Skip to main content

முகவரி...!
















விலாசங்கள் தொலைத்த
வழிப் போக்கனாய் தேடல்களில்
மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!

மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!

காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!


தேவா. S

Comments

dheva said…
//விலாசங்கள் தொலைத்த
வழிப் போக்கனாய் தேடல்களில்
மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!//

ஒவ்வொரு நாளும் எதையோ தேடி கடைசியில எல்லாம் கிடைச்சும் நிம்மதியா இருக்க முடியாம என்னதான் வேணும் நமக்குன்னு நினைப்போம் அப்படிப்பட்ட நினைப்பையும் வேற ஒரு எண்ணம் வந்து கெடுத்துடும்....ஒரு சினிமாவோ, டிராமாவோ இல்லை வேற நடை முறை அரசியல் பேச்சோ..அப்புறம் அப்படி நினைக்கிறத விட்டுபுட்டு மறுபடி கார் வாங்கணும் பங்களா வாங்கணும்னு அதை பத்தியே யோசிச்சு அந்த எண்ணங்களையே மேய்க்க ஆரம்பிச்சுடுவோம் அப்புறம் எங்க எது நிம்மதின்னு நமக்கு புரியப் போகுது.. இது தாங்கண்ணா முத பாரா...!

//மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!

//எப்பாவாச்சும் எங்கயாச்சும் யாரச்சும் செத்துப் போய்ட்டாங்கன்னா அங்க போய் பாருங்க..எல்லா முகங்களையும்... ஒரு மாதிரி இருளடைஞ்சு..10% செத்துப் போன ஆள நினைச்சும் 90% நாமளும் நாளைக்கு இப்படித்தானே அப்படின்ற ஆள் மன எண்ணத்தில் சோகமாவும் இருப்போம் இதுதான் உண்மை. மேல் மனசு நமக்கு வேடிக்கை காட்டும் என்னவோ முழுக்க முழுக்க இறந்தவரை நினைத்துதான் சோகம்னு...அப்டி இல்ல பாஸ்... நம்மள பத்தி நினைக்கிற இடம் அது...அந்த இடத்தில நாம தேடிட்டு இருக்குற நிம்மதியோட முகவரிக்கான துருப்பு சீட்டு கிடைக்கிற மாதிரி..அந்த துருப்பு சீட்டும் அந்த இடத்திஅ விட்டு வந்ததுக்கப்புறம் மத்த விசயத்துல மூழ்கி நாம கோடி வருசம் இருக்க போறதா நினைச்சு...ரொம்ப சந்தோசப்பட்டு.. நான் நான் அப்படின்ற அகங்காரம் ஏறி...முகவரி மறுபடியும் மிஸ்ஸிங்.....

//காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//

//காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//

எப்டி இருந்தாலும் ஒரு நாளைக்கு அட்ரஸ் கிடைக்காமலா போய்டும்..(அடச்சே எல்லோருக்கும் என்ன ஒரு பயம் பாருங்க...!!!) முகவரி கிடைக்கிற அன்னிக்கு அதை படிக்கும்போது தெரியும் உண்மையிலேயே எந்த அட்ரசும் இல்லேன்னு....அந்த உண்மை தெரியும் போதே..ஓராயிரம் முகவரிகள் (புதுசு புதுசா மனுசங்க பொறக்குறாங்கள்ள அத்த சொன்னேன்..அவுங்க எல்லாரும் தொலைச்சுட்டு தேடி மறுக்கா அலையறதுக்காக) தோன்றிக் கொண்டே இருக்கும்..!
திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை....
Chitra said…
அருண் பிரசாத் said...

திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை....



.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... எப்படிங்க சிரிக்காம இப்படி கமென்ட் போடுறீங்க?
Chitra said…
தேவா..... இந்த முகவரி கவிதையில், உயிர்ப்பும் - இறப்பும் - கொண்டு வரும் மனதின் தேடல்களை அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
dheva said…
அருணு...@... இரு இந்தா வர்றேன்....!
dheva said…
சித்ரா.. @ சாரத்தை கரெக்டா விளங்கிக்கொண்டீங்க... நன்றி.. ! கொஞ்சம் அருணுக்கு புத்தி மதி சொல்லுங்க...!
VELU.G said…
//மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!
..............
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!
//

ரொம்ப அற்புதமாய் சொல்லியுள்ளீர்கள் தேவா
முடிவில்லாமல் தொடரும் ஓட்டமாய் நடந்து கொண்டே இருக்கிறது இது
//திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை...//

அருண் சொன்னதுங்க! நம்ப மூளைக்கும் ஒன்னு எட்டலைங்கோ..

