Skip to main content

தழல்...!

















சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது
மனித மமதைகளை!

தெறித்து விழுந்து...
ஜுவாலைகளில் பொடிந்து
காற்றில் கால்சியத்தையும்
மெக்னீசியத்தையும் கலக்கிறது
உருவங்களை கட்டிக்காத்த
எலும்புக் கூட்டம்...!

அக்னியின் ஒற்றைச் சீற்றம்
அழைத்துப் போகிறது
வெள்ளை மூளைகளை
பஸ்பங்களின் படிமாணத்துக்குள்!

சுருங்கிய தோல்கள்
கழன்றனவா? இல்லை கருகினவா?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாமல் காற்றில்
எரிந்து போகின்றன
மனித உடல்கள்...!

எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?


தேவா. S

Comments

//எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?
//

விடை இல்லை
யாரயோ நீ ஒரு செத்த பிணம் .உன்னை எரிச்சிருவேண்டா ன்னு சொல்லுறீங்க யாரைன்னு தெரியல .............
dheva said…
பாபு...@ சரி கண்டுபிடி...பார்ர்போம்...!
sakthi said…
எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?

விடையறியா கேள்வியிது
dheva said…
பிணம் அர்த்த ராத்திரியில்தான் எரிய வேண்டும் என்று அவசியமில்லை...என்றாலும்.. மிகையாய் எரியூட்டல் இரவுகளில் நிகழ்வதால் அந்த பதத்தை கையாண்டு கொண்டேன்.

யாரும் கேக்கலேன்னு விட முடியாது.. மாப்ஸ் டெரர் கேப்பான்ல... கேப்பான்ல.. அதன் அட்வான்ஸா சொல்லிட்டேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
//விடையறியா கேள்வியிது//

சக்தி நிஜமா விடையில்லையா இல்லை நமக்குத் தெரியலையா?
தேவா, இந்தக் கவிதையில் நீங்கள் பிணம் எரிதலை குறியீடாக பயன்படுத்தி இருகீர்களா இல்லை வெளிப்படையான பொருளிலா ? அதை சொல்லுங்கள். அதன் பின் நாம் அந்த கேள்விக்கு செல்லலாம்
dheva said…
எல்.கே...@ வெளிப்படையான பொருளில்தான்....
//சுருங்கிய தோல்கள்
கழன்றனவா? இல்லை கருகினவா?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாமல் காற்றில்
எரிந்து போகின்றன
மனித உடல்கள்...!//

என்னமோ சொல்ல வரீங்க ., ஆனா என்னனுதான் புரியல ..!
Arun Prasath said…
என்னமோ சொல்ல வரீங்க ., ஆனா என்னனுதான் புரியல ..! //

எனக்கும் தான்...
தேவா , நமது மனம் என்று உடலில் தனியாக எதுவும் இல்லை. மூளையில்தான் அனைத்தும் பதிவாகின்றன (விஞ்ஞான கூற்று ). அந்த மூளை செயல்படுவதை நிறுத்தினாலே ஒருவன் இறந்தவன் ஆகிறான் . மூளையில் உள்ள செல்கள் இறக்கும் பொழுது அவனது சிந்தனைகளும் இறக்கின்றன
dheva said…
எல்.கே. @ இறப்பிற்கு பின் மனம் என்ற ஒன்று இல்லை என்கிறீர்களா...? மனிதன் இறந்தவுடன் ஒன்றுமில்லை...அவ்வளவுதானா?
Ramesh said…
//தெறித்து விழுந்து...
ஜுவாலைகளில் பொடிந்து
காற்றில் கால்சியத்தையும்
மெக்னீசியத்தையும் கலக்கிறது
உருவங்களை கட்டிக்காத்த
எலும்புக் கூட்டம்...!

அருமை...

//எல்லாம் பொழிந்து
நொறுங்கும் பிணமெரியும்
அர்த்த ராத்திரிகள்...எல்லாம்
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?

