
எதை எழுதினாலும்
உனக்கான கவிதையாய்...
மாற்றும் என் பேனாவுக்கும்...
எப்போதும் உனை நோக்கியே...
பாயும் என் நினைவுகளுக்கும்
புரிவதில்லை நான் தான்
எஜமானனென்று....

ஒரு மழைக்காய் ...
நீ குடை விரித்தாய்.....
சந்தோசத்தில் சிரித்தது...
மறைந்திருந்த சூரியன்
எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!

உனக்கு வியர்க்கும் போது...
எனக்கு கோபம் வரும்...
உன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும்
வியர்வையின் மீது!
ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!
கடைக்கண்ணால்..
என்னை பார்க்கும்...
ஒவ்வொரு கணங்களும்
யுகங்களாய்தான் நீண்டால்தான் என்ன?
களுக் கென்று...
நீ சிரித்தாய்...
கிழே விழுந்த..சில்லறையாய்..
சிதறிப் போனேன் நான்...!

நீ...உறங்கும் போது...
உன்னைக் காணவேண்டும்..
என்ற ஆசையில்...
இரவு முழுதும்...
உறங்கவில்லை நான்!
அது ஒரு பெளர்ணமி இரவு..
முதன் முதலாய்....
இரவில் உனைப் பார்த்தது....
திடுக்கிட்டே... போனேன்...
ஒரு இரவுக்கு எப்படி...
இரு நிலவென்று...!

என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!
என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!

உன் பார்வை என்னவோ..
சாதாரணம்தான்....
ஆனால்...காட்டுத் தீயாய்...
பற்றி எரிகிறதே...
என் மனது...
புரியாத இந்த
பிரபஞ்ச புதிரை...
எப்படி நான் தீர்ப்பேன்..
சொல்லடி பெண்ணே....?
காதலோடு இருக்கும் ஒவ்வொரு கணங்களும்.... கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்! ஒரு காதல் மனிதனை முழுமையாக்குகிறது கவிஞனாக்குகிறது அர்த்தம் பொதிந்த இருப்புத்தன்மையை சாதாரணமாய் போதிக்கிறது.
காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து!
காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!
காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!
தேவா. S
Comments
அதுபோல, காதலை ஒரு புதிய கோணத்தில் - மிக அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்க! - உங்கள் கவித்துவமும் அந்தக் காதலும்..
//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//
எவ்வளவு மென்மையான வார்த்தைகள்...நன்று ...இன்னும் பலமுறை படிக்க போகிறேன் , நானும் உங்களை போல் காதலை நேசிக்க ...
எளிய சொற்களால் ஆன ஆராதனை
தொடர்க
வார்த்தை பிரயோகம்...! அருமை...!
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//
அருமையான வரிகள்...
சூப்பர் கவிதை. கவிதையும் சூப்பர் எழுதுறிங்க...
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//
உங்களின் கவிதை வரிகளின் உயிர்த் தடமே இந்த வசனத்தில் தான் உள்ளது. அருமையான கவிதை. காதலில் விழுந்து கரையேறியுள்ளீர்கள் போலும். மிக மிகச் சிறப்பான கவிதை தோழா!
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!//
//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//
அதே காதல் இப்படியானதொரு அழகான கவிதையையும் உங்கள்மூலம் கோர்த்துவிடுமோ.. மேலவுள்ள ரெண்டு பத்திகளை மட்டும் ரசித்தேன்னு நினைக்காதீங்க... எல்லாத்தையும் எடுத்துப்போட்டா இன்னொரு கவிதையாயிடுமே.. அதானால்தான்... நட்சத்திரங்களைவிடுத்து நிலவினை மட்டும் காட்டுகிறேன்...
அருமையான கவிதைகள்...
// காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து! காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!
//
எல்லாம் சரிங்க இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலய இல்ல அதற்கப்புறமா(மனைவி இதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களா)
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!/* super line no chance
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..அதுவந்து..... வேற வழியில்ல பாஸ் .... நாளைக்கு வீக் என்ட் வேற....அதனாலா
மனைவிக்கு .....எழுதனதாவே வச்சுக்குங்க....! சரியா! மிச்சத்த....சனிக்கிழமை ஆபீஸ்ல பேசலாம்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சந்தோசமா பாஸ்!
அருமையோ அருமை.
வாழ்த்துக்கள்.
தேட போய்டீங்கள
கவிதை அருமை
வரிகளில் உவமானங்கள் சிறப்பு...
காதல் வழிய வழிய எழுதி இருக்கிறீர்கள்
எளிய சொற்களால் ஆன ஆராதனை
தொடர்க
........ I second it! Superb!
நீங்க கவிதை எழுதுவதில் நெஜமாவே கிங் தான்..
அத்தனை வரிகளும் இனிமை..
எதை என்று சொல்வேன்.. எல்லாமே ரசித்து படித்தேன்..
//ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//
ரொம்ப அழகுங்க..!!
நீங்க சொன்னது, முற்றிலும் உண்மை.. காதலுடன் இருந்தால், உலகமே நம் பார்வைக்கு அழகு தான்.. :) :)
வாழ்த்துக்கள் தேவா..!!!
(பி.கு: தேவா.. சில பல வேலைகள் காரணமாக.. ரெகுலரா வந்து பின்னோட்டம் இட முடியல.. சாரிங்க.. )
காதல் என்பது காற்று!
சுவாசிப்பவன் மட்டுமே...
முழுமையாய் வாழ்கிறான்.
இது என் கவிதை!
பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கு ஒன்றூ தெரியுமா...காதல்தான் பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்த்து வைத்திருக்கிறது...புதுசு புதுசாய் விசயங்களைப் படைக்கிறது.!
ஜெய்லானி..@ நன்றி நண்பரே...!
ஜெயந்தி...@ நன்றி தோழி...!
ஹேமா....@ என்ன இப்டி சொல்லீட்டீங்க.....காதலாய் இருந்தால் அது நிலைக்கும் ஹேமா...! காதல் என்றாலே....உண்மை...என்றுதான் அர்த்தம்...! உண்மைக் காதல் என்ற சொற்றொடர் தவறானது.!
ப்ரியமுடன் வசந்த் @ காதல் விழிப்பு....பாஸ்....ஹா..ஹா...ஹா...! மிக்க நன்றி!
சித்ரா...@ மிக்க.. நன்றி சித்ரா...!
சந்தியா.....@ ஆமாங்க....ஆமாங்க..ஆமாம்...(ஹா ஹா....ஹா)
ஆனந்தி...@ நன்றி தோழி மிக்க் நன்றி ஆனந்தி....! உங்களின் ஊக்கம்தான் மேலும் மேலும் எழுத வைக்கிறது.
கருணாகரசு....@ உங்களின் கவிதை அருமை தோழர்! கவிதை ஒரு மார்க்கமாக இருக்கா...ஆமாம் தோழர்....இது முழுமை நோக்கிய மார்க்கம்தான்! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!
காதல், கடந்து போயின்!
பதுப்பிக்க, "பிரபஞ்ச புதிர்"
அருமை
இந்த பிளாக்கை பார்பதற்கு முன்
என்றும் எண்ணியதில்லை
நான் ஒரு கவி என்று
இப்போது உணர்கிறேன் என்னுள்ளும்
ஒரு கவிஞன்
ஒளிந்து கொண்டுள்ளான் என்று!
அப்படின்னு நான் கூட டுபாக்கூர் கவிதை விடலாம், ஆனா சத்தியமா அத கவிதைன்னு சொல்ல முடியாது.