
இரவுகளில் தொலைத்த
உறக்கங்களின் அயற்சிகள்
எல்லாம் எழுதிவைத்த
உன் பெயரைத்தான்
நான் காதலென்கிறேன்...!
பொய்யாகக் கூட..
வார்த்தைகளில் நேசம்
விலக்கா உன் அன்பில்
ஒளிந்திருக்கும் உணர்வுகள்
எனக்குக் கொடுத்த சிலிர்ப்பைத்தான்
நான் காதலென்கிறேன்...!
நிறையவே யோசித்து
நான் எழுதும் நான்கைந்து...
வரிகளில் நனைந்திருக்கும்
என் உயிர் உரைக்கும்...
ஓசைகளில் படிந்திருக்கும்
நேசத்தைதான் நான் காதெல்ன்கிறேன்...!
ஒரு மழை சாதரணமாகத்தான்
பெய்து பூமி நனைக்கும்....ஆனால்
அது எனக்காக பெய்ததென்று
எது சொன்னதோ அதைத்தான்..
நான் காதல் என்கிறேன்..!
இரவில் இமைகள் கவிழ்ந்து
உறங்கும் பொழுதிலும்
விடியலில் இமைகள் பிரித்து
எழும் தருணங்களிலும்....
தப்பாமல் உன் முகம்
அகத்தில் வருகிறதே...
இதைத்தான்..இதைத்தான்...
பெண்ணே நான் காதலென்கிறேன்...!
தேவா. S
Comments
கவி
கவிதை..
விதை..
தை..
பெய்து பூமி நனைக்கும்....ஆனால்
அது எனக்காக பெய்ததென்று
எது சொன்னதோ அதைத்தான்..
நான் காதல் என்கிறேன்..!//
நல்ல கற்பனை!
Happy Valentine's Day!
உறங்கும் பொழுதிலும்
விடியலில் இமைகள் பிரித்து
எழும் தருணங்களிலும்....
தப்பாமல் உன் முகம்
அகத்தில் வருகிறதே...
இதைத்தான்..இதைத்தான்...
பெண்ணே நான் காதலென்கிறேன்...!////
நீங்க மட்டுமா சொல்றீங்க....
காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...