Skip to main content

சிறகு....!























இட வலம்....மேல் கீழ்
கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...
விசிறியடிக்கும் தூரிகைகளின்
வீச்சில்...வந்து விழும்...
வகை வகையான...ஓவியங்களின்
கலைந்த காட்சிகள் எல்லாம்
எப்போதும் எள்ளி நகைக்கின்றன
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!

கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!

கலைந்து கிடக்கும்
ஓவியத்தின் தடங்களில்
உயிர்ப்பாய் நிறைந்திருக்கும்
வரைமுரையற்ற வர்ணங்களின்
கூடல்களின் நிறைவுகளில்
மெலிதாய் வெளிப்பட்டுக் கிடக்கிறது
ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்!

கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!


தேவா. S

Comments

எப்போதும் விதிமுறைகளோடு ஒரு இறுக்கத்தோடு வாழாமல் அவ்வப்போது.. சுதந்திர வானில் சிறகடித்து பறப்போம் வானத்தின் எல்லை வரை...
மாப்பு கவிதை டாப்பு.... ஓவரா ரூல்ஸ் பாக்காம ஜாலியா சந்தேஷ்மா இரு சொல்ர... ரைட்டு...
என்னது மறுபடியும் கவிதையா?
Unknown said…
மிகவும் நேர்த்தியான கவிதை... படதேர்வும் அருமை...
vinthaimanithan said…
//மிகவும் நேர்த்தியான கவிதை... படதேர்வும் அருமை... //

அண்ணன் முந்திகிட்டார்!

ஒழுங்கற்றதன் அழகு... எப்போதும் அதன் மாய அழகின் ஈர்ப்பு..... சட்டங்களில் அடைபட்ட மனிதர்களுக்கு ஜீரணிக்கவும், கற்பனை செய்யவும் கடினம்தான்...

//சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...! //

நடக்கவே திராணியற்றவர்களுக்கு சிறகு கிடைத்தால் எப்படி? தோள்களில் தினவும், மனங்களில் வலுவும் வேண்டும்...

வரிகளின் ஈர்ப்பில்.... தேன்குடத்து ஈயாக...!
வினோ said…
/ ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்! /

இதுவே வேண்டும்.. வானில் சிறைகள் இல்ல பறக்க வேண்டும்..
எனக்கும் இப்படியான வாழ்க்கைதான் பிடிக்கும்.
pinkyrose said…
இப்போ என்ன சொல்ல வரிங்க??
டேய் மாப்பு... உலகத்துல இருக்கிற எல்லாரையும் ஒரே ஒருநாள் மட்டும் அந்த கட்டுப்பாட்டு அழுக்குகள் இல்லாம அதன் போக்கிலேயே வாழச்சொன்னா என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தியா? அம்புட்டுத்தேன்... ஹிஹி
//இட வலம்....மேல் கீழ்//- ஐ குறுக்கெழுத்துப்போட்டி

//கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...// - ட்ராயிங் க்ளாஸ்

//வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!//

அப்போ மனசை கழுவணும்னா ஓவியம் வரைஞ்சா போதும்ன்னு சொல்றீங்க?

//கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை//

ஹிஹிஹி 356வது பிரிவு இங்கயுமா பயன்படுது பங்காளி ?

இப்படிக்கு கவிதை புரியவில்லை என்றால் கும்முவோர்கள் சங்கம்
jothi said…
மனதை வெறுமையாய் வைத்தால் வானமே எல்லை,..

.

கவிதையில் வார்த்தைகள் மிக நேர்த்தியாய் வந்துவிழுகின்றன.. நல்ல கவிதை
Anonymous said…
சிறகின் வலிமை தெரியாது
பறக்கும் திசை தெரியாது
ஆயினும் பறக்கிறேன்
சிறகு விரித்தபடி..
நீளும் எல்லைகள் நினைக்காமல்...
VELU.G said…
அனைத்தையும் அனுபவித்து செய்தால் மிகவும் சந்தோஷமாக வாழலாம்
அருமையான வார்த்தை முடிச்சிகள்... அங்கங்கே அவிழ்த்துவிட்டார்போல சிக்கலின்றி சிற்பமாய் கிடக்கிறது... அழகுங்க தேவா..

//ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!//

யப்பா...
Chitra said…
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!

...... கவிதை வரிகளில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் கருத்துக்கள், பிரமிக்க வைக்கின்றன. :-)
@தேவா

மாப்ஸ் மணி 2.45 AM..... எனக்கு தூக்கம் வரலை நீ வந்து கவிதை எழுது நான் விளக்கவுரை எழுதறேன்...
மிக அருமையான வார்த்தை விளையாடல். சில சமயம் விதிகள் மீறப் படவேண்டியவையே ... படம் ரொம்ப நல்லா இருக்கு பாஸ்
பிரியமிக்க தேவா.., மிக அழகான ஆழப்பொதிந்த கருத்துகளை கவிதையாக்கி இருக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!
அழகு..!
கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!
சிறப்பு..!!
Anonymous said…
அருமையான வரிகள் சிறப்பான நடை...ரொம்ப நல்லாருக்குங்க..வாழ்த்துக்கள்
பத்மா said…
அருமை தேவா

ஒழுக்கம் இறுக்கமில்லை ... bench mark தான் இறுக்கம் .
/////கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...! /////

கட்டுப்பாட்டு அழுக்குகள் கலைந்து ஓடியதால்...
வரைந்த ஓவியம், இப்போது கண்ணைக் கவரும் வண்ணம்...!!!
ரொம்ப அழகா இருக்குங்க... :-))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...