Skip to main content

காற்று....!




















எந்த ஸ்வரத்தினை
ஓதுகிறாய் மரத்திடம் நீ
தலைசயசைத்து...தலையசைத்து...
ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்!

தண்ணீரைத் தடவிச் செல்லும்
ஸ்பரிச சந்தோசத்தில்
அலை அலையாய்
வெட்கத்தை இறைக்கிறது
அந்த மரத்தோரத்து நதி...!

பூக்களுக்குள் புகுந்து..
மகரந்தங்களை கலைத்துப் போட்டு
வண்டோடு அது கொண்ட காதலை
சொல்லிச் சிரித்தபடி செல்லும்...
இந்த காற்றின் பயணம்தான் ...
எதை நோக்கி...?

புல்லாங் குழலுக்குள் புகுந்து
இசையாய் உடை உடுத்தி
செவிகளுக்குள் பயணப்பட்டு
இசையாய் மயங்க வைக்கிறது ...
மனித மனங்களை...!

ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?

மனிதருக்குள் புகுந்து
நினைவுகளில் நிறைந்து
உயிராய் ஊடுருவியிருக்கும்
ஓசையற்ற சூட்சுமத்தினை
உணரத்தானே முடியும்...?
கையிலெடுத்து காட்டவா முடியும்...!

எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?


தேவா. S


Comments

//எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?//


nalla kavithai... kadaisiyil kelviyudan...
காற்றின் கலாட்சேபத்தை..
கண்னருகே காட்டி விட்டீர்கள்..

உள்ளத்தில் உணரத் தான் முடியும்..
உள்ளங்கையில் உட்கார வைக்க முடியாதுன்னு அழகா சொல்லிட்டீங்க..

உங்க ரசனையை ரசித்தேன்.. :-))
Chitra said…
ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?


...wow! lovely way of writing it. nice.
Kousalya Raj said…
காற்றை பற்றிய தேடலும் கடவுளின் தேடலும் ஒன்றா ? இல்லை இரண்டும் ஒன்றா ? இல்ல நீங்க கேட்ட மாதிரி காற்று தான் கடவுளா ?

ரொம்ப யோசிக்க வைக்கிறதே இந்த கவிதை...?! :))

என்ன இருக்கிறது இந்த கவிதையில் என்று யோசிக்க வைப்பதும் படைப்பாளியின் சூட்சுமம் தானோ !?

இன்னும் கற்றுகொண்டே இருக்கிறேன்.....

நன்றி.
ஹேமா said…
காற்றைப்போல கடவுள்.
கடவுளைப்போல காற்று என்று சொன்னால் சரியாகுமா !

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...