Skip to main content

இருப்பு...!
















தூசுகளாய் மாறி
நான் கரைந்து போய்
எங்கேயோ பிறந்திருந்த
பொழுதற்ற பொழுதுகளில்
முழுதாய் நான்
அடர்ந்து போயிருந்தேன்

வெளிச்சமும் இருட்டும்
எனது இயல்பாய் போன
தேசமற்ற ஒரு தேசத்தில்
நான் கரைந்து போயிருந்தேன்.
ஆகா.. காதலற்ற காதலாய்...
நான் நிறைந்து போயிருந்தேன்!

பஞ்சுப் பொதி ஒத்த..
மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த
நீர்த்திவலைகளாய் நான்
நிறைந்து போயிருந்தேன்...
பற்றிப் பரவும் காற்றின்
வீச்சில் அலைகளாய்
நான் கலைந்து போயிருந்தேன்..!

ஒரு முட்டை ஓட்டுக்குள்
சூடான ஒரு கருவாய்
நான் இறைந்து போயிருந்தேன்...
எங்கேயோ ஊறும்
ஒரு ஆட்டு மந்தையின்
நெருக்கத்தின் இடைவெளிகளில்
நான் கலந்து போயிருந்தேன்...!

சுவாசம் தப்பவிட்டு
சுவாசிக்கும் ஒரு ஜீவனாய்
நான் விரிந்து போயிருந்தேன்..
பெய்யும் மழையை ....
வாங்கும் ஒரு நிலமாய்
நான் குழைந்து போயிருந்தேன்...!

இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!

அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!


தேவா. S

Comments

இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!

அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!

மனம் தொட்டு தவழ்ந்து செல்கின்றன வரிகள்
//

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuu///
உனக்கு வெட்கமா இல்லை? எப்ப பாத்தாலும் முத ஆளா. வேலைய பாரு ஒழுங்கா
கடைசி வரைக்கும் மனுசனாவே இல்லை.
//இருப்பு...!//

பாங்க்ல உங்க இருப்பு...! எவ்ளோ பாஸ்?
Ungalranga said…
தென்றல்..படிக்கும் போதும், படித்த பிறகும்..!!
Kousalya Raj said…
நேற்று வாழ்வின் முடிவை பற்றிய சிறு கதை....!
இன்று தன்னையே முடித்து ஒரு கவிதை .....!!

எதை நோக்கிய பயணம் இது என்று நெருங்கியவர்களுக்கே வெளிச்சம்...!!!

nice poem....nice song....!
//சுவாசம் தப்பவிட்டு
சுவாசிக்கும் ஒரு ஜீவனாய்
நான் விரிந்து போயிருந்தேன்..
பெய்யும் மழையை ....
வாங்கும் ஒரு நிலமாய்
நான் குழைந்து போயிருந்தேன்...!//

Varikal arumai....
Kavithai super.
VELU.G said…
//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!
//

மிக அருமையான கவிதை

சுகமாய் இறக்க முடியுமா தேவா?

இறந்தபின் சுகம், துக்கம் என்ற உணர்வு உண்டா?
//பஞ்சுப் பொதி ஒத்த..
மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த
நீர்த்திவலைகளாய் நான்
நிறைந்து போயிருந்தேன்...//

இந்த வரிகள் உண்மைலேயே கலக்கலா இருக்கு..!!
//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//

எனக்கு உண்மைலேயே கமெண்ட் போட தெரியல ..!!
அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!////

இறப்பது கூட சுகமா?
dheva said…
வேலு...@

//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//



சுகமாய் இறத்தல் என்பது...உடலிலிருந்து எண்ணும் எண்ணத்தில் வாழ்வின் சுமைகள் களைந்து பயணிக்கும் மட்டுப் பட்ட சுகம்...(உடலளவில் மனக் கொள்ளும் கற்பனை சுகம்...!!!) இங்கே இருந்து சுகம் கொள்ளும் நான் .. .மட்டுப்பட்ட.. நான்(பிண்ட அகங்காரம்)

//இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...//

எல்லாம் கழிந்து பிரபஞ்சத்தின் பிரபஞ்சமாய் கலந்து

" வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய், கோனாகி, நான் எனது என்பவரை கூத்தாட்டுபவனாகி...." மாறூம்போது... ஏற்படும் சுகம்...பிரபஞ்ச அகங்காரம்.... கொண்ட மூல நான்.. ( பிரம்ம அகங்காரம்)...

