Skip to main content

ஓவியம்...!

















வர்ணங்களின் ஆதிக்கத்தில்...
மறைந்தே போய்விட்டது ...
நான் வரைய நினைத்த ஓவியம்....
கூட்டத்தில் தொலைந்த....
குழந்தையைப் போல....
தேடித் தேடி...அலைந்து...
ஒராயிரம் திருத்தல்களுக்குப் பிறகும்
வர்ணங்களில் கரைந்தே,...
போய்விட்டது...அது!

வார்த்தைகளின் அலங்காரத்தில்...
எப்போதும் தொலைந்து போகிறது...
ஆழ்மனதின்....எண்ணங்கள்..
சக்கையாய் எழுத்துக்களை
துப்பிவிட்டு...சாற்றினை
ஊற்ற மறுக்கிறது மனது!
ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!

எங்கிருந்தோ வந்த..
ஒரு தாலாட்டுச் சப்தம்...
என்னுள் இன்னும்...
உக்கிரமாய் நெருப்பேற்ற...
எண்ணியதைச் சொல்ல ...
முயன்று..முயன்று...மெதுவாய்..
ஜன்னல் திறக்கிறேன்...!

காத்திருந்த...காதலியாய்....
கட்டியணைக்கிறது...
நிலவின்...கிரகணங்கள்......
என் நிலை புரிந்தது போல...
மெல்ல சிரிக்கிறாள்... நிலா மகள்!
நடுநிசி நிசப்தத்தின் அடாவடியில்...
ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று...
சமாதி நிலைக்குள்
எனைத்தள்ளி...
சப்தமாய் சிரிக்கிறது...
நான் பகிர நினைக்கும்...
மெளனம்!

கூர் மழுங்கிய ஆயுதம்தான் வார்த்தைகளும் இன்ன பிற விசயங்களும். எப்போதும் நாம் நினைப்பது ஒன்று வெளிப்படுத்துவது ஒன்று....மனிதர்கள் புரிந்து கொள்வது ஒன்று...!இப்படியாக வெளிப்பட்ட அல்லது வெளிப்படுத்த நினைக்கும் எல்லாமே...முழுதுமாய் வெளிப்படுவதே இல்லை.

ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை. நமக்குள்ளேயே இருக்கிற அந்த புரிதலை வெளிக் கொணர நெம்பு கோலாய் வார்தைகள் சில நேரம் இருக்கும்...! ஏதோ ஒரு மனிதரோ, ஒரு பாடலோ, ஒரு இசையோ, ஒரு தத்துவமோ ஒரு கேள்வியோ, ஒரு நிகழ்வோ, ஒரு சூழலோ... நம்மைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்று ஆழ்மனதில் போட்டு இதோ...பார்...இது தான் நீ என்று ஒரு வெறுமையைக் காண்பிக்கும்....!

அப்படிப்பட்ட ஒரு வெறுமையை ஓவியத்தில் சொல்ல நினைத்து, வார்த்தைகளுக்குள் முயன்று...போராடி போராடி கடைசில் தான் தோற்று...அவன் கண்ட வெறுமையே அவனை ஜெயித்து விடுகிறது...! அந்த ஜெயிப்பில் வென்றது வெறுமையாயினும்....அதன் ஜீவரசத்தை முழுதாய் அனுபவித்து தனக்குள்ளேயே...தேக்கி வைத்து....பிடிபட்ட உண்மையுடன் மெளனமாய் நகரப்போவது என்னவோ அவன் தான்....!

பசியாறி...பசிமாறி.... நிறைவாய்.... நிறைவுக்குள் போன பின்....சொல்லவும் கேட்கவும் ஆள் இல்லாத தருணங்களில் எதைச் சொல்ல...யாரிடம் சொல்ல....?

இனித்துக் கொண்டே இருக்கிறது...சுவைமாறா..ஒரு நெடும் இன்பம் நெஞ்சுக்குள்.....! நீங்களே உங்களுக்குள் தேடித் தேடி .... நீங்களே பருகுங்கள்..... நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!


தேவா. S

Comments

நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!//

ஓஹ எங்களுக்கு இதைனை நாள் காட்டியது தவறான ஓவியமா.....


ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!//

மீண்டும் தொடருங்கள் விழுந்த இடத்தில் இருந்து......
vasu balaji said…
/இனித்துக் கொண்டே இருக்கிறது...சுவைமாறா..ஒரு நெடும் இன்பம் நெஞ்சுக்குள்.....! நீங்களே உங்களுக்குள் தேடித் தேடி .... நீங்களே பருகுங்கள்..... நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!//

இந்த தேடல்தான் தவிப்பும் சுகமும் இல்லையா?:) நல்லாருக்கு
This comment has been removed by the author.
விஜய் said…
அண்ணா எங்கே பிடிக்கிறீங்க இந்த வார்த்தைகள் எல்லாத்தையும், அவ்வளவு எளிதாய் எங்கள் மனதில் நுழைய மறுக்கிறது, அந்த எழுத்துக்களை அறிய, அந்த எழுத்துக்கள் கூட தனக்கென ஒரு வாய்பாட்டை வைத்து இருக்கிறது தன்னை அறிய , உங்களை போலவே ..
நீங்கள் எழுதியவற்றை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஏதோ ஒன்றை புதிது புதியாய் கற்றுக்கொடுக்கிறது, மிக சிறந்த எழுத்துக்கள் இங்கே கோர்வையாய் மாட்டி தவிக்கின்றன, நிஜமாய் எங்களுக்கும் அவைகளை தாருங்கள் ...


அன்புடன் உங்க தம்பி
Unknown said…
வண்ணங்களை வார்த்தைகளில் வரைய முயன்றிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்
மாம்சு கவிதை நல்லாருக்கு ஆனா பிரியலையே.... யாருக்குமே பிரியலையா இல்ல எனக்கு மட்டுந்தானா???
கடைசி வரைக்கும் இன்னா மேட்டருன்னே... என்ன மாதிரி கூமுட்டைக்கு விளங்கலை...
இதைநாம தனியா விவாதிப்போம்...:)) வர்ட்டா அங்....
Kousalya Raj said…
கவிஞர் விருது உங்களுக்கு கண்டிப்பாக ஏற்புடையதுதான். இன்னும் பல விருதுகளை உங்கள் கவிதை கொண்டு வரும். வாழ்த்துகள்.
ஹேமா said…
பதிவு முழுதுமே அழகு வார்த்தைகளோடு
மௌனம் வரைந்த ஓவியம்.
க ரா said…
அழகுன்னா.
Feros said…
நல்ல இருக்கு

வாழ்த்துக்கள் அண்ணா ...
SASIKUMAR said…
கூர் மழுங்கிய ஆயுதம்தான் வார்த்தைகளும் இன்ன பிற விசயங்களும். ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை.
you are right dheva, i wanted highlight the sentence.but entire portion suppose to be highlighted great....shyssian
புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை.//


ஆம்.. இது அவரவர் மனங்களைப் பொறுத்துப் புரிந்து கொள்ள வேண்டிய கவிதை தான். உங்களின் விடிகாலைத் தேடல் புரிந்தும் புரியாமலுமாகத் தான் இருக்கிறது. வார்த்தைகளின் வர்ணணைகளும், அதனைக் கோர்வைகளாக்கி முலாமிட்டுச் செதுக்கிய நுட்பமும் கை தேர்ந்த கவிஞனின் தரத்தினை உணர்த்தி நிற்கின்றது. உங்களின் இக் கவிதை மனம் எனும் சிற்பியால் செதுக்கப்பட்ட சொல்லோவியங்கள் என வர்ணித்து வார்த்தை வடிவம் கொடுத்தால் பொய்யாகி விடும். காரணம்? உண்மையின் உணர்விற்கல்லவா நீங்கள் கவிதை எனும் உருவம் கொடுத்துள்ளீர்கள். தொடர்க தோழா! ஒரு புதுமை நிறைந்த கவிதையாக இது புலப்படுகிறது. இன்னும் இன்னும் வேறுபாடுகள் நிறைந்த கோணத்தில் வண்ண வண்ணக் கவிதைகள் தருக.
ஓவியம்னா அது வண்ணங்களின் கலவைனு யார் சொன்னது? வார்த்தைகளாலும் நான் வரைவேனு சொல்லியடிச்சுருக்க நண்பா. உன்னால மட்டும் எப்படி இப்படி சிந்திக்க முடியுதுனு நெனக்கிறப்போ . . . . ச்சே . . . என்னால வார்த்தைகளை கூட சரியா எழுத முடியல . . .
மனசுல உள்ளத முழுமையா சொல்ல முடியலன்றத உங்களால மட்டும் எப்படி முழுமையா சொல்ல முடியுது?
////காத்திருந்த...காதலியாய்....
கட்டியணைக்கிறது...
நிலவின்...கிரகணங்கள்......
////////

கவிதையில் இங்கு வார்த்தைகளின் முரண்பாடா ! இல்லை உணர்வுகளின் வெளிப்பாடா ?!

