிருவனே.. :P

சூப்பர் தேவா.. :)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...