இந்த இடத்தில் அனுபவம், அனுபவிப்பவன் இரண்டும் இன்றி அனுபவித்தல் என்ற நிகழ்வு மட்டும் எஞ்சும்.. அதாவது சுகம்.. என்ற ஒன்று தொக்கி ஏகாந்தமாய் இருக்கும்,

//இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...//

இது பிரம்மம் !
dheva said…
செளந்தர்..@ மேலே உள்ள பதிலில் உனக்கும் பதில் கிடைக்கும்!
கடைசி வரிகள் சூப்பர்! அருமையான கவிதை!
வினோ said…
அருமை அண்ணா...
மாப்ள, பதிவுகூட ஏதோ எனக்கு கொஞ்சம் புரிஞ்சதுமாதிரி இருந்துச்சு..!!
ஆனா, கீழ நீ வேலுவுக்கு கொடுத்த விளக்கைத்தைப் படித்ததும் அந்த "கொஞ்சம்" புரிஞ்சதும் சுத்தமா புரியாம போச்சு.. .. அபிராமி அபிராமி (அந்த குணா கமல் நெலமதான் இப்ப எனக்கு... சந்தோஷமா? )
இறந்த பின்னும் உணர்வு இருக்கும் என்பது கேட்க நன்றாக இருக்கிறது
Gayathri said…
ரொம்ப நல்ல இருக்கு ப்ரோ சுப்பர்

எனக்கு பிடிச்ச பாட்டும் வேற சைடு ல ஓடுது அதுக்கும் ஸ்பெசல் நன்றி
Chitra said…
nice write-up....
(p.s. very nice song in the background to read this.)
///இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!//

கவிதையைக் காதலித்து அதன்
கரம் பற்றி காவியமாய்
ரசித்து அதனுள்
கரைந்த விதம் அருமை..!!

/// சுகமாய் இறந்து போயிருந்தேன்......///
எப்படிங்க இப்படி... உங்கள் உள்ளம் உணர்த்தும் இந்த ஒரு வரியில் செம செம....!!!
அருமையான கவிதை அண்ணா...
Beautiful song.. to go with your feelings Deva..

மீண்டும் வசந்தம் எழுந்து விட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது....

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில் ....

முப்பது நாளும் முஹூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில் ...

Simply superb lyrics... :-))
(Just now I was able to listen to the whole song. That's why the late effect :-)) )
Mahi_Granny said…
அடர்ந்து, நிறைந்து, கலந்து, கலைந்து எங்கோ போயீருக்கீறீர்கள். வேறொன்றும் புரியவில்லை. . இதென்ன வாரியார் மாதிரி .i like only warrior.
Bibiliobibuli said…
சகோதரம்,

உங்கள் கவிதை இயற்கையோடொன்றிய மனித "இருப்பு" என்பதை சொல்லிவிட்டு கடைசியில் "சுகமாய் இறந்துபோயிருந்தேன்" என்பது தத்துவமா, புரியவில்லை?

அப்புறமா, சிறுகுடி ராம் என்பவர் சொன்னது தான் எனக்கும் பொருந்தும்.

//வேலுவுக்கு கொடுத்த விளக்கைத்தைப் படித்ததும் அந்த "கொஞ்சம்" புரிஞ்சதும் சுத்தமா புரியாம போச்சு.. .. அபிராமி அபிராமி (அந்த குணா கமல் நெலமதான் இப்ப எனக்கு... சந்தோஷமா? )//

சிரிச்சு மாளல ஐயா!!! :))))

இனிமேல் உங்கள் புரியாத கவிதை வாசிக்க உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பேன்.
Unknown said…
கவிதை நல்லாயிருக்குங்க..

கடைசி வார்த்தை ஏனோ டச்சிங்கா இருக்கு..
dheva said…
ரதி...@

சகோதரிக்கு வந்தனங்கள்......!

//உங்கள் கவிதை இயற்கையோடொன்றிய மனித "இருப்பு"//

மனித இருப்பு இல்லை சகோதரி........!

கவிதையின் கடைசி வரியியில் இருந்து வருகிறேன்...

//அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!//

இது முதல் வரியாய் கொள்ளுங்கள்......... இறக்கும் போது நான் என்ற அகந்தை என்ற மனம்தோடு சேர்ந்து சமாதியை ஒத்த ஒரு இறப்பு......!

அதற்கு.... பிறகு பிரபஞ்ச இருப்பினை ஒத்த இருப்பு......அங்கே எல்லாமாய் இருக்கும் ஒரு நிலை...பிரபஞ்ச உண்மைதான் விரிந்து பரந்து எல்லாமாயிருக்கிறது....அப்படி நானே நானாயிருக்கும் பிரம்மம பேசினால் தான் வியாபித்து இருக்கும் சத்தியத்தை வார்த்தையாக்குமெனில் ...நிறைந்து நின்ற சில இடங்களை விவரிக்குமெனில் எங்கணம் இருக்கும் என்று எண்ணியதின் விளைவு அல்லது எனக்குள் ஸ்பூரித்தது அல்லது....அக யாக்கை....அதுதான் இந்த கவிதை


இன்னும் குழப்புகிறேனா? சரி...சொல்லில் விளங்காத சூத்திரம்..உணர்தலில் விளங்குமென நினைக்கிறேன் சகோதரி...மேலும் நான் விவரிக்க முனைந்தால் எல்லாம் வல்ல ஒன்றை கமர்சியல் ஆக்க முனையும் என் முயற்சியில் என அறியாமை விசுவரூபமெடுத்து என்னை கீழே தள்ளி அழிக்கும்....!

தொடர்ந்து வாருங்கள் சகோதரி....! நன்றிகள்!
@தேவா

//சரி...சொல்லில் விளங்காத சூத்திரம்..உணர்தலில் விளங்குமென நினைக்கிறேன்//

:)


(ஹலோ!! டெம்ப்ளேட் கமெண்ட் எல்லாம் போட முடியாது!!)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...