Skip to main content

பேச்சு....!


















தினம் தினம் நிறைய மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருப்போம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாய் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை பரப்புபவராக இருக்கிறார்கள். சாந்தமாய் கருணையாய்,எல்லா திறன்களையும் உள்ளடக்கி அமைதியாய் பதிலளிக்க கூடியவராய் ஆழ்ந்த அமைதிக்கு சொந்தக்காரராய் அன்பை பகிர்பவராய் சிலர் இருந்து விடுகிறார்கள். பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் பொழுது என் மீது எனக்கு ரொம்பவே வெறுப்பு வருகிறது.

முயற்சிகள் செய்பவனாகவும், அகங்காராம் அழியாதவனாகவும், அதிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரனாகவும், எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பதில் முனைப்பு உள்ளவனாகவும் அப்படிக் காட்டிக் கொள்வதற்காகவே நிறைய பேசுபவனாகவும் பல நேரங்களில் இருந்து விடுகிறேன். எப்படி மாறுவது என்று சிந்திப்பதில் கூட வந்து அமர்ந்து விடும் கர்வத்தை நான் எங்கே போய் கரைப்பது?

சிலரை ரோட்டில் சந்தித்து அவசர வேலைகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்போம். அந்த மனிதர் நிறைய அன்பினையும் அமைதியையும், சந்தோசத்தையும் நமக்கு பரப்பிக் கொண்டே இருப்பார். நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். இதற்கு அந்த மனிதரின் ஆழ்ந்த எண்ணமும் நம் மீது உள்ள விருப்பமும் அகந்தையற்ற மனமும்தானே காரணமாக இருக்க முடியும்.

இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும். இதற்கு காரணம் எதிராளியின் சுயவிமர்சனம்.. ஒரு ஆல் இந்தியா ரேடியோ விளம்பரம் மாதிரி தன்னைப்பற்றி அவர் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்தில் நம்மை கீழே தள்ளும் முயற்சிகள் இருப்பதுதான்.

வழியில் ஒரு நண்பரை பார்த்திருக்கிறார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் ஹாய் ... ! ஹலோ சொன்னதோடு சரி.. மத்த படி வழியில் சந்தித்த அந்த நபர் விடாமல் ஒரு 1 மணி நேரம் அவரைப்பற்றியும் அவரது வீர தீர பரக்கிரமங்கள் பற்றியும் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறார். நமது நண்பர் எக்ஸின் காதில் ரத்தம் வராதது ஒன்று தான் குறை. ஒரு மணி நேரம் கழித்து பேசி முடித்த அந்த வழிப்பறி நண்பர்.. ( வழியில் சந்தித்து நமது நேரத்தை பறிப்பவரை இப்படித்தானே அழைக்க முடியும்...அவ்வ்வ்வ்வ்வ்) எல்லாம் பேசி விட்டு சொன்னாராம்.. நான் என்னைப் பற்றி பேசி முடித்துவிட்டேன்.. இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்.

நான், நான் என்று அதிர்ந்து அதிர்ந்து தன்னைப் பற்றி பேசிப் பேசி வெற்றிலைப் போட்டுக் கொள்பவர்களுக்கு அதில் பயங்கர சுகம்... ஆனால் பாவம் கேட்பவர்கள் காதுகள் தான் ரத்த பெருக்கெடுத்து ஓடும்.

உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்.

எவ்வளவுதான் பயிற்சி இருந்தாலும் பாழாய்ப்போன இந்த மனசு காலேஜ் கட்டடிசிட்டு தியேட்டர் போயி சினிமா பாக்குற மாதிரி.... நம்மளயே ஏமாத்திட்டு திமிரு பேச்சு பேச ஆரம்பிக்கிது...

இப்போ எல்லாம் செம கோவம் வருது சார் எனக்கு...? நானே மனசப்பாத்து கேள்வி கேட்டுக்குறேன்... என்ன அருகதை இருக்கு உனக்கு? இவ்ளோ மமதை உனக்கு? அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........

ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்......

இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போடுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.....! சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க...ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!


அப்போ நான் வர்ர்ர்ர்ட்டா!


தேவா. S

Comments

//இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும்.//

@ டெரர்

மச்சி ஏன் தேவா அண்ணன் சும்மா சும்மா தொல்லை பண்ற. பாரு இங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு.
பேசுறவங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை இருந்தா பிரச்சினை இல்லை..!!பட்டினியா இருக்கறவன்கிட்ட உலகப் பொருளாதாரம் பத்தி பேசக் கூடாது..!!
அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........//////

சில நேரங்களின் நம்மளை மீறி வார்த்தைகள் வருகிறது அதை ரெக்கார்ட் பண்ணி கேட்டா உனக்கே தெரியும் ஆமாம் கேட்டு பார்க்கணும் ஒரு ரெக்கார்ட் பிளேயர் வாங்கி தாங்க
உங்களோட பைனல் டச்ல இருக்க எங்களோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
Ungalranga said…
super post!!

