Skip to main content

நடை...!























நான் அந்த நதிக்கரையின் ஓரமாய் நடந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில்....காற்றில் பறந்து வந்த சருகு ஒன்று தோள் தொட்டு தொடர்ந்து கொண்டிருந்தது அதன் பயணத்தை....!

வளைந்து சாய்ந்திருந்த நாணல்களின் தொடலில் சிணுங்கிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தது நதி. நதியோரத்தில் வரிசையாயிருந்த மரங்களின் அழகில் வசீகரமாய் இருந்த அந்த மாலையின் ரம்யத்தை கூட்டவே ஒரு ஊதல் காற்று ஊடுருவி பரவிக் கொண்டே இருந்தது.

பொதுவாக மாலை வேளையில் அந்த நதிக்கரை ஓரம் மனிதர்கள் வருவதில்லை..என்பது எனக்கு மிக சாதகமாய் போய்விட்டது. என்னை மறந்து சில மணிகள் நான் நடக்கும் நேரங்களில் கலர்கலாய் கனவுகள் பூக்கும். சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து நடக்கும் தருணத்தில் ஏதோ ஒன்று உற்சாகமாய் உடல் விட்டு வெளியே பறந்து இன்னிசையாய் ஒரு கீதமிசைக்கும்.

என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு....மேற்கொண்டு நகர்வோம்...! சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டு உணரும் போது ஏற்படும் அனுபவத்திற்கு பேர்தானே பரவசம்.....

பசுமையான மரங்கள், மனதை மயக்கும் ரம்யமான மாலைப் பொழுது....கிறீச்சிடும் பறவைகள் ஒலி..இதற்கிடையே.. நதியோரம் மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த கறவைகளும், எருதுகளும், ஆடுகளும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு வித ஓட்டமும் அதன் பிண்ணணில் அவற்றின் கழுத்து மணிகளும், குரலோசைகளும், வயலில் நாட்டியம் பயின்று கொண்டிருந்த காற்று என்று எல்லாம் ஒன்று கூடி ஒரு ஆச்சர்யமான ஓவியமாய் ஆளுமை செய்து கொண்டிருந்தன. அந்த சூழ் நிலையை மேலும் மையல் கொள்ளச்செய்ய.. பறவைகள் எல்லாம் தங்களின் வீடு திரும்பலில் அன்றைய நாளில் நடந்ததைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தன.

அதோ...அதோ... அங்கே பாருங்கள் அந்த சிட்டுக்குருவியை....என்னே அருமையாக நதியில் தன்னை நனைப்பதும் மீண்டும் கரையில் வந்து சிறகை உலர்த்துவதும் என்று ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தது எப்படி நீரினுள் இருந்த மீன்களுக்கு தெரிந்தது என்று தான் நான் போயிருந்தேன். ஆமாம் அவை தவணை முறையில் தாவிக் குதித்து சிட்டுக்குருவியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வதாம்?

நான் நடந்து கொண்டுதானிருந்தேன்.... ஒவ்வொரு அடியிலும் என் உயிருப்பும் இருப்புத்தன்மையும் இருப்பதை உணர்ந்தேதான் நடந்தேன்...குறைவற கிடைத்த ஆக்சிஜன் என்னின் நினைவுகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருந்ததோடு இல்லாமல் ஆழமான ஒரு சுவாச அனுபவத்தையும் கொடுத்துக் கொண்டுதானிருந்தது.

வாழ்வின் ஓட்டத்தில் நிகழும் அனுபவங்கள் மனிதர்களின் மூளையில் கறையை படிய வைத்து விடுகிறது. எல்லாவற்கும் ஆராய்ச்சிகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டு எதார்த்தத்தை தொலைக்கும் எந்திர மனிர்களை பார்த்து வியந்த நான்.....என்னை சுற்றி பறந்த பட்டாம் பூச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த கணம் என்ன நிகழும் என்ற அறிவில்லா அறிவு பெற்ற ஐந்தறிவு ஜீவனின் சிறப்பு ஆறாமறிவால் பகுத்துப் பார்க்கப்படுவதில் எனக்கு சிரமம் இருப்பதாகப் படுவது என் குறை அறிவா? இல்லை நிறை அறிவா? எனக்குள் மோதிய கேள்வியை சிதறடித்தே போட்டது அந்த மாலையின் வானத்தில் பரவியிருந்த செம்மையான ஓவியம்.....அதற்கு பின்னால்....பிரிய மனமில்லாமல் பிரிய எத்தனித்த ஒரு ஆரஞ்சு பழ சூரியன்....

புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு…நிறைவில் இருந்த நான் நதிக் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்து எவ்வளவு நேரம் ஆகிப் போனது என்பதை என்னைச் சூழ்ந்திருந்த இருட்டு உணர்த்திய பின்பு....

மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....


