Skip to main content

பிரபஞ்ச புதிர்....!




எதை எழுதினாலும்
உனக்கான கவிதையாய்...
மாற்றும் என் பேனாவுக்கும்...
எப்போதும் உனை நோக்கியே...
பாயும் என் நினைவுகளுக்கும்
புரிவதில்லை நான் தான்
எஜமானனென்று....


ஒரு மழைக்காய் ...
நீ குடை விரித்தாய்.....
சந்தோசத்தில் சிரித்தது...
மறைந்திருந்த சூரியன்

எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!

உனக்கு வியர்க்கும் போது...
எனக்கு கோபம் வரும்...
உன் மீது ஒட்டிக் கொண்டிருக்கும்
வியர்வையின் மீது!

ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!

கடைக்கண்ணால்..
என்னை பார்க்கும்...
ஒவ்வொரு கணங்களும்
யுகங்களாய்தான் நீண்டால்தான் என்ன?

களுக் கென்று...
நீ சிரித்தாய்...
கிழே விழுந்த..சில்லறையாய்..
சிதறிப் போனேன் நான்...!



நீ...உறங்கும் போது...
உன்னைக் காணவேண்டும்..
என்ற ஆசையில்...
இரவு முழுதும்...
உறங்கவில்லை நான்!

அது ஒரு பெளர்ணமி இரவு..
முதன் முதலாய்....
இரவில் உனைப் பார்த்தது....
திடுக்கிட்டே... போனேன்...
ஒரு இரவுக்கு எப்படி...
இரு நிலவென்று...!

என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!

என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!















உன் பார்வை என்னவோ..
சாதாரணம்தான்....
ஆனால்...காட்டுத் தீயாய்...
பற்றி எரிகிறதே...
என் மனது...
புரியாத இந்த
பிரபஞ்ச புதிரை...
எப்படி நான் தீர்ப்பேன்..
சொல்லடி பெண்ணே....?



காதலோடு இருக்கும் ஒவ்வொரு கணங்களும்.... கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட கணங்கள்! ஒரு காதல் மனிதனை முழுமையாக்குகிறது கவிஞனாக்குகிறது அர்த்தம் பொதிந்த இருப்புத்தன்மையை சாதாரணமாய் போதிக்கிறது.


காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து!

காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!

காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!


தேவா. S

Comments

’பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்!’ என்றார் கவிஞர் வைரமுத்து.
அதுபோல, காதலை ஒரு புதிய கோணத்தில் - மிக அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்க! - உங்கள் கவித்துவமும் அந்தக் காதலும்..
விஜய் said…
அண்ணா அழகான வரிகள் , நிஜமாய் நினைக்கவில்லை இந்த காதல் ரசம் சொட்டும் கவிதைகளை, நேசிக்க நேசிக்க வைக்கிறது உங்கள் வார்த்தைகள்..

//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//

எவ்வளவு மென்மையான வார்த்தைகள்...நன்று ...இன்னும் பலமுறை படிக்க போகிறேன் , நானும் உங்களை போல் காதலை நேசிக்க ...
காதல் வழிய வழிய எழுதி இருக்கிறீர்கள்

எளிய சொற்களால் ஆன ஆராதனை

தொடர்க
இது காதலிக்கு எழுதியதா ?? இல்லை மனைவிக்கு எழுதியதா
மீண்டும்..மீண்டும்..படிக்க தூண்டும் அருமையான
வார்த்தை பிரயோகம்...! அருமை...!
ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//

அருமையான வரிகள்...
சூப்பர் கவிதை. கவிதையும் சூப்பர் எழுதுறிங்க...
ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//


உங்களின் கவிதை வரிகளின் உயிர்த் தடமே இந்த வசனத்தில் தான் உள்ளது. அருமையான கவிதை. காதலில் விழுந்து கரையேறியுள்ளீர்கள் போலும். மிக மிகச் சிறப்பான கவிதை தோழா!
//எப்போது ....
நீ கோலமிட வருவாய் என...
காத்திருக்கிறோம்...
நானும் ..உன் வீட்டு வாசலும்!//

//என் பெயர் சொல்லி ...
நீ அழைத்த..
அந்த கணத்தின் உணர்ந்தேன்..
பிரசவத்திறுகு பிறகான...
தாயின் சந்தோசத்தை...!//

அதே காதல் இப்படியானதொரு அழகான கவிதையையும் உங்கள்மூலம் கோர்த்துவிடுமோ.. மேலவுள்ள ரெண்டு பத்திகளை மட்டும் ரசித்தேன்னு நினைக்காதீங்க... எல்லாத்தையும் எடுத்துப்போட்டா இன்னொரு கவிதையாயிடுமே.. அதானால்தான்... நட்சத்திரங்களைவிடுத்து நிலவினை மட்டும் காட்டுகிறேன்...