ஒவ்வொரு வரியும் உண்மை.
அண்ணே இந்த கேட்டகிரியில நான் இல்லையே!!!!!
profit500 said…
ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்......


try பண்ணுவோம் ........ சரிபன்னுவோம்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும்.//

@ டெரர்

மச்சி ஏன் தேவா அண்ணன் சும்மா சும்மா தொல்லை பண்ற. பாரு இங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு.


யோவ் ரமேஷ்,தேவா கம்ப்ளைண்ட் பண்றதே உங்களைத்தான்
தேவா,நீங்க பி எஸ் சி சைக்காலஜியா?
dheva said…
சி.பி. செந்தில் குமார்..@ பிஎஸ்ஸி.. கெமிஸ்ட்ரிங்க....!
//நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். //

எல்லோருமே அப்படித்தான் அண்ணா .. நானும் கூட பல சமயங்களில் அவ்வாறு தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டில் திட்டு வாங்குவேன் ..!
//ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!//

அம்பூட்டு நல்லவரா அண்ணா நீங்க ..?
Unknown said…
யாரோ உங்களை நிக்கவைச்சி ஒருமணிநேரம் காதுல இரத்தம் வர பேசியிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது...
:-)))))))))
Unknown said…
////இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போடுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.....! சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க...ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!///

ஒய் பிளட்?? சேம் பிளட்!! :-))))
Unknown said…
நீங்க சொன்னாமாதிரி சிலபேர் என்ன பேசினாலும் கேட்டுட்டே இருக்கத்தோனும்.. சிலர் வந்தேலே ஓடி ஒளிவோம்!! கரெக்டா சொல்லியிருக்கீங்க..
//உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்//

இது சூப்பர் ..........நல்ல இருக்கு .நிறைய பேர் இப்படி தான் அடுத்தவர்களை பேச விடுறதே இல்ல ........மீண்டும் என்றோ ஒரு நாள்.......நான் இந்த விஷத்தை சொன்னேன் நீ பதிலே சொல்ல வில்லை என்பார்கள் ..........கேடு கேட்ட உலகம் அண்ணா.........
Kousalya Raj said…
தேவா இதை நீங்க நேராவே சொல்லி இருக்கலாமே.....! ஓ.கே இனி பார்த்து பேசிக்கிறோம்...!!

:))
தமிழன் பேசமா இருந்தா பைத்தியம் பிடிச்சிரும் சார்
சில பேர் பேசினா எரிச்சல், சில பேர் பேசினா சந்தோசம், சில பேர் பேசினா பேருக்கு கேட்போம், சில பேர் பேசினா காதுலேயே கேட்க மாட்டோம். சில பேர் பேச்ச மதிப்போம், சில பேர் பேச்சு புடிக்கும் சில பேர் பேச்சு மனசுக்குள்ள மாற்றத்தை கொண்டு வரும், சில பேர் பேச்சு கொலையில் கூட முடியும், சில் பேர் பேச்சு பிரச்சினையை தீர்க்கும், சில பேர் பேச்சு பிரெய்ன் வாஷ் பண்ணும்............

எல்லார் பேச்சும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது. நம்ம ரியாக்சனும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது!!
Anonymous said…
arumai..arumai..yaar ya nee...yenka irukka..epdi ipdi ellam ulavilaya pesa mudiuthu...chanceless article..grt salute to you..i like this vety much...
BY
http://thambivadivazhagan.blogspot.com/
பேசியே ஆட்சிய புடிச்ச ஊரு பாஸ் இது!
நான் இங்கே வந்திட்டு போனது உங்களுக்கு தெரியும் தானே..
///இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்////

ஹா ஹா ஹா.. இவரை சிட்டி (எந்திரன்) கிட்ட அனுப்புங்க.. தேவா.. சரி பண்ணிருவார்.. :-))
(என்னா பேச்சு.......)

///பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்....///

நீங்க இவ்ளோ வெளிப்படையா பேசின பிறகு, ஓடினா நல்லா இருக்காது.. எதுக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணிட்டு போறேன்... (எதிலேயும் ஒரு ந்யாயம் இருக்கோணும்....)
Jokes apart.....

Wonderful post. Its hard to figure out why we talk this much na..???

(why blood.......same blood)

As long as, people dont run away from us, the minute they see us, we are not that bad dhevaa.. :-))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...