அதனால அருண் சொன்னதை ரிப்ப்ப்ப்பிட்ட்ட்ட்ட்டூ...
வினோ said…
தேவா ரொம்ப நேரம் கவிதை படிச்சேன்.. கீழ பார்க்கல.. அப்பரும் தான் உங்க விளக்கம் படிச்சேன்.. எல்லோருக்கும் இந்த தேடலும், பயமும் இருக்க தானே செய்கிறது..
இந்த பதிவுல எனக்கு இரண்டு சந்தோசம் ..
ஒண்ணு : நம்ம தேவா அண்ணன் சின்ன பதிவு போட்டிருக்கார் ..
இரண்டு : அதே மாதிரி அதுக்கானா விளக்கத்தையும் சொல்லிருக்கார்.
விளக்கங்களைப் படித்த பிறகு புரிந்து கொண்டேன் ..
பகவத் கீதை மாதிரி இருக்கு ..!!
நல்லவேளை தெளிவுரைய போட்டுட்டீங்க. அந்த பயம் இருக்கட்டும்.

மனித வாழ்க்கையையே கவிதைக்குள் அடக்கிவிட்டீர்கள். இறப்பைப் பார்த்தும் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுறான்னா, இறப்பே இல்லன்னா இவங்கள்ளால் என்னவெல்லாம் பண்ணுவாங்க?
\\தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!//
கவிதையும், விளக்கமும் அருமை!
அருண்பரசாத் ன் பின்னூட்டம்...:-))
க ரா said…
ஒன்றுல் சொல்ல இயலாமல் மனதை முடக்கீட்டிங்க... பாம்பாட்டி சித்தர கேட்டதா சொல்லுங்க :)
Mahi_Granny said…
. எண்ணங்களை மேயச் சொல்லுகிறாரே என்று யோசித்துக் கொண்டே படித்தேன். நல்ல வேளை விளக்கவுரை கொடுத்தீங்க. அப்பாடா , முகவரி தெரிந்தது .( கவிதை என்றால் காத தூரம் எனக்கு . sorry )
கவிதையை மற்றும் விளக்கம் அருமை தல
////திருக்குறளும் தெளிவுரையும் - சே.... சாரி உங்க கவிதையும் தெளிவுரையும் அருமை.... ///

///அருணு...@... இரு இந்தா வர்றேன்....! //

superrrrrrrr.. :-)))
//மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!//

அப்படியே பொழுது போனாலும் தான், நாம சும்மா விட்ருவமா..என்ன??

மொத்த கவிதையும் நல்லா இருக்கு.. அதிலும், உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க..
புரியாம கஷ்டப்பட கூடாதுன்னு, விளக்கமும் குடுத்திட்டீங்களே? ஹ்ம்ம்.. சூப்பர்.. :-)
நன்றி தேவா அண்ணா.நன்றாகக இருக்கிறது .
terror உம கவிதை எழுதுகிறார் ,கதை எழுத்துகிறார் அதனால் இது அவருக்கு உபயோக படும் .

terror எழுதும் கவிதைகளுக்கு இந்த மாதிரி தெளிவுரை எழுதணும் கேட்டுக்கோ terror .
தெளிவுரை என்றால் நேற்று அடிச்ச சரக்குக்கு தெளிய உரை அப்படின்னு நினைக்க கூடாது
யோ மாப்ஸ்!! உன் கவிதைவிட உன் விளக்கவுரை ரொம்ப கொழப்புது...அருமை சொல்லி பாராட்டினவங்க எல்லாம் முன்னாடி வாங்க நான் கேள்வி கேட்கனும்...

(சும்மா மாப்ஸ்....)
//மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!//

கவிதை அருமை தேவா அண்ணா....விளக்கம் மிக மிக அருமை ....
Nirosh said…
முகவரி இல்லாக் கவிஞன் நான்... உங்கள் முகவரி சொன்ன கவி பார்த்து வியந்தேன் வாழ்த்துக்கள்...!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...