
ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!
தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!
எப்போதோ பெய்தாலும்
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்
காதலை கொட்டி நிறைக்கிறது
ஆசையாய் நீ பரவவிட்டுச் சென்ற...
அடர்த்தியான அந்த கடைசிப் பார்வை....!
என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!
அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!
ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!
எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்த உயிர்ப்புத் தன்மையின் மூல முடிச்சு காதல். காதல் இல்லை எனக்குள் என்று சொல்லும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம். காதல் என்ற வார்த்தையின் கற்பிதங்கள் பலவாறு மனித மூளைகளுக்குள் பதியப்பட்டு இருப்பதால் அறிவின் படி நிலைக்கேற்ப, ஏற்பட்ட அனுபவத்திற்கேற்ப ஒரு புரிதல் கிடைக்கும். காதல் சம்பந்தப்பட்ட ஒரு மிஸ்டிக் நினைவுகள் வருவது எப்போது என்று கொஞ்ச ஆராய்ந்து பார்த்தால்....
அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!
தேவா. S
Comments
உறுப்பினர்கள்
ஜெயமாறன்
ரசிகன் சௌந்தர்
கோமாளி செல்வா
வெறும்பய ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்த்
by...
குடும்பத்துல குண்டுவைபோர் சங்கம்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!//
இதுதானோ சுகமான சுமைகள்.
//தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!//
அருகில் இருந்தாலும் வரும், தூரத்தில் இருந்தாலும் வரும்.
//என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!//
இதுதாண்ணே நான் ஸ்டாப் கொண்டாட்டம்.
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!//
நினைவுகள் ஊற்றாய் பெருகும் போது மெலிதாய் வரும் புன்சிரிப்பு.
கொஞ்சி பேசி"
அருமையான வரிகள் நண்பரே
வாங்களேன் என் வதம் பார்க்க
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_10.html
//
சரியாக சொன்னீர்கள் அண்ணா... தனிமை அனுபவிக்க தெரிந்தவனுக்கு மட்டும் தான் வரம்... வேறுத்தொதுக்குபவனுக்கு தனிமை என்றுமே சாபம் தான்...
தனிமையின் நினைவுகள் சுமையுடன் கூடிய சுகமான சுகந்தம்...
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!//
நினைக்க ஆரம்பித்த நொடியினிலே பல வண்ணம் கொள்ளும்... எழுதி முடிக்க முடியா கனங்கள்.
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!///
அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிய கவிதை தான் இதுவா..?
ரைட்டுங்க மாப்ஸ்!! கவிதை நல்லா இருக்கு. எனக்கும் ஒரு ப்ளாக் இருக்கு அதை போய் தூசி தட்டரேன்... :))
நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!///
அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிய கவிதை தான் இதுவா..? //
சௌந்தர் அது அந்த முறைச்சி பார்த்த பல பரிமாணங்கள்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .,!! இத நான் ஒரே தடவைல புரிஞ்சிக்கிட்டேன் .. கவிதைன்னு நினைச்சதுமே சரி கொஞ்சம் நின்னு நிதானிச்சு படிக்கணும் அப்படின்னு இப்பத்தான் படிச்சேன் .. இப்படி நல்லா இருக்குனு தெரிஞ்சிருந்தா முதல்லையே வந்து வடை வாங்கிருப்பேன் ..!!
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!//
அங்க போய் ஏன் மறந்தீங்க? ஒரு பேப்பர்லயாவது எழுதி வச்சிட்டு போயிருக்கலாமே?
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!//
தொலைவுல போனாதான் கவிதை வருது. பக்கத்துல இருந்தா மொக்கை பிகர் அப்டிங்கிறீங்களா?
செரித்து செரித்துஜீரணிக்க முடியாத பிகரா. செரிக்க டைம் ஆகுமா?
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும்//
அப்ப காக்கா?
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!////
சொல்லாத காதலின் வலி மனதை அரித்துத் தின்றுவிடும்!
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!///
ஆஹா... ரொம்பச் சரி, காதல் கவிதைகளின் மூலம் எப்போதும் பழைய காதலே!
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!////
அடடா.... காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ..... (இது இந்திரன் சந்திரன் படத்தில் வரும் பாடல்)
அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!////
அல்டிமேட் ஊர்ஸ்.... தனிமையின் இனம்புரியா நினைவுகள்..... உணர்வுகள் காதலின் ஒரு அங்கம்!
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை.//
நினைவு செரிமானம் ஆச்சா? நல்லா வந்திருக்கு..
கோபப்படலைன்னா ஒரு சின்ன சஜ்ஜஷன். ஏன் எல்லா தலைப்புகளிலும் "......." வக்கிறீங்க. அது கொஞ்சம் இழுக்கறா மாதிரி இருக்கு.
நன்றி ;-)
சூப்பர் அண்ணா..
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்//
அழுந்த ???
காதலும் ஒரு முறை வந்து போகும் உயிர் போன்றது.
நம் கண்முன்னே நாம் தூக்கில் தொங்கும் நிலையை உணருவோம்
நம் காதலியிடம் நம் காதலை சொல்லும் போது.
//சொல்லாத காதலின் வலி மனதை அரித்துத் தின்றுவிடும்!//
நான் வேணும்னா Pest Control போன் பண்ணவா?
//ஆஹா... ரொம்பச் சரி, காதல் கவிதைகளின் மூலம் எப்போதும் பழைய காதலே!//
அப்பொ இப்பொ இருக்க காதலியை நீங்க மதிக்க மாட்டிங்க?? Mrs.தேவா & Mrs.ராம்ஸ் பூரி கட்டை ரெடி பண்ணுங்க.
//அடடா.... காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ..... (இது இந்திரன் சந்திரன் படத்தில் வரும் பாடல்)//
ஏன் நீங்க வேணும்னா சொந்தமா ஒரு படம் எடுத்து ஒரு பாட்டு பாடி அதை இங்க சொல்லுங்களேன்...
//அல்டிமேட் ஊர்ஸ்.... தனிமையின் இனம்புரியா நினைவுகள்..... உணர்வுகள் காதலின் ஒரு அங்கம்!//
இதை மட்டும் நம்ம ப்ளாக்ல வச்சி பேசிக்கலாம்...
(மவனே இப்படி கவிஞனா மாறி வீண போற உன்னை திருத்தி நல்ல மொக்கைய மாத்தரேன்... இது சிரிப்பு போலீஸ் ப்ளாக் மேல ஆணை...)
//சொல்லாத காதல் எல்லோருக்கும் உண்டு அண்ணா.//
அப்பா நாகராஜா நீ வேற புதுசா ஆரம்பிக்காத. தயவு செஞ்சி போய் உன் காதல சொல்லிட்டு வந்துடு.... அவளுக்கு கல்யாணமாகி இருந்தாலும் சரி... :))
கொஞ்சலோடு பேசிச் சிரித்து//
உவமை!
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!
கவிதை!
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!
//
கவிதையில் காதல் ஊற்றாய்...
நல்லா சொல்லியிருக்கீங்க... இன்னும் முதல் காதலை மறக்கவில்லை என்பது பனித்துளியாய் கவிதையில்...
தொட்ர்கின்றேன்.
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
பணிவுடன் ,
ராக்ஸ் . . . .