Skip to main content

அந்திம....ம்!


சுவாசம் தப்பப்போகும்
நீண்ட இரவொன்றில்
கலைதலாய் புரட்டுகிறேன்
பழுப்பேறிய என் வாழ்வின்
பக்கங்களை...படிந்திருக்கும் தூசுகள் தட்டி...

வலிவாய், சப்தமாய்
உடலின் முறுக்குகள் காட்டி...
குறுக்காய் நெடுக்காய் யோசனைகளில்
அலைந்து அலைந்து அகங்காரத்தில்
காட்சி மாற்றம் ஆன நாட்கள்
ஒரு போதும் சொல்லவில்லையே
அந்திமத்தின் அவஸ்தைகள் பற்றி?

கடவுள் உண்டு, இல்லை
வாதிட்ட வாதங்கள் எல்லாம்
நினைவுப் பகுதியில் செத்துப்போய்
உயிர் இருக்குமோ போகுமோ
என்ற ஒற்றைப் புள்ளியில்
மல்லாந்து கிடக்கிறதே என் மூளை!

செல்லரித்த புத்தகங்களும்
செத்துப் போன தத்துவங்களும்
பல்லிளித்து கிடக்கின்றன
பரண்களின் உச்சியில்....
பகுத்தறிவு மூளைக்கோ
இதுவரை தெரியவில்லை
அடுத்த கணத்தின் என் .....
வாழ்வின் நகர்தல் பற்றி...!

கனத்த இமைகளை ...
கலவரமாய் மூடுகையில்
எருமை வாகனத்தில்.. மீசைமுறுக்கி
வருகிறான்...மதம் மனதில்....
ஏற்றி வைத்த அடாவாடி எமன்....

எரிப்பதிலும் புதைப்பதிலும் ..
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....

செத்துக் கொண்டிருக்கின்ற..
என்னுள் செல்களும் திசுக்களும்....
வற்றிக் கொண்டிருக்கின்றன
நினைவுகளில் தீராது...
என்றெண்ணிய என் வாழ்க்கை.....

தொடர்கிறது நெடிய...
கனத்த இரவின் நிமிடங்கள்
என்னின் சப்தநாடிகள் ....
அடங்கும் ஒரு உற்சவமாய்
உடலுக்குள் கூடிப் பரவுகிறது...
ஒருவித திண்மை...
சுவாசம் தடுமாற.....
நரம்புகள் இழுக்க
நா வரள....
புத்தி அழிய...
மனம் வெருள
நிலை குத்தி நிற்கிறது...
என் கண்கள்....
விடியலைக் காணா இரவோடு...
இதோ......இறந்தே விட்டேன் நான்..................!


தேவா. S


Comments

Anonymous said…
//செல்லரித்த புத்தகங்களும்
செத்துப் போன தத்துவங்களும்
பல்லிளித்து கிடக்கின்றன
பரண்களின் உச்சியில்....
பகுத்தறிவு மூளைக்கோ
இதுவரை தெரியவில்லை
அடுத்த கணத்தின் என் .....
வாழ்வின் நகர்தல் பற்றி...!//

நிதர்சன வரிகள்! என்ன தத்துவம் பேசினாலும் விவாதம் பண்ணினாலும் அடுத்த கணம் என்ன நடக்கப் போகுதுனு யாராலும் சொல்லமுடியாது தான்...! நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு தேவா.
Anonymous said…
//விடியலைக் காணா இரவோடு...
இதோ......இறந்தே விட்டேன் நான்..................!//

ஒவ்வொரு இரவைக் கடந்து விடியலில் விழிக்கும்போதும் ஒரு புதுபிறவி எடுத்தது போல் தான் :-)
Death is no more than passing from one room into another. But there's a difference for me, you know. Because in that other room I shall be able to see.

- Helen Keller
“Have the courage to live. Anyone can die.”
While I thought that I was learning how to live, I have been learning how to die.

- Leonardo da Vinci
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
SASIKUMAR said…
மனிதர்களே..............

'ஒன்றுமில்லை.......அலட்டிக்காதீங்க............எங்கேயும் போய் நீங்கள் சேரப் போவது இல்லை நிதானமா வாழுங்க '
-----DHEVA
/அந்திம....ம்!//
கோடிட்ட இடத்தை நிரப்புக ச்சீ புள்ளி வைத்த இடத்தை நிரப்புக..
வினோ said…
எங்கு நிற்பினும் அடுத்த கனம் அறியா வாழ்வு..
உள்ளே நடப்பதும் நிற்பதும் கரங்களில் இல்லை...
வாழ்வின் ரகசியங்கள் முடியும் தருணம் தழைக்கும் இன்னொரு வாழ்வு...
Prem S said…
Maranam patria ungal parvai arumai thalaipum arumai
Unknown said…
//எரிப்பதிலும் புதைப்பதிலும் ..
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....//

மனதில் எதிரொலிக்கும் வரிகள். நல்பதிவு.
ஸ்டில்ஸூம் கவிதையும் டாப்
அருமையான கவிதை அப்படினு சொல்லனும் தோனுது. ஆனா பாருங்க அப்படி சொன்னா அது டெம்ப்ளேட் கமெண்ட் சொல்லி அடிப்பாங்க. அப்பொ எப்படி நான் இந்த கவிதை பாராட்டரது. சரி கவிதை நல்லா இருக்கு.
ம்ம்ம்ம்.....

அருமை தேவா.....\\
மிக மிக நன்றாக உள்ளது.அருமையான கவிதை.
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...
மிக அருமையான கவிதை.
ஹேமா said…
நித்தமும் செத்துச் செத்துப் பிறப்பதாய்த்தானே வாழ்க்கை !
///எரிப்பதிலும் புதைப்பதிலும் ..
விவாதங்களாய் பேசி
காத்திருக்கும் உறவுகளுக்குத்
தெரியுமா விழித்திருக்கும்
என் செவிகள் பற்றி....///

இந்த்தகவித்தையும் எனக்கு புரிஞ்சிடுச்சு அண்ணா .
ஹி ஹி ஹி .. ஒருவேளை நான் வளர்ந்துட்டு இருக்கேமோ .?!
Unknown said…
அருமையான கவிதை அப்படினு சொல்லனும் தோனுது. ஆனா பாருங்க அப்படி சொன்னா அது டெம்ப்ளேட் கமெண்ட் சொல்லி அடிப்பாங்க. அப்பொ எப்படி நான் இந்த கவிதை பாராட்டரது. சரி கவிதை நல்லா இருக்கு.--repeat anna.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...