Skip to main content

விழித்துக் கொண்டோரெல்லாம்....பிழைத்துக் கொண்டார்....!














ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்...(படிப்பினைக்காகத்தான் நடந்த கதையா இல்லையா என்று கேட்டு ட்ராக் மாற்றி விட்டு விடாதீர்கள்....ஹா..ஹா..ஹா)

நாராதர் ஒருமுறை திருமாலிடம் சென்று எம் பெருமானே மாயை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் அப்போது திருமால் அமைதியாக சொன்னார் சொல்ல முடியாது விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாரதரும் பெருமானும் பேசிக் கொண்டே போய்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாரதருக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது..திருமால் கூறியிருக்கிறார் கீழே போய்... ஏதாவது ஒரு இடத்தில் நீர் அருந்தி விட்டு வா நான் கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கிறேன் என்று.

நாரதரும் கீழே இறங்கிப் போய் ..தண்ணீர் தேடி அலைந்து ஒரு இடத்தில் ஒரு சிறிய நீரோடையை கண்டிருக்கிறார். நீர் அருந்தி விட்டு திரும்பி பார்க்க ஒரு அழகான பெண் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவள் மீது காதல் கொள்ள, அந்த பெண்ணும் நாரதர் மீது காதல் கொள்ள...இருவரும் அந்த பெண்ணின் சம்மதத்தோடு மணமும் புரிந்து கொண்டுவிட்டனர். அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பரிசாக மூன்று குழந்தைகளும் பெற்றனர். நாரதரும் ஒரு இன்பமான இல்லற வாழ்க்கையில் திளைத்து மூழ்கியே போனார்.

ஒரு நாள் பெரும் காற்று அடித்து புயல் வீசிக் கொண்டிருந்தது... வெள்ளத்தில் எல்லா வீடுகளும் அடித்து செல்லப்பட்டன.... வெள்ளம் நாராதர் வீட்டையும் விட வில்லை..... அவரது வீடும், மனைவி, குழந்தைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன... நாரதார் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவரது குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றமுடியவில்லை.... வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விட்டது! வெள்ளம் சில மணி நேரங்களில் கண் விழித்த நாரதர்...ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தார்....! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட தனது குடும்பத்தை நினைத்து...தேம்பி...தேம்பி...அழுது கொண்டு இருந்தார்...அவரது அழுகை பெரிய ஓலமாக வெளிப்பட்டது....

"
"
"
"
"
"

திருமாள் ...மெல்ல வந்து நாரதரின் முதுகு தொட்டார்..... " நாரதரே.....தண்ணீர் அருந்தி விட்டீரா" என்று சிரித்துக் கொன்டே கேட்டார்...திடுக்கிட்டவராய் விழித்த நாரதர்... தன் நிலை உணர்ந்தவராய்... வெட்கத்தில் ஹி...ஹி...ஹி... என்று சிரித்துக் கொண்டு.. திருமாலின் காலில் விழுந்து நமஸ்கரித்து.... ஒரு அழகான உவமையால் மாயை என்றால் என்ன என்று உணர்த்திவிட்டீர்.... தண்ணீர் குடிக்க வந்த நான்.. குடித்து விட்டு திரும்பாமல்..எங்கெங்கோ சென்று விட்டேன்... என்னை மன்னியும் என்று .கேட்டாரம்.


மேலே நான் கூறியிருப்பது புராண கதை.... ! இது போலத்தான் நான்.... ஏதோ பெரிதாய் கிழிக்காவிட்டாலும் என்னால் ஆன தீக்குச்சியை கிழித்து ஒரு கணம் எரிந்தாலும் ஒளி கொடுத்த வெளிச்சத்தில் மரிக்கலாம் என்ற எண்னத்தில் இருப்பவன் நான். எனது நோக்கம் நல்ல கட்டுரைகளை கொடுப்பது தான்.. நாரதர் தண்ணீர் குடிக்க வந்த மாதிரி நான் பதிவு எழுத வந்த நோக்கம் மறந்துட்டு.... ஏன் என் இடுகை பிரபலமாகல.....எப்படி தமிழிஷில் காணமப் போச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்....ஹா... ஹா... ஹா....


எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை
.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்.....!

பயண முறைகள் மாறினாலும்...இலக்கு மாறாது...! என் எழுத்தை வாசிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நமஸ்காரங்கள்!


தேவா. S

Comments

//எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லம்.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்....///

mudiyala dheva.. en en en ennaachu eduku ippadilaam
நல்ல உதாரணம் அண்ணா....

அவர்கள் (தமிழ்ஷ்) வைரஸ் script தடுத்து இருக்கலாம்
Unknown said…
கர்த்தா... பூர்ணம்.. ஒரு புண்ணாக்கும் கிடையாது நண்பா..
\தீக்குச்சி வெளிச்சம் சில நொடிகள் எனினும்
ஒரு தீக்குச்சி இந்த உலகை எரிக்கும் ஆற்றல் கொண்டது..
இது வேறயா? உலகத்துல ஒன்னும் புரியல.
டேக் இட் ஈஸி .....தேவா...
ஹி ஹி ஹி..

இதெல்லாம் சாரதாராணம் நண்பா..

தொடர்ந்து எழுதுங்கள்...
குட் வொர்க், தேவா.
Anonymous said…
This comment has been removed by the author.
எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை

less tension more work
more work less tension

தொடர்ந்து எழுதுங்கள்....
ஹேமா said…
அதைவிட அடுத்ததாய் இன்னும் திறமையாய் உங்களால் எழுத முடியும் தேவா.
dheva said…
உணர்வோடு பகிர்ந்து கொண்ண அனைவருக்கும் நன்றிகள்!
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்...@ " கர்த்தா....பூரணம்...ஒரு புண்ணாக்கும் கிடையது..."

என்ன சொல்றீங்கன்னு புரியல....இருந்தாலும் உங்களின் ஆதரவுக்கு நன்றிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...