அருமையான கவிதைகள்...
VELU.G said…
மிக மிக அழகான வரிகளில் காதலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்


// காதோலோடு இருங்கள் அது பிரபஞ்சத்தின் உயிர்ச்சத்து! காதோலோடு இருங்கள் இந்த கணம் அர்த்தம் பொதிந்ததாய் மாறும்!காதலோடு இருங்கள் காதல் எல்லாம் போதிக்கும்!
//
எல்லாம் சரிங்க இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாலய இல்ல அதற்கப்புறமா(மனைவி இதுக்கெல்லாம் ஒத்துக்குவாங்களா)
Jeyamaran said…
*/என்னவோ சொல்ல...
உன்னருகில் வந்தேன்...
"ம்ம்ம்ம்..." என்ன என்றாய்..?
பரீட்சையில் மறந்த பதிலாய்...
உனக்கான கேள்வி
மறந்து போனது....!/* super line no chance
கவிதை சூப்பர் தேவா ..!!
ஒவ்வொரு கவிதையும் அருமை. படங்களும் அருமை.
dheva said…
சிவம் அமுத சிவம் @ எல்லா கோணதிலும் அழகயிருக்கும் ஒரே விசய்ம் காதல்தான் பாஸ்! நன்றி
dheva said…
நேசமித்ரன்....@ நன்றி தோழர்!
dheva said…
விஜய் @ நேசிப்பில்தான் தம்பி இருக்கிறது எல்லாமே......! ஆமா தம்பி எங்க... ரெங்க நாதன் தெருவில சுத்துறதா...கேள்விப்பட்டேன்....காதாலா...? கவிதைக்கு கரு தேடுறேன்னு சொல்றீயாமே உண்மையா? ஹா..ஹா...ஹா!
dheva said…
கார்திக் (LK)...@ மாப்பு..................... வச்சிட்டாய்ய...ஆப்பு.....................! குதுகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிக்கிறீங்களே...! பக்கத்துலேயெ நிக்கிறாங்க...கார்திக் அண்ணாவுக்கு என்ன பதில் போடுறீங்கன்னு பாத்துட்டு அடுத்த வேலைய பாக்குறேன்னு.....

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..அதுவந்து..... வேற வழியில்ல பாஸ் .... நாளைக்கு வீக் என்ட் வேற....அதனாலா


மனைவிக்கு .....எழுதனதாவே வச்சுக்குங்க....! சரியா! மிச்சத்த....சனிக்கிழமை ஆபீஸ்ல பேசலாம்....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சந்தோசமா பாஸ்!
dheva said…
அமுதன்......@ நன்றி அமுதன்.... ! ஆமா என்ன ஜி சாட்ல புடிக்கவே முடியல உங்கள...!
movithan said…
டாப் கியரில் வண்டியில் சென்ற அனுபவம்.

அருமையோ அருமை.

வாழ்த்துக்கள்.
S Maharajan said…
என்ன தேவா தேடுதலை காதல் பக்கம்
தேட போய்டீங்கள
கவிதை அருமை
ஹேமா said…
சொட்டுச் சொட்டாய்க் காதல் மழை.இதே காதல் என்றுமே நிலைத்திருந்தால் அதிஷ்டம்தான்.
காதல் மயக்கம் ...

வரிகளில் உவமானங்கள் சிறப்பு...
Chitra said…
நேசமித்ரன் said...

காதல் வழிய வழிய எழுதி இருக்கிறீர்கள்

எளிய சொற்களால் ஆன ஆராதனை

தொடர்க


........ I second it! Superb!
Chitra said…
மிகவும் ரசித்து வாசித்தேன்.... தேவா..... Simply Superb!
Anonymous said…
அருமையான கவிதை மனைவிக்கு தானே ????
ஹாய் தேவா. இத.. இத..... தான் எதிர்பார்த்தேன்...
நீங்க கவிதை எழுதுவதில் நெஜமாவே கிங் தான்..
அத்தனை வரிகளும் இனிமை..
எதை என்று சொல்வேன்.. எல்லாமே ரசித்து படித்தேன்..
//ஒரு முறை ... நீ..
அச்சச்சோ என்று சொன்னாய்...
ஒராயிரம் முறை..
சொல்லிப்பார்த்தேன் நான்!
ஒரு முறை கூட
உன் அழகு அதில் இல்லை!//

ரொம்ப அழகுங்க..!!

நீங்க சொன்னது, முற்றிலும் உண்மை.. காதலுடன் இருந்தால், உலகமே நம் பார்வைக்கு அழகு தான்.. :) :)
வாழ்த்துக்கள் தேவா..!!!

(பி.கு: தேவா.. சில பல வேலைகள் காரணமாக.. ரெகுலரா வந்து பின்னோட்டம் இட முடியல.. சாரிங்க.. )
கவிதை ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!

