Skip to main content

நுனி....!



















எல்லாம் ஒழித்து
நான் ஒளிந்து கொள்ள
செய்யும் முயற்சிகள் எல்லாம்
தெளிவாய் காட்டிக்கொடுக்கின்றன...
என் இருப்பின் அடர்த்தியை...!

விரட்டும் வாழ்க்கையில்
மிகைத்திருக்கும் பொய்களின்
ஆட்டங்கள் சொல்லாமல்
சொல்கின்றன...இருத்தலில்
இருக்கும் இல்லாமை நிறங்களை!

ஜனித்த நாளின் பின்னணியில்
எப்போதும் ஒலிக்கும்
என் தாயின் பிரசவ வேதனையில்
அறுக்கப்பட்ட தொப்புள் கொடியோடு
தொலைந்து போன ஆதியின்..
கதகதப்பு சூட்டை தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!

இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!


தேவா. S

Comments

இன்னிக்கு வடை எனக்கே .!!
//கதகதப்பு சூட்டையும் தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!//

உண்மைலேயே இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!எனக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னு கூட தெரியல ..!!
யாராவது தமிழ்மணம்ல விழுந்த மைனஸ் ஓட்ட எப்படி மாத்துறது அப்படின்னு சொல்லுங்க ., தேவா அண்ணன் போஸ்டுக்கு ஓட்டுப் போடும்போது டேபிள் ஆடினதால மாத்தி விழுந்துடுச்சு ..!
Anonymous said…
//தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!//

அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..

என்னோட புரிதல் என்னன்னா, தியானத்துல தன்னையே காண முடியும் அப்படின்னு கேள்விப் பட்டிருக்கேன் நீங்க ஒரு படி மேல போய் கருவறையில் உயிராய் ஜனிக்கும் முன் அரூபமாய் அலையும் ஆத்மாவின் இருப்பை உணர்ந்துட்டீங்க அப்படின்னு..
என்னோட புரிதல் சரியா அண்ணா?
கவிதை நல்லாயிருக்கு.
எனக்கும் இந்த மாதம்தான் பிறந்த நாள். உங்களைவிட 13 வயது பெரியவள் நான்.
ப.செல்வக்குமார் said...
இன்னிக்கு வடை எனக்கே .!////

செல்வா இங்க என்ன இட்லி கடைய வைத்து இருக்காங்க
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
@தேவா

//அண்ணா! கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா!
அது "இருப்பின் நுனி"யா இல்ல "இருந்ததின் நுனி"யா?..//

தேவா என்ற மானஸ்தனை காணவில்லை.... மாப்ஸ் வாசகர் சந்தேகம் கேக்கறாரு இல்ல... வந்த் விளக்கம் கொடுங்க... இதை மாதிரி யாராவது சிக்கினா விட கூடாது... கப்புனு அமுக்கிடனும்... :)))
//செல்வா இங்க என்ன இட்லி கடைய வைத்து இருக்காங்க//

இட்லி கடை இல்லையா ..? அடடா வடை போச்சா ..?
அப்பாட எனக்கு புரிஞ்சிடுச்சு.

தேவா. S இது உங்க பேருதான. எப்பூடி...
க ரா said…
இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!

---
முடிந்ததா உங்களால் :)
க ரா said…
யாருண்ணே அது இங்க வந்து மைனஸ் ஒட்டுல்லாம் குத்துறது :)
dheva said…
பாலஜி சரவணா..@ தம்பி...

இருந்தது என்பது மனித உடம்புகளுக்குள் இருந்து சொல்லும் ஒரு மட்டுப்பட்ட நிலை.....


காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும்.
dheva said…
செல்வா...@ மைனஸ் ஓட்டா ஆன இப்ப என்னப்பா? ஹா ஹா..ஹா..அது கிடந்துட்டு போது...


பதிவு பற்றிய உன்னோட கருத்துல இருக்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்குப்பா...!
dheva said…
சிரிப்பு போலிஸ் தம்பி....@ சீக்கிரமே உன்ன பத்தி ஆர்டிக்கிள் வருதுடி...தம்பி....இரு இரு...

ஆன் த வே ல இருக்கு மேட்டர்....!
dheva said…
அன்பின் ஜெயந்தி அக்கா....@

உங்கள் பிறந்த நாளுக்கும் எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
dheva said…
டெரர்...@ மாப்ஸ்....இதோ வந்துட்டேன் மாப்ஸ்.... நீ சொல்லி நான் என்னிக்கு கேக்காம இருந்திருக்கேன் மாப்பு.!
நுனியை தொட்ட ஞானி ஆயிட்டிங்களா..?
ரெண்டு நாள் கரெக்ட் அ புருயிர மாதிரி எழுதுனீங்க பழைய படி புரியாத மாதிரி எழுத ஆரம்பிச்சா.எந்த மொழில இருந்து transalte பண்ணுனீங்க தேவ அண்ணா .நம்ம டேர்றோர் கேட்ட கேலிக்கு முதல் பதில் போடுங்க .பய புள்ள ரொம்ப கோவமா இருக்கான்
Anonymous said…
விளக்கத்திற்கு ரொம்ப நன்றி அண்ணா :)
//காலமற்ற பெருவெளியில் இறந்த காலம் இல்லை...அது இருப்பு....அங்கே.... அதை உணரும் இடத்தில்....இருந்த என்று வராது.....இருப்பு என்றூதான் வரும். //
அருமை..
Riyas said…
நல்லாயிருக்கு தேவா..

http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html
\\இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை..\\
ரொம்ப வித்யாசமாய் சிந்திக்கிறீங்க. நல்லாயிருக்கு.
வயதுக் கணக்கும்., இருப்பின் நுனியும் அருமை தேவா
Unknown said…
ஞானி தேவா .....
n.d. shan said…
எல்லாம் ஒழித்து...கெட்ட விசயமா? நல்ல விசயமா? சொல்லு தேவா....
///இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!///

கவிதையின் ஆழம்....
உங்கள் கருத்தை
எங்களுக்கு அளிக்கும் பாலம்..!!

Very niceely done.. :-))
அட்லீஸ்ட் எப்பவாச்சும் தொட முடியுதேன்னு சந்தோசப் படவேண்டியது தான்..

ஒரு டவுட்..( ஏகாந்த வெளிப் பயணத்தில் இருக்கும் போது..இப்படி பீல் பண்ணிங்களா..?? )
Unknown said…
Nice one in your own style...
Unknown said…
அப்புறம்...சொல்ல மறந்துட்டேன். படம் மிக அருமை.
அருமையான வரிகள் ...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...