பதிவு சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
நல்ல முன்னேற்றம் வரிகளில் தெரிகிறது..!!
Admin said…
//வார்த்தைகளின் அலங்காரத்தில்...
எப்போதும் தொலைந்து போகிறது...
ஆழ்மனதின்....எண்ணங்கள்..
சக்கையாய் எழுத்துக்களை
துப்பிவிட்டு...சாற்றினை
ஊற்ற மறுக்கிறது மனது!
ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!//

என்னை அதிகம் கவர்ந்த வரிகள்.
ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று...
சமாதி நிலைக்குள்
எனைத்தள்ளி...
சப்தமாய் சிரிக்கிறது...
நான் பகிர நினைக்கும்...
மெளனம்! //
நல்லா இருக்கு.

அழுத்தமாய், அழகாய் இருக்கிறது பதிவு முழுவதும்.
//ஏதோ ஒரு மனிதரோ, ஒரு பாடலோ, ஒரு இசையோ, ஒரு தத்துவமோ ஒரு கேள்வியோ, ஒரு நிகழ்வோ, ஒரு சூழலோ... நம்மைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்று ஆழ்மனதில் போட்டு இதோ...பார்...இது தான் நீ என்று ஒரு வெறுமையைக் காண்பிக்கும்....!//

உண்மைங்க.. பலநேரம் இந்த சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்..

இதுபோன்ற அனுபவங்கள் மனதுக்குள் கொடுக்கும் வெறுமைகூட நமக்கான வாழ்க்கை பாடம்.. உணர்ந்தவர்கள் மகானாக...
Jey said…
///ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...///
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், யாருக்கும், இது சாத்தியமில்ல என்பதே அன் கருத்து.

பதி நல்லாருக்கு தேவா.
எப்போதும் நாம் நினைப்பது ஒன்று வெளிப்படுத்துவது ஒன்று....மனிதர்கள் புரிந்து கொள்வது ஒன்று...!இப்படியாக வெளிப்பட்ட அல்லது வெளிப்படுத்த நினைக்கும் எல்லாமே...முழுதுமாய் வெளிப்படுவதே இல்லை.//

அருமை தேவா..
உங்க பதிவு என்றும் அருமை....
dheva said…
செளந்தர்....@ நன்றி தம்பி

பாமரன்....@ உண்மைதான் பாலண்ணே...தேடல்தாண்ணே சுகம்!

ரமேஷ் @ நன்றி தம்பி

விஜய்...@ ஹா..ஹா..ஹா.. நன்றி தம்பி!

நாஞ்சில் மாப்ஸ் @... யோவ்.. நேர வர்றய்ய மாப்ஸ் ..வந்து புரிய வைக்கிறேன்..! முதல்ல நீ காதல் கவுஜ எழுதுறத நிப்பாட்டு...!

கே.ஆர்.பி. செந்தில்..@ நன்றி பங்காளி

கெளசல்யா...@ மிக்க நன்றி தோழி

இராமசாமி கண்ணன்...@ நன்றி தம்பி

பெரோஷ்....@ நன்றி தம்பி

சசி...@ நன்றி சசி!

தமிழ் மதுரம்...@ புரிதலுக்கு நன்றி தோழர்

ஜெரால்ட் வில்சன்...@ நன்றி மாப்ஸ்

மாதங்கி//@ நன்றி தோழி

ஜெயந்தி...@ ஹா...ஹா..ஹா.. நன்றி தோழி

ஜெய்லானி..@ நன்றி... நண்பா!

சந்ரு..@ நன்ற தம்பி...!

விக்னேஷ்வரி...@ நன்றி தோழி!

பாலாசி...@ உண்மைதான் பாலாசி

ஜெய்....@ நன்றி தோழரே!

தென்னம்மை...@ நன்றி தோழி!

ஆர்.கே. குரு...@ நன்றி நண்பரே!


ஜீவன் பென்னி..@ நன்றி தம்பி!


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களை தெரிவித்து....மேலும் மேலும் உங்களின் பின்னூட்டங்கள் என்னை எழுதத் தூண்டும் உந்து சக்தியாய் இருந்து என் எழுத்துக்களுக்கு உரமாக இருக்கிறது...

மீண்டும் நன்றிகள் !
சிறப்பா இருக்குங்க....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...