பயங்கரம்.. நடுங்குதுங்க.. ஒரு மாதிரி பயமா இருக்கு இப்பவே..
தேவா , ஆன்மா அது இருந்த உடல் என்று பார்த்தாலும், நினைவுகள் அற்று விடுகின்றன. பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப அதற்கு வேறு உடல் கிடைக்கும்
//சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது//

உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?
dheva said…
எல்.கே. @ நாம் உறங்குகிறோம் அந்த நேரத்தில் மூளை வேலை செய்யுமா? சரி. அப்படியே வேலை செய்தாலும் மூளையில் பதியப்பெறாத புதுவிசங்கள் கனவுகளாக வருகிறதே...அது எப்படி?
dheva said…
//உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?//

ரமேஷ்..@ வந்துட்டான்யா... வந்துட்டான்யா...!
அண்ணே நால்லாயிருக்கீங்களா...

நீங்க சாதரணமா தேடினாலே கண்டு பிடிக்கிறது கஷ்டம்.. இப்போ தொலைந்த மனித மனைகளை வேற தேடுறீங்க...


அப்போ நான் வர்ர்ரர்ட்ட்டா
எங்கே தொலைக்கின்றன
மனித மனங்களை மட்டும்?////

இதை தான் பல சாமியார்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள்....

மனம் சொந்தகாரங்க கிட்ட தான் இருக்கும் ....இறந்தவர் நல்லது செய்தால் நல்ல நினைவா இருக்கும் கெட்டது செய்தால் கெட்ட நினைவா (மனம்) இருக்கும்
வினோ said…
இந்த தேடுதலுக்கு பல விடைகள் கிடைக்கும் என்கிறேன்.. சரியா அண்ணா?
Chitra said…
சில கேள்விகளுக்கு பதில்களை தேடியே வாழ்க்கை கடந்து செல்கிறது. நல்லா எழுதி இருக்கீங்க.
Unknown said…
அமர்க்களமான கவிதை தேவா...
nis said…
இறுதி கவி வரிகள் மிரட்டுகிறது
அருமை! மிரட்டலான கவிதைதான்!
தினமும் தூங்குவதற்கும் , இறுதி தூகதுக்கும் வித்யாசம் இருக்கே பாஸ்
எரித்து விடும் தழலில்..
எரிந்து விடும் மனித உடலுடன்..
எக்காளமிட்ட மமதைகளும்....
எரிந்து பொசுங்குவதே...
எங்கும் வியாபித்திருக்கும்
எட்டாத உண்மை... அதனை
எளிதாய் கவிதையில் வடித்து..
எமக்கு அதைக் கொடுத்ததற்கு....

ரெம்ப நன்றிங்கோ... :-))) (நாங்களும் சீரியஸ்-ஆ இருப்போமில்ல..... :-) )

(ஸூஊஊஊஊஊஊ ..... எம்புட்டு நேரம் தான் தூய தமிழ்-ல பேசுறது........

ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம்... இங்க மட்டும் தான் இப்புடியா.. இல்ல வீட்டுலயும்.... இப்படி தான் சீரியஸ்-ஆ பேசுவீகளா........??

ஆத்தாடி.. கம்பு வருது.. நா இல்ல.. நா இல்ல... ஏதோ எனக்கு வேண்டாத பயபுள்ள, என்ன மாதிரியே போடுதுங்க.....):D :D
////சுற்றி எழும் நெருப்பின்
பொசுங்கலின் வீச்சம்
காற்றில் பரவவிடுகிறது//

உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?///

//உங்க ஊர்ல ரூம் ஸ்பிரே இல்லியா?//

ரமேஷ்..@ வந்துட்டான்யா... வந்துட்டான்யா...! ////



ஹா ஹா ஹா... :D :D :D

ROFL...!!
ஹேமா said…
மனங்கள் அடுத்தவர் மனங்களுக்குள் வாழும்தானே தேவா.கவிதை அற்புதம் !
Unknown said…
அருமை

இப்படிக்கு யாரு வரலன்னாலும், ஓட்டு போடலைன்னாலும் தளம் அமைச்சி ஓட்டு போடுவோர் சங்கத்து பிரஜை.
http://www.vikkiulagam.blogspot.com/
Paul said…
மிக நன்று..!!பல வரிகள் நிறைய யோசிக்க வைக்கிறது..!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...