Skip to main content

நின்னையே ரதியென்று....!


















தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!

***

இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை
எப்படித்தான் கண்டு பிடிப்பதாம்....
செல்லமாய் நீ சிணுங்கினாய்..
கம்பீரமாய் வெளிப்பட்டு
சிரித்தது ஒரு ஒய்யாரக்காதல்!

***

ஒரு மரம் துளிர்க்கும் தருணம்;
சாரலாய் முகத்தில் மழைத்துளிகள்
தவழும் பொழுதுகள்;
ஒரு ஊதக்காற்று உடல் ஊடுருவி
உள்ளம் கலைத்து செல்லும்
அந்த அற்புதகணம்;
ஒரு கவிதை எழுதி முடித்து
நிறைவாய் சாய்ந்து நெஞ்சு
நிறையும் நிமிடம்;
யாருமே இல்லாமல் அவளோடு
இருக்கும் மெளனம்;
இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா?

***

கனவுகளில் வடித்த
ஒரு ஓவியத்தை
எப்படி உனக்கு பரிசளிப்பேன்?
என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்
உயிரை எப்படி நான் அசையவைப்பேன்?
சொல்லாமல் தவிக்கும்
என் காதலின் அவஸ்தைகள் எல்லாம்
ஒரு மழையில் நடுங்கும் குருவியாய்
நடுங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உனக்கு உணரவைப்பேன்...?
எங்கேயோ இருக்கும் உன்னை
துரத்தி துரத்தி சுற்றி கொண்டிருக்கும்
என் நினைவுகளின் ஸ்பரிசங்கள்
எல்லாம் வார்தைகளற்று ஏக்கமாய்
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?

***

மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?


தேவா. S

Comments

க ரா said…
வாரியார்னு பேரு.. எழுதறது முழக்க.. இம்ம்.. கலி முத்தி போச்சுன்னா :)
dheva said…
கண்ணன் @ அடே....தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்ட போ....!
//தம்பி நான் என்ன கிருபானந்த வாரியர்னா வச்சு இருக்கேன் பேரு.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

......ROFL... முடியல... :-))

நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?........


...உணர்வுகள் வரிசையாய் கோர்க்க் பட்ட ......அழகான் கவிதை .
கெஞ்சும் காதல் ஏங்கும் இதயம். பாராட்டுக்கள்.
//எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?
///

...வார்த்தைகளின் அணிவகுப்பில் அசத்திட்டீங்க...!

...ஒளிந்து கிடக்கும் உங்கள் உன்னதக் காதல், கலையாமல் அவளிடம் சென்றிருக்கும்...! :)
///மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,///

நல்ல அருமையான வரிகள்... மனதின் எண்ணங்கள் ஓவியங்களாக...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
வினோ said…
/ இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா? /

ஆமாம் கண்டிப்பா.. எல்லாம் சேர்த்ததுதான்
ஹேமா said…
இன்ன பிற சேர்ந்துதான் காதல்.எப்படிக் காதலை எழுதினாலும் அழகுதான்.ஆனால் குடம் தளும்பிச் சிரிப்பது மிகவும் ரசனை !
அருமையான வரிகள!
அன்பு தேவா, சிந்திய குடத்து நீரில் சிந்துகிறது என் சிந்தனைகள். அள்ள முடியா வெள்ளத்தை கைகளில் கட்டவிழ்த்து கவிதையாய் உலவ விட்டிருக்கிறீர். மிக இரசித்தேன்.. தேன்.

தொடருங்கள். வாழ்த்துகள்.
உணர்வுகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை.
தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!///

அது சிரிக்கிறதுக்கு அர்த்தம் வேறங்கோ...
இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை///

ஓஹ sj சூர்யா சொல்வாரே இருக்கு இல்லை அதுவா..????
மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?////

எந்த மனம்....??? ஓஹ அந்த மனத்தை தானே சொல்றீங்க...????
Anonymous said…
நா நெனச்சு வேற பாத்துட்டேன். ஹா ஹா ஹா.. :-))

சும்மா இருக்க மாட்டீங்களாங்க நீங்க..!//

nanum ... he he he he
Anonymous said…
பேசும் போதும் மிரட்டுறது
காதல் கவிதை எழுத்தும் போது இப்பிடி
ஐயோ ஐயோ

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...