தேவா. S

Comments

வினோ said…
உனக்குள் இறங்கி உன்னை பார்...
அனைத்தும் ரகசியமே ..
அனைத்தும் பரவசமே...
அனைத்தும் இன்பமே..
//மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....//

எப்ப பாத்தாலும் வீட்டை நோக்கியே நடக்குரீங்களே. எப்பதான் வீடு போய் சேருவீங்க?
மீண்டும் ஒரு அருமையான படைப்பு தேவா! ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை. இந்த ஐம்புலன்களை சுட்டுக்காட்டும் ஆறறிவினை மனிதன் கடக்கும் போதே அவனுள்ளும் அமைதிக் குடிக்கொள்கிறது.

நம்பிக்கை தான் அமைதிக்கு அஸ்திவாரம். எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் அமைதி என்பதே இல்லாமல் இருக்கும். அதைத் தான் நாம் இன்றைய சூழலில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சக மனிதர்களின் மீது சந்தேகம், உறவுகள் மீது சந்தேகம், அரசாங்கத்தின் மீது சந்தேகம், கடைசியில் இறைவனின் மீதே, அவன் இறுத்தலின் மீதே சந்தேகம்.

உங்கள் எழுத்துப் பல பல எண்ணங்களையும் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. நன்றி தேவா! அருமையான பகிர்விற்கு!
Anonymous said…
//புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு//
உங்களுக்கு மட்டுமில்ல அண்ணா.. எனக்கும் தான்..
சூப்பர்..
ரம்மியமா இருக்கு! படிக்கும்போதே பசுமை மணக்கிறது, வாழ்த்துக்கள் தேவன்!
Unknown said…
அருமையான படைப்பு...தொடருங்கள்..தொடருவோம்!
Anonymous said…
ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அமைதி ஆறறிவு மனிதர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை//உண்மைதான்.அவைகள் தேமே என்று இருக்கின்றன.நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே
தேவா சார்! நல்ல பதிவுங்க.. கூடவே இருக்கும் படம் ஒரு கவிதை!ரசித்தேன் நண்பரே!
கமல் said…
கதை அருமை நண்பரே...உங்களோடு இயற்கையின் அழகை சொல்லி, உரையாடல் இல்லாமல் மிகவும் அருமையாக சொல்லிருக்கிர்கள்.


நன்றி... தொடர்ந்து படிக்கிறேன்
///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.///

இது சரி தான்.. அப்படியே அந்த அற்புத கணங்கள் கிடைத்தாலும்... நிம்மதியாய் யோசிக்க அவகாசம் இருப்பதில்லை..
உங்களுக்குள், உங்களை பார்க்கும் தருணம் உங்களுக்கு வாய்த்ததில் சந்தோசம்.... :-))
///என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்..//

அட அட .. நான் போய் மனோதத்துவம் படிச்சிட்டு வரேன் ..!!
//எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு...//

இதுல சண்டை எல்லாம் வருது ..!! அதனால இப்ப வேண்டாம் ..!!
மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி..///

நாங்களும் படித்து விட்டோம் வீடு நோக்கி நகர்கிறோம்
Kousalya Raj said…
சூரியன் தன் அலுவல் நேரம் முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம்.....இந்த இனிமையான நேரத்தில் இயற்கையை ரசிப்பது என்பது பலருக்கும் கொடுத்து வைப்பது இல்லை.

உங்கள் எழுத்தை வாசிக்கும் நேரத்தில் மெல்ல மெல்ல அந்த சூழல் என் கண் முன் விரிவதை உணர முடிகிறது....அற்புதமான வர்ணிப்பு..... இயற்கையின் மேல் அதீத காதல் இல்லாமல் கற்பனையில் இது சாத்தியம் இல்லை.....துள்ளி குதிக்கும் மீன்கள் தவணை முறையில்..... உதாரணம் அருமை.....

இந்த தனிமை கொடுக்கும் அமைதி தான் என்ன....?! நம்மை நாம் உள்நோக்கி பார்க்க கூடிய தருணம் இது....
Unknown said…
meeeeeeeeeeeee

the first...
Unknown said…
ம் தேவா அண்ணா .

// என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.//

நானும் தேடிகொண்டே இருக்கின்றேன்..கிடைக்கவில்லை
இருந்தாலும் முயற்சியை விடவில்லை.

அனுபவுமும் பரவசமும்
சொல்லமுடியாது அதை உணரத்தான் முடியும்...

எளிமையை புரிய வைத்து இருக்கீங்க..
இருந்தும் சில இடங்கள் புரியவில்லை...
உங்கள் எழுத்தின்
வாசகனாய்
என்னையும் தேடிக்கொண்டு
மீண்டும் வருவேன்.
"உற்றுபார்ப்பது அவ்ளோ எளிமையான செயலா"???

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...