Skip to main content

ஆகையால்...!



















ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை...
காற்றில் பறக்கும் இறகு போல
எங்கோ ஒரு நாள் நான்...
பறந்து போய்விடுவேன்...
நீரில் தோன்றும் ஒரு குமிழி போல
பட்டென்று என்றேனும்...
உடைந்து போய்விடுவேன்...!

கற்பூரங்கள் எரிவது எல்லாம்...
காற்றில் எரியத்தானே? அன்றி...
எரிதலில் இறுமாப்பு கொண்டு
எப்போதும் நிற்பதற்கு அல்ல...!

ஏதோ ஒரு கட்டுக்குள் சிக்கி
அச்சில் ஓடும் பூமிக்கு என்ன
கவலை யாரைப் பற்றியும்?
அது சுற்றும் வரை சுற்றும்
ஈர்ப்புகளில் ஏதேனும் பிழைத்து விட்டால்
மீண்டும் தூசுகளுக்குள் தூசாய்
தன்னை பரப்பிக் கொண்டு
மீண்டும் பரமாணுவாய் வேசமிடும்...!

காற்றும், மழையும், வெயிலும்
சுழற்சியினால் ஏற்படும் சூழ்ச்சிகளேயன்றி
அவையே சூட்சுமங்களா என்ன?
சூத்திரங்கள் அறியா அண்டவெளியின்
பரந்து விரிந்த பிரேதசங்களில்....
மனித கால் தடங்கள் எல்லாம்
மாயையின் உச்சமே...!

ஏதோ ஒரு நெருப்பு என்னை...
எரித்துப் போடும் இல்லையேல்
சிலிக்கனுக்குள் சிக்கி நான்
கால்சியங்களின் எச்சத்தை காட்டிக்
கொண்டு இல்லாத பூமியின்
சொல்லாத பாகமாகப் போகிறேன்....
விலாசமில்லாத இருப்பினிற்குள்
எங்கே இருக்கிறது எனது அடையாளம்...?

ஆகையால்...இதில்
ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது...?

தேவா. S


Comments

ஏதோ ஒரு நெருப்பு என்னை...
எரித்துப் போடும் இல்லையேல்
சிலிக்கனுக்குள் சிக்கி நான்
கால்சியங்களின் எச்சத்தை காட்டிக்
கொண்டு இல்லாத பூமியின்
சொல்லாத பாகமாகப் போகிறேன்....
விலாசமில்லாத இருப்பினிற்குள்
எங்கே இருக்கிறது எனது அடையாளம்...?////

me tooo
அனைவரின் வாழ்கையை பற்றி எழுதி இருக்கீங்க....வாழ்கைன்னு இருந்தா ஒரு நாள் சென்று விட தான் போகிறோம்
இருக்கும் வரை சந்தோசமாக இருந்து விட்டு செல்வோம்...ஏன் போட்டி பொறாமை தலகனம்...அங்காரம் ...திமிர்.. தற்பெருமை..எல்லாம் வாழ்கையே.... மாயை.....

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...