Skip to main content

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 4






















வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் நீயே வந்து இடைமறித்து என் எழுத்துக்களை தகர்க்கிறாய்...! இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா? இல்லை உன்னை மறக்க நினைக்கும் என்னின் தோல்வியா…? விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுதில் சிம்மாசனமிட்டே என்னுள் அமர்ந்து விட்டாய்...!

உன்னை மறக்க விரும்புகிறேன் என்று உன்னிடம் சொல்லிய அந்த கணத்தில் நான் அப்படி சொல்ல விரும்பாமல் சொல்கிறேன் என்பதை என் கண்கள் உன்னிடம் காட்டியிருக்க வேண்டும்...! என்னை உற்று நோக்கி கண்ணீருடன் சேர்த்து காதலையும் வெளிப்படுத்திவிட்டு... நீ நகர்ந்து விட்டாய்...! உன்னை ஸ்தம்பிக்கச் செய்திருந்த காதல் இப்போது நீ இல்லாத வேளையில் உன் நினைவுகளை அள்ளிக் கொட்டி என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது!

மீண்டும் கடைசியாய் உன்னை சந்தித்த அந்த கல்லூரி மாலையில்...உன் மீதான என் அக்கறை குறைவதை நீ வார்த்தை மத்தாப்புகளாய் மாற்றி கோப அக்னியாய் வெடித்து சிதறிய அந்த தருவித்தல்களில் உண்மையில்லை என்று நான் உரைத்து உரைத்து.... என் உரைத்தல் உன் செவி சேராமால் உறைந்து... விழிகளாலும் வார்தைகளாலும் நீ என்னை விளாசிய அந்த கணத்தில்....காதலின் இன்னுமொரு முகம் பார்த்து மிரண்டு போயிருந்தேன் நான்.......!

போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்......

உன்னை விட்டு விலகியிருக்க விரும்புகிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் உன் கண்களில் வழிந்த கண்ணீரில் என் காதலை கரைத்து விட்டு.... வீட்டுக்கு வந்தால் நீ விசுவரூபமெடுத்து நிற்கிறாய். நான் உன்னை மறக்க வேண்டும்...சந்தேகத்தில் உன்னிடம் இருந்து கிளைத்த வேர்களை வெட்டி வீழ்த்திய பின்னும் இன்னும் உன் மீதான கோபம் என்னோடு சினேகத்தில் இருந்தது....

காதல் என்பது ஒரு சத்திய பிரமாணம்...அதில்....சந்தோசக் குழந்தைகள் பிறக்க வேண்டும் சந்தேகக் குழந்தைகள் அல்ல...! காதல் என்பது எல்லா சமயத்திலும் நேசித்தல்... தனக்கு பாதகமான நேரத்தில் நிந்தித்தல்....அல்ல....! காதல் கண்ணீரை துடைப்பது அது கண்ணீரை வரவழைக்க அல்ல...! காதல் இல்லாத மனிதர் இல்லை... குழந்தையாய் இருக்கும் போது தாயிடமும், மணமுடித்த பின் கணவன் மனைவியிடமும்... புரிதலில் எல்லா உயிர்களிடத்தும் தோன்றும் ஒரு உணர்வு காதல்.....

பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் கொண்டு காதல் என்ற உணர்வு வருவது எளிது....இந்த எளிமையையில் சிக்கிய மனம் கொடுத்த விஸ்தாரிப்புதான் காதலனும் காதலிகளும், காதல்களும்...... தொடர்ச்சியாக வெறுமையில் இருந்து படையெடுத்து வந்த வார்த்தைகள் நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்து கொண்டிருந்தன....கூடவே மறக்க நினைத்த உன் நினைவுகள் என்னை சுற்றி நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன...!

கனவுக்கும், எதார்த்தத்துக்கும் நடுவே நான் தடுமாறிக் கொண்டிருந்த போது.... இடையில் வந்த குறுஞ்செய்திக்காக........ அலைபேசி கெஞ்ச... கையிலெடுத்த அலைபேசியில் .....வரிவடிவில் நீ...காதலை.....பரவவிட்டிருந்தாய்....! வாசித்து முடித்தவுடன் உன் கோபத்தின் அறியாமையை உணர்த்தி விட்ட வெற்றிக் களிப்பில் இருந்த குறுஞ்செய்தியை ஒரு போல்டருக்குள் தள்ளிவிட்டு....மீண்டும் உன்னை நினைக்க மறுத்து நினைவலைகளை வேறு பக்கம் திருப்ப முயன்ற போது... பாவமாய் வந்து நீ கெஞ்சும் காட்சியில் என்னை பறி கொடுத்து விடுவேனோ என்று பயந்து....அந்த வெள்ளிக்கிழை இரவு பத்து மணிக்கு நான் மொட்டை மாடிக்கு போயிருக்க கூடாதுதான்...

