Skip to main content

விவரிப்பு...!






















விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!

ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!

எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!



தேவா. S

Comments

தேவா அண்ணன் ஏதோ பதிவு போட்டிருகீங்கன்னு சொன்னீங்க எங்க ஒன்னுமே புரியல?இதுக்கு தான் தமிழ் ல பதிவ போடுங்கன்னு சொன்ன கேக்றீங்களா?
//ஓராயிரம் விவரித்தல்கள்//
எங்க விவரிச்சிருகீங்க ஒண்ணுமே சொல்லல ?
Chitra said…
விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!


............கவிதை சரளமாக வந்து வார்த்தைகள் அருவியாக கொட்டி இருக்கிறது.... சூப்பர்!
சுத்தம்!



நேத்து கும்முனதுக்கு பழி வாங்கிட்டீங்க. நானும் எப்படியாவது புரிஞ்சிக்கனும் 5 முறை படிச்சிட்டேன், புரியுது ஆனா புரியல
படம் எல்லாம் எங்கேயிருந்து புடிக்கிறீங்க நண்பரே - கவிதையும் அதற்கேற்ற படமும் நன்று. வாழ்த்துக்கள்.
dheva said…
இம்சை..@ ஹா..ஹா..ஹா.. மாட்டுனியா.. அங்கேயே கட... சுத்தி சுத்திவா.. கவிதைய.. .படி.. முடிச்சிட்டு படி.. மறுபடியும் படி.. நான் கேள்வி பதில் கேட்பேன்.. கடைசியா.. புரியாம புரிஞ்சமாதிரி நடிச்சே.. மகனே கொன்னே புடுவேன்..!
என்ன சொல்வது. ரெம்ப நல்லாயிருக்கு என்பதை தவிர. வார்த்தைகள் நன்றாக சலிப்பு தட்டாமல் அழகாக வருகிறது உங்களுக்கு.
dheva said…
சித்ரா.. @ நன்றிங்க..!
சார் சீரியஸ் ஆக கவிதை எழுதி இருக்கார் , என்ன பண்ணலாம் இம்சை அரசன் , அருண் பிரசாத் , சார விட்ருவமா? இல்லை போட்டு தள்ளிருவமா ? டீலா நோ டீலா ?
thiyaa said…
அருமையான பகிர்வு
dheva said…
சித்ரா.. @ நன்றிங்க..!
dheva said…
அருணு...@ தில்லு இருந்தா படிச்சுட்டு மீனிங்க் சொல்லு.. துணைக்கு என் மாப்ஸ் டெரரையும் கூப்பிட்டுக்க....

ஏண்டா கும்முறதுக்கு மட்டும் அலையுறீங்க.. இப்ப பேசு.. ஏய்.. இப்ப பேசு....

டெரரு.. எல்லாம் வரமாட்டான்..அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லாம போச்சு...!
//பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//

எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?
dheva said…
தமிழ் உதயம்..@ நன்றி சார்!
dheva said…
தியாவின் பேனா.. @ புரிதலுக்கு நன்றிங்க..!
dheva said…
வெங்கட் நாகராஜ்...@ கூகிள் ஆண்டவர் உதவிதான்...... நண்பரே... ! நன்றிகள்!
//விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

ஆபிஸ்ல தப்பு பண்ணிட்டு டேமேஜர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்க முடியாம கேவலமா முழிச்சிட்டு... இப்படி ஒரு பில்டப்பு.....

(ங்கொய்யால யாருகிட்ட...)
Jey said…
தேவா, எங்கள யெல்லாம் பாத்தா பாவமா தெரியலையா???. மனசுல ஈரமே இல்லியா மக்கா?.
dheva said…
அருணு...@ சூரிய உதயத்தை பத்தி நான் விவரிச்ச உனக்கு புரியுமா? நான் சொல்றது நான் பாத்தது... உனக்கு புரியணும்னா நீதானே பாக்கணும்.. அதான் விவரித்தலில் ஒளிந்திருக்கும் கருத்து தோற்றுதானே போகும்...

GOOD .... come up with more.. quries...........thambi...!
தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...////

என்ன அண்ணா சொல்றிங்க உங்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியாது அப்படியா
dheva said…
ஜெய்.. @ பங்காளி.. நேத்து உன் இமெயில வேடிக்கை பாக்க வந்த என்னை அப்பாவின்னு பாக்காம தம்பி அருணு, மாப்ஸ் டெரரு, பருப்பு மோகன், பன்னிக்குட்டி ராம சாமின்னு எல்லாம் கும்மிட்டாய்ங்க...

அதுக்கு பதிலடிதான்.. நீ கவலப்படாத பங்காளி உங்கு தெளிவுரை மெயில் பண்றேன்...!
@அருண்
//எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?//

அப்படி இல்லை மச்சி... விவரிக்க முடியாமல் தோத்து போனதால ஒளிஞ்சி இருக்காம்...

