Skip to main content

கத்திக் கப்பல்...!

















ஒரு மழைக்காய் செய்த...
காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது
பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...!
ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து
ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும்
பொழுதுகளில் கண்ணீரோடு
சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல்
ஏனோ இதயத்தை ரணமாக்கி
சோகமாய் முடங்கியே கிடக்கிறது...!

இன்றாவது மழை வருமா?
ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து
சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ
ஒரு கோபத்தோடு எப்போதும்
நடக்கிறேன் நிலத்தில் தெரியும்
என் நிழலை எரித்தபடி!

பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?

மரங்களில்லா பூமியில்
மழை ஒரு கனவுதான்....
கரங்கள் இல்லா மனிதனைப் போல
தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில்
எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு
இயற்கையை குறை சொல்லும்
மனிதனை சுயநலவாதி என்பதா?
இல்லை எப்போதும் பொய்க்கும்..
இயற்கையின் பெயரால் இதை...
இறைவனின் பிழை என்பதா?

காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?
கனவுகளோடு வழக்கம் போல...
ஒரு கருவினைப் போல சுமக்கிறேன்
என் பள்ளிக்கூட புத்தங்களையும்...
அதனுள் கண்ணீரோடு ...
தண்ணீரில் தத்தித் தாவ...காத்திருக்கும்
என் கத்திக் கப்பலையும்..!

இன்றாவது பெய்யுமா மழை?


தேவா. S

Comments

வார்த்தைகளை வரிகளில்
வடிப்பது ஒரு கலை...
அக்கலையை அணுவளவும்
குறையாமல் செய்வதில்
நீங்கள் ஒரு காளை...!

...கத்திக் கப்பல் எனக்கும் பழைய நினைவுகளை தூண்டி விட்டதுங்க.. தேங்க்ஸ்.. :-))
Chitra said…
காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?


...nicely written!
//பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?//

ஒரு ஒரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினையும் இருக்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க தேவா ?

இன்றைக்கு மரங்களை வெட்டி மொட்டையடிக்கும் மனிதர்கள் காதுகுத்து வைத்து விழா கொண்டாடாத வரையிலும் விட்டார்களே !!

அருமையான சமூக வெளிப்பாடு..!
முதல் வரியே ஒரு தனிக்கவிதை தோழரே..

ரொம்ப நல்லா இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...