
வற்றிப் போன விவசாயம்...
காய்ந்து கிடக்கும் நிலங்களின்..
கண்ணீரில் மரித்துக் கிடக்கும்...
மனிதர்களின் நூற்றாண்டு கலாச்சாரம்!
எப்போதும் போல கூவும்...
அந்த ஒற்றைக்குயிலின் ஒப்பாரியில்
ஒளிந்து கிடக்கும் மனிதர்களின் சோகம்...
கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!
வழக்குகள் ஏதுமின்றி வறுமையோடு
முட்டு திண்ணைகளில் கடந்த
கால பஞ்சாயத்துகளை...
கனவுகாணும் வெள்ளை மீசைகள்!
பயில வழியில்லாதா வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!
ஒரு வரலாற்று பிழையை சமகாலத்தில் காணும் தலைமுறையாக நாமிருப்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்திதான்.....! என்னவெல்லாம் செய்து கிராமங்களை காப்பாற்றுவது அல்லது என்னவெல்லாம் செய்து மனித கட்டமைப்பை சுத்திகரிப்பது என்று விளங்க முடியாத அளவிற்கு சிக்குப் பிடித்துப்போய் கிராமங்களின் சுயதன்மை அழிய எத்தனித்திருக்கிறது.
நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.
நவீனத்தை உட்புகுத்தி ஏன் நாம் விவாசாயம் செய்யக்கூடாது என்று கேள்விக்கு பதிலாய் விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது.
அமைதியும் ஒருவித எதார்த்த கூட்டமைப்பு வாழ்க்கையும், விழாக்களும், விவாதங்களும், ஆடு, மாடு, கோழி, எருமை, நாய், என்ற சிறு மிருகங்களோடு சேர்ந்து வாழும் ஒரு அன்றாடமும் மாறவேண்டும் என்பதில் எனக்கு நவீனமும் தெரியவில்லை நாகரீகமும் தெரியவில்லை.
டீசல் கலாச்சாரம் தவிர்க்க முடியாத நிர்பந்திக்கப்பட்டதாய் இருக்கும் நகர வாழ்க்கையிலிருந்து மனிதனை அரவணைத்து சுத்திகரிக்கும் ஒரு சொர்க்கமாக அவரவரின் கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. கிராமங்களின் தனித்தன்மைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் அதே சமயத்தில் உயிர்களின் இயல்பு தப்பி பிழைக்க வேண்டும்...
" தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் "
என்ற சர்வைவல் தியரி படி மனிதன் பிழைப்பு தேடி நகரத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாததாய் போனதின் பின் புலத்தில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளையும், உயிர் நாடியான விவசாயத்தை பற்றிய ஊக்குவிப்புகளையும் மெலும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்ச்சியையும் கொடுக்க தவறிய அரசின் பங்குதான் மிகையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள் என்று தேசப்பிதா சொன்னதை மறந்துவிட்டு ஏதோ ஒரு இலக்கு நோக்கி பயணிக்காமல்... நவீனத்தை பயன்படுத்தும், நாகரீகத்தை வரவேற்கும் அதே நேரத்தில்....
இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!
தேவா. S
Comments
கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா?
நல்லா சொன்னீங்க தேவா.
இந்திய மட்டுமல்ல. எல்லா நாடுகளின் நிலைமையும் இதுதான்
ஆமாம்
இது ரொம்ப ரொம்ப உண்மை அண்ணா
பலரும் வேலை தேடி நகரம் போனதும், 100 நாள் வேலை என்று வேறு ஒரு திட்டம் போட்டு அதில் மிச்ச கொஞ்ச பேரும் சென்று விடுவதாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் போனதும் ஒரு காரணம். அந்த 100 நாள் வேலை திட்டமாவது முறைப்படி நடக்கிறதா என்றால் அதுவும் கேலி கூத்தான ஒன்றாக போய்விட்டது...சும்மா போய் இரண்டு சட்டி மண் அள்ளி போட்டு விட்டு மரத்தடி நிழலில் தூங்கி விட்டு , சம்பளம் பெற்று கொண்டு வருவது போல் தான் இருக்கிறது. இதை அந்த தொழிலாளர்களே சொல்லி நகைப்பதுதான் கொடுமை.
