Skip to main content

அதுவா....?
























ஒரு முறை என்னைப் பார்
என்னை உன் விழிகளால் விழுங்கு
மெளனத்தால் அரவணை
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய்
காதல் மொழி பேசு...
சில முத்தங்கள் மூலம் எனக்குள்
காதலை பரவ விடு...
சப்தமில்லாமல் சிரி...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!

பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...
உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!

காமத்தின் வேர்கள் அறுக்கப்பட்டதில்
கிளைந்தெழுந்த விருட்சமாய்
வெகுண்டெழுந்த அவதாரமாய்
சுற்றுச் சூழல் மறந்து விசுவரூபத்தில்
வியாபித்து நிற்கிறதே.. ஒன்று....
அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?


தேவா. S

Comments

என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.///

அவங்க வாசல் தெளித்து கோலம் போட்டு இருப்பாங்க அதானே...?
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?///

ஷங்கர் படம்...
உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு///

நேத்து பேசும் போது வீட்டில் ஏதோ உடைக்கிற சப்தம் கேட்டுது அது இது தானா...
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

இந்த வரி ரொம்ப சூப்பர் அண்ணா....!
karthikkumar said…
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..//
:))
காதலின் பிரமாண்டத்தை சொல்கிறது,, இந்த பிரமாண்டமான வரிகள்..
உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?

::)))))))))
//உனகானவன் நான் தான்
என்ற உரிமையில்..என்னை
முழுதுமாய் உடைத்துப் போடு!//

உடைத்துப் போட உரிமை கொடுக்கும் காதல் ஒரு உன்னதக் காதல்!

//பற்றிப் பரவும் கொடியின்
காதலில் லயித்துக் கிடக்கும்
ஒரு மரம் போல ...//

கொடி, மரத்தைக் காதல் செய்கிறது என்பதே அற்புதமான கற்பனை. அதற்கும் அதிகமாக அந்தக் கொடி கொண்ட காதலில் லயித்துக் கிடக்கும் மரம்னு எழுதி....... செம தேவா :)

//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

காதலை ஏற்றுக்கொண்டதைச் சொல்வதற்கு இதற்குமேல் வேறு வார்த்தைகள் இருக்கமுடியாது தேவா.

கடைசிப்பத்தியில் தெரிகிறது காமம் அற்ற....சாரி., காமம் கடந்த ஒரு காவியக் காதல்!!!

உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது சுலபம் இல்லை. எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை தேவா. WELL DONE!! :) AWAITING MORE SUCH POEMS FROM YOU..
கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)
Unknown said…
அசத்தல்...
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!//

அசத்தல்.

கலக்கல்.
//கே.ஆர்.பி.செந்தில் said...

அசத்தல்...///

This is sathyaraaj film
உணர்வ மட்டும் அப்படியே பிய்த்து எடுத்து வார்த்தைகளால் எங்களுக்குள்ளும் செலுத்திடுறீங்களே.......
//என் பெயர் சொல்லி
ஓராயிரம் முறை அழைத்து
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்..
நானோ பார்வைகள் தொலைத்து
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!
//

சூப்பர் அண்ணா ..!! இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..!
//அதுதானே உன் விழிகளால்
என் விழிகளுக்குள் நீ விதைத்துப் போட்ட
பிரமாண்டக் காதல்..?
//

இதுவும் கலக்கல் ..!!
nis said…
அசத்தல்
super
அழகான கவிதை! அருமை!
//மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!.......அசத்தல்.
வினோ said…
காதலின் அளவா இல்லை அதன் ஆழமா?..
எப்படி பார்த்தாலும் காதல் மட்டுமே உன்னதம்...
Kousalya Raj said…
நேற்று தேடல்.....! இன்று காதல்.....! காதலும் ஒரு தேடல் தானோ...?!

இந்த வரி, அந்த வரி என்று குறிப்பிட்டு சொல்ல இயலாத அளவில் மொத்த கவிதையுமே காதலின் அழகை அப்படியே போட்டு உடைத்திருக்கிறது முகமூடி அணியாமல்... சிறிதும் வேடம் தரிக்காமல்.....இயல்பாய்....அறிவாய்.....ஆத்மார்த்தமாய்.....!! அதிகமாய் ரசித்தேன்....ரசித்துகொண்டிருக்கிறேன்.......!

எதை பற்றி எழுதினாலும் அனைத்தும் சிறப்பாய் எழுத எல்லோராலும் முடியாது....உங்களுக்கு முடிகிறது. வாழ்த்துக்கள்.
@அருண்

//கலக்கல்...

(ஏம்பா இப்படித்தான போடனும்)

//

மச்சி!!! எங்க இருந்தாலும் சீக்கிரமா ஓடு வா. கவிதை விட கமெண்ட்ல வூடு கட்டி விள்ளாடலாம் போல... நிறையா ஆடு மச்சி... :)))))
//உன் மொத்தக் காதலும்
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில்
உணர்வுகளின் சங்கமித்தில்
இசைக்கும் கீதம்... என் உயிரின்
மூலம் தொட்டு தடவுகிறது....!//

உயிரின் மூலம் தொட்டக்காதல்...உன்னதக் காதல் தான்... :-)

//உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு
மழை வாங்கும் நிலமாய்...
மெளனித்துக் கிடக்கிறேன்..!///

அவங்க கூப்பிடுவதுலேயே... மயங்கி போய்... மௌனித்து இருப்பதாய்.. அழகான உணர்வு.. :-))

உங்க கவிதை மொத்தமும் அழகு தான்.. ஏற்ற படமும்... கண்ணே கலைமானே... இசையின் பின்னணியும்.... சூப்பர்ப் :-)
ஹேமா said…
காற்றாகிப் பறக்கும் தேகம்.
பிரமாண்டத்துள் மூழ்கிக்கொண்டிருக்கும் காதல்.
பேதமற்ற உடலுயிர் தழுவிக்கொள்ளும் வாழ்வின் அசாத்திய ஒரு உலகம்.அத்தனையும் உணர்கிறேன் வரிகளுக்குள் !

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...