எலி வாய்க்கு பயந்து புலி வாயில் சிக்கியவன் கதையாய்... அந்த நிலவற்ற இரவின் கருமையை கிழித்துக் கொண்டு நிசப்தத்தில் ஊற்றெடுத்து பொங்கிய உன்னோடான சந்தோச நாட்கள்.. எனக்கு சிரிப்பு வந்தது...என்னை நினைத்தே.....

உன்னை நினைக்ககூடாது என்ற எண்ணம் திண்ணமானதின் முதல் வினாடியில் இருந்து கடந்து சென்ற கடைசி வினாடி வரை இடைவிடாது வியாபித்து நின்ற உன் நினைவுகள் வென்று விட்டதாகத்தானே அர்த்தம்.....?

பிரியங்களின் பிறப்பிடம் ஒரு வேளை பிரிவாய்த்தான் இருக்குமோ...? ஊடலில் காதல் இருமடங்காகி விடுகிறதே... அது எப்படி? ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால் நெருங்கித்தான் பழக வேண்டுமோ? விட்டு விலகக் கூடாதோ?.... எண்ணங்கள் வேகமாக சென்று கொண்டிருந்த போதே.... உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திங்கட்கிழமை நோக்கி முன்னேறியது புத்தி...

விடுமுறையான இரண்டு தினங்கள் இருண்ட தினங்கள் தான் ... கை கொட்டி சிரித்தது.. தூரத்தில் இருந்து ஒரு சிறு நட்சத்திரம்...மெல்ல வீசிய காற்று.. மீண்டும் என்னை கலைத்துப் போட... உன்னை காணும் அந்த திங்களில் என்ன செய்வாய்....? கண்ணீருடன்
.. சாரி என்பாயா? இல்லை கவனிக்காதது போல உன்கைகள் பற்றி...என் நேசித்தலை நான் சொல்வேனா? இப்போதே துடிக்கும் இதயம் அப்போது நின்று போய் விடுமோ? என்ற அச்சம் வேறு அறியாமையில் இருந்து கிளைத்தது....

யோசிக்காமல் அலைபேசியை கையிலெடுத்து.... குறுஞ்செய்தியை... டைப் பண்ண ஆரம்பித்தேன்...

"ஐ.. டூ.....லவ்.. யூ....டார்லிங்....!"

மெசேஜ் சென்ட்... என்ற வாக்கியத்தில் செத்துப் போயிருந்த நமது கோபம் பிறக்க வைத்திருந்தது....இன்னும் மிளிர்வான.. உன்னோடான காதலை....!


தேவா. S

Comments

Chitra said…
போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்......

....simply superb!!!! very nice.
///சந்தோசக் குழந்தைகள் பிறக்க வேண்டும் சந்தேகக் குழந்தைகள் அல்ல.../////

ரொம்ப சந்தேகப் படுகிறார்களோ
அது எப்படி? ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால் நெருங்கித்தான் பழக வேண்டுமோ? விட்டு விலகக் கூடாதோ?.... /////

ஓஹ அப்போ உங்களுக்கு பிடிக்க வில்லையா அது சரி
dheva said…
செளந்தர்...@ என்ன பண்ணலாம் இவனா? எக்கு தப்பாவே கேள்வி கேக்குறானே....ம்ம்ம்????
@தேவா
//என்ன பண்ணலாம் இவனா? எக்கு தப்பாவே கேள்வி கேக்குறானே....ம்ம்ம்????//

மாப்பு எக்குக்கும் தப்புக்கும் என்ன சம்பந்தம்??
@தேவா
//விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக்//