விந்தை மனிதன்...@ என்ன சொல்றீங்கனு புரியலையே தம்பி...!
கிராமப்புறங்களில் நுகர்வுக்கலாச்சாரம் எப்போது நுழைந்தது என்பது சுவாரஸ்யமான அலசலாக இருக்கும். சாஷேக்களில் ஷாம்பு எப்போதில் இருந்து கிராமப்புறப் பெட்டிக்கடைகளில் தொங்க ஆரம்பித்தது என்று ஞாபகமிருக்கின்றதா...//
நிகழ்கால இந்தியாவை படம்பிடிக்கும் வரிகள்
//கோபபடாதீங்க, மேல சொன்ன ஏதோ ஒரு பிரிவை சார்ந்த மக்களில் தான் நானு ஒருவனாய் இருக்கேன், நானும் இதுவரைக்கு எதுவும் பெரிசா பண்ணிடல , ஆனா ஏதாவது பண்ணுவேன் என் தேசத்திற்கு, என் உடல் மண்ணில் சாயும் முன் என நம்பிக்கை இருக்கிறது் ...
//
நேர்மையான கருத்து... நானும் வழிமொழிகிரேன்... :)
குறை சொல்லனும் என்பதற்காக சொல்லவில்லை. விவசாயம் ஏன் இந்த வருடம் பண்ணவில்லை என்று கேட்டதற்கு அம்மக்களின் பதில் தான், நான் சொன்னது. கஷ்டப்பட்டு பாடுபட்டு அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் போனது போக நெல்லை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமப்படவேண்டி இருக்கிறது. அப்படி பார்த்தாலும் லாபம் என்று பெரிதாக இல்லை. பட்ட பாட்டிற்கு பலன் இல்லை அதுக்கு ஒரு ரூபாய் அரிசி வாங்கிட்டு சும்மா இருக்கலாம் என்பதாகத்தான் பதில் இருந்தது.
//100 நாள் வேலை வாய்ப்பு //
திட்டங்கள் மக்களை ஊக்கபடுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர சோம்பேறிகளாக மாற்ற கூடாது...
விவசாயத்தை ஊக்குவிக்க ஏதாவது சரியான திட்டங்கள் போடட்டுமே.... இலவச மின்சாரம் மட்டும் வழங்கினால் போதாது...எந்த ஒன்றும் நேரடியாக மக்களை சென்று அடைகிறதா என்று கவனித்தாலே போதும்.
//அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!//
அந்த மக்களில் நானும் ஒருவன்; என்னாலான காரியத்தைச் செய்ய விழைகிறேன்...
அருமையான, இத்தருணத்திற்கு மிகவும் அவசியமான பதிவு. தொடரட்டும் உனது பணி. வாழ்த்துக்கள்!
அண்ணா! புதுசா எழுத வந்திருக்கேன். நம்ப வலை பக்கம் வந்து எப்படி எழுதறேன்னு சொல்லுங்க. உங்க வரவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
மற்ற நண்பர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். என் எழுத்துக்களுக்கு உங்களின் ஆசியை எதிர்நோக்குகிறேன்.
நன்றி!
உங்க உறவுகாரன் அப்பு
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!///
//பயில வழியில்லாதா வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
காண்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!//
ஹய்யோ .. எப்படி அண்ணா இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது உங்களால் மட்டும்..?
//பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் ///
விவசாயத்தை வளர்க்காவிட்டால் கம்ப்யூட்டர் கூட நம்மை காப்பாற்றாது.
எது எப்படியோ நான் கிராமத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது ..!!