(ஆணி புடுங்கிட்டு மதியம் வந்தி நான் எழுதரேன் விளக்கவுரை...)
dheva said…
டெரரு...@ போ மாப்ஸ் போ.. கவிதைய விட்டு ஒரு அடி வெளில வரக்கூடாது....அதுக்கு மீனிங்க் சொல்லிட்டு அப்புறம் கும்மு...!
Jey said…
சரி விடுங்க, புரியலைனா, மட்டமா பாப்பீங்க எதுக்கு நானும் பாராட்டிட்டு போறேன்.

அன்பின் தேவா, கவிதை அருமை, ஒவ்வொருவரியும் தேர்ந்த சிற்பி சிற்பம் செதுக்குவதுபோல், அழகான, ஆழமான, பொருள் செறிந்த வார்த்தைகலை கொண்டு கவிதை வடித்துள்ளீர்கள்.
உங்களால் மட்டும் எப்படி இதுமாதிரியான எளிமையான கவிதைகள் வடிக்க முடிகிறது.

தொடரட்டும் உங்கள் சேவை.

ஆவலுடன் உங்கள் அடுத்த கவிதை பதிவை எதிர்பார்த்து
dheva said…
ஜெய்... @ பங்காளி...உடம்பு தேறிடுச்சுன்னு நினைக்கிறேன்.... உசாரா பேசுறீங்க!
dheva said…
டெரரு.. @ நீ ஆணி புடிங்கிட்டு.. வா.. !
dheva said…
செளந்தர்.. @ நல்லாருக்கு ராஜா உங்க நாடகம்!
எங்க மேக்ஸ் வாத்தியார்கிட்ட கூட கேட்டேன். புரியலைன்னு சொல்லிடாரு..
//விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

தோல்வி, விரக்தி பற்றி சொல்லி இருக்கீங்க

//ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//

உங்கள் முயற்சி, போராட்டங்கள் மூலம் உங்களை மீட்டு எடுத்ததை சொல்லுறீங்க

//எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//

ர்ுந்தாலும் அந்த தோல்விகள் உங்கள் எண்ணங்களில் இருக்கின்றன, அதனால் நீங்க வென்றீர்கள்

ஏதோ, என்னால அவ்வளவு தான் புரிஞ்சிக்க முடிஞ்சது.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... 12 physics book ஐ கூட இத்தனை முறை படிச்சி இருக்க மாட்டேன். சாச்சுபுட்டீங்களே பாசூஊஊஊஊஊஊ
Arumaiyana varththai prayogam dheva.
kavithaiyil layiththeaan.
dheva said…
அருணு தம்பி.. இவ்ளோ தூரம் முயற்சி பண்ணியிருக்கு.. சரி நானே சொல்றேன்... நீ புரிஞ்சுகிட்டத கம்பேர் பண்ணி பாரு...!

சரி.. அருணு நீ சினிமா புதிர் வச்ச மாதிரி கும்மி அடிச்ச தம்பிங்க எல்லாம் புரிதலை சொல்லட்டும்...அப்புறம் நான் விடை சொல்றேன்.. அருணு சொல்லியிருக்கறது.. தப்பூபூபூ!அவ்வ்வ்வ்வ்!
கவிதை விளக்கம்:

#&*%^#$&* !^%$#&% (&^@#$ )&*&^*(&#
^@&#^*^ 9&^(^^
&^@$#%* (())@*&#*%
&&^@#&*^ *^(@&#( )&@*(#&(&^!^ ^(@^#(@^
@&*(#$^%@ ^@^#$*(^@ &*(^@( (^($#

இதுதான் விளக்கம், புரிஞ்சா எடுத்துக்கோங்க. புரியலைனா 10 முறை படிங்க.

ஆங், என் விளக்கத்தை விட்டு ஒரு அடி வெளிய வரக்கூடாது.
dheva said…
அருணு..@ ஒருத்தன் அவுட்டு..............கீழ்ப்பாக்கமா? ஆம்புலன்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........!
மச்சி, 33 த்டவ படிச்சிட்டேன், இதுக்கே நீ நாலு புல்லு வாங்கி கொடுக்கோனும், தக்காளி அடிச்சதெல்லாம் எறங்கிடிச்சி! சரி சரி, நான் அடுத்த ரவுண்ட வாங்கிட்டு வந்துட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறேன். ங்கொய்யா இன்னிக்கு விடுறதில்ல!

