Skip to main content

படம்...!




















படம் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும்...சரி ட்ரெய்லரோட அவசியம் என்ன? ஒரு ஐடியா... என்ன செய்ய போறோம் எது பத்தி பேசப்போறோம்னு ஒரு பிரிவியூ அவ்ளோதான்...!

கலாச்சாரம் (அப்பாடா....... தமிழ்ல எழுதியாச்சு..) பற்றி மொத்தமாக பேசுகிறோமா.. ? கலாச்சார குழப்பங்களைச் சாடுகிறோமா? இல்லை.. அதன் ஒரு பகுதியான வாழ்வியல் நெறிகளைப் பற்றி பேசுகிறோமா? என்ற ஒரு தெளிவின்றி தோட்டாக்கள் எம்மவர் மீது பாய்ந்துள்ளது முதற்கண் கண்டனத்துக்குள்ளாகிறது.

மேலும் நமது சமுதாய குறைபாடுகளைச் சாடும் நம்மவர்களின் கண்கள் வேற்று சமுதாயத்தின் மீதும் ஆழமாக பதிந்திருக்கிறதா என்ற கேள்வியையும் பொதுவில் வைக்கிறேன். ஆழமாக என்ற பதத்தை யாம் உபயோகம் கொள்வதற்கு பின்னால் ஆழ்ந்த பொருள் உள்ளது எம் தோழர்காள்......

குறைபாடுகள் இல்லாத மனிதனோ, சமுதாயமோ, நாடோ இருக்கவே முடியாது என்பது திண்ணமான ஒன்று என்று கருத்தில் கொள்ளும் அதே சமயத்தில்..எமது சமுதாயமும் அதற்கு விதிவிலக்கன்று என்ற பிரபஞ்ச உண்மையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த வருத்தமோ அல்லது குற்ற உணர்ச்சியோ கிடையாது.

நமக்குள் இருக்கும் குறைபாடுகள் அல்லது குறைபாடுகள் என்று நினைக்கப்படுபவை எல்லாம்….

“ ஆராய்ந்து சீரமைக்கப்படவேண்டியவையா? அல்லது எள்ளி நகையாடி அடுத்த தலைமுறைக்கு அச்சமூட்டப்பட வேண்டியவையா?

நமக்கு எது தேவை என்று உட்பொருளோடு கருத்துக்கள் வெளியிடுதல் சிறந்ததா? அல்லது....

நமது ஆக்ரோசத்தில் ஒட்டுமொத்தமாய் ஒரு சந்ததியினரை கிழித்தெறிவது சிறந்ததா? “

ஆண் பெண் சேர்ந்து வாழ்தல் மட்டுமல்ல கலாச்சாரம் என்பது..! நண்பர்களே.... தயவு செய்து அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எமது கலாச்சாரத்தை உற்று நோக்காதீர்கள்..அந்த கண்ணாடி உங்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு வந்து வேறு தளத்திற்கு பயணிக்க வைத்து விடும்.

மிக ஆழமாக இதனுள் பயணிக்கும் முன்பு ஒரு சம்பவத்தை சொல்லிக்காட்டுவது சாலச் சிறந்ததாக இருக்குமென நினைக்கிறேன்.

ஒரு விடுமுறை தினத்தில் அமீரகத்தில் இருக்கும் ஒரு பெரிய பூங்கா ஒன்றுக்கு நாங்கள் ஒரு 7 குடும்பங்கள் சென்றிருந்தோம். ஆண்களும் பெண்களும் நிரம்பியிருந்த அந்த பூங்காவில் கண்ட காட்சிகள் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டுவதாய் இருந்தது...

நாங்களனைவரும் இந்தியர்கள்...ஒரு பக்கம் பெண்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க.. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க.. ஆண்கள் நாங்கள் அனைவரும் பார்பிக்யூ சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தோம்.

