Skip to main content

காலம்...!


ஒரு வெற்று வானமும்
சப்தங்களற்ற தனிமையும்
ஒரு சில்லென்ற காற்றுக்குள்
எனை நிறைத்துப் போட
எதுவுமற்று எல்லா திசைகளிலும்
அலைகிறேன் நான்!

என்னுள் இருந்த…
சித்தாந்தங்களின் சிதறலில்
உயிர்த்துக் கொண்ட …
உணர்வுகள் கொடுத்த சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன..எட்டப்படாத…
உயரங்களில் இருக்கும்
ஏதோ ஒரு உண்மைக்கு…!

சப்தங்கள் தொலைத்த கணத்தில்…
சிலிர்த்தெழுந்த ஒரு…
சிருங்கார நாதம் என்னுள்
பற்றிப் பரவிய பொழுதில்…
கரைந்தே போகிறேன்...
காற்றின் திசைகளுக்குள்…!

மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!


தேவா. S

Comments

காற்றின் திசைகளுக்கு வெறுமையின் அதிர்வுகள் புரியாதோ? காலத்தின் நிறமோ வெறுமையில் கரைந்து விட்டதே?
வெறுமையின் குணமோ திசைகளில்லா காலச்சுவடுகளை மௌனமாகத் தேடித் திரியும்போது காலத்தின் குணம் எப்படித் தெரியும்?
dheva said…
பன்னிக்குட்டி.@ நீயாயாயாயாயாயயாயாயயய...........??????????என்ன மறுபடியும் ஐசியுக்கு தூக்குங்கடா........ஊர்ஸ் உன் தெறம பயலுகளுக்கு தெரியல மாப்ஸ்!
நீங்கள் எழுதிய பாட்டின் அர்த்தத்தை கூறிவிட்டு, பரிசினைப் பெற்றுச் செல்லலாம்..
நொடிகள் போல கணங்கள் சென்றால் யுகங்கள் கூட நிமிடங்களாகலாம்!
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
நிறமுமில்லை..குணமுமில்லை!
////////////////////

அண்ணே த்ரீ ரோசஸ் ட்ரை பண்ணுங்க நிறம், சுவை, திடம் மூணுமே இருக்கு, திரிஷாவே சொல்லிட்டாங்க....
கொஞ்சம் புரிஞ்சது கொஞ்சம் புரியல ..!!!
காலமெனும் தேரில் ஏறி வாழ்க்கையெனும் ஊஞ்சல் ஆடினேன்
விதி எனும் புயல் காற்றில்
வீழ்ந்தெல்லாம் வீணாக!
Labels: கவிதை

நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////


பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....

பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.
இது என்ன காலம் குளிர் காலமா?
//மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!//

ஆகா... அருமை அருமை பிரமாதம்.... செம வரிகள்....


இந்த மாதிரி எவனாவது போட்டீங்க வந்து அடிப்பேன்... முதல்ல அர்த்தத்தை சொல்லுங்கய்யா
வெற்று வானத்தின் சப்தங்கள், தனிமையைக் காலத்தின் வெறுமையை நோக்கி பரவும் பொழுதில், காற்றின் திசைகள் அதிர்ந்து மௌனம் கலைகின்றன.
தேவா அண்ணே ஆயிரம் தான் சொல்லுங்க, மெய்யாலுமே உங்கள், குறிப்பாக இந்த விமர்சனம் சத்தியமா எனக்கு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது....
////Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////


பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....

பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.///

அப்பாடா, எனக்கும் கொரிய மொழி வருதுப்பா... இனி இருக்கு எல்லாத்துக்கும்.......
dheva said…
அடப்பாவிகளா..............சரி விளையாடுங்க..........!
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Labels: கவிதை

நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..///

கதைதான்யா, கமென்ட்டப் பாரு, எழுதியிருக்கேன்
//மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை//

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

தொடருங்கள்.......
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது என்ன காலம் குளிர் காலமா?//

அண்ணே இங்கதான் இருக்கீங்களா?
இனி இது போன்றதொரு படைப்பு தங்கள் வலையில் வந்தால், உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்....தமிழ் மொழியை இவ்வாறு கையாண்டதற்க்காக.