என் அங்க விடை எழுதி இருக்கா என்ன?
//மறக்க நினைத்த உன் நினைவுகள்//

தப்பு உங்க மேலதான் மாப்ஸ். நீங்க மறக்க முயற்சி செய்து இருக்கனும். அத விட்டு மறக்க நினைத்து இருந்தா எப்படி மறக்க முடியும்.
dheva said…
டெரர்.. இல்லை மாப்ஸ் விட்டத்துல இரு பல்லி இருந்துச்சு அது மேல விழுந்துடுமோன்னு பயந்து பார்த்தென்ன்ன்?
dheva said…
டெரர்.. @ எக்குதப்புன்ன என்னானு.. செளந்தர் கிட்டயே கேளு பயபுள்ள காலையிலயே கொல வெறியோட அலையுது!
dheva said…
டெரர்.. @ மறக்க முடியாதுல மாப்ஸ்...... எப்படி மறக்கறது...அப்போ அப்போ வந்து போறத எப்படி மறக்கறது.. ( ஹயா டெரருகு புரியல)
//போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்....//

தேவா! அருமையான வரிகள். நல்லா இருக்கு!
@தேவா
//டெரர்.. @ மறக்க முடியாதுல மாப்ஸ்...... எப்படி மறக்கறது...அப்போ அப்போ வந்து போறத எப்படி மறக்கறது.. ( ஹயா டெரருகு புரியல)//

அடுத்த முறை நீ மறக்காம மறக்க முயற்சி பண்ணு மாப்ஸ் கண்டிப்பா மறந்துடலாம். அத விட்டு மறக்க நினைத்து மறக்க முயற்சி பண்ணா நீ மறக்க நினைக்கிற காரியத்த மறந்துடு.

இதைதான் ஒரு சித்தர்

மறப்பார் மறப்பர் நினைவிலும்
நினைப்பார் நினைப்பர் மறந்தலிலும்
மறக்க முடியாமல் நினைப்பார் காதலில் தவிப்பவர்
தவிர்க்க முடியாமல் மறப்பர் புது பிகர் கிடைத்தவர்

அப்படினு சொல்லி இருக்காரு...
விடுமுறையான இரண்டு தினங்கள் இருண்ட தினங்கள் தான் ... கை கொட்டி சிரித்தது.. தூரத்தில் இருந்து ஒரு சிறு நட்சத்திரம்...//

காதல் ஒரே விதமான வலிகளை தான் தருகிறது
Anonymous said…
மிக அருமையான பதிவு அண்ணா!
ஒரே பீலிங்க்ஸ் :)
வினோ said…
நண்பரே, அருமையான பதிவு...
காதல் செய்... சாகும் வரை காதல் செய்... காதலித்தே சாகு!
அருமையான பதிவு நண்பரே...
Unknown said…
ஐ டூ லவ் திஸ் போஸ்ட் ....
காதல் பேய் உங்களை நல்லாத்தான் பிடிச்சிருக்கு.. !!
விடுங்க வீட்டுல அண்ணி கிட்ட சொல்லி ஓட்ட சொல்லிடுவோம் ..
தலைப்பும் பதிவுகளும் அருமை.
//மெசேஜ் சென்ட்... என்ற வாக்கியத்தில் செத்துப் போயிருந்த நமது கோபம் பிறக்க வைத்திருந்தது....இன்னும் மிளிர்வான.. உன்னோடான காதலை....!///

ஹ்ம்ம்.. அட அட அட.. என்னங்க இது? சூப்பர்....
கலக்கலா இருக்கு.. :-)

சில பல கொஸ்டின்ஸ்....
அப்படி என்ன சண்ட போட்டீங்க..?
நீங்க அவ்ளோ சொல்லியும் சமாதானம் பண்ண முடியலயாங்க...?
ச... சனி , ஞாயிறு வேற வந்து சொதப்பிருச்சே....??
சரி...இனி மொட்ட மாடி போக முதல் தின்க் பண்ணிட்டு போங்க தேவா..!
க ரா said…
இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா?
---
உண்மைய பேசுங்கண்ணே.. நீங்கலாது சண்டைலாம் போடறராது...
ஊடல் இல்லாத காதல் எது தேவா
vinthaimanithan said…
ரசித்தேன்!
வாவ்... என்ன சொல்றதுன்னு தெரியல... படிச்சுட்டு இருக்கறப்ப ச்சே அதுக்குள்ள பதிவு முடிஞ்சு போச்சேன்னு வருத்தமா இருந்தது..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த