அவ்வப்போது பெண்களும் வந்து செல்ல...நாங்களும் அவர்களுடன் கலந்து பேசி சிரிக்க... ஒருவருக்கொருவர் இறுக்கமின்றி.. மிகத் தளர்வாக...ஒரு கட்டுக் கோப்புடன்.. அண்ணா... தம்பி , அக்கா என்று உறவுகள் சொல்லி கூப்பிட்டு வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களை அளாவளாவி வந்தோம்......அங்கே சூழல் மையப்பட்டு இருந்தது....

எமக்கு பக்கத்தில் ஒரு பிலிப்பினோ கூட்டம்..அரை குறை ஆடைகளுடன்....ஆணும் பெண்ணும் தொட்டு விளையாடி.. சிரித்து அடித்து.. இன்னும் நம்ம ஊர் ஸ்டுடியோல இருப்பது போல ஸ்டான்டில் கேமரா வைத்து போட்டோ எடுப்பதும்.. அவர்கள் அடித்து இருந்த டெண்ட்-க்கு முன்னாலேயே பொது வெளியில் உடைகள் மாற்றுவதும்... உணவினை பங்கிட்டு.. உண்பதுமாக இருந்தனர்.. அங்கே...கேளிக்கை மையப்பட்டு உச்சகதியில் இருந்தது.

கோணத்தை மாற்றுங்கள்...இந்தப்பக்கம். .ஒரு சூடானி கூட்டம்...மொத்தமாக வந்தார்கள் உணவினை சமைத்தே கொண்டு வந்திருந்தார்கள்... வந்தவுடன்.. 20 பெண்கள் வட்டமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்கள்... நடுவே உணவு.. இருந்தது...! அவர்களைச் சுற்றி அவர்களின் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்....! இவர்கள் அனைவரும் உடல் முழுதும் சுற்றிய கலர் கலரான ஆடை அணிந்து முக்காடிட்டு இருந்த பெண்கள்....சரியா....!

இவர்களின் கணவர்களும் மற்றும் பதின்ம வயதை அடைந்த பையன்களும் கொஞ்சம் தூரம் தள்ளி இவர்களோடு சம்பந்தப்படாமல்... சுற்றி வட்டமாய் அமர்ந்து கொண்டு சிரித்து பேசி உணவருந்திக் கொண்டிருந்தார்கள்....அங்கே ஒன்று கூடல் மையப்பட்டு இருந்தது....

சரி தோழர்களே... பார்வையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து பூங்காவை ஒட்டிய கடற்கரையைப் பாருங்கள்.... ஆமாம் அரைகுறை ஆடையையும் தாண்டிய நிலையில் உடை அணிந்து வெட்டவெளி கடற்கரையில் கோக் குடித்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு வெள்ளையாக காட்சியளிப்பவர்கள்....மேற்கத்திய நாட்டை சேர்ந்தவர்கள்...அங்கே சூழலும், கேளிக்கையும், ஒன்று கூடலும் மையப்பட்டு இல்லை.. மாறாக ஓய்வு மையப்பட்டு இருந்தது....

இவற்றை காட்சிப்படுத்தலுக்கு பின் புலம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள் தோழர்களே...?

ஒரு விடுமுறை நாள் .. ஒரே பூங்கா....எத்தனை விதமான விருப்பங்கள்....? வேறுபட்ட நோக்கங்கள்..? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை? ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு இருக்கின்றனரா? இல்லை எது இவர்களை வார்த்தது?

வியாக்கியானங்கள்...பேசுவதாய் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றி ஏழு எட்டு கட்டுரைகள் எழுதலாம்...? ஆனால் அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை.. மாறாக அது தீர்வுகளை நோக்கிப் பயணிக்கவே விரும்புகிறது....சரிதானே...?

இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?

வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....

குற்றம் சொல்பவர்களா வரலாற்றின் நாயகர்கள் ???? அல்லவே...வழிக்காட்டியவர்களும் தீர்வு சொன்னவர்களும் தானே வரலாற்றின் பக்கங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள்...?

விரிவான பார்வைகளோடு.......காத்திருங்கள்....உறவுகளே!

திரைப்படம் தொடரும்....


அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!