எனக்கு இதுக்கே நாக்கு தள்ளுது, எப்பிடிய்யா பாம்பாட்டி சித்தர் மாதிரி இப்பிடி எழுதுறீங்க....

ஒரு ஒப்பன் சவால் உங்களால் சென்னை தமிழில் ஒரு கானா பாட்டு எழுத முடியுமா??? முன்னாடி தேவாவின் தேனிசையில் வாழ்க்கையின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி பாடல்கள் வருமே அதே போல்....ஹா ஹா ஹா!
எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!
dheva said…
எஸ்.கே..@கலக்குறீங்க...!
நாலு கமென்ட்டு இப்பிடி போட்டதுக்கே வயித்த என்னமோ பண்ணுது, நான் விடுதலை வாங்கிக்கிறேம்பா.....!
dheva said…
//ஒரு ஒப்பன் சவால் உங்களால் சென்னை தமிழில் ஒரு கானா பாட்டு எழுத முடியுமா??? முன்னாடி தேவாவின் தேனிசையில் வாழ்க்கையின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி பாடல்கள் வருமே அதே போல்....ஹா ஹா ஹா!//

அடப்பாவிகளா.. எழுதுறேன்.. வெயிட் பண்ணு ...ஹா.. ஹா..ஹா..!
சைக்கோ

நித்தம் ஒன்றென செய்த போதும்
திருப்தி வந்ததில்லை எனக்கு
இன்றுதான் இறுதியென
முடிவெடுத்து ஆரம்பித்தேன்

விதமாய் விதமாய் செய்தேன்
கொலை எனும் கலையை
ரத்தம் பார்த்த பின்தான் என்
சித்தம் சிறிது அடங்கியது

துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
சொன்னது என் மனம்
இன்னும் வேண்டும் எனக்கு
புது அனுபவம்....
எஸ்.கே said...
எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!

/////////////////////////////

நாசமாப்போச்சு நல்லா இருந்த மனுஷன் உங்க பதிவ படிச்சிட்டு இப்படி கமெண்டு போடுறாரு...ஆனா தேவா அண்ணாச்சி இந்த பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25
////////////////////////

ஹ்க்கூம் ஊரே தீப்புடுச்சி எறிஞ்சிக்கிட்டு இருக்கு இவருக்கு ”25” ரொம்ப முக்கியம்...

மீ தி 31!
Unknown said…
நிறம் , மனம், குணம் இம்மூன்றும் இருந்தால்தான் மனிதனோ ..
aavee said…
தாய் சொல்லித் தந்த மொழி
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!!
எல்லாம் படிச்ச புள்ளைகள கமெண்ட்ஸ் போட்டு இருக்கு .........இருமு அடிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை ......(என்னை சொன்னேன் )
dheva said…
//தாய் சொல்லித் தந்த மொழி
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!//

கோவை ஆவி.....@ அச்சச்சோ.........ஹா.. ஹா..ஹா.. செம பாஸ் ஏன் இப்டி....எல்லாம் ஹா ஹா ஹா..!
வினோ said…
/ ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை! /

உண்மைதான் அண்ணா...

வாழ்வின் ஒரு வெளி பயணிக்கும் போது, இவைகள் இருப்பதில்லை...
Anonymous said…
CLASSIC !!!!!!!!1
நிசப்தத்தில் நாம் பல உணர்வுகளை அறியலாம். வெளியில் மட்டுமல்ல மனமும் நிசப்தத்தில் ஆழ வேண்டும். அந்த கணம் உங்களின் ஆழமான தேடல் உயிர்பெறுகிறது.
ஆழ் மனத்தேடல் உயிர்பெறுகிறது
@ எஸ்.கே.

//எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!//

அண்ணா.. எப்படி இப்படில்லாம்????? கலக்கல் :-)
I loved it.
Anonymous said…
வரித்துக் கொண்டயாவும் அரைவினாடி சிதறலில் அர்த்தமற்றுப் போய் வெறுமைக் குடியேறும் எண்ணக் கூடு!
Unknown said…
கவித கவித
மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!

நிறைய சிந்திக்க வைக்கின்றன இவ்வரிகள்!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...