Skip to main content

விழித்துக் கொண்டோரெல்லாம்....பிழைத்துக் கொண்டார்....!














ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்...(படிப்பினைக்காகத்தான் நடந்த கதையா இல்லையா என்று கேட்டு ட்ராக் மாற்றி விட்டு விடாதீர்கள்....ஹா..ஹா..ஹா)

நாராதர் ஒருமுறை திருமாலிடம் சென்று எம் பெருமானே மாயை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் அப்போது திருமால் அமைதியாக சொன்னார் சொல்ல முடியாது விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாரதரும் பெருமானும் பேசிக் கொண்டே போய்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாரதருக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது..திருமால் கூறியிருக்கிறார் கீழே போய்... ஏதாவது ஒரு இடத்தில் நீர் அருந்தி விட்டு வா நான் கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கிறேன் என்று.

நாரதரும் கீழே இறங்கிப் போய் ..தண்ணீர் தேடி அலைந்து ஒரு இடத்தில் ஒரு சிறிய நீரோடையை கண்டிருக்கிறார். நீர் அருந்தி விட்டு திரும்பி பார்க்க ஒரு அழகான பெண் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவள் மீது காதல் கொள்ள, அந்த பெண்ணும் நாரதர் மீது காதல் கொள்ள...இருவரும் அந்த பெண்ணின் சம்மதத்தோடு மணமும் புரிந்து கொண்டுவிட்டனர். அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பரிசாக மூன்று குழந்தைகளும் பெற்றனர். நாரதரும் ஒரு இன்பமான இல்லற வாழ்க்கையில் திளைத்து மூழ்கியே போனார்.

ஒரு நாள் பெரும் காற்று அடித்து புயல் வீசிக் கொண்டிருந்தது... வெள்ளத்தில் எல்லா வீடுகளும் அடித்து செல்லப்பட்டன.... வெள்ளம் நாராதர் வீட்டையும் விட வில்லை..... அவரது வீடும், மனைவி, குழந்தைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன... நாரதார் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவரது குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றமுடியவில்லை.... வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விட்டது! வெள்ளம் சில மணி நேரங்களில் கண் விழித்த நாரதர்...ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தார்....! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட தனது குடும்பத்தை நினைத்து...தேம்பி...தேம்பி...அழுது கொண்டு இருந்தார்...அவரது அழுகை பெரிய ஓலமாக வெளிப்பட்டது....

"
"
"
"
"
"

திருமாள் ...மெல்ல வந்து நாரதரின் முதுகு தொட்டார்..... " நாரதரே.....தண்ணீர் அருந்தி விட்டீரா" என்று சிரித்துக் கொன்டே கேட்டார்...திடுக்கிட்டவராய் விழித்த நாரதர்... தன் நிலை உணர்ந்தவராய்... வெட்கத்தில் ஹி...ஹி...ஹி... என்று சிரித்துக் கொண்டு.. திருமாலின் காலில் விழுந்து நமஸ்கரித்து.... ஒரு அழகான உவமையால் மாயை என்றால் என்ன என்று உணர்த்திவிட்டீர்.... தண்ணீர் குடிக்க வந்த நான்.. குடித்து விட்டு திரும்பாமல்..எங்கெங்கோ சென்று விட்டேன்... என்னை மன்னியும் என்று .கேட்டாரம்.


மேலே நான் கூறியிருப்பது புராண கதை.... ! இது போலத்தான் நான்.... ஏதோ பெரிதாய் கிழிக்காவிட்டாலும் என்னால் ஆன தீக்குச்சியை கிழித்து ஒரு கணம் எரிந்தாலும் ஒளி கொடுத்த வெளிச்சத்தில் மரிக்கலாம் என்ற எண்னத்தில் இருப்பவன் நான். எனது நோக்கம் நல்ல கட்டுரைகளை கொடுப்பது தான்.. நாரதர் தண்ணீர் குடிக்க வந்த மாதிரி நான் பதிவு எழுத வந்த நோக்கம் மறந்துட்டு.... ஏன் என் இடுகை பிரபலமாகல.....எப்படி தமிழிஷில் காணமப் போச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்....ஹா... ஹா... ஹா....


எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை
.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்.....!

பயண முறைகள் மாறினாலும்...இலக்கு மாறாது...! என் எழுத்தை வாசிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நமஸ்காரங்கள்!


தேவா. S

Comments

//எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லம்.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்....///

mudiyala dheva.. en en en ennaachu eduku ippadilaam
நல்ல உதாரணம் அண்ணா....

அவர்கள் (தமிழ்ஷ்) வைரஸ் script தடுத்து இருக்கலாம்
Unknown said…
கர்த்தா... பூர்ணம்.. ஒரு புண்ணாக்கும் கிடையாது நண்பா..
\தீக்குச்சி வெளிச்சம் சில நொடிகள் எனினும்
ஒரு தீக்குச்சி இந்த உலகை எரிக்கும் ஆற்றல் கொண்டது..
இது வேறயா? உலகத்துல ஒன்னும் புரியல.
டேக் இட் ஈஸி .....தேவா...
ஹி ஹி ஹி..

இதெல்லாம் சாரதாராணம் நண்பா..

தொடர்ந்து எழுதுங்கள்...
குட் வொர்க், தேவா.
Anonymous said…
This comment has been removed by the author.
எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை

less tension more work
more work less tension

தொடர்ந்து எழுதுங்கள்....
ஹேமா said…
அதைவிட அடுத்ததாய் இன்னும் திறமையாய் உங்களால் எழுத முடியும் தேவா.
dheva said…
உணர்வோடு பகிர்ந்து கொண்ண அனைவருக்கும் நன்றிகள்!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்...@ " கர்த்தா....பூரணம்...ஒரு புண்ணாக்கும் கிடையது..."

என்ன சொல்றீங்கன்னு புரியல....இருந்தாலும் உங்களின் ஆதரவுக்கு நன்றிகள்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...