தேவா. S

Comments

இன்னிக்கு வடை எனக்கு....
//
வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....//

உண்மைதான்...
படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
Chitra said…
வியாக்கியானங்கள்...பேசுவதாய் இருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்தையும் பற்றி ஏழு எட்டு கட்டுரைகள் எழுதலாம்...? ஆனால் அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை.. மாறாக அது தீர்வுகளை நோக்கிப் பயணிக்கவே விரும்புகிறது....சரிதானே...?


......அப்படி போடுங்க அருவாளை!
dheva said…
எல்.கே @ அட எடுத்த உடனே கிளைமாக்ஸ் வச்சா நல்லாவா இருக்கும்...!
Kousalya Raj said…
ஒரு பூங்காவிற்கு எங்களையும் அழைத்து சென்று, அந்த காட்சிகளை கண் முன்னால் விவரித்தது திரைப்படம் பார்க்கும் உணர்வை தந்தது...

//அறிவின் தெளிவு என்பது.... எப்போதும் விவாதங்கள் செய்வதிலேயே இருக்க விரும்புவது இல்லை..//

விவாதம் செய்தாலும் முடிவிலாவது தீர்வு ஒன்றை சொல்வதில் தான் இருக்கிறது அறிவின் திண்ணம்...
எனக்கும் பேச தெரியும், கேள்வி கேட்க தெரியும் என்பதில் நிச்சயம் மமதைதான் இருக்கும்.

வாழ்க்கை முறை தவறு என்று மேலோட்டமாக சொல்லி தங்களை சிறந்தவர்கள் என்று காட்டி கொள்வதை விட அதை எப்படி சரி படுத்தலாம், அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்து கூறவேண்டும்....

தீர்வுகளை எடுத்து சொல்வதற்கும் பகுத்தறியும் எண்ணங்கள் வேண்டும்...

தொடரும் பதிவிற்காக வெய்டிங்...

நன்றி தேவா...
Balajisaravana said…
டைட்டில் கார்ட் போட்டாச்சு.. :)
dheva said…
சித்ரா..@ அருவாள் எல்லாம் ஒண்ணுமில்லீங்க..! அமைதி விரும்பிகள்தானே நாம... ஹா..ஹா.. ஹா.!
dheva said…
கெளசல்யா..@ ஆமாம் கெளசல்யா.. ! காச் மூச்ன் கத்தி நம்ம பி.பி ஏன் மேல போகணும்.... நிதானம் உடம்புக்கு ரெம்ப நல்லதுன்னு நம்மூர்ல ஏகப்பட்ட பேரு சொல்லியிருக்காங்களே...!
dheva said…
சங்கவி..@ பருப்பு வடைங்களா இல்லை மெதுவடைங்களா.. ?
dheva said…
சங்கவி..@ பருப்பு வடைங்களா இல்லை மெதுவடைங்களா.. ?
dheva said…
பாலாஜி சரவணா.. @ ஆமாங் கண்ணு...போட்டாச்சி..!
இப்போதான் எழுத்து ரீல் முடிஞ்சி இருக்கா?

தொடருங்க... இடைவெளில பாப்கார்ன்னும் கோன் ஐஸ்சும் வந்துடனும்
அண்ணா... தாங்கள் அபுதாபியிலா அல்லது துபாயிலா?
தீர்வுகளை நோக்கி பயணிக்கும் உங்கள் கட்டுரையின் அடுத்த பக்கத்திற்காக காத்திருக்கிறோம்...
dheva said…
குமார்..@ நான் துபாயில்.. இருக்கிறேன்..! தாங்கள்...?
எடுத்து காட்டுகளும் அதன் பின் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கவுறையும் அப்புறம் நச்சுன்னு மண்டைல உறைகிற மாதிரி கேள்விகளும் அருமை ,,,,,,,,,
இருங்க பாப்கார்ன் வாங்கிட்டு வந்திடுறேன். செல்வா உனக்கு வடை வேணுமா?
இப்போ படம். அடுத்து பலான படமா?
Ramesh said…
//ஒரு விடுமுறை நாள் .. ஒரே பூங்கா....எத்தனை விதமான விருப்பங்கள்....? வேறுபட்ட நோக்கங்கள்..? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இல்லை? ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு இருக்கின்றனரா? இல்லை எது இவர்களை வார்த்தது?