காதல் என்பது காற்று!
சுவாசிப்பவன் மட்டுமே...
முழுமையாய் வாழ்கிறான்.

இது என் கவிதை!

பகிர்வுக்கு நன்றி.
dheva said…
சவுந்தர்....@ நன்றி தம்பி
dheva said…
தமிழ் மதுரம்...@ காதலில் விழுந்து கரையேறுவது என்றெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே...காதல் நாம் பிறப்பதற்கு முன்னும்...இறந்த பின்னும் தொடரப் போகும் ஒன்று....

உங்களுக்கு ஒன்றூ தெரியுமா...காதல்தான் பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்த்து வைத்திருக்கிறது...புதுசு புதுசாய் விசயங்களைப் படைக்கிறது.!
dheva said…
பாலாசி....@ உங்களின் பின்னூட்டத்தில் அழகுணர்ச்சி...மிளிர்கிறது..., காதலில் நீங்கள் பொங்கி வழிவதை உணர்கிறேன்... நண்பா!
dheva said…
வேலு.........@ அழகா மாட்டி விடுறீங்களே...ஹா...ஹா...ஹா...!
dheva said…
ஜெயராமன் @ நன்றி தம்பி..!

ஜெய்லானி..@ நன்றி நண்பரே...!

ஜெயந்தி...@ நன்றி தோழி...!
dheva said…
மால்குடி....@ டாப் கியரிலேயே..வாழ்க்கை போகட்டும் பாஸ்..! வாழ்த்துகள்!
dheva said…
மகராஜன்.....@ இலக்கு என்னவோ ஒரு இடம் நோக்கிதான் பாஸ்!
dheva said…
உடந்தை வாலிபன் (வாலண்டொ).....@ வாழ்த்துக்க்ள் தம்பி!


ஹேமா....@ என்ன இப்டி சொல்லீட்டீங்க.....காதலாய் இருந்தால் அது நிலைக்கும் ஹேமா...! காதல் என்றாலே....உண்மை...என்றுதான் அர்த்தம்...! உண்மைக் காதல் என்ற சொற்றொடர் தவறானது.!



ப்ரியமுடன் வசந்த் @ காதல் விழிப்பு....பாஸ்....ஹா..ஹா...ஹா...! மிக்க நன்றி!

சித்ரா...@ மிக்க.. நன்றி சித்ரா...!


சந்தியா.....@ ஆமாங்க....ஆமாங்க..ஆமாம்...(ஹா ஹா....ஹா)


ஆனந்தி...@ நன்றி தோழி மிக்க் நன்றி ஆனந்தி....! உங்களின் ஊக்கம்தான் மேலும் மேலும் எழுத வைக்கிறது.


கருணாகரசு....@ உங்களின் கவிதை அருமை தோழர்! கவிதை ஒரு மார்க்கமாக இருக்கா...ஆமாம் தோழர்....இது முழுமை நோக்கிய மார்க்கம்தான்! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!
vasan said…
காதல்,,காத‌ல்,,, காத‌ல்.
காத‌ல், க‌ட‌ந்து போயின்!
பதுப்பிக்க‌, "பிர‌ப‌ஞ்ச‌ புதிர்"
Unknown said…
மிகவும் ரசித்து வாசித்தேன்.
அருமை
Jayadev Das said…
பிரபஞ்சப் புதிர் என்றவுடன் நான் ஏதோ ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எழுதின ஏதோ ஒன்ன பத்திதான் சொல்லப் போறாருன்னு ஓடிவந்து பாத்தா பொண்ணப் பாத்து ஏங்கி நின்னுக்கினு இன்ருக்காரே. கல்யாணம் ஆகாதவரா இருக்கணும், [ஆயிடுச்சுன்ன இந்த மாதிரி எண்ணமெல்லாம் வராதுங்கோ!]. காதலிக்கும் போது அவ மாதுரி தீக்ஷித், சினேகா மாதிரிதான் தெரிவாள், கல்யாணம் ஆயிடிச்சுன்னாத்தான் தெரியும் அவ சொர்னாக்கான்னு.

இந்த பிளாக்கை பார்பதற்கு முன்
என்றும் எண்ணியதில்லை
நான் ஒரு கவி என்று
இப்போது உணர்கிறேன் என்னுள்ளும்
ஒரு கவிஞன்
ஒளிந்து கொண்டுள்ளான் என்று!

அப்படின்னு நான் கூட டுபாக்கூர் கவிதை விடலாம், ஆனா சத்தியமா அத கவிதைன்னு சொல்ல முடியாது.
Anonymous said…
என்னை அழுத்தமாக பிடித்து வைத்து கொண்டன இந்த கவிதைகள்....!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...