
ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன்...(படிப்பினைக்காகத்தான் நடந்த கதையா இல்லையா என்று கேட்டு ட்ராக் மாற்றி விட்டு விடாதீர்கள்....ஹா..ஹா..ஹா)
நாராதர் ஒருமுறை திருமாலிடம் சென்று எம் பெருமானே மாயை என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் அப்போது திருமால் அமைதியாக சொன்னார் சொல்ல முடியாது விளக்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நாரதரும் பெருமானும் பேசிக் கொண்டே போய்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாரதருக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது..திருமால் கூறியிருக்கிறார் கீழே போய்... ஏதாவது ஒரு இடத்தில் நீர் அருந்தி விட்டு வா நான் கொஞ்ச நேரம் தியானத்தில் இருக்கிறேன் என்று.
நாரதரும் கீழே இறங்கிப் போய் ..தண்ணீர் தேடி அலைந்து ஒரு இடத்தில் ஒரு சிறிய நீரோடையை கண்டிருக்கிறார். நீர் அருந்தி விட்டு திரும்பி பார்க்க ஒரு அழகான பெண் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே அவள் மீது காதல் கொள்ள, அந்த பெண்ணும் நாரதர் மீது காதல் கொள்ள...இருவரும் அந்த பெண்ணின் சம்மதத்தோடு மணமும் புரிந்து கொண்டுவிட்டனர். அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பரிசாக மூன்று குழந்தைகளும் பெற்றனர். நாரதரும் ஒரு இன்பமான இல்லற வாழ்க்கையில் திளைத்து மூழ்கியே போனார்.
ஒரு நாள் பெரும் காற்று அடித்து புயல் வீசிக் கொண்டிருந்தது... வெள்ளத்தில் எல்லா வீடுகளும் அடித்து செல்லப்பட்டன.... வெள்ளம் நாராதர் வீட்டையும் விட வில்லை..... அவரது வீடும், மனைவி, குழந்தைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன... நாரதார் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அவரது குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றமுடியவில்லை.... வெள்ளம் அடித்துக் கொண்டே போய்விட்டது! வெள்ளம் சில மணி நேரங்களில் கண் விழித்த நாரதர்...ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தார்....! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட தனது குடும்பத்தை நினைத்து...தேம்பி...தேம்பி...அழுது கொண்டு இருந்தார்...அவரது அழுகை பெரிய ஓலமாக வெளிப்பட்டது....
"
"
"
"
"
"
திருமாள் ...மெல்ல வந்து நாரதரின் முதுகு தொட்டார்..... " நாரதரே.....தண்ணீர் அருந்தி விட்டீரா" என்று சிரித்துக் கொன்டே கேட்டார்...திடுக்கிட்டவராய் விழித்த நாரதர்... தன் நிலை உணர்ந்தவராய்... வெட்கத்தில் ஹி...ஹி...ஹி... என்று சிரித்துக் கொண்டு.. திருமாலின் காலில் விழுந்து நமஸ்கரித்து.... ஒரு அழகான உவமையால் மாயை என்றால் என்ன என்று உணர்த்திவிட்டீர்.... தண்ணீர் குடிக்க வந்த நான்.. குடித்து விட்டு திரும்பாமல்..எங்கெங்கோ சென்று விட்டேன்... என்னை மன்னியும் என்று .கேட்டாரம்.
மேலே நான் கூறியிருப்பது புராண கதை.... ! இது போலத்தான் நான்.... ஏதோ பெரிதாய் கிழிக்காவிட்டாலும் என்னால் ஆன தீக்குச்சியை கிழித்து ஒரு கணம் எரிந்தாலும் ஒளி கொடுத்த வெளிச்சத்தில் மரிக்கலாம் என்ற எண்னத்தில் இருப்பவன் நான். எனது நோக்கம் நல்ல கட்டுரைகளை கொடுப்பது தான்.. நாரதர் தண்ணீர் குடிக்க வந்த மாதிரி நான் பதிவு எழுத வந்த நோக்கம் மறந்துட்டு.... ஏன் என் இடுகை பிரபலமாகல.....எப்படி தமிழிஷில் காணமப் போச்சுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்....ஹா... ஹா... ஹா....
எமது பயணத்தின் இலக்கை யாமே தீர்மானிப்போய்.....! எமது எழுத்துக்கள் பூரணத்திலிருந்து வருபவை அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை
.. வெறும் கருவி நான்...கர்த்தாவுக்கு தெரியும் எல்லா சூட்சுமமும்.....!
பயண முறைகள் மாறினாலும்...இலக்கு மாறாது...! என் எழுத்தை வாசிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் நமஸ்காரங்கள்!
தேவா. S
Comments
mudiyala dheva.. en en en ennaachu eduku ippadilaam
அவர்கள் (தமிழ்ஷ்) வைரஸ் script தடுத்து இருக்கலாம்
\தீக்குச்சி வெளிச்சம் சில நொடிகள் எனினும்
ஒரு தீக்குச்சி இந்த உலகை எரிக்கும் ஆற்றல் கொண்டது..
இதெல்லாம் சாரதாராணம் நண்பா..
தொடர்ந்து எழுதுங்கள்...
less tension more work
more work less tension
தொடர்ந்து எழுதுங்கள்....
என்ன சொல்றீங்கன்னு புரியல....இருந்தாலும் உங்களின் ஆதரவுக்கு நன்றிகள்!