நியாயமான கேள்விகள்...


டைட்டில் கார்டு சூப்பரா போட்டுட்டீங்க.. ஓட்டுங்க.. ஓட்டுங்க.. தொடர்ந்து பாக்குறோம்...
படம் சரியான பாடமா இருக்கும் போல அண்ணா .,
அதே மாதிரி சன் பாத் என்பது மேற்க்கத்திய நாடுகளில் இருக்கிறது
அதனை இங்கே பார்க்கும்போது அது நமக்கு சற்று அருவருப்பாக தெரிகிறது...!
சரி அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் .. விரிவாகப் பேசுவோம் அண்ணா .!!
ஆமினா said…
//வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....

//

ஏன் என்பதை கேட்காமலேயே இருந்துபழகிவிட்டோமே! அதான் அவர்கள் சொன்னதுக்கும் தலையாட்டுகிறோம்.
@தேவா

மாப்ஸ் ட்ரைலர் ரொம்ப போடறியே படம் மொக்கையா இருக்கும் நினைச்சேன். பரவாயில்லை. நல்லா தான் இருக்கு.. ஆன உன்னை இதுக்காக எல்லாம் வாரம் வாரம் லீவ் விட்டு மம்சர் பார்க் அனுப்ப முடியாது மாப்பு... :)))
ஹேமா said…
தேவா...உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் சிந்திக்கத்தான் வைக்கிறது !
Padmahari said…
சிறு குழந்தையும் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும்படி எளிமையாக காட்சிப்படுத்தப்பட்ட எழுத்துப்படம்! வாழ்த்துக்கள் சகோ....

//இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?

வாழ்க்கை முறை தவறு என்று சொன்னவர்கள்..எப்படி வாழ்வது என்றும் சொல்லவேண்டும் அல்லவா? அதுதானே பொறுப்பானதன்மை....//

இதுக்கெல்லாம் பதில்/வழி சொல்லிட்டா சண்டை ஏன் வருது, ஆரோக்கியமான விவாதம்தானே வரனும்?! அதை இந்த வலையுலகம் செய்ய முயற்சிக்கும் என நம்புவோம்.

அடுத்த காட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்....

நன்றி,
பத்மஹரி.
http://padmahari.wordpress.com
படம் ஹிட்..!! இப்பவே நோட் பண்ணிக்கோங்க..!!
//இப்போது பகிரங்க கேள்வி ஒன்று வைக்கிறேன்....கலாச்சாரம் தவறு என்று சொன்னவர்களில் எத்தனை பேர்.. அவற்றுக்கு தீர்வு சொன்னார்கள்?//
இது ஒரு endless வினா தேவா...பதில் அப்படிங்கிறது அவங்க அவங்க சாதகமான யோசனையை,சூழலை பொறுத்து கூட அமையும்...நீங்களே சொன்னிங்க இல்லையா..அவங்க அவங்க உற்று நோக்கும் பார்வை!!...கலாச்சாரம் தவறுன்னு சொல்றவங்க பார்வையில் நீங்க இருந்த பார்க் கில் இருக்கும்போது பார்த்த கண்ணோட்டத்தை விட ,அவங்க பார்வையில் கலாச்சார மீறல்களை பட்டு எரிச்சல் அடஞ்சுருக்கலாம்...இது Individuality னு வகைபடுதவும் முடியாது..instinct னு நெறிபடுதவும் முடியாது...அவங்க அவங்களுக்கு ஒத்துவரும் வாழ்க்கை நெறியில் இருந்துக்க வேண்டியது தான்..:))) இப்போலாம் வாழ்க்கை கோட்பாடுகள் ease ஆய்ட்டு வருதோ..?:)) இதுவும் ஒரு endless பதில் தேவா...:)) உங்கள் பகிர்வுக்கு நன்றி..!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...