Skip to main content

இதோ...!
















வார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

எச்சரிக்கை...!!!!

ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.

எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்தில் எது அபத்தம்? எது சத்தியம்? என்று தெரியாமால் குழப்ப வாசலில் என்னை தொலைத்த பொழுது திறந்த கதவின் பெயர்தான் கடவுளா?

இயல்பாய் நகரும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் பொழுதுகளில் அர்த்தமற்று தெரியும் ஓட்டங்களின் அதிர்வுகள் எல்லாம் சிதறிய வண்ணங்களாய் என்னைச்சுற்றி பரப்பிய ஓவியங்களில் நான் அமிழ்ந்து இட வலம் மறந்து பின் ஓவியமும் மறைந்து எச்சத்திலிருக்கும் ஒரு ஏகந்த இருப்பின் அமைதியில் சூன்யத்தின் வேர் பிடித்துவிட்டாதாக கருதும் பொழுதுகளில் ஒரு கூட்டமும் ஒரு நெரிசலும், எங்கேயோ அசுர கதியில் பறக்கும் ஒரு லாரியின் ஹாரன் சப்தமும் என்னை சுடு வெயில் கொண்ட பகல் பொழுதுக்குள் தள்ளிவிட்டு....

சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே?

ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....

....வயிறு முட்ட குடித்து, நெஞ்சு முட்ட உண்டு, கூடுமான வரை காமம் என்ற கடவுளை உடல் போகம் என்ற மாயைக்குள் அடைத்து தீர்ப்பதாய் நினைத்து தீய்ந்து கொண்டிருக்கும் என்னை ஒத்த சக ஆறறிவு பிராணிகளிடமிருந்து நான் வேறுபட்டுத்தானே போகிறேன்?

என் மிச்சமும் சொச்சமும் வெட்ட வெளியின் சத்தியத்தை நிறைக்கத்தான் போகின்றன என்பதை அறிந்தும் இதோ வந்து கலந்து கொள்கிறேன்...என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!


தேவா. S



Comments

/// ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமிருந்தால்... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.///

இதுக்கு டிரைவிங் லைசென்ஸ் வேணுமா அண்ணா ..?
//ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....//

எறும்புகிட்ட பேசுனீங்களா. ஐயோ ஐயோ..
//என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!//

இதுதானே வாழ்கையை அழைத்து செல்கிறது ..!!
அய்யோ அய்யோ அய்யோ....

எறும்பு கூடலாம் பேசுறாரே! சீக்கிரம் இவரை எங்கயாவது சேர்த்து ஆகணும்
//சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே//

ரோடு ரோலர் ஏறுச்சா ..........அய்யோ....கைல.......கால்ல எதவது அடி பட்டுத அண்ணா............உடனே ஆஸ்பத்திரி போய் கட்டு போட்ருங்கோ........இல்லை என்றால் செப்டிக் ஆகிவிடும்
அருமையான பகிர்வு ..
//எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?//

ஊர் புல்லா கடன் வாங்கினா பயத்துல இப்படித்தான் நடக்கும்
Anonymous said…
மீ பிரசன்ட் அப்புறம் எஸ்கேப் :)
dheva said…
அழுத்தமான கருத்தை சொன்ன்னா கூட..... அசால்டா கும்மியடிக்க என் தம்பிகளுக்கு நிகர் தம்பிகள்தான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
அதுவும் சிரிப்பு போலிஸ் இருக்கானே.. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. என் பதிவுகளுக்கு எல்லாம் பஞ்ச் கமெண்ட் அவன் தான்.. .. ஊருக்கு வந்த உடனே. உன்னதாண்டா முதல்ல பார்பேன்....சரியா...அம்புட்டு பாசம்...(கொய்யாலே இருடி வந்து வச்சுகிறேன்...)
Unknown said…
///ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமிருந்தால்... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்///

எவ்வளவோ பதிவுகள் படிச்சாச்சு.. இதையையும் படிச்சுடலாம்.. :-))))
நான் கூட இது மாதிரி தனியா யோசிப்பேன். ஆனால் எல்லாவற்றையும் யோசிச்சு முடிக்கிறப்ப பதில் கிடைக்காம மிச்சம் இருக்கிறது இனம் புரியாத பயம்தான்! அதை போக்க மீண்டும் பழைய வாழ்க்கைக்கே செல்கிறேன்!
//என்னை நானே மயங்கச் செய்து//

நீங்க என்ன அவ்வளவு அழகா
//dheva said...

அதுவும் சிரிப்பு போலிஸ் இருக்கானே.. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. என் பதிவுகளுக்கு எல்லாம் பஞ்ச் கமெண்ட் அவன் தான்.. .. ஊருக்கு வந்த உடனே. உன்னதாண்டா முதல்ல பார்பேன்....சரியா...அம்புட்டு பாசம்...(கொய்யாலே இருடி வந்து வச்சுகிறேன்...)
//

me the paavam
ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.


//


என்ன சொல்லலையே...
உங்க கட்டுரைய படிச்சுட்டு இறுக்கமா வந்தா நம்ம சிரிப்பு போலீஸ் நம்மள வெடிச்சு சிரிக்க வைக்கறார்.
///ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம். ////

அம்புட்டு நல்லவரா நீங்க... சொல்லவே இல்ல.. :D :D

ஏனுங்கோ... இந்த ஊட்டி, கொடைக்கானல் ரோடு மாதிரி...யாங்க??? :-)))
ஆரம்பமே அசத்தல் போங்க.... :D :D :D
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
//ஜெயந்தி said...

உங்க கட்டுரைய படிச்சுட்டு இறுக்கமா வந்தா நம்ம சிரிப்பு போலீஸ் நம்மள வெடிச்சு சிரிக்க வைக்கறார்//

Thanks
உலகத்தமிழன் அண்ணண் விஜய டி.ஆர் தம்பி மாதிரி தாடி வச்சுரிகிங்க "FaceBook photo" - ல.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...