முக்கிய அறிவிப்பு!
இதுல என்ன எழுதியிருக்குன்னு வெளக்கம் சொல்ற பயலுகளுக்கு ஒரு 'பெரிய' பரிசு காத்திருக்கு! (அப்படியாவது என்னன்னு பாப்போம்!)
Anonymous said…
நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..
அருமை அண்ணா :)
dheva said…
சிரிப்பு போலிஸ்..@ மேத்ஸ் வாத்தியார்கிட்ட ஏன் போனே... டெரர்கிட்ட போய் கேளு அவன் சொல்லுவான் விளக்கத்த...!
dheva said…
பன்னிக்குட்டி..@ ஹா.. ஹா..ஹா.. இன்னும் நல்லா ஏத்திட்டு வா மச்சி... ! ஏம்பா பரிசு இருக்கம்பா...எல்லோரும் கேட்டுக்கோங்க..!
dheva said…
பாலாஜி சரவணா....@ அப்பாடா ஒரு ஆறுதல் பரிசு.. உன்னோட கமெண்ட்!
@ Balaji
ஏங்க? ஏங்க இப்படி? என்ன எழுதி இருக்கருனு தேவாக்கே புரியல... நீங்கவேற உசுப்பேத்திட்டு... சரி விளக்கம் சொல்லுங்க தேவா தெரிஞ்சுப்பார்
//Balaji saravana said...
நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..
அருமை அண்ணா :) //


தக்காளி ஏதோ பெருசா கெடைக்கும்னு சும்மா சவுண்டு கொடுத்துப் பாக்குறியா? பிச்சிபுடுவேன் பிச்சி!
Anonymous said…
என்னது தேவா அண்ணனுக்கு நான் விளக்கம் சொல்லவா?
விளக்கத்துக்கே நான் எப்படிப்பா விளக்கம் கொடுக்கமுடியும்?
ரைட்டு, மீ எஸ்கேப்பு.. எப்பூடி? :)
Anonymous said…
@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :)
//Balaji saravana said...
@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :) //

அப்பிடிங்கறே? ரைட்டு வுடு, மேட்டர தனியா டீல் பண்ணிக்குவோம்! அப்புறம் வேற எவனாவது வெளக்கம் வெங்காயம்னு வந்தா விட்றாதே ஒரே அமுக்கா அமுக்கி வெய்யி, வந்து மஞ்ச தண்ணிய தெளிச்சி பலி கொடுத்துடுவோம்!
dheva said…
பன்னி, அருணு, டெரரு, இம்சை, செளந்தர், சிரிப்பு போலிசு,பாலாஜி சரவணா & பங்காளி ஜெய்....


எல்லொருக்கும் ஒண்ணு சொல்றேன்... உங்க ஆதங்கம் புரியுது.. இந்த கவிதையின் விளக்கம் நாளைக்கு தனி போஸ்ட்.. (போதுமாப்பா...எல்லாம் ஏன் கொல வெறியோடயே பாக்குறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்)
@ பன்னி சார்,

என் சார்பாக என் சிஷ்யன் தேவா விரைவில் விளக்கம் தருவார். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் வர முடியாது
தனி போஸ்டா

அய்யோ...
அய்யோ...
அய்யோ...

கொலை பண்ணுறாங்களே!
கொலை பண்ணுறாங்களே!!
//மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//

கனவுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை அழகாக சொல்லியிருக்கீங்க தேவா! வரிகள் எவ்வளவோ முன்பை விட எளிமையா இருக்கு! பாராட்டுக்கள்!
யாரது டாக்டரா?

நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்
ஆனா மத்த பகுதிகள் புரிஞ்சிக்க கோனார் Guide தான் தேவைப் போல இருக்கு! :-))
//நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்//

அருண்! நீங்க என்னை கேட்கறதுக்கு முன்னாடியே நானே மத்த பகுதிகள் புரியலைன்னு தான் ஒத்துக்கிட்டேனே. மத்த பகுதிகளுக்கு கோனார் நோட்ஸை எங்கே போய் தேடணும்னு தெரியலையேப்பா!
/பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

ஆக மொத்தம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..?
எனக்கு ஒண்ணும் பிரியலை .?!?
வினோ said…
/ எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...! /

தேவா கலக்கல்..

இப்படி தான் வருடும் காற்றுக்கு விவரிக்க முடியாமல் தேங்கி கிடக்கும் நினைவு துகள்களின் எடை கூடிப்போச்சு..
எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்...//

அட அற்புதம் தேவா..
வதனமே சந்திர பிம்பமோ..
நாதா நாதி...
லாலாக்கு டோல் டப்பிமா...
ஓமகசீயா...
உட்டாலான்கடி கிரி கிரி

இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க. அப்புறமா தேவா அண்ணன் அவர் பதிவுக்கு விளக்கம் சொல்லுவாரு...
vasu balaji said…
நல்ல கவிதை தேவா. கொஞ்சம் பிழை பாருங்களேன். சாப்பாட்டு நடுவில கல் மாதிரி உறுத்துது. தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.
mkr said…
தேவா சார் நானும் கவிதையை ஆக்கு வேற ஆணி வேற அலசனும் நினைக்கிறென்.முடியல எனக்கு நமக்கு கவிதை பற்றிய ஞானம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் நம்ம ஆளு அசத்துறாருன்